Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்­ட­மைப்பின் ஆத­ரவை பெறு­வ­தற்கு பொதுஜன பெரமுன கடும் பிர­யத்­தனம்: சுமந்­தி­ர­னுடன் தொலை­பே­சியில் உரை­யாடல்

Featured Replies

IMAGE-MIX.png
 

(ஆர்.யசி)

ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னூ­டாக தமிழ் மக்­களின் ஆத­ரவை பெற்­று­­க்கொள்­வதில் பொது­ஜன பெர­மு­ன­வினர் கடும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­, ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ இரு­வ­ருமே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் எம்.எ.சுமந்­தி­ர­னுடன் தனித்­த­னியே பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்னர்.

இந்­நி­லையில் மஹிந்த, கோத்­த­பாய , பசில் ராஜபக் ஷவினர் வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின்  தலைவர் இரா.சம்­பந்­தனை சந்­தித்து பேசு­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­தி­ர­னுடன் நேற்று முன்­தினம் தொலை­பே­சியில் தொடர்பு கொண்ட கோத்­த­பாய ராஜ­பக்ஷ கூட்­ட­மைப்பின் தலை­வர்­களை சந்­தித்து பேசு­வ­தற்கு விருப்பம் தெரி­வித்­துள்ளார். 

இது குறித்து கூட்­ட­மைப்பின் பேச்­ச­சாளர் சுமந்­தி­ர­னிடம் வின­வி­ய­போது அவர் தெரி­வித்­த­தா­வது,

கோத்­த­பாய  ராஜபக்  ஷ எனக்கு தொலை­பேசி மூல­மாக அழைப்பு விடுத்து பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்க முடி­யுமா என கேட்டார்.  "தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்த விருப்பம் தெரி­வித்­த­தாக எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்­னிடம் தெரி­வித்தார். அதற்­க­மை­யவே நான் உங்­களை தொடர்­பு­கொண்டேன். எப்­போது நாம் பேசலாம்" என கோத்­தா­பய ராஜபக் ஷ என்­னிடம் கேட்டார். 

எனினும் கடந்த வாரம் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்னை தனிப்­பட்ட முறையில் சந்­தித்து சில விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டினார். இதில் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ரவை எமக்கு பெற்­று­கொ­டுக்க முடி­யுமா என்ற கோரிக்­கையை என்­னிடம் முன்­வைத்தார். எனினும் ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு என்ன என்­பதை நான் அவ­ருக்கு எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தேன். 

அதா­வது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் என்ற வகையில்  சகல ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளி­டமும் பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ராக உள்ளோம். தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்வு வேண்டும் என்­பதே எமது ஒரே நிலைப்­பாடு. இதில் தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க உங்­களால் என்ன செய்ய முடியும், புதிய அர­சியல் அமைப்பு விட­யத்தில் உங்­களின் நிலைப்­பாடு என்ன? அதி­கார பகிர்வில் உங்­களின் நிலைப்­பாடு என்ன. என்ற விட­யங்­களை நான் கேட்டேன். எனினும் அவ­ரிடம் இருந்து ஆரோக்­கி­ய­மான பதில் வர­வில்லை. எனினும் அர­சியல் கட்­சிகள் அனைத்­தையும் சந்­தித்து எமது கோரிக்­கை­களை முன்­வைக்க நாம் தயா­ரா­கவே உள்ளோம். அந்த அடிப்­ப­டையில் உங்­க­ளுடன் பேசவும் நான் தய­ரா­கவே உள்ளோம்  என்ற கார­ணியை நான் கூறினேன். 

அதற்­க­மை­யவே கோத்­த­பாய  ராஜபக் ஷ என்னை தொடர்­பு­கொண்டு பேசினார். தானும் மஹிந்த ராஜபக் ஷவும், பஸில் ராஜபக் ஷவும் இணைந்து மூவ­ரு­மாக எங்­களை சந்­திக்க தயா­ராக உள்­ள­தாக கூறினார். எனினும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு சார்பில் நான் தனித்து தீர்­மானம் எடுக்க முடி­யாது. எங்­களின் கூட்­ட­ணியில் மூன்று கட்­சிகள் உள்­ளன.அவர்­க­ளு­டனும் பேசி நாம் ஒன்­றாக உங்­களை சந்­திக்க முடியும் என்றேன். 

அத்­துடன் எப்­போது சந்­திப்பை நடத்த முடியும் என்ற கேள்­வி­யையும் கேட்டார். எனினும் அவர் மருத்­துவ சிகிச்­சை­க­ளுக்­காக சிங்­கபூர் செல்­ல­வுள்­ளதால் நீங்கள் சிங்­கபூர் செல்ல முன்னர் சந்­திப்­பீர்­களா அல்­லது சென்று மீண்டும் நாட்­டுக்கு வந்­ததும் சந்­திப்­பீர்­களா என கேட்டேன். இது குறித்தும் எங்­களின் கோரிக்­கைகள் குறித்தும் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பஸில் ராஜபக் ஷ ஆகி­யோ­ருடன் பேசிய பின்னர் மீண்டும் என்ன தொடர்­பு­கொள்­வ­தாக கூறினார். 

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை பொறுத்­த­வ­ரையில் நாம் இர­க­சி­ய­மாக யாரு­டனும் பேசி எமது கோரிக்­கை­களை இர­க­சி­ய­மாக செய்ய வேண்­டிய அவ­சியம் இல்லை. நாம் வெளிப்­ப­டை­யாக  எமது மக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு பதில் கேட்­கின்றோம். இதில் பிர­தான கட்­சிகள் எமக்கு இது­வரை கொடுத்த வாக்­கு­று­தி­களை நாம் மீண்டும் மீண்டும் நினை­வு­ப­டுத்­து­கின்றோம். ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என வரும்போது  அவர்களுக்கு எமது ஆதரவு தேவைப்படுகின்றது. அவ்வாறான நிலையில் நாம்  முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்க தயாராக உள்ள வேட்பாளர்களையே நாம் ஆதரிக்க முடியும். ஆகவே சகல ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாம் வெளிப்படையாக  பேச்சுவார்த்தை நடத்தி எமது மக்களின் கோரிக்கைகளை வெற்றிகொள்ளவே முயற்சிகின்றோம்  என்றார்.

https://www.virakesari.lk/article/66362

  • தொடங்கியவர்

நாளைய தலைப்பு செய்தி : கூட்டமைப்பினர் புது டெல்லி பயணம் 

அவர்கள் முடிவே எமது முடிவு 😞 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

நாளைய தலைப்பு செய்தி : கூட்டமைப்பினர் புது டெல்லி பயணம் 

அவர்கள் முடிவே எமது முடிவு 😞 

நோ நோ நோ
நொட் கூட்டமைப்பினர்.

தமிழரசுக்கட்சியினர்.

  • தொடங்கியவர்
2 hours ago, ampanai said:

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை பொறுத்­த­வ­ரையில் நாம் இர­க­சி­ய­மாக யாரு­டனும் பேசி எமது கோரிக்­கை­களை இர­க­சி­ய­மாக செய்ய வேண்­டிய அவ­சியம் இல்லை. நாம் வெளிப்­ப­டை­யாக  எமது மக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு பதில் கேட்­கின்றோம். இதில் பிர­தான கட்­சிகள் எமக்கு இது­வரை கொடுத்த வாக்­கு­று­தி­களை நாம் மீண்டும் மீண்டும் நினை­வு­ப­டுத்­து­கின்றோம். ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என வரும்போது  அவர்களுக்கு எமது ஆதரவு தேவைப்படுகின்றது. அவ்வாறான நிலையில் நாம்  முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்க தயாராக உள்ள வேட்பாளர்களையே நாம் ஆதரிக்க முடியும். ஆகவே சகல ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாம் வெளிப்படையாக  பேச்சுவார்த்தை நடத்தி எமது மக்களின் கோரிக்கைகளை வெற்றிகொள்ளவே முயற்சிகின்றோம்  என்றார்.

#1: சுமந்திரன் அவர்கள் கட்சியின் பேச்சாளர். ஏன் அவருடன் மகிந்த அண்ட் கோ தனியாக சந்திக்க விரும்புகின்றது?

#2: ஒவ்வொரு முறையும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்பொழுது கூட்டமைப்பினர் அரசை எந்தவித(?) வேண்டுகோளும் இல்லாமல் ஏன் காப்பாற்றி வந்தனர்? 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹா..ஹா...

நேற்றுவரை கோட்டா வை வெல்ல வைக்க வேண்டும் என பக்கம் பக்கமாக கூவிய புலம்பெயர் மக்களில் சிலர், இப்போ பேந்த பேந்த முழிப்பது போல படுகிறது.

உங்கள் ராசதந்திரத்தைதான் சும் கையில் எடுக்கிறார். 

எப்படி வசதி, இப்பவும் கோட்டா வெல்வதுதான் நல்லமா?

செம டுவிஸ்ட் 😂

  • தொடங்கியவர்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ
நொட் கூட்டமைப்பினர்.

தமிழரசுக்கட்சியினர்.

உண்மைதான்.

மோடியும் ஜியும் மாமல்லபுரத்தில் சந்திக்கும்பொழுது இலங்கையும் உரையாடப்படலாம். அவர்கள் ஆட்ட இங்கு பலரும் ஆட வேண்டியது தான்.

 

14 minutes ago, ampanai said:

உண்மைதான்.

மோடியும் ஜியும் மாமல்லபுரத்தில் சந்திக்கும்பொழுது இலங்கையும் உரையாடப்படலாம். அவர்கள் ஆட்ட இங்கு பலரும் ஆட வேண்டியது தான்.

இந்த திரியையும் கொஞ்சம் பாருங்கள். 😀

https://yarl.com/forum3/topic/232503-ரணில்-சொல்லே-சுமந்திரம்-–-ஜனாதிபதித்-தேர்தலைப்-புறக்கணிக்கிறது-கூட்டமைப்பு/

 

  • தொடங்கியவர்
2 minutes ago, Lara said:

நன்றிகள் லாரா.

தமிழரசு கட்சி நேற்று எடுத்த முடிவை நாளையும் அமுல்படுத்துவார்கள் என்று நிச்சயமாக நம்ப முடியாது 🙂 

  • கருத்துக்கள உறவுகள்

ஆக குறைந்தது 7 million சிங்கள வாக்குகள் இருப்பதாக கோத்த அணி நம்புகிறது.

எனவே, ஏனையோரின் வாக்குகள் legitimacy க்கு ஆக விரும்புகிறது, கட்டயமாக தேவை இல்லை.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் தலைமை சட்டத்தரணி, Ali Sabry, ஓர் முஸ்லீம் zionist.

விமல் வீரவன்சாவின் சட்டத்தரணி, Muzzamil, ஓர் முஸ்லீம் zionist.  

 

கோத்த இற்கு எதிராணா  எந்த வழக்குகளோ, அல்லது முறை கேடுகளோ, உண்மையாயினும், .தடைகள் அல்ல. 

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kadancha said:

கோத்தாவின் தலைமை சட்டத்தரணி, Ali Sabry, ஓர் முஸ்லீம் zionist.

விமல் வீரவன்சாவின் சட்டத்தரணி, Muzzamil, ஓர் முஸ்லீம் zionist.  

 

கோத்த இற்கு எதிராணா  எந்த வழக்குகளோ, அல்லது முறை கேடுகளோ, உண்மையாயினும், .தடைகள் அல்ல. 

சையோனிஸ்ட் என்றால் யூதநலன் விரும்பி அல்லவா? இந்த முஸ்லீம்கள் இருவரை எந்த அடிப்படையில் சையோனிஸ்ட் என்கிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

சையோனிஸ்ட் என்றால் யூதநலன் விரும்பி அல்லவா? இந்த முஸ்லீம்கள் இருவரை எந்த அடிப்படையில் சையோனிஸ்ட் என்கிறீர்கள் ?

எனது ஆய்வில் வந்த முடிவல்ல.

இது நான் அறிந்தது.

நானும் உங்களை போல தான் நினைத்தேன். தெரிவித்த, கோத்தா அணிக்கு நெருக்கமானவரிடம் மறு  கேள்வி கேட்பதற்கு விருப்பிமில்லை.    

பின்பு, சவுதியும், இஸ்ரேல் உம் உறவை யோசித்து, சாத்தியம் இருக்கிறது என்று உணர்ந்தேன்.      

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

எனது ஆய்வில் வந்த முடிவல்ல.

இது நான் அறிந்தது.

நானும் உங்களை போல தான் நினைத்தேன். தெரிவித்த, கோத்தா அணிக்கு நெருக்கமானவரிடம் மறு  கேள்வி கேட்பதற்கு விருப்பிமில்லை.    

பின்பு, சவுதியும், இஸ்ரேல் உம் உறவை யோசித்து, சாத்தியம் இருக்கிறது என்று உணர்ந்தேன்.      

 

ம்ம்ம். சவுதி-இஸ்ரேல் உறவு நெருக்கம் எனிலும் MBS ஐ யாரும் சயோனிஸ்ட் என்று அழைத்து நான் கேள்விப்பட்டதில்லை.

இதை பற்றி மேலோட்டமாக பார்த்ததில் - முஸ்லீம்களிலும் பல சையோனிஸ்டுகள் இருந்ததாக நம்ம கூகிளன் சொல்கிறார்.

எனவே உங்கள் நண்பர் சொன்னது சரியாக இருக்கலாம்.

பிகு: அடுத்த முறை ஊரில் வெள்ளைவான் தூக்கினால் நான் கடஞ்சாவின் நண்பன் என சொல்லி தப்பிக்க எண்ணியுள்ளேன் 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:
ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என வரும்போது  அவர்களுக்கு எமது ஆதரவு தேவைப்படுகின்றது. அவ்வாறான நிலையில் நாம்  முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்க தயாராக உள்ள வேட்பாளர்களையே நாம் ஆதரிக்க முடியும். ஆகவே சகல ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாம் வெளிப்படையாக  பேச்சுவார்த்தை நடத்தி எமது மக்களின் கோரிக்கைகளை வெற்றிகொள்ளவே முயற்சிகின்றோம்  என்றார்.

கடந்த ஆட்சியின்போது இந்த யோசனைகள் எங்கய்யா போனது?!
எந்த கோரிக்கையும் வைக்காது அரசை கண்ணை மூடி ஆதரித்துவிட்டு இப்பிடி சொல்வது நியாயமாரே?!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லுசு தமிழ் கட்டசிகளுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடம் கற்ப்பிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.