Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, Jude said:

இலங்கையில் போர்க்காலத்தில் கூட தமிழ் கிறீஸ்தவர்களும் சிங்கள கிறீஸ்தவர்களும் ஒருவருக்கு ஒருவர் உதவி இருக்கிறீர்கள்.
இலங்கை மக்கள் இன ரீதியாகவோ மொழி ரீதியாகவோ பிளவு பட்டிருப்பதிலும் பார்க்க மதரீதியாகவே அதிகம் பிளவு பட்டு இருக்கிறார்கள்.

ஆகவே தமிழ் கிறீஸ்தவர்கள் சிங்கள கிறீஸ்தவர்களுடன் இணைந்து தம்மை “கிறீஸ்தவர்கள்” என்று மட்டுமே அடையாள படுத்தி கொண்டு தம்மை என்றும் ஆதரித்து வரும் ஐக்கிய தேசிய கட்சியை இலங்கை முழுவதும் பலப்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் தேசியவாதம், சிங்கள தேசிய வாதம், பௌத்த மத ஆதிக்கவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், சைவ மத துவேசம் போன்றவற்றை இலங்கை கிறீஸ்தவர்கள் அமெரக்க ஐரோப்பிய அவுஸ்திரேலிய கிறீஸ்தவர்களின் ஆதரவுடன் எதிர்கொள்ள முடியும். தமிழ் பேசும் கிறீஸ்தவர்கள் தமிழ் தேசியவாதத்தை கைவிட வேண்டும். 

மத நம்பிக்கை அற்ற அறிவார்ந்த சமூகம் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் முன்னாள் கம்யூனிச நாடுகளிலும் பெருகி வருகிறது. இலங்கையில் இந்த சமூகம் போதுமான அளவில் உருவாக இன்னும் இருநூறு ஆண்டுகளாவது ஆகும். அதுவரை மதரீதியான சமூகங்களே சாத்தியம்.

 

  • Replies 412
  • Views 38.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, Jude said:

 

ஆகவே தமிழ் கிறீஸ்தவர்கள் சிங்கள கிறீஸ்தவர்களுடன் இணைந்து தம்மை “கிறீஸ்தவர்கள்” என்று மட்டுமே அடையாள படுத்தி கொண்டு தம்மை என்றும் ஆதரித்து வரும் ஐக்கிய தேசிய கட்சியை இலங்கை முழுவதும் பலப்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் தேசியவாதம், சிங்கள தேசிய வாதம், பௌத்த மத ஆதிக்கவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், சைவ மத துவேசம் போன்றவற்றை இலங்கை கிறீஸ்தவர்கள் அமெரக்க ஐரோப்பிய அவுஸ்திரேலிய கிறீஸ்தவர்களின் ஆதரவுடன் எதிர்கொள்ள முடியும். தமிழ் பேசும் கிறீஸ்தவர்கள் தமிழ் தேசியவாதத்தை கைவிட வேண்டும். 

 


 

 

தமிழ்த் தேசியவாதத்திற்கு கட்டுப்பட்டிருந்த இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்களில்  -  முஸ்லிம்களை அடித்துக் கலைத்து விட்டாச்சு.

அவர்கள் இப்போது, முஸ்லீம் தேசியவாதத்தின்கீழ் சென்று விட்டார்கள்.

இப்போது, கிறிஸ்த தேசியவாதம்தான் பாக்கியாக இருக்கிறது.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/27/2019 at 10:38 AM, Lara said:

 

Jehovah's Witnesses ஐ முறையாக பின்பற்றுபவர்கள் பிறந்தநாள், கிறிஸ்மஸ், ஈஸ்ரர், மற்றும் ஏனைய விடுமுறை நாட்களை பாகன்களின் வழிபாட்டு முறை என கூறி கொண்டாடுவதில்லை.

வருத்தமாக இருந்தாலும், அவசர தேவையாக இருந்தாலும் blood transfusion ஐ ஏற்பதில்லை. அதனால் பலர் மரணித்திருக்கிறார்கள்.

 


 

மனிதனின் உயிருக்குப் பங்கம்  வரும்போது, அவன் எத்தகைய மருந்துகளையும் உட்கொண்டுதான் ஆக வேண்டும் என்று சராசரி மனிதன் நினைப்பான்.

எல்லா மதத்தினரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

Blood Transfusion ஐ அனுமதிப்பதில்லை என்ற ஜேஹோவின் சாட்சிகள் (Jehowa's witnesses) எந்தளவு மூடத்தனத்தில் இருக்கிறார்கள் என்று இதிலிருந்து விளங்குகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:


 

விருத்தசேதனம் என்பது, யூதர்கள் மாத்திரம் பின்பற்றிய நடைமுறை அல்ல.

யூத இனம் தோன்றுவதற்கு முன்பிருந்தே, மனித குலம் பின்பற்றி செய்து வந்த ஒரு நடைமுறை.

இயேசு யூதர் அல்ல.

 

மாங்குயில் கீழே உள்ள வேதவசனத்தில் இந்த சாமரிய பெண் தெளிவாக கூறுகின்றார் இயேசு யூதெனென்று. இது சரியா இப்பொழுதாவது ஏற்றுக்கொள்கின்றீர்களா? அல்லது நான் பிடித்த முயலுக்கு 3 கால்தான?

 

யோவான் 4-9 - John 4-9யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரிய ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, colomban said:

 

மாங்குயில் கீழே உள்ள வேதவசனத்தில் இந்த சாமரிய பெண் தெளிவாக கூறுகின்றார் இயேசு யூதெனென்று. இது சரியா இப்பொழுதாவது ஏற்றுக்கொள்கின்றீர்களா? அல்லது நான் பிடித்த முயலுக்கு 3 கால்தான?

 

யோவான் 4-9 - John 4-9யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரிய ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.


 

இயேசுவிற்கும் பைபிளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்று ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன்.

இயேசுவிற்கு, பைபிளோ கிறிஸ்தவமோ தெரியாது.

இயேசு வாழ்ந்த  காலத்தில் பைபிள் இருக்கவில்லை.

மேலும் ஜோன் யாரென்று, இயேசுவிற்கு தெரியாது.  

ஆக,  John 4:9 இல் எந்த உண்மையும் இல்லை.

இயேசு யூதர் அல்ல.


 

Judaism என்ற மதத்தை பின்பற்றுபவர்கள் யூதர்கள்.

இயேசு Judaism என்ற மதத்திற்கு எதிரானவர்.

இயேசு யூதர் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=Tkb2a1E9A84

மிருகங்கள் குழுவாகத்தம்மை தற்காத்துக்கொள்வதற்காக இயற்கையாகவே அதனது சுய பாதுகாப்பு பொறிமுறையினூடாக தொழிற்படும் ,அதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல, 

எவ்வாறு கற்கால மனிதன் அனிச்சையாக செயற்படுகிறானோ அது போல தற்கால மனிதனும் செயற்படுகிறான் ஒரு குழும முயற்சியின் தொடர்ச்சியாகவே இந்த நிகழ்வை கருதுகிறேன் ஆனால் இதனால் யாருக்கும் இழப்பில்லை எனவே இதனை ஒரு விவாதப்பொருளாக்கத்தேவயில்லை .

3 hours ago, மாங்குயில் said:


 


 


காலம் காலமாக முன்னோரின் அனுபவங்கள் மூலம் பெற்ற விடயங்கள்  அறிவியலோடு ஒத்துப்போனால், அவைகளை யாரும் எதிர்ப்பதில்லை.

அறிவியலுக்கு பொருந்தாத விடயங்களை, சிலர் இங்கு வினாவாக எழுப்பும்போது, அதற்கு விடையளிக்காமல் தட்டிக் கழிப்பதனால், ஏற்படும் விபரீதங்களை இங்கு நாம் பார்க்கிறோம்.

சில விடயங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டும்:

1) அறிவியல் என்பது பரந்துபட்ட ஒரு விடயம். இங்கு அறிவியல் சார்ந்து மதத்துக்கு எதிராக வைக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் அறிவுபூர்வமானவை அல்ல. அதாவது முழுமையான அறிவியல் சிந்தனையுடன் சீர்தூக்கிப்பார்த்து முன்வைக்கப்பட்டவை அல்ல. உதாரணத்துக்கு மேலே குறிப்பிடப்பட்ட கீழடி ஆராய்ச்சி பற்றிய கருத்து.

2) அறிவியல் கூட தானாகவே முழுமையான ஒரு கருவியல்ல, ஒரு மதத்தின் நல்ல / கெட்ட அம்சங்களை எடை போட. உதாரணமாக, ஒரு காலத்தில் நமது தியான முறையைக் கேலி செய்து ஒதுக்கிய மேற்குலகம் இன்று meditationஐ உயர்வாக மதிக்கிறது. இது பற்றிய மேலதிக தகவல்களை அறிய விரும்புபவர்கள் 'The Science of Meditation': How to Change Your Brain, Mind and Body, Daniel Coleman & Richard J. Davidson ஆகியோர் எழுதியது. இவர்கள் அமெரிக்கர்கள். இவர்களில் ஒருவர் பேராசிரியர். 

இவர்களது ஆராய்ச்சிக்கு முன்னர் மேற்குலகம் தியான முறையை அப்போதைய அறிவியல் கண் கொண்டு ஏளனம் செய்ததால் தியான முறையில் விஷேசம் ஒன்றும் இல்லை என்று முடிவு பண்ண முடியுமா? 

இது சிறு உதாரணம் மட்டுமே. தேடினால் இப்படிப் பல தகவல்கள் கிடைக்கும். 

3) அறிவியல் ஆராய்ச்சி மூலம் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அத்தனையும் நம்பகரமானவை அல்ல. இந்த ஆராய்ச்சிகழுக்குப் பின்னால் உள்ள அரசியல், வர்க்கம் போன்ற காரணிகள் நமக்கு கிடைக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையை மாற்றலாம். உதாரணமாக அண்மையில் கனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம். ஒருகாலத்தில் இது ஏன் தடை செய்யப்பட்டிருந்தது? இப்போது ஏன் தடை நீக்கம்? இது பற்றிய தகவல்களைத்  தேடி வாசியுங்கள். இதன் பின்னால் உள்ள அரசியல் புரியும்.

எனவே இங்கு ஏற்பட்ட விபரீதங்களுக்கு அரைவேக்காட்டு அறிவியல் சிந்தனையும் ஒரு முக்கிய காரணமே தவிர, மதம் எப்பொழுதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.ஏனெனில் ஆன்மீகமானது அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. ஆன்மீகத்தை அறிவால் மட்டுமே அறிய முற்பட்டால் உங்களுக்கு ஒரு தெளிவான பதிலும் கிடைக்காது. அது உணர்புபூர்வமானதும், அனுபவபூர்வமாக உணரவேண்டிய ஒன்றும் கூட. வெறும் புத்தக அறிவும் உதவாது. உயரிய ஞானம் அது. 

முன்னோர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. அவர்கள் தந்த அனுபவ ஞானம் இந்துமதத்தில் கொட்டிக்கிடக்கின்றது.

இப்படி நிறைய எழுதலாம். ஒவ்வொன்றையும் பற்றி மிக விரிவாக எழுத வெளிக்கிட்டால் புத்தகமே எழுதலாம். நேரச்சுருக்கம் கருதி முடிக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:


 

மனிதனின் உயிருக்குப் பங்கம்  வரும்போது, அவன் எத்தகைய மருந்துகளையும் உட்கொண்டுதான் ஆக வேண்டும் என்று சராசரி மனிதன் நினைப்பான்.

எல்லா மதத்தினரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

Blood Transfusion ஐ அனுமதிப்பதில்லை என்ற ஜேஹோவின் சாட்சிகள் (Jehowa's witnesses) எந்தளவு மூடத்தனத்தில் இருக்கிறார்கள் என்று இதிலிருந்து விளங்குகிறது.

 

உங்களின் கருத்து எலியைவிட்டு வாலைபிடிப்பதாக உள்ளது 

5 minutes ago, மல்லிகை வாசம் said:

சில விடயங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டும்:

1) அறிவியல் என்பது பரந்துபட்ட ஒரு விடயம். இங்கு அறிவியல் சார்ந்து மதத்துக்கு எதிராக வைக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் அறிவுபூர்வமானவை அல்ல. அதாவது முழுமையான அறிவியல் சிந்தனையுடன் சீர்தூக்கிப்பார்த்து முன்வைக்கப்பட்டவை அல்ல. உதாரணத்துக்கு மேலே குறிப்பிடப்பட்ட கீழடி ஆராய்ச்சி பற்றிய கருத்து.

2) அறிவியல் கூட தானாகவே முழுமையான ஒரு கருவியல்ல, ஒரு மதத்தின் நல்ல / கெட்ட அம்சங்களை எடை போட. உதாரணமாக, ஒரு காலத்தில் நமது தியான முறையைக் கேலி செய்து ஒதுக்கிய மேற்குலகம் இன்று meditationஐ உயர்வாக மதிக்கிறது. இது பற்றிய மேலதிக தகவல்களை அறிய விரும்புபவர்கள் 'The Science of Meditation': How to Change Your Brain, Mind and Body, Daniel Coleman & Richard J. Davidson ஆகியோர் எழுதியது. இவர்கள் அமெரிக்கர்கள். இவர்களில் ஒருவர் பேராசிரியர். 

இவர்களது ஆராய்ச்சிக்கு முன்னர் மேற்குலகம் தியான முறையை அப்போதைய அறிவியல் கண் கொண்டு ஏளனம் செய்ததால் தியான முறையில் விஷேசம் ஒன்றும் இல்லை என்று முடிவு பண்ண முடியுமா? 

இது சிறு உதாரணம் மட்டுமே. தேடினால் இப்படிப் பல தகவல்கள் கிடைக்கும். 

3) அறிவியல் ஆராய்ச்சி மூலம் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அத்தனையும் நம்பகரமானவை அல்ல. இந்த ஆராய்ச்சிகழுக்குப் பின்னால் உள்ள அரசியல், வர்க்கம் போன்ற காரணிகள் நமக்கு கிடைக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையை மாற்றலாம். உதாரணமாக அண்மையில் கனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம். ஒருகாலத்தில் இது ஏன் தடை செய்யப்பட்டிருந்தது? இப்போது ஏன் தடை நீக்கம்? இது பற்றிய தகவல்களைத்  தேடி வாசியுங்கள். இதன் பின்னால் உள்ள அரசியல் புரியும்.

எனவே இங்கு ஏற்பட்ட விபரீதங்களுக்கு அரைவேக்காட்டு அறிவியல் சிந்தனையும் ஒரு முக்கிய காரணமே தவிர, மதம் எப்பொழுதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.ஏனெனில் ஆன்மீகமானது அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. ஆன்மீகத்தை அறிவால் மட்டுமே அறிய முற்பட்டால் உங்களுக்கு ஒரு தெளிவான பதிலும் கிடைக்காது. அது உணர்புபூர்வமானதும், அனுபவபூர்வமாக உணரவேண்டிய ஒன்றும் கூட. வெறும் புத்தக அறிவும் உதவாது. உயரிய ஞானம் அது. 

முன்னோர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. அவர்கள் தந்த அனுபவ ஞானம் இந்துமதத்தில் கொட்டிக்கிடக்கின்றது.

இப்படி நிறைய எழுதலாம். ஒவ்வொன்றையும் பற்றி மிக விரிவாக எழுத வெளிக்கிட்டால் புத்தகமே எழுதலாம். நேரச்சுருக்கம் கருதி முடிக்கிறேன். 

தயவுசெய்து முதலில் நீங்கள் சைவரா அல்லது இந்துவா என தெளிவாகக் கூறுங்கள்.  

10 minutes ago, Maharajah said:

உங்களின் கருத்து எலியைவிட்டு வாலைபிடிப்பதாக உள்ளது 

தயவுசெய்து முதலில் நீங்கள் சைவரா அல்லது இந்துவா என தெளிவாகக் கூறுங்கள்.  

இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்தவன். ஆயினும் இந்துமதம் என்ற பரந்தவிருட்சம் தந்த நல்ல பல கருத்துக்களை உள்வாங்கியவன்/வாங்குபவன். என்னளவில் இரண்டிற்கும் பேதம் பார்ப்பவனல்ல நான்.

பல்வேறு தெய்வங்கள், ஞானியர், தத்துவங்களை உள்ளடக்கி உலகெங்கும் பரந்துவாழும் எண்ணற்ற பல நம்பிக்கையாளர்களை இணைக்கும் மதமாக இந்து மதத்தைப் பார்க்கிறேன்.

 

இது பற்றி ஏற்கனவே பல முறை  நான் இத்திரியில் குறிப்பிட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, மல்லிகை வாசம் said:

இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்தவன். ஆயினும் இந்துமதம் என்ற பரந்தவிருட்சம் தந்த நல்ல பல கருத்துக்களை உள்வாங்கியவன்/வாங்குபவன். என்னளவில் இரண்டிற்கும் பேதம் பார்ப்பவனல்ல நான்.

பல்வேறு தெய்வங்கள், ஞானியர், தத்துவங்களை உள்ளடக்கி உலகெங்கும் பரந்துவாழும் எண்ணற்ற பல நம்பிக்கையாளர்களை இணைக்கும் மதமாக இந்து மதத்தைப் பார்க்கிறேன்.

 

இது பற்றி ஏற்கனவே பல முறை  நான் இத்திரியில் குறிப்பிட்டுள்ளேன்.

என்னைப்பொறுத்து இந்துமதத்திற்ட்க்கும் சைவ சமயத்திற்கும் சம்பந்தமேயில்லை.  ஏனெனில் சைவசமயம் எல்லோரையும் அரவணைக்கும் இயற்கயோடிணைந்த,  எந்த மதத்தவரையும் வெறுக்கதா  வழிமுறை,  நெறிமுறை.  

1 minute ago, Maharajah said:

என்னைப்பொறுத்து இந்துமதத்திற்ட்க்கும் சைவ சமயத்திற்கும் சம்பந்தமேயில்லை.  ஏனெனில் சைவசமயம் எல்லோரையும் அரவணைக்கும் இயற்கயோடிணைந்த,  எந்த மதத்தவரையும் வெறுக்கதா  வழிமுறை,  நெறிமுறை.  

என்னைப்பொறுத்தவரை இந்து மதமும் எல்லோரையும் அரவணைக்கும், இயற்கையோடு இணைந்த நெறிதான். 

இங்கு மற்றய மதங்களை நான் எதிர்த்துக் கருத்துக் கூறவில்லை. குறிப்பிட்ட ஒருமதத்தைப் பரப்புரை செய்வோர் அதை மதவியாபாரம் ஆக்குவதையும், கொள்கையில்லாமல் சலுகைக்காக மதம் மாறுவோரையும் தான் விமர்சித்தேன். இங்கு இந்து /சைவம் மீீீீது  முன் வைக்கப்பட்ட அர்த்ததமற்ற விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

மற்றப்படி நான்பின்பற்றும் நெறியை மதிக்கத் தெரிந்த கிறிஸ்தவ நண்பர்கள், உறவினர்கள் உள்ளனர். நானும் அவ்வாறே அவர்களை மதிக்கிறேன். 

ஒரு பல்லினச் சமுதாயச் சூழலில் வாழும் நான் அதன் அழகை நன்கே அறிந்தவன். இத்திரியில் தான் அதற்கு முரணான கருத்துக்களைப் பார்க்க முடிகிறது. அதை எதிர்கொள்ள கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கவேண்டிய நிலை எனக்கு ஏற்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

******

5 hours ago, மல்லிகை வாசம் said:

என்னைப்பொறுத்தவரை இந்து மதமும் எல்லோரையும் அரவணைக்கும், இயற்கையோடு இணைந்த நெறிதான். 

இங்கு மற்றய மதங்களை நான் எதிர்த்துக் கருத்துக் கூறவில்லை. குறிப்பிட்ட ஒருமதத்தைப் பரப்புரை செய்வோர் அதை மதவியாபாரம் ஆக்குவதையும், கொள்கையில்லாமல் சலுகைக்காக மதம் மாறுவோரையும் தான் விமர்சித்தேன். இங்கு இந்து /சைவம் மீீீீது  முன் வைக்கப்பட்ட அர்த்ததமற்ற விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

மற்றப்படி நான்பின்பற்றும் நெறியை மதிக்கத் தெரிந்த கிறிஸ்தவ நண்பர்கள், உறவினர்கள் உள்ளனர். நானும் அவ்வாறே அவர்களை மதிக்கிறேன். 

ஒரு பல்லினச் சமுதாயச் சூழலில் வாழும் நான் அதன் அழகை நன்கே அறிந்தவன். இத்திரியில் தான் அதற்கு முரணான கருத்துக்களைப் பார்க்க முடிகிறது. அதை எதிர்கொள்ள கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கவேண்டிய நிலை எனக்கு ஏற்படுகிறது.

ஆனால் உங்கள் கருத்துக்கள் பிற மத நண்பர்களை கடுகளவும் மதிக்கவில்லையே. கருத்துக்கள் யாவும் பொதுப்பட கூறுவதாக உள்ளது.  நீங்கள் இதனை உணரவில்லையா ?????? 

 

 

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ள கருத்துக்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது

28 minutes ago, Maharajah said:

ஆனால் உங்கள் கருத்துக்கள் பிற மத நண்பர்களை கடுகளவும் மதிக்கவில்லையே. கருத்துக்கள் யாவும் பொதுப்பட கூறுவதாக உள்ளது.  நீங்கள் இதனை உணரவில்லையா ?????? 

யாருடைய கருத்துக்களுக்குப் பதில் எழுதினேனோ அவற்றை quoteபண்ணித் தான் தெளிவாக எழுதினேன். பொதுப்படையாக, எழுந்தமானமான விமர்சனங்களை வைக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே இந்த திரியை முழுமையாக வாசித்தால் புரியும்.

நான் பின்பற்றும் நம்பிக்கைகளை பிறர் அநாவசியமாக விமர்சிக்கும் போது நான் முன்னர் கூறியது போல எனது பக்க நியாயங்களையும் முன் வைக்க வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அவர்களுடைய அபிப்பிராயத்தை ஏன் எங்கள் மீது திணிக்கிறார்கள். பேசாமல் தம் வழியே செல்ல வேண்டியது தானே?

நாங்கள் எங்கள் மதத்தை பின்பற்றுவதற்கான காரணங்களையும் குறிப்பிட்டேன். இங்கு மதம் பரப்பவோ, மற்றவர்கள் மதம் உலகில் இருக்கக்கூடாது என்று கூறவோ வரவில்லை. 

பிற மதங்களை மதிக்க வேண்டும் தான்; ஆனால் அது தனது நம்பிக்கையை அடகு வைத்துத் தான் செய்ய வேண்டியதில்லை. 

நீங்கள் கேட்ட இதே கேள்வியை இந்து/சைவத்தின் மீது விமர்சனம் வைத்தோரையும் கேட்கலாமே?

மேலும், இந்து/சைவத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி இந்தத் திரியில் மட்டுமே ஆரம்பித்து வைக்கப்பட்டது அல்ல.

இப்படி பல திரிகள் முன்னரும் ஓடின. இதே காழ்ப்புணர்ச்சி தான் அத் திரிகளிலும். நாமும் பல முறை தெளிவுபடுத்தினோம். இது எங்கள் நம்பிக்கை. அவர்களுக்கு எங்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியவில்லை என்றால் நாங்கள் தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது, அவர்களுக்குப் புரியும் பாணியில்!

Edited by மல்லிகை வாசம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

சில விடயங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டும்:

1) அறிவியல் என்பது பரந்துபட்ட ஒரு விடயம். இங்கு அறிவியல் சார்ந்து மதத்துக்கு எதிராக வைக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் அறிவுபூர்வமானவை அல்ல. அதாவது முழுமையான அறிவியல் சிந்தனையுடன் சீர்தூக்கிப்பார்த்து முன்வைக்கப்பட்டவை அல்ல. உதாரணத்துக்கு மேலே குறிப்பிடப்பட்ட கீழடி ஆராய்ச்சி பற்றிய கருத்து.

2) அறிவியல் கூட தானாகவே முழுமையான ஒரு கருவியல்ல, ஒரு மதத்தின் நல்ல / கெட்ட அம்சங்களை எடை போட. உதாரணமாக, ஒரு காலத்தில் நமது தியான முறையைக் கேலி செய்து ஒதுக்கிய மேற்குலகம் இன்று meditationஐ உயர்வாக மதிக்கிறது. இது பற்றிய மேலதிக தகவல்களை அறிய விரும்புபவர்கள் 'The Science of Meditation': How to Change Your Brain, Mind and Body, Daniel Coleman & Richard J. Davidson ஆகியோர் எழுதியது. இவர்கள் அமெரிக்கர்கள். இவர்களில் ஒருவர் பேராசிரியர். 

இவர்களது ஆராய்ச்சிக்கு முன்னர் மேற்குலகம் தியான முறையை அப்போதைய அறிவியல் கண் கொண்டு ஏளனம் செய்ததால் தியான முறையில் விஷேசம் ஒன்றும் இல்லை என்று முடிவு பண்ண முடியுமா? 

இது சிறு உதாரணம் மட்டுமே. தேடினால் இப்படிப் பல தகவல்கள் கிடைக்கும். 

3) அறிவியல் ஆராய்ச்சி மூலம் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அத்தனையும் நம்பகரமானவை அல்ல. இந்த ஆராய்ச்சிகழுக்குப் பின்னால் உள்ள அரசியல், வர்க்கம் போன்ற காரணிகள் நமக்கு கிடைக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையை மாற்றலாம். உதாரணமாக அண்மையில் கனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம். ஒருகாலத்தில் இது ஏன் தடை செய்யப்பட்டிருந்தது? இப்போது ஏன் தடை நீக்கம்? இது பற்றிய தகவல்களைத்  தேடி வாசியுங்கள். இதன் பின்னால் உள்ள அரசியல் புரியும்.

எனவே இங்கு ஏற்பட்ட விபரீதங்களுக்கு அரைவேக்காட்டு அறிவியல் சிந்தனையும் ஒரு முக்கிய காரணமே தவிர, மதம் எப்பொழுதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.ஏனெனில் ஆன்மீகமானது அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. ஆன்மீகத்தை அறிவால் மட்டுமே அறிய முற்பட்டால் உங்களுக்கு ஒரு தெளிவான பதிலும் கிடைக்காது. அது உணர்புபூர்வமானதும், அனுபவபூர்வமாக உணரவேண்டிய ஒன்றும் கூட. வெறும் புத்தக அறிவும் உதவாது. உயரிய ஞானம் அது. 

முன்னோர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. அவர்கள் தந்த அனுபவ ஞானம் இந்துமதத்தில் கொட்டிக்கிடக்கின்றது.

இப்படி நிறைய எழுதலாம். ஒவ்வொன்றையும் பற்றி மிக விரிவாக எழுத வெளிக்கிட்டால் புத்தகமே எழுதலாம். நேரச்சுருக்கம் கருதி முடிக்கிறேன். 

 

அறிவியல் என்பது ஊர்ஜிதப்பட்டதாக இருக்க வேண்டும்.

மதத்தின் கருத்துக்கள், ஊர்ஜிதப்பட்ட அறிவியலுக்கு முரணிப்பதாக இருக்குமென்றால், மதத்தின் கோட்பாடுகள் மனிதனுக்கு சந்தேகத்தை  ஏற்படுத்தும்.  

இங்கு நிறையப்பேர், இந்து மதத்திற்கு எதிராக விமரிசனம்  செய்கின்றனர். ஆனால், உங்கள் எழுத்தில் எந்த பதிலையும் காணோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maharajah said:
1 hour ago, மல்லிகை வாசம் said:

 

2) அறிவியல் கூட தானாகவே முழுமையான ஒரு கருவியல்ல, ஒரு மதத்தின் நல்ல / கெட்ட அம்சங்களை எடை போட. உதாரணமாக, ஒரு காலத்தில் நமது தியான முறையைக் கேலி செய்து ஒதுக்கிய மேற்குலகம் இன்று meditationஐ உயர்வாக மதிக்கிறது. இது பற்றிய மேலதிக தகவல்களை அறிய விரும்புபவர்கள் 'The Science of Meditation': How to Change Your Brain, Mind and Body, Daniel Coleman & Richard J. Davidson ஆகியோர் எழுதியது. இவர்கள் அமெரிக்கர்கள். இவர்களில் ஒருவர் பேராசிரியர். 

இவர்களது ஆராய்ச்சிக்கு முன்னர் மேற்குலகம் தியான முறையை அப்போதைய அறிவியல் கண் கொண்டு ஏளனம் செய்ததால் தியான முறையில் விஷேசம் ஒன்றும் இல்லை என்று முடிவு பண்ண முடியுமா? 

 

 

 

 
 

ஒரு மதத்தின் தியான முறையை, எந்த அறிவியலாளர்களாலும் ஆய்விற்கு உட்படுத்த முடியாது.

தியான முறை வேறு.  இந்து மதத்தின் உட்கிரியைகள் வேறு.

மேற்குலகம் ஒன்றை கேலி செய்தால்,  அது உலகத்தில் உள்ள எல்லாருக்கும் பொருந்துமா?

மேற்குலகம் பெரும்பாலானவை கிறிஸ்தவ நாடுகளாக இருந்தாலும், கிறிஸ்தவத்தை மறந்து, மதச்சார்பற்ற, சடத்துவ வாழ்வு முறை ஒன்றை அவர்களே உருவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதை கிறிஸ்தவர்களே விரும்புவதில்லை. 

அடுத்தது, புத்த மக்களால் ஏதோ ஓரளவாவது பின்பற்றப்படும் Meditation ஆல் எந்தப் பயனும் இல்லை என்று தற்போது சொல்கிறார்கள்.

 

4 minutes ago, மாங்குயில் said:

 

அறிவியல் என்பது ஊர்ஜிதப்பட்டதாக இருக்க வேண்டும்.

மதத்தின் கருத்துக்கள், ஊர்ஜிதப்பட்ட அறிவியலுக்கு முரணிப்பதாக இருக்குமென்றால், மதத்தின் கோட்பாடுகள் மனிதனுக்கு சந்தேகத்தை  ஏற்படுத்தும்.  

இங்கு நிறையப்பேர், இந்து மதத்திற்கு எதிராக விமரிசனம்  செய்கின்றனர். ஆனால், உங்கள் எழுத்தில் எந்த பதிலையும் காணோம்.

அவர்களின் கேள்வி அறிவார்ந்ததாக எனக்குப்படவில்லை. அறிவியல் தரும் செய்திகளும் காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது.

மேலும், மதங்கள் அறிவியலுக்கும் அப்பாற்பட்டவை. அறிவியல் மூலம் மட்டுமே அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. அவற்றை வாழ்தே தான் அனுபவித்து உணரலாம். அவர்களுக்குத் தெரிந்த அறிவியல் கொண்டு இந்து மத கோட்பாடுகளை உணரமுடியவிலை எனில், அதற்காக கோட்பாடுகளையோ, எனது நம்பிக்கையோ மாற்ற முடியாது.

நான் இதற்கு முன்னர் எழுதிய பதிலை மீண்டும் வாசியுங்கள். 

2 minutes ago, மாங்குயில் said:

ஒரு மதத்தின் தியான முறையை, எந்த அறிவியலாளர்களாலும் ஆய்விற்கு உட்படுத்த முடியாது.

தியான முறை வேறு.  இந்து மதத்தின் உட்கிரியைகள் வேறு.

மேற்குலகம் ஒன்றை கேலி செய்தால்,  அது உலகத்தில் உள்ள எல்லாருக்கும் பொருந்துமா?

மேற்குலகம் பெரும்பாலானவை கிறிஸ்தவ நாடுகளாக இருந்தாலும், கிறிஸ்தவத்தை மறந்து, மதச்சார்பற்ற, சடத்துவ வாழ்வு முறை ஒன்றை அவர்களே உருவாக்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இதை கிறிஸ்தவர்களே விரும்புவதில்லை. 

அடுத்தது, புத்த மக்களால் ஏதோ ஓரளவாவது பின்பற்றப்படும்Meditation ஆல் எந்தப் பயனும் இல்லை என்று தற்போது சொல்கிறார்கள்

நான் குறிப்பிட்ட புத்தகத்தை வாசியுங்கள். தியானமுறை இந்த எழுத்தாளர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் இன்று உளவியல் துறையில் பயன்படுத்தப்படுகிறது. தியானம் இந்து மதத்தின் ஓர் அங்கமே. 

மேலும் Meditationஇன் மகிமை மேற்குலகம் புரிந்து பல ஆண்டுகளாகின்றன. அதை சரியான முறையில் செய்யாதோர் பலன் பெறமாட்டார்கள் தான். அது தியானத்தில் உள்ள குறையல்ல.

நீங்கள் குறிப்பிட்ட மேற்குலகின் "சடத்துவ வாழ்வு முறை" இந்து/சைவத்தை பின்பற்றும் சமூகத்தினரிடம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மல்லிகை வாசம் said:

 

3) அறிவியல் ஆராய்ச்சி மூலம் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அத்தனையும் நம்பகரமானவை அல்ல. இந்த ஆராய்ச்சிகழுக்குப் பின்னால் உள்ள அரசியல், வர்க்கம் போன்ற காரணிகள் நமக்கு கிடைக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையை மாற்றலாம். உதாரணமாக அண்மையில் கனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம். ஒருகாலத்தில் இது ஏன் தடை செய்யப்பட்டிருந்தது? இப்போது ஏன் தடை நீக்கம்? இது பற்றிய தகவல்களைத்  தேடி வாசியுங்கள். இதன் பின்னால் உள்ள அரசியல் புரியும்.


 

 

கஞ்சா அடிப்பது, சிகரெட் புகைப்பது, மது அருந்துவது, விபச்சாரம் செய்வது, ஓரினத்  திருமணம் செய்வது போன்றவை, அறிவியல் சொன்னால்தான் பிழை என்பதல்ல.

நமது அன்றாட வாழ்க்கையில் நிலவும் மகா பாதகச் செயல்கள் இவை.

இவைகளை, ஓர் அரசே செய்வதற்கு அனுமதி கொடுத்தால், அதனால் உண்டாகும் தீமைகளை மக்கள்தான் அடைவர்.

இதற்கு அரசுதான் பொறுப்பு. 

இவைகளை அந்நாட்டு மக்கள் எந்த விதப் பாதிப்பும் இல்லை என்று ஏற்றுக்கொண்டால், அது அவர்களின் சுதந்திரம்.  அவ்வளவுதான்.

கனடா அரசிற்கு, கஞ்சா அடித்தால் எந்தளவு பாதிப்பு வரும் என்று தெரியும் அறிவியல் ரீதியாக.

21 minutes ago, மல்லிகை வாசம் said:

அவர்களின் கேள்வி அறிவார்ந்ததாக எனக்குப்படவில்லை. அறிவியல் தரும் செய்திகளும் காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது.

 


 

அறிவியல் செய்திகள் காலத்திற்கு காலம் பெரும்பாலும் மாறுபடாது -   ஊர்ஜிதப்படுத்தப்பட்டவை.

அறிவியல் சார்ந்தவை அடிக்கடி கண்டுபிடிக்கப்படும்.  இவை விதிகளாக இருக்கும். 

ஊர்ஜிதப்படுத்தப்படாதவை.

இன்னொரு கண்டுபிடிப்பிற்குப்பின், அந்த விதி பிழை என்றபடியால், காலாவதியாகும்.  

Just now, மாங்குயில் said:

கஞ்சா அடிப்பது, சிகரெட் புகைப்பது, மது அருந்துவது, விபச்சாரம் செய்வது, ஓரினத்  திருமணம் செய்வது போன்றவை, அறிவியல் சொன்னால்தான் பிழை என்பதல்ல.

நமது அன்றாட வாழ்க்கையில் நிலவும் மகா பாதகச் செயல்கள் இவை.

கஞ்சா உதாரணத்தை இங்கு குறிப்பிட்ட காரணம் கஞ்சா கெடுதல் தரும் என்று மேற்குலகம் அன்று செய்த பரப்புரை தான். அறிவியலில் முன்னேறிய அதே மேற்குலகத்தை சேர்ந்த ஓர் நாடு இன்று கஞ்சாவை அனுமதிக்கிறது என்றால் அறிவியல் மேல் தவறா, அல்லது மேற்குலகம் அறிவீனமாகச் செயற்படுகிறது என்பதா? 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா  முடியல  இந்த திரி (வெறி)??

மதம்  பிடித்தவர்களால்  தான்  அதிகம்  தாக்கங்களை  உருவாக்க  முடியும்

எது  நடந்தபோதும்

மதமே  உலகில்  எல்லா  அழிவுகளையும் செய்வதற்கு  இந்த  திரியே  சாட்சியாகிவிட்டது

இதுவரை எமது இனம் பற்றி  

எமது இனத்தின்  வரும்காலம் பற்றி 

தாயகத்தின் அடுத்த  கட்டங்கள்  பற்றி  எல்லாம்  எழுதப்பட்ட திரிகளையெல்லாம்  

நினைக்கும்  போது இனி எம்  இனம்???????😥

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, மல்லிகை வாசம் said:

நான் குறிப்பிட்ட புத்தகத்தை வாசியுங்கள். தியானமுறை இந்த எழுத்தாளர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் இன்று உளவியல் துறையில் பயன்படுத்தப்படுகிறது. தியானம் இந்து மதத்தின் ஓர் அங்கமே. 

மேலும் Meditationஇன் மகிமை மேற்குலகம் புரிந்து பல ஆண்டுகளாகின்றன. அதை சரியான முறையில் செய்யாதோர் பலன் பெறமாட்டார்கள் தான். அது தியானத்தில் உள்ள குறையல்ல.

நீங்கள் குறிப்பிட்ட மேற்குலகின் "சடத்துவ வாழ்வு முறை" இந்து/சைவத்தை பின்பற்றும் சமூகத்தினரிடம் இல்லை.


Meditation என்பது, மிகவும் பலனளிக்கும் முறையல்ல என்று சொல்கிறார்கள் தற்போது.

மேற்குலகம் ஒன்றை நல்லது என்று ஏற்றால், அது கண்டிப்பாக உண்மையாக இருக்கும் என்பது நாம் நினைப்பது சரியல்ல.

7 minutes ago, மாங்குயில் said:

இவைகளை, ஓர் அரசே செய்வதற்கு அனுமதி கொடுத்தால், அதனால் உண்டாகும் தீமைகளை மக்கள்தான் அடைவர்.

இதற்கு அரசுதான் பொறுப்பு. 

கனடா போன்ற ஒரு மேற்குலக நாடு இதை அனுமதிக்கிறது. கஞ்சா தீமை தரும் என்று தெரிந்தே அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறதா? 

11 minutes ago, மாங்குயில் said:

இவைகளை அந்நாட்டு மக்கள் எந்த விதப் பாதிப்பும் இல்லை என்று ஏற்றுக்கொண்டால், அது அவர்களின் சுதந்திரம்.  அவ்வளவுதான்.

கனடா அரசிற்கு, கஞ்சா அடித்தால் எந்தளவு பாதிப்பு வரும் என்று தெரியும் அறிவியல் ரீதியாக.

அப்போ உங்கள் கூற்றுப்படி கஞ்சா பாதிப்புத் தரும் என்று அறிவியல் ரீதியாக தெரிந்தும் அந்நாட்டு மக்களுக்கு என்ன பயன்? அறிவியலால் என்ன பயன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, மல்லிகை வாசம் said:

கஞ்சா உதாரணத்தை இங்கு குறிப்பிட்ட காரணம் கஞ்சா கெடுதல் தரும் என்று மேற்குலகம் அன்று செய்த பரப்புரை தான். அறிவியலில் முன்னேறிய அதே மேற்குலகத்தை சேர்ந்த ஓர் நாடு இன்று கஞ்சாவை அனுமதிக்கிறது என்றால் அறிவியல் மேல் தவறா, அல்லது மேற்குலகம் அறிவீனமாகச் செயற்படுகிறது என்பதா? 


 

கஞ்சா கெடுதல் தரும் என்று எந்த மேற்குலக நாடுதான் கருதவில்லை.

ஒன்றை மேற்குலகம் கடைப்பிடிக்காததை, தற்போது கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது என்று கண்டால், அந்தந்த நாடுகளைத்தான் கேட்க வேண்டும்.

கஞ்சா அடிப்பது, அறிவியல் ரீதியாக மனிதனுக்கு  தீங்கு தரும்  என்று எல்லாருக்கும் தெரிந்த விடயம்.

5 minutes ago, மாங்குயில் said:


Meditation என்பது, மிகவும் பலனளிக்கும் முறையல்ல என்று சொல்கிறார்கள் தற்போது.

மேற்குலகில் meditationன் பயன்கள் நன்கு உணரப்பட்டுள்ளது. ஆதாரமாக அந்த புத்தகத்தை பற்றி எழுதியுள்ளேன். உங்கள் கூற்று ஆதாரமற்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, மல்லிகை வாசம் said:

கனடா போன்ற ஒரு மேற்குலக நாடு இதை அனுமதிக்கிறது. கஞ்சா தீமை தரும் என்று தெரிந்தே அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறதா? 

அப்போ உங்கள் கூற்றுப்படி கஞ்சா பாதிப்புத் தரும் என்று அறிவியல் ரீதியாக தெரிந்தும் அந்நாட்டு மக்களுக்கு என்ன பயன்? அறிவியலால் என்ன பயன்?


 

எல்லா சிகரெட் பாக்கெட்களிலும், அதைக் குடித்தால் புற்று நோய் வரும் என்று எழுதித்தான் அதை விற்கிறார்கள்.

மேற்குலகத்திற்கு  நன்கு தெரியும் -  சிகரெட் குடிப்பது பிழை என்பது.  

கனடா என்பது,  Theocracy country அல்ல. 

3 minutes ago, மல்லிகை வாசம் said:

மேற்குலகில் meditationன் பயன்கள் நன்கு உணரப்பட்டுள்ளது. ஆதாரமாக அந்த புத்தகத்தை பற்றி எழுதியுள்ளேன். உங்கள் கூற்று ஆதாரமற்றது.


 

யாரும் எந்த  புத்தகத்தையும் எழுதலாம்.

அவை யதார்த்தமாக இருக்கும் என்ற கொள்கையில் உலகத்தார் யாரும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.