Jump to content

‘உறுதிமொழி கிடைத்தால் நான் விலகுவேன்’ - எம்.கே.சிவாஜிலிங்கம்


Recommended Posts

எஸ்.நிதர்ஷன்

தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது ஒருவர், தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றுமென உறுதிமொழி தருவார்களாயின் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலகுவேன் என முன்னாள் எம்.பியும் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழர்களின் கோரிக்கையை, ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ்த் தரப்புகளை ஒன்றிணைத்து தயாரிக்கவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்.பாடி விருந்தினர் விடுதியில், நேற்று(10) நடத்திய ஊடகவியலாளார் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசிய இனத்தின் மறுமலர்ச்சிக்கான மக்கள் சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசிய இனத்தின் பொது வேட்பாளராக நான் ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கியுள்ளேன்” என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் கடந்த காலங்களில் நான் போட்டியிட்டபோதும் பணம் வாங்கிவிட்டு ஒரு தரப்பினரை, வெற்றிப்பெற வைப்பதற்காக செயற்படுகின்றேன் என பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர் என்று தெரிவித்த அவர், இன்றும் நான் தேர்தலில் இறங்கியதும் ராஜபக்‌ஷ தரப்பிடம் பணம் வாங்கி போட்டியிடுவதாக குற்றம் சுமத்துகின்றனர் என்றார்.

2010ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், போரை முன்னிணின்று வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஆதரித்திருந்தனர். அந்த நேரத்தில் கஜேந்திரகுமாரும் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுமையுடன் உள்ளது. எனினும், இவர்களின் திட்டம் தேர்தலுக்கு ஒருவாரமே இருவாரத்துக்கு முன்னர் மஹிந்த தரப்பை ஆட்சி பீடம் ஏறக்கூடாது எனக்கூறி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாகச் செயற்படக்கூடும் பெரும்பாலும் கூட்டமைப்பின் திட்டம் இதுவாகவே இருக்கும் என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/உறுதிமொழி-கிடைத்தால்-நான்-விலகுவேன்/175-239846

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

’சிவாஜிலிங்கத்துக்கு எனது சொந்தப் பணத்திலேயே கட்டுப்பணம் செலுத்தினேன்’

image_8e205b7bb1.jpg

 

-எஸ்.நிதர்ஷன்

ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, தனது சொந்தப் பணத்திலேயே கட்டுப்பணம் செலுத்தியதாகத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்,  மாறாக நான் எந்தவொரு ராஜபக்ஷ ஆட்களையும் சந்திக்கவில்லையெனவும் தான் ராஜபக்ஷ தரப்புகளை சந்தித்தேன்; அவர்களின் பின்னணியில் தான் இயங்குகிறேன் எனக் குற்றம் சுமத்துபவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறும் சவால் விடுத்தார்.

நல்லூரில் அமைந்துள்ள யாழ். பாடி விருந்தினர் விடுதியில், .ன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 1987இல் இந்தியப்படை இங்கு வந்தபோது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போரை உருவாக்கினார். 

“இந்தியப்படை வெளியேறட்டும் என்று சொல்லிப் பதவிக்கு வந்த ரணசிங்க பிரேமதாசவும் 'ஈழம் தவிர எல்லாம் தருவேன்' என்று சொல்லி ஆறாம் சட்டத்திருத்தத்தை மாற்றலாம் என்றும் சொல்லி பின்னர்அதை மாற்றாது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தார். போரை நோக்கி நகர்ந்தார். 

“பின்னர் சமாதானப் புறாவாகத் தன்னைக் காட்டிக்கொண்டு ஜனாதிபதிப் பதவிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கொடிய போர் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டார்.  அவரைத் தொடர்ந்து வந்த மஹிந்த ராஜபக்ஷ இன அழிப்புப் போரின் உச்சிக்கே சென்றார். பின்னர் வந்த மைத்திரிபால சிறிசேன 'நல்லாட்சி' என்ற பெயரில் தமிழர் தாயகத்தின் மீது ஒரு மரபுரிமை இனஅழிப்புப் போரையே தொடுத்திருக்கிறார். 

“அநுராதபுரத்தையும் பொலன்னறுவையையும் மய்யமாகக் கொண்டது அவரது சிந்தனை. இது வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக உடைக்கும் திட்டம். நல்லிணக்கம் என்ற பெயரில் நடாத்தப்படும் ஒரு புதுவிதமான போர். “இதற்கு கிழக்கில் கன்னியாவும் வடக்கில் நீராவியடியும் சாட்சி. இந்தப் போர்கள் எல்லாம் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பின் ஒவ்வொரு பரிமாணங்களாக அடுத்தடுத்த கட்டப்படி முறைகளாக விரிகின்றன. தொடரும் இந்தப் போர்களின் அடுத்த வடிவத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்ற போட்டியே தற்போது தென்னிலங்கையில் நடக்கவிருக்கிறது. 

“இந்தத் தருணத்தில் ஈழத்தமிழர்களான நாங்கள் மேற்கொள்ள வேண்டிய தெரிவு என்ன? சொல்ல வேண்டிய செய்திதான் என்ன? கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பியின் அநுராகுமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப் பேரினவாதத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை.

“இவர்களுடன் தமிழர்தரப்பு பேரம் பேசவேண்டும் என்று சிலர் வாதிடுகிறார்கள். பேரம் பேசும் போது அவர்கள் தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்பதற்கு எந்தவித ச்சர்வதேச உத்தரவாதமும் இல்லாமல் பேரம் பேசுவதில் உண்மையில் ஒருபலனும் இல்லை.  சிங்களப் பேரினவாதத் தலைவர்களுடன் பேரம்பேசுதல் என்பது தற்போதைய நிலையில் செல்லாக்காசு போன்றது. 

“எழுதிய ஒப்பந்தங்களையே கிழித்துப்போடும் சிங்களப் பேரினவாதத் தலைவர்களுடன் பேரம் பேசுவதில் பலன் ஏதும் இல்லை. மாறாக இவர்களை இயக்கும் சர்வதேச சக்திகளுடன் தான் நாங்கள் பேரம் பேச வேண்டும். அமெரிக்காவும் இந்தியாவும் இன்று இறுக்கமாகப் பின்னிப்பிணைந்த ஓர் அணியாகச் செயற்படுகின்றன.

“இந்து-பசிபிக் கடற்போர் முனையில் சீனாவுக்கெதிரான வியூகம் வகுப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஜப்பானுடனும் அவுஸ்திரேலியாவுடனும் நான்முனைச்சக்திகளாக இணைந்திருக்கின்றன. இந்து சமுத்திரம் போர்ச்சூட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

“2009இல் இருந்த பூகோளப் போட்டா போட்டியை விட தற்போதைய இந்து சமுத்திரக் கேந்திர முக்கியத்துவம் பல மடங்கு வீச்சாகியிருக்கிறது. அமெரிக்காவும் இந்தியாவும் நினைத்திருந்தால் கோட்டபாய ராஜபக்ஷவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழலை இலகுவாகத் தோற்றுவித்திருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.
“இராணுவத் தளபதியாக சவேந்திரசில்வா நியமிக்கப்பட்ட போது அதைக் கண்டித்த சர்வதேசத் தரப்புகள்  ஐ.நாவில் சமாதானப்படைக்கான இலங்கையின் பங்களிப்பைக் குறைக்கவுள்ளதாக இலங்கை அரசுக்கு ஒரு செய்தியைச் சொல்லி மிரட்டிய சர்வதேசச் சமூகம் ஷவேந்திர சில்வாவுக்கே  நடைமுறையில் கட்டளைத் தளபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் களமாட அனுமதித்தது மட்டும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. 

“அமெரிக்காவிலே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குகள் மனித உரிமை நிறுவனங்களால் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இதைக் காரணம்காட்டி அமெரிக்க அரசு அவரது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்ய முடியாது என்று மறுத்திருக்கலாம். அதை வெளிப்படையாகவே ஒரு அறிக்கையிட்டுச் சொல்லியிருக்கலாம். ஏன் செய்யவில்லை? 

“மறுபுறத்தில் சஜித் பிரேமதாஸ போட்டியாளராக முன்னிலைப்படுத்தப்படுகிறார். அவரும் ஹம்பாந்தோட்டையின் பிரதிநிதி. ஜனாதிபதி ஆட்சியின் நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் விரும்புவது போலத் தெரிந்தாலும், அப்படியெல்லாம் செய்வதாகத் தான் ஒத்துக் கொள்ளவில்லை என்ற தோரணையிலேயே சஜித் பிரேமதாஸ இயங்குகிறார்.

“ஒற்றையாட்சியைக் கைவிடப்போவதில்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். 'ஒற்றையாட்சியை மாற்றாமல் அதிகளவு அதிகாரப் பரவலாக்கம்' என்று அவர் சொல்லியிருப்பது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு வெற்றுக் கோசமே. 

“அவரின் தகப்பன் சொன்ன 'எல்லாம் தருவேன் ஈழம் தவிர என்பதை'வரலாற்றில் பார்த்துவந்தவர்கள் தான் நாம் என்பதை மறந்து விடக் கூடாது. தென்னிலங்கையைப் பொறுத்தவரை இனவாத அரசியலையார் அதிகம் பேசுகிறார்களோ அவர்களைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்ற மன நிலை சிங்கள மக்கள் மத்தியில் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது” என்றார்.

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சிவாஜிலிங்கத்துக்கு-எனது-சொந்தப்-பணத்திலேயே-கட்டுப்பணம்-செலுத்தினேன்/71-239839

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுமையுடன் உள்ளது. எனினும், இவர்களின் திட்டம் தேர்தலுக்கு ஒருவாரமே இருவாரத்துக்கு முன்னர் மஹிந்த தரப்பை ஆட்சி பீடம் ஏறக்கூடாது எனக்கூறி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாகச் செயற்படக்கூடும் பெரும்பாலும் கூட்டமைப்பின் திட்டம் இதுவாகவே இருக்கும் என்றார்.

பார்க்கலாம். இதுவரை பொறுமையாக, மௌனமாக, வேட்ப்பாளர்கள் 'என்ன தருவார்கள்' என பார்த்து உள்ளார்கள்.  

 

1 hour ago, ampanai said:

தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது ஒருவர், தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றுமென உறுதிமொழி தருவார்களாயின் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலகுவேன் என முன்னாள் எம்.பியும் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பந்து சிங்கள கட்சிகள் பக்கம் 🙂 

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, தனது சொந்தப் பணத்திலேயே கட்டுப்பணம் செலுத்தியதாகத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்,  

அனந்தி, சிவாஜிலிங்கத்துக்கு கட்டுப்பணம் செலுத்தியதை விட உண்ண உணவில்லாமல் தற்கொலை செய்யும் நிலையிலுள்ள 4 குடும்பத்திற்கு உதவி செய்திருக்கலாம்.

சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது வாக்குகளை பிரிப்பதை விட வேறு எதற்கும் பயன்படாது என்பது அனந்திக்கு தெரியாததல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் அவர்களுக்குக் கட்டுப் பணம் திரும்பக் கிடைக்காது (அதனாலேயே அவர் தன் காசை முதலிடவில்லைப் போல!). அவரை விட சீரியசாக இந்த தேர்தலை அணுகும் தமிழ் வாக்காளர்கள் அவருக்கு வாக்குப் போடப் போவதில்லை!எனவே அவர் வாக்குப் பிரிப்பிற்குக் காரணமாக இருப்பார் என சிங்களவர்கள் அஞ்சப் போவதில்லை! 

Link to comment
Share on other sites

கையாலாகாத தமிழ் அரசியல்வாதிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர தாயகத்தில் தமிழர் உரிமைக்கு குரல்கொடுக்கும் கிறிஸ்தவ - இந்து சமயத் தலைவர்களும் சமூக அக்கறையுடைய புத்திஜீவிகளும் முன்வந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களின் அரசியல் பலத்தை கணிசமாக அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் சம்மந்தன் கும்பலும் கஜேந்திரகுமார் கும்பலும் இந்த முயற்சிகளை தட்டிக்கழித்து வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக தமிழ் அரசியல்வாதிகள் வெறுமனே காலத்தைக் கடத்துவதை உணர்ந்த யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இரண்டும் இணைந்து மேற்படி அரசியல்வாதிகளை இணைக்கவும் அதன் மூலம் பொதுவேட்பாளர் ஒருவர் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை கணிசமாக அதிகரிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் வெளிப்படையாகவே இந்த முயற்சிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் ஒருமித்த முயற்சிக்கு ஈழ மக்களின் ஆதரவு பெருகிய நிலையில் அவர்களின் முயற்சிகளுக்கு மதிப்பளிப்பதைத் தவிர வேறுவழிகள் இல்லை என்று காலதாமதமாக உணர்ந்த சம்மந்தன் கும்பலும் கஜேந்திரகுமார் கும்பலும் வேண்டாவெறுப்பாக மாணவர்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தனர்.

அரசியல் விமர்சகராக கருதப்படும் நிலாந்தன் போன்ற சுயநல முதலைகளும், சுமந்திரன் மாவை போன்ற எடுபிடிகளும், கஜேந்திரகுமார் போன்ற சுயநல சந்தர்ப்பவாத அரசியல் கும்பல்களும் வெளிப்படையாக ஆதரவுபோல காட்டிக்கொண்டு இந்த முயற்சியை குழப்புவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.  

இந்த ஜனநாயக செயன்முறை விரும்பத் தகாத கால தாமதத்தை ஏற்படுத்தியதுடன் நேரமும் ஓடிக் கொண்டிருந்தது. இந்தப் பின்னணியிலேயே, இறுதிக்கணத்தில், சிவாஜிலிங்கம் அவசர அவசரமாக கொழும்பு சென்று கட்டுப்பணத்தை செலுத்தி, மறுநாள் வேட்பாளர் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

விதிவிலக்கின்றி அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் வழமைபோல் ஜனாதிபதி தேர்தல் பற்றி எந்தவொரு சிந்தனையும் அற்று,  காலத்தைக் கடத்தி, பிச்சைக்கார மனநிலையில் கையேந்தியபடி, சந்தர்ப்பங்களை நழுவவிட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், இறுதிக்கணத்தில் தான் சிவாஜிலிங்கம் அவசர அவசரமாக கட்டுப்பணத்தை செலுத்தி, மறுநாள் வேட்பாளர் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

இதன்  பின்னர்,நீண்டகால அரசியல் போக்குகளை ஆராய்ந்து ஒரு நீண்டகால நோக்கில் சிந்திக்கும் தன்மையற்ற பலர் சிவாஜிலிங்கத்தை கேலிசெய்ய முற்பட்டனர்.

'கனவான்' வேடம் பூண்ட கையாலாகாத அரசியல்வாதிகளினதும் 'கனவான்' வேடம் பூண்டு வெறுமனே உளறித்தள்ளும் அரசியல் விமர்சகர்களினதும் பார்வையில் அவர் ஒரு நகைச்சுவையாளராக உருவகிப்பட்டதை பகுத்தறிவற்ற பலரும் தங்கள் 'கனவான்' கருத்தாக புலம்பி வருகின்றனர்.  

ஆனால், பல இக்கட்டான சூழ்நிலைகளில் சிவாஜிலிங்கம் துணிந்து செயற்பட்டது வரலாறு.

  • சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளினது பல்வேறு கொலை அச்சுறுத்தல்களின்  மத்தியில், நாய்களைக் கொன்று அவர் வீட்டின் முன்னாள் வீசி மேற்கொண்ட  அச்சுறுத்தல்களின்  மத்தியில், விசாரணை என அழைக்கப்பட்டு மேற்கொண்ட  அச்சுறுத்தல்களின்  மத்தியில், 2009 இன் பின்னர் சிலவருடங்கள் மாவீரர் தினம் அனுட்டிக்கப்பட துணிந்து வெளிப்படையாக தொடர்ச்சியாக செயற்பட்ட அரசியல்வாதி சிவாஜிலிங்கம் என்பதை பல சந்தர்ப்பவாதிகள் மறந்திருக்கலாம்.  
  • அதுபோலவே திலீபனின் நினைவுதினம் அனுட்டிக்கப்பட துணிந்து வெளிப்படையாக தொடர்ச்சியாக செயற்பட்ட அரசியல்வாதி சிவாஜிலிங்கம் என்பதை பல மூடர்கள் மறந்திருக்கலாம்.  
  • பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில் தலைவர் பிரபாகரனின் தாயாரை அனைவரும் கைவிட்டபோது சிவாஜிலிங்கம் துணிந்து அவரது இறுதிக்காலம் வரை என்ற உண்மை அவரை கேலிசெய்யும் மூடர்கள் மறந்திருக்கலாம்.  
  • பல போராளிகளின் நலன்களை பேணுவதில் தனது சக்திக்கேற்ப இன்றுவரை உழைத்து வருபவர்.
  • பாராளுமன்றத்தில் இருந்தபோதும், மாகாணசபையில் இருந்தபோதும், கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தவறவிடாமல் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி குரல் கொடுத்தவர்.
  • சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளினது அச்சுறுத்தல்களின்  மத்தியில், ஒவ்வொரு வருடமும் ஐ.நா. வரை சென்று தமிழர் உரிமைகளை வலியுறுத்தி குரல் கொடுத்து  வருபவர்.
  • காணி சுவீகரிப்புகளை தொடர்ச்சியாக எதிர்த்து வருவதால் இன்றும் பல வழக்குகளை சந்தித்து வருபவர்.
  • சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளினது கைக்கூலிகளாக டக்ளஸ் கும்பலின் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளுக்கு சென்ற அரசியவாதிகளை முன்ணணியில் வழிநடத்திச் சென்றபோது தாக்குதல்களுக்கு உள்ளாகி காலில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி உயிராபத்துக்கு உள்ளாகி மீண்டு வந்தவர்.
  • வடக்கு மாகாண சபையில் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி சட்டவலுவுடைய பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்ற முன்ணணியில் நின்று உழைத்தவர்.
  • வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட பல சர்ச்சைகள் தீர சமரச முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்தவர்.

இவ்வாறு அவர் தனித்தும், சேர்ந்தும் செய்த சாதனைகளை பக்கம் பக்கமாக அடுக்கிக்கொண்டு போகலாம்.

இந்தப் பின்னணியில் தான் சதி முயற்சிகளில் பிரபல்யமான சில சிங்களப் பத்திரிகைகளும், பல்வேறு தமிழின விரோதிகளும், தமிழின கொலைகாரர்களின் எடுபிடிகளும், சிங்கள அரசுகளுக்கு முண்டு கொடுத்து வாழும் சுமந்திரன் போன்றவர்களும் அவர்களின் அடிவருடிகளும் சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவர்களுடன் காலங்காலமாக சிங்களவனின் அடிமைகளாக வாழ விரும்புபவர்களும் சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, போல் said:

கையாலாகாத தமிழ் அரசியல்வாதிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர தாயகத்தில் தமிழர் உரிமைக்கு குரல்கொடுக்கும் கிறிஸ்தவ - இந்து சமயத் தலைவர்களும் சமூக அக்கறையுடைய புத்திஜீவிகளும் முன்வந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களின் அரசியல் பலத்தை கணிசமாக அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் சம்மந்தன் கும்பலும் கஜேந்திரகுமார் கும்பலும் இந்த முயற்சிகளை தட்டிக்கழித்து வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக தமிழ் அரசியல்வாதிகள் வெறுமனே காலத்தைக் கடத்துவதை உணர்ந்த யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இரண்டும் இணைந்து மேற்படி அரசியல்வாதிகளை இணைக்கவும் அதன் மூலம் பொதுவேட்பாளர் ஒருவர் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை கணிசமாக அதிகரிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் வெளிப்படையாகவே இந்த முயற்சிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் ஒருமித்த முயற்சிக்கு ஈழ மக்களின் ஆதரவு பெருகிய நிலையில் அவர்களின் முயற்சிகளுக்கு மதிப்பளிப்பதைத் தவிர வேறுவழிகள் இல்லை என்று காலதாமதமாக உணர்ந்த சம்மந்தன் கும்பலும் கஜேந்திரகுமார் கும்பலும் வேண்டாவெறுப்பாக மாணவர்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தனர்.

அரசியல் விமர்சகராக கருதப்படும் நிலாந்தன் போன்ற சுயநல முதலைகளும், சுமந்திரன் மாவை போன்ற எடுபிடிகளும், கஜேந்திரகுமார் போன்ற சுயநல சந்தர்ப்பவாத அரசியல் கும்பல்களும் வெளிப்படையாக ஆதரவுபோல காட்டிக்கொண்டு இந்த முயற்சியை குழப்புவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.  

இந்த ஜனநாயக செயன்முறை விரும்பத் தகாத கால தாமதத்தை ஏற்படுத்தியதுடன் நேரமும் ஓடிக் கொண்டிருந்தது. இந்தப் பின்னணியிலேயே, இறுதிக்கணத்தில், சிவாஜிலிங்கம் அவசர அவசரமாக கொழும்பு சென்று கட்டுப்பணத்தை செலுத்தி, மறுநாள் வேட்பாளர் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

விதிவிலக்கின்றி அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் வழமைபோல் ஜனாதிபதி தேர்தல் பற்றி எந்தவொரு சிந்தனையும் அற்று,  காலத்தைக் கடத்தி, பிச்சைக்கார மனநிலையில் கையேந்தியபடி, சந்தர்ப்பங்களை நழுவவிட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், இறுதிக்கணத்தில் தான் சிவாஜிலிங்கம் அவசர அவசரமாக கட்டுப்பணத்தை செலுத்தி, மறுநாள் வேட்பாளர் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

இதன்  பின்னர்,நீண்டகால அரசியல் போக்குகளை ஆராய்ந்து ஒரு நீண்டகால நோக்கில் சிந்திக்கும் தன்மையற்ற பலர் சிவாஜிலிங்கத்தை கேலிசெய்ய முற்பட்டனர்.

'கனவான்' வேடம் பூண்ட கையாலாகாத அரசியல்வாதிகளினதும் 'கனவான்' வேடம் பூண்டு வெறுமனே உளறித்தள்ளும் அரசியல் விமர்சகர்களினதும் பார்வையில் அவர் ஒரு நகைச்சுவையாளராக உருவகிப்பட்டதை பகுத்தறிவற்ற பலரும் தங்கள் 'கனவான்' கருத்தாக புலம்பி வருகின்றனர்.  

ஆனால், பல இக்கட்டான சூழ்நிலைகளில் சிவாஜிலிங்கம் துணிந்து செயற்பட்டது வரலாறு.

  • சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளினது பல்வேறு கொலை அச்சுறுத்தல்களின்  மத்தியில், நாய்களைக் கொன்று அவர் வீட்டின் முன்னாள் வீசி மேற்கொண்ட  அச்சுறுத்தல்களின்  மத்தியில், விசாரணை என அழைக்கப்பட்டு மேற்கொண்ட  அச்சுறுத்தல்களின்  மத்தியில், 2009 இன் பின்னர் சிலவருடங்கள் மாவீரர் தினம் அனுட்டிக்கப்பட துணிந்து வெளிப்படையாக தொடர்ச்சியாக செயற்பட்ட அரசியல்வாதி சிவாஜிலிங்கம் என்பதை பல சந்தர்ப்பவாதிகள் மறந்திருக்கலாம்.  
  • அதுபோலவே திலீபனின் நினைவுதினம் அனுட்டிக்கப்பட துணிந்து வெளிப்படையாக தொடர்ச்சியாக செயற்பட்ட அரசியல்வாதி சிவாஜிலிங்கம் என்பதை பல மூடர்கள் மறந்திருக்கலாம்.  
  • பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில் தலைவர் பிரபாகரனின் தாயாரை அனைவரும் கைவிட்டபோது சிவாஜிலிங்கம் துணிந்து அவரது இறுதிக்காலம் வரை என்ற உண்மை அவரை கேலிசெய்யும் மூடர்கள் மறந்திருக்கலாம்.  
  • பல போராளிகளின் நலன்களை பேணுவதில் தனது சக்திக்கேற்ப இன்றுவரை உழைத்து வருபவர்.
  • பாராளுமன்றத்தில் இருந்தபோதும், மாகாணசபையில் இருந்தபோதும், கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தவறவிடாமல் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி குரல் கொடுத்தவர்.
  • சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளினது அச்சுறுத்தல்களின்  மத்தியில், ஒவ்வொரு வருடமும் ஐ.நா. வரை சென்று தமிழர் உரிமைகளை வலியுறுத்தி குரல் கொடுத்து  வருபவர்.
  • காணி சுவீகரிப்புகளை தொடர்ச்சியாக எதிர்த்து வருவதால் இன்றும் பல வழக்குகளை சந்தித்து வருபவர்.
  • சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளினது கைக்கூலிகளாக டக்ளஸ் கும்பலின் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளுக்கு சென்ற அரசியவாதிகளை முன்ணணியில் வழிநடத்திச் சென்றபோது தாக்குதல்களுக்கு உள்ளாகி காலில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி உயிராபத்துக்கு உள்ளாகி மீண்டு வந்தவர்.
  • வடக்கு மாகாண சபையில் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி சட்டவலுவுடைய பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்ற முன்ணணியில் நின்று உழைத்தவர்.
  • வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட பல சர்ச்சைகள் தீர சமரச முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்தவர்.

இவ்வாறு அவர் தனித்தும், சேர்ந்தும் செய்த சாதனைகளை பக்கம் பக்கமாக அடுக்கிக்கொண்டு போகலாம்.

இந்தப் பின்னணியில் தான் சதி முயற்சிகளில் பிரபல்யமான சில சிங்களப் பத்திரிகைகளும், பல்வேறு தமிழின விரோதிகளும், தமிழின கொலைகாரர்களின் எடுபிடிகளும், சிங்கள அரசுகளுக்கு முண்டு கொடுத்து வாழும் சுமந்திரன் போன்றவர்களும் அவர்களின் அடிவருடிகளும் சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவர்களுடன் காலங்காலமாக சிங்களவனின் அடிமைகளாக வாழ விரும்புபவர்களும் சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

போல் ஐயா, சிவாஜிலிங்கம் அவர்களின் தமிழ்தேசியப்பற்று நீங்கள் பட்டியலிடாமலே இங்குள்ளவர்களுக்குத் தெரியும். மேலும் அவர் பிரபாகரனின் உறவினர், அந்த வகையிலும் பார்வதி அம்மாவைப் பராமரிக்கும் உரிமையை எடுத்துக் கொண்டவர்!

ஆனால், அரசியல் நடவடிக்கைகளில் அவர் தூர நோக்கில் சிந்திக்காமல் செயல் படும் கோமாளி என்று நீங்கள் குறிப்பிடும் அந்த "சில நூறு அடைமொழிகளால்" (எப்படித் தான் இப்படி வகை வகையாய் அடைமொழிகளை களைக்காமல் எழுதுகிறீர்களோ தெரியாது!) விளிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி பெரும்பாலான தமிழ் மக்களும் கருதுகிறார்கள்!

சர்வதேசத்திற்கு செய்தி சொல்லல், அவர்கள் மனம் மாறி எமக்கு உதவுதல், மாறிவரும் உலக ஒழுங்கு என்று நட்சத்திர ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் பற்றிப் பேசும் இந்த வேளையில் உங்களிடம் சில மாதங்களில் நடக்கக் கூடிய ஒரு நிகழ்வு பற்றிய கேள்வி: சிவாஜிலிங்கம் அவர்களுக்கு ஒன்றோ இரண்டோ வீத தமிழ் வாக்குகள் விழுந்து, கோத்தா அதே விகிதத்தால் முன்னணி வகித்தால், அதனால் வென்றால் சிங்களவருக்கு என்ன இழப்பு? தமிழருக்கு என்ன நன்மை?   

Link to comment
Share on other sites

2 minutes ago, Justin said:

ஆனால், அரசியல் நடவடிக்கைகளில் அவர் தூர நோக்கில் சிந்திக்காமல் செயல் படும் கோமாளி என்று நீங்கள் குறிப்பிடும் அந்த "சில நூறு அடைமொழிகளால்" (எப்படித் தான் இப்படி வகை வகையாய் அடைமொழிகளை களைக்காமல் எழுதுகிறீர்களோ தெரியாது!) விளிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி பெரும்பாலான தமிழ் மக்களும் கருதுகிறார்கள்!

எப்படித் தான் இவ்வாறான பொய்களை வாய் கூசாமல் அவிழ்த்துவிடுகிறீர்களோ தெரியவில்லை?

5 minutes ago, Justin said:

சர்வதேசத்திற்கு செய்தி சொல்லல், அவர்கள் மனம் மாறி எமக்கு உதவுதல், மாறிவரும் உலக ஒழுங்கு என்று நட்சத்திர ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் பற்றிப் பேசும் இந்த வேளையில் உங்களிடம் சில மாதங்களில்

இப்படியே யாழ்களத்தில் உண்மைகளை புரட்டிப் போடும் உங்களைப் போன்றவர்களின் வெங்காயக் கேள்விகளுக்கு யாழ் களத்திலேயே பெரும்பாலானவர்கள் பதிலளித்து தங்கள் நேரத்தை விரயம் செய்வதில்லை!  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 minutes ago, போல் said:

எப்படித் தான் இவ்வாறான பொய்களை வாய் கூசாமல் அவிழ்த்துவிடுகிறீர்களோ தெரியவில்லை?

இப்படியே யாழ்களத்தில் உண்மைகளை புரட்டிப் போடும் உங்களைப் போன்றவர்களின் வெங்காயக் கேள்விகளுக்கு யாழ் களத்திலேயே பெரும்பாலானவர்கள் பதிலளித்து தங்கள் நேரத்தை விரயம் செய்வதில்லை!  

 

போல் ஐயா, நான் நினைத்த படி தான் துலங்கல் வந்திருக்கிறது! நீங்கள் சட்டியில் இல்லாததைத் தேடி நேரவிரயம் செய்யக் கூடாது என்பது தான் என் வேண்டுகோளும்!😎

இந்தக் கோமாளிக் கூத்து முடிவிற்கு வரும் நாளில் எது  பொய் என்பது விளங்கி விடும்! பொறுத்திருப்போமே!

Link to comment
Share on other sites

தமிழின ஆதரவாளர்கள் தமிழினப் பற்றாளர்கள் சிலரை தமிழினப் படுகொலைகாரர்கள், தமிழின விரோதிகள் கேலி செய்வதும், கோமாளிகளாக உருவகப்படுத்துவதும் காலங்காலமாக நடப்பது தான்.  

இந்த தமிழினப் படுகொலைகாரர்களின், தமிழின விரோதிகளின் அடிவருடிகளும், எடுபிடிகளும் அதேவழியில் தமிழின ஆதரவாளர்களை  தமிழினப் பற்றாளர்களை கேலி செய்வதும், கோமாளிகளாக உருவகப்படுத்துவதும் காலங்காலமாக நடப்பது தான்.

இவர்களைப் பார்த்து சுயபுத்தியில்லாத தமிழர்களும் மேற்படி தமிழின விரோத கும்பல்களுடன் இணைந்து தமிழின ஆதரவாளர்களை  தமிழினப் பற்றாளர்களை கேலி செய்வதும், கோமாளிகளாக உருவகப்படுத்துவதும் காலங்காலமாக நடப்பது தான்.

ஓர் உதாரணமாக வைகோவை சொல்லலாம்.   

 

Link to comment
Share on other sites

2 hours ago, Lara said:

அனந்தி, சிவாஜிலிங்கத்துக்கு கட்டுப்பணம் செலுத்தியதை விட உண்ண உணவில்லாமல் தற்கொலை செய்யும் நிலையிலுள்ள 4 குடும்பத்திற்கு உதவி செய்திருக்கலாம்.

சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது வாக்குகளை பிரிப்பதை விட வேறு எதற்கும் பயன்படாது என்பது அனந்திக்கு தெரியாததல்ல. 

அதிகமான வாக்குகள் இந்த நான்கு வேட்ப்பாளர்களு இடையிலேயே பிரியும். சிவாசிலிங்கம் உட்பட மற்றையயவர்களால் அதிகம் பாதிப்பு முன்னணி வேட்ப்பாளர்களுக்கு இல்லை.

அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பதால் வாக்குகள்  பிரிந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது.  எனினும் 35வேட்பாளர்களுக்கும் வாக்குகள் பிரிந்து செல்லும் என்று  கூறுவதற்கு இடமில்லாவிட்டாலும், பிரதானமான நான்கு வேட்பாளர்கள் மத்தியில்  வாக்குகள் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவிருக்கின்றன.  

குறிப்பாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ,  ஜனநாயக தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிேரமதாச, தேசிய மக்கள்  சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள்  இயக்கத்தின் வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோருக்கிடையிலேயே  வாக்குகள் பிரிந்து செல்லப் போகின்றன.

இருந்த போதும் இரு பிரதான  வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில்  கடும் போட்டி நிலவும். இதற்கிடையில் அநுரகுமார திஸாநாயக்க 5  இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும், மகேஷ் சேனாநாயக்க 5  இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும் எடுப்பார்களாக இருந்தால் பிரதான  வேட்பாளர்கள் இருவருக்கும் இடையில் மிகவும் கடுமையான போட்டி ஏற்படும்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, போல் said:

தமிழின ஆதரவாளர்கள் தமிழினப் பற்றாளர்கள் சிலரை தமிழினப் படுகொலைகாரர்கள், தமிழின விரோதிகள் கேலி செய்வதும், கோமாளிகளாக உருவகப்படுத்துவதும் காலங்காலமாக நடப்பது தான்.  

இந்த தமிழினப் படுகொலைகாரர்களின், தமிழின விரோதிகளின் அடிவருடிகளும், எடுபிடிகளும் அதேவழியில் தமிழின ஆதரவாளர்களை  தமிழினப் பற்றாளர்களை கேலி செய்வதும், கோமாளிகளாக உருவகப்படுத்துவதும் காலங்காலமாக நடப்பது தான்.

இவர்களைப் பார்த்து சுயபுத்தியில்லாத தமிழர்களும் மேற்படி தமிழின விரோத கும்பல்களுடன் இணைந்து தமிழின ஆதரவாளர்களை  தமிழினப் பற்றாளர்களை கேலி செய்வதும், கோமாளிகளாக உருவகப்படுத்துவதும் காலங்காலமாக நடப்பது தான்.

ஓர் உதாரணமாக வைகோவை சொல்லலாம்.   

 

நீண்டகால நன்மை தராத கோமாளிகளை மக்கள் ஆதரித்துத் தலையில் தூக்கி வைக்காமல் விடுவதும், அதை துரோகம் என்று ஒரு தரப்புத் திட்டுவதும் பிறகு மக்கள் சரியாகத் தான் கணித்திருக்கிறார்கள் என்று சைட் மாறி நின்று திட்டுவதும் காலங்காலமாக நடப்பது தான்!

கஜேந்திரகுமார் சிறந்த உதாரணம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிமொழி கிடைத்தால் நான் விலகுவேன்’ - எம்.கே.சிவாஜிலிங்கம்

விலகாட்டிலும்,சும்மா லட்சக்கணக்கில வாக்கை அள்ளி குமிச்சுடுவாராக்கும்😂

3 hours ago, ampanai said:

பார்க்கலாம். இதுவரை பொறுமையாக, மௌனமாக, வேட்ப்பாளர்கள் 'என்ன தருவார்கள்' என பார்த்து உள்ளார்கள்.  

 

பந்து சிங்கள கட்சிகள் பக்கம் 🙂 

செம. சஜித், கோட்ட, அனுர எல்லாரும் விம்பிள்டன்ல ஆடீனம். சிவாஜி யாழ்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கூட அல்ல, வல்வெட்டித்துறையில் ஒரு குச்சொழுங்கையில் ஆடுகிறார். இவர் பந்த அந்தபக்கம் அடிச்சா என்ன கிடந்தா என்ன. சிவாஜியை எல்லாம் ஒரு பொருட்டாய் தமிழ் மக்களே மதியாத போது, சிங்கள கட்சிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டர்கள்.

அது சரி சிவாஜிக்கே இல்லாத பணம், அனந்திக்கு ஏது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

அது சரி சிவாஜிக்கே இல்லாத பணம், அனந்திக்கு ஏது ?

அது எவ்வளவாம் கட்டுப் பணம்? சோலைவரி மாதிரி ஐநூறு ஆயிரமா அல்லது லட்சக்க் கணக்கா?

Link to comment
Share on other sites

14 minutes ago, Justin said:

நீண்டகால நன்மை தராத கோமாளிகளை மக்கள் ஆதரித்துத் தலையில் தூக்கி வைக்காமல் விடுவதும், அதை துரோகம் என்று ஒரு தரப்புத் திட்டுவதும் பிறகு மக்கள் சரியாகத் தான் கணித்திருக்கிறார்கள் என்று சைட் மாறி நின்று திட்டுவதும் காலங்காலமாக நடப்பது தான்!

காலங்காலமாக அரசியல் கோமாளிகள் இப்படித்தான் உளறுவார்கள் என்பதை மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

 

Link to comment
Share on other sites

எனது பார்வையில். யார் சொல்லுகிறார்கள் என்பது முக்கியம்,

அதற்காக அவர் சொல்வது எல்லாவற்றையும் தலையில் வைப்பதும்,  ஒருவரை கோமாளி என்று முத்திரை குத்தி அவர் சொல்லும் விடயங்களை முழுமையாக நிகாரிப்பதும் சரியாக தெரியவில்லை. 

5 hours ago, ampanai said:

தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது ஒருவர், தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றுமென உறுதிமொழி தருவார்களாயின் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலகுவேன் என முன்னாள் எம்.பியும் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

 

1. இதன் மூலம் மூலம் இலங்கையில் ஒற்றையாட்சி தொடர்வதையும்

2. தமிழ் மக்கள் பிரச்சனைகளை இந்த அரசியல் முறை ஊடாக தீர்க்க முடியாது

என்பதை சிங்கள மக்களுக்கும், உலகத்திற்கும் கூறி உள்ளது கூட ஒரு வரலாற்று சந்தர்ப்பத்தில் பதிந்ததாகவும் பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம்   ஒன்றே  மாறாதது

சும்மா  கூட்டமைப்புக்கும் அதன்  பினாமிகளுக்கும்  யால்ரா  போடுவதை  முதலில் நிறுத்தணும்

அதிலிருந்தே மாற்றத்தை  நோக்கி  நகரமுடியும்

இல்லாதுவிட்டால்  தமிழக அரசியல் நிலை  தான்   ஈழத்திலும்😥😥

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

அது எவ்வளவாம் கட்டுப் பணம்? சோலைவரி மாதிரி ஐநூறு ஆயிரமா அல்லது லட்சக்க் கணக்கா?

பெரிதாக இல்லை.

கட்சி சார்பாக 50,000.

சுயேட்சை 75000.

3 minutes ago, விசுகு said:

மாற்றம்   ஒன்றே  மாறாதது

சும்மா  கூட்டமைப்புக்கும் அதன்  பினாமிகளுக்கும்  யால்ரா  போடுவதை  முதலில் நிறுத்தணும்

அதிலிருந்தே மாற்றத்தை  நோக்கி  நகரமுடியும்

இல்லாதுவிட்டால்  தமிழக அரசியல் நிலை  தான்   ஈழத்திலும்😥😥

 

முன்பே அம்பனைக்கு பதிலாக பதிந்ததுதான். இப்போ உங்கள் பார்வைக்கும்.

large.659606E2-C057-4590-9478-154A39B1217C.jpeg.26b8bd2a681545c1dfbf5ac2688420ba.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ampanai said:

எனது பார்வையில். யார் சொல்லுகிறார்கள் என்பது முக்கியம்,

அதற்காக அவர் சொல்வது எல்லாவற்றையும் தலையில் வைப்பதும்,  ஒருவரை கோமாளி என்று முத்திரை குத்தி அவர் சொல்லும் விடயங்களை முழுமையாக நிகாரிப்பதும் சரியாக தெரியவில்லை. 

 

1. இதன் மூலம் மூலம் இலங்கையில் ஒற்றையாட்சி தொடர்வதையும்

2. தமிழ் மக்கள் பிரச்சனைகளை இந்த அரசியல் முறை ஊடாக தீர்க்க முடியாது

என்பதை சிங்கள மக்களுக்கும், உலகத்திற்கும் கூறி உள்ளது கூட ஒரு வரலாற்று சந்தர்ப்பத்தில் பதிந்ததாகவும் பார்க்கலாம். 

இந்த செய்தி சொல்லல் அதன் விளைவு பற்றியெல்லாம் பல திரிகளில் அலசியாகி விட்டது! திரும்பவும் வட்டப் பாதையில் விவாதிப்பது நேர விரயம்! 

முதலில் தமிழ் மக்களுக்கு இப்போது இருக்கிற பயங்கள் பிரச்சினைகளை இந்த மாற்றங்கள் எப்படி கூட்டும் அல்லது குறைக்கும் எனப் பாருங்கள்! அதைக் கேட்டால் "வெங்காயக் கேள்வி" எனும் அளவுக்கு மக்கள் மீது அக்கறையுள்ளவர்கள் தான் இப்படி பட்ட சிம்பொலிக் செய்தி சொல்ல இன்னும் சில ஆயிரம் உயிர்கள் பலியானால் பரவாயில்லை எனத் திரிகிறார்கள்!

சிவாஜி அவர்கள் மீது தனிப்பட எதுவும் கோபம் இல்லை! ஆனால் அரசியல் நடவடிக்கையில் அவர்  கோமாளித் தன் செய்தால் "கோமாளி" என்று அழைப்பது தான் சரி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

சிவாஜி அவர்கள் மீது தனிப்பட எதுவும் கோபம் இல்லை! ஆனால் அரசியல் நடவடிக்கையில் அவர்  கோமாளித் தனம் செய்தால் "கோமாளி" என்று அழைப்பது தான் சரி!

உங்களது  இந்த அழைப்பு  சார்ந்து எனக்கும்  உடன்பாடுண்டு

இங்கே  என்ன கேள்வி  வருமென்றால்

அந்தக்கோமாளிக்கு பதிலாக  நீங்கள்  யாரை முன் வைக்கிறீர்கள்??  என்பது  தான்

அது  உங்களிடம்  இல்லாதபோது  கோமாளிகளால் நாசங்கள்  வந்துவிடுவதில்லையே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

உங்களது  இந்த அழைப்பு  சார்ந்து எனக்கும்  உடன்பாடுண்டு

இங்கே  என்ன கேள்வி  வருமென்றால்

அந்தக்கோமாளிக்கு பதிலாக  நீங்கள்  யாரை முன் வைக்கிறீர்கள்??  என்பது  தான்

அது  உங்களிடம்  இல்லாதபோது  கோமாளிகளால் நாசங்கள்  வந்துவிடுவதில்லையே???

தேர்தல் புறக்கணிப்பால், அல்லது அரும்பொட்டில் சிவாஜி அவர்கள் பெறும் தமிழ் வாக்குகளால் கோத்தா ஆட்சிக்கு வந்தால் அது தாயக மக்களுக்கு நாசம் இல்லையென்று நீங்கள் நினைத்தால் நான் உங்களுக்கு மேலதிகமாக  எதுவும் சொல்ல முடியாது!  

ஒரு தரப்பின் மீதான வெறுப்பு ஒரு நாளும் அரசியல் கொள்கையாக முடியாது! 

இங்கே கூட்டமைப்பு மீதும், ரணில் மீதும், கிழக்கில் முஸ்லிம்கள்  மீதும் இருக்கும் வெறுப்பே, வெள்ளைவான் வந்தாலும் பரவாயில்லை, இந்த மூன்று தரப்புகளையும் பழிவாங்குவோம் என்று பலரைப் பேச வைக்கிறது. இது அழிவுப் பாதை என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை!

Link to comment
Share on other sites

30 minutes ago, goshan_che said:

முன்பே அம்பனைக்கு பதிலாக பதிந்ததுதான். இப்போ உங்கள் பார்வைக்கும்.

large.659606E2-C057-4590-9478-154A39B1217C.jpeg.26b8bd2a681545c1dfbf5ac2688420ba.jpeg

 

Do just once what others say you can't do, and you will never pay attention to their limitations again.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

7 minutes ago, Justin said:

தேர்தல் புறக்கணிப்பால், அல்லது அரும்பொட்டில் சிவாஜி அவர்கள் பெறும் தமிழ் வாக்குகளால் கோத்தா ஆட்சிக்கு வந்தால் அது தாயக மக்களுக்கு நாசம் இல்லையென்று நீங்கள் நினைத்தால் நான் உங்களுக்கு மேலதிகமாக  எதுவும் சொல்ல முடியாது!  

ஒரு தரப்பின் மீதான வெறுப்பு ஒரு நாளும் அரசியல் கொள்கையாக முடியாது! 

இங்கே கூட்டமைப்பு மீதும், ரணில் மீதும், கிழக்கில் முஸ்லிம்கள்  மீதும் இருக்கும் வெறுப்பே, வெள்ளைவான் வந்தாலும் பரவாயில்லை, இந்த மூன்று தரப்புகளையும் பழிவாங்குவோம் என்று பலரைப் பேச வைக்கிறது. இது அழிவுப் பாதை என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை!

பேய்க்கும் பிசாசுக்குமிடையில்   நான் வித்தியாசத்தை  காணவில்லை

சில விடயங்களை

கண்ணுக்கு தெரிதல்

கண்ணுக்க தெரியாமையை  வைத்து

வரலாற்றுக்கணிப்புக்களை  செய்வது மிகமிக ஆபத்தானது

காலம் தான்  பதில்  தரும்

நாமெருவரும்  கூட அதை  பார்க்காது   போகலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

 

பேய்க்கும் பிசாசுக்குமிடையில்   நான் வித்தியாசத்தை  காணவில்லை

சில விடயங்களை

கண்ணுக்கு தெரிதல்

கண்ணுக்க தெரியாமையை  வைத்து

வரலாற்றுக்கணிப்புக்களை  செய்வது மிகமிக ஆபத்தானது

காலம் தான்  பதில்  தரும்

நாமெருவரும்  கூட அதை  பார்க்காது   போகலாம்

என்ன விசுகர் இது? பகிடியா விடுகிறீர்கள்? 2005 இல் இதே விவாதம், மகிந்த வரவு, வந்த ஆபத்தை 2009 இல் காணாதவர் மாதிரியல்லவா பேசுகிறீர்கள்? அதன் பிறகும் வந்து "மகிந்தவை வர வைத்தது தலைமையின் இராஜதந்திரம்!" என்று எழுதினீர்களே?

காலம் 2009 முதல் 2015 வரை தொடர்ந்து பதில் சொல்லி விட்டது! நாம் தான் கண்ணை மூடிக் கொண்டு தெரியவில்லை என்கிறோம்!

ஆபத்தை உணர்ந்தவர்கள் சுட்டிக் காட்ட வேண்டியது  கடமை! ஏனெனில் இப்போது சுட்டிக் காட்டா விட்டால்,  அடிக்கடி சொல்லப் படுவது போல "புலிகளின்/தமிழரின் அழிவுக்கு எல்லாத் தமிழரும் காரணம்!" என்று விமரசனம் வைப்போரை வாயடைக்க வைக்கும் வேலை நடக்கும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் அண்ணா,

மாற்றம், மாற்றம் என்று ரஜினி பட டலயாக் எல்லாம் கேட்க நல்லாய் இருக்கும்.

இவர்கள் சுகமாக வெளிநாட்டில் இருந்தபடி, எமது மக்களை சோதனை எலிகளாக்கி மாற்றத்தை பரிதோனை செய்ய நினைக்கும் இவர்களின் பேச்சில் துளியளவும் தார்மீகம் இல்லை.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் இப்படியானவர்களுடன் நானும் நீங்களும் இன்னும் சிலரும் உண்மையை எடுத்துரைக்க படாதபாடு படுவோம். சங்கு காதில் ஏறவே ஏறாது.

தேர்தல் அன்று, நாம் இங்கே என்ன சொன்னோமோ அதையேதான் மக்களும் சொல்லி இருப்பார்கள்.

2012 வடமாகாண சபை தேர்தலில் இருந்து இதுதான் வழமை.

இவர்களை இப்படியே விட்டுவிடுங்கள். எம் மக்களின் புத்திசாதுரியத்தின் மீது எனக்கு அளப்பரிய நன்மையுண்டு.

நபம்பர் 16இல் எல்லா மாற்ற மாணிக்கங்களுக்கும் மக்கள் மணி கட்டுவார்கள்.

35 minutes ago, ampanai said:

 

Do just once what others say you can't do, and you will never pay attention to their limitations again.

 

ஜேம்ஸ் குக்கின் மரணம் எப்படி சம்பவித்தது என்பதை தெரிந்தவர்களுக்கு, முட்டாள்தனமாக மாற்றத்தை ஏற்படுத்துவதின் ஆபத்து புரியும் 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.     http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/  
    • ”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;. இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர். இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர். 2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். 2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள். -(     http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/
    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.