Jump to content

இன, மத பேதமின்றி ஒரே குடையின் கீழான ஆட்சியை உருவாக்குவேன் -: யாழில் சஜித்


Recommended Posts

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை வெளிநாட்டு உதவிகளைப் பெற்று அபிவிருத்தியில் உச்சமடைந்த மாகாணங்களாக மாற்றுவேன் எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் இன மத பேதம் இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் வாழும் அமைப்பை உருவாக்குவேன் எனத் தெரிவித்தார்.

sajith_jaffna.jpg

ஐக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் தலைமையில் நல்லூர் சங்கிலியன் புங்காவில்  இடம்பெற்றபோதே அவர் இததைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

யாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் பொருத்தவரையில் இங்கு பிரச்சனைகள் தேவைகள் பல இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அதனூடாக அபிவிருத்தியில் முதன்நிலை மாவட்டமாக இந்த மாவட்டத்தை உருவாக்குவேன்.

ஏழ்மையினை நீக்குவதற்காக சமுர்த்தி வேலைத் திட்டமொன்று நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. இதனோடு இணைந்ததாக ஐனசவித் திட்டத்தையும் வழங்கி ஏழ்மையை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.

இந்த நாட்டில் 44 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு இரண்டு இலவச சீருடையும் ஒரு பாதணியும் அதே போல பகல் போசனமும் இலவசமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளேன்.

மேலும் பாலர் பாடசாலையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்வேன். இப்பொழுது பணம் செலுத்தி தான் பாலர் பாடசாலையின் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது. பாலர் பாடசாலையின் ஆசரியருக்கு அரச சம்பளம் வழங்கப்படும். அதே போன்று உப ஆசிரியருக்கும் அரச சம்பளம் வழங்கப்படும். பாலர் பாடசாலைகளுக்கு வசேடமாக மண்டபங்களும் நிர்மாணிக்கப்படும். 

பாலர் பாடசாலைக் கல்வியை இலவசக் கல்வித் திட்டத்தோடு இணைத்து செல்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்வேன்.

மேலும் விவசாயத் துறையைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். குறிப்பாக நெல், சேனைப் பயிர்ச்செய்கை கட்டியெழுப்புவதற்கும் தேயிலை இறப்பர் தென்னை என இவை அனைத்திற்கும் தேவையான பசளையை இலவசமாக வழங்குவேன்.

யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் தொழில் நுட்பக் கல்லூரி உருவாக்கப்படும். அதே போன்று ஒரு தொழில் நுட்ப மையம், தொழில் நுட்ப புங்கா என்பனவும் உருவாக்கப்படும் இந்த தொழில் நுட்பக் கல்லூரியின் மூலமாக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற முடியும். அதனைப் போன்று தான் தகவல் தொழில் நுட்பம் ஆங்கில அறிவு என்பவற்றையும் இலவசமாக வழங்கக்க கூடிய அமைப்பாக இதனை மாற்றி அமைத்து இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

இந்த மாவட்டத்திலுள்ள சிறுகைத்தொழிலாளர்களுக்கும் பாரிய கைத்தொழில் திட்டங்களை மேற்கொள்பவர்களுக்கும் சலுகை அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். அதே போன்று யுத்தத்தின் காரணமாக தமது அவயங்களை இழந்த விசேட தேவையுடையவர்களுக்கு விசேட வேலைத் திட்டத்தை முன்னெடுப்போம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் உள்ளது. வடக்கு கிழக்கிற்கு வேறாக வெளிநாட்டு உதவித் திட்டங்களைக் கொண்டு வந்து அபிவிருத்தியில் உச்ச கட்டத்தில் திகழும் மாகாணங்களாக இந்த வடகிழக்கு மாகாணங்களை மாற்றியமைப்போம்.

எனது கொள்கைப் பிரகடனம் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை உங்களது அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் ஊடாக ஒவ்வொரு வீடுகளுக்கும் வந்து சேரும். அந்தப் புத்தகத்திலே எதிர்காலத்தில் என்னென்ன விடயங்களை இந்த நாட்டிலே நாங்கள் நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என்பது உள்ளடங்கப்பட்டிருக்கிறது.

யுத்தத்தின் பிறகு எவருமே சர்வதேச மாநாடு ஒன்றை வடக்கு கிழக்கு மாகாணங்களிலே இதுவரை நடாத்த முடியாமல் போனது. ஆகவே என்னுடைய அரசாங்கத்திலே அந்த மாநாடுகளை வடகிழக்கு மாகாணங்களிலே நடாத்துவோம்.

அதே போன்று ஒருமித்த நாட்டில் இனமத கட்சி என்ற பேதமில்லாமல் அனைவரும் தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் கீழ் வாழக் கூடிய அமைப்பை எதிர்கால அரசாங்கத்தில் நான் நிச்சயமாக உருவாக்குவேன்.

யாழ் மாவட்டத்திலே 15 பிரதேச செயலகங்கள் இருக்கிறது. 435 கிராம சேவகர் பிரீவுகள் இருக்கிறது. ஆயிரத்து 611 கிராமங்கள் இருக்கிறது. இதை உள்ளடக்கிய அனைத்து மக்களுக்கும் நிச்சயமாக அபிவிருத்தி செய்வேன். இந்த யாழ் மாவட்டத்தை அபிவிருத்தியில் உச்ச கட்டத்தில் திகழும் மாவட்டமாக நிச்சயமாக நான் மாற்றியமைப்பேன் என்றார்.

https://www.virakesari.lk/article/68550

Link to comment
Share on other sites

"யாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் பொருத்தவரையில் இங்கு பிரச்சனைகள் தேவைகள் பல இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அதனூடாக அபிவிருத்தியில் முதன்நிலை மாவட்டமாக இந்த மாவட்டத்தை உருவாக்குவேன். "

ஒரு மாகாண இல்லை மாநில சுய ஆட்சியை வழங்கினால் மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்.

ஏற்கனவே நாடு பொருளாதார சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் பல பல இலவசங்களை வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வரும் என கூறமாட்டார்கள். காரணம், வெற்றியின் பின்னர் மக்களை மறக்க வைத்துவிடுவார்கள். 

Link to comment
Share on other sites

13 hours ago, ampanai said:

ஒரு மாகாண இல்லை மாநில சுய ஆட்சியை வழங்கினால் மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்.

எவ்வாறு மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்?

13 hours ago, ampanai said:

ஏற்கனவே நாடு பொருளாதார சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் பல பல இலவசங்களை வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வரும் என கூறமாட்டார்கள். காரணம், வெற்றியின் பின்னர் மக்களை மறக்க வைத்துவிடுவார்கள். 

அது தான் வெளிநாட்டு உதவிகளை பெற்று என கூறியுள்ளாரே.

Link to comment
Share on other sites

7 hours ago, Lara said:

எவ்வாறு மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்?

தமிழ் நாடு போன்று 🙂

தமக்கென சில கொள்கைகளை வகுத்து தாமே ஆளும் பொறிமுறை இருந்தால் எமது மக்கள் தாமே தம்மை வளர்த்துக்கொள்ளுவார்கள். 

7 hours ago, Lara said:

அது தான் வெளிநாட்டு உதவிகளை பெற்று என கூறியுள்ளாரே.

இவ்வளவு நாளும் உள்நாட்டு பணத்திலா ஏதாவது செய்கிறார்கள்? வெளிநாட்டு பணத்தில் தான் 'வளர்ச்சி' என்ற  திட்டம் மட்டுமே உள்ளது. ஆனால், பின்னர் சிங்கள தேசத்தையே அபிவிருத்தி செய்கிறார்கள். 

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

தமிழ் நாடு போன்று 🙂

தமக்கென சில கொள்கைகளை வகுத்து தாமே ஆளும் பொறிமுறை இருந்தால் எமது மக்கள் தாமே தம்மை வளர்த்துக்கொள்ளுவார்கள். 

தமிழ்நாடும் மத்திய அரசின் கட்டுப்பாட்டினுள் தான் உள்ளது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தமக்கு சொத்து சேர்க்கும் அளவுக்கு மக்கள் மேல் அக்கறையில்லை. தமிழ்நாட்டு மக்கள் தம்மைத்தாமே வளர்த்துக்கொள்ளும் நிலையில் தமிழகம் இல்லை.

அது போக,

சஜித் தேர்தலுக்கு முன் கூறும் அனைத்தையும் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வந்தால் செயற்படுத்துவார் என்றில்லை. ஆனாலும் சிலவற்றை கூறியுள்ளார். ஐக்கியம் என்ற சொல்லுக்கான சிங்கள சொற்பிரச்சினையை தவிர்த்து இதை வாசியுங்கள்.

மக்களுக்கு அதிகாரம்.

நாம் எம் தாய் நாட்டின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியற் சுதந்திரம் என்பவற்றை பாதுகாப்போம். அரச முடிவெடுப்பை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவோம். பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்படும். அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாகவும் வினைத்திறனுள்ளதாகவும் மாறும். வீணடிப்புகள் குறைக்கப்படும். இந்த சீர்திருத்தங்கள் சட்டத்திலும் நடைமுறையிலும் மட்டுமல்லாமல், அனைத்து இலங்கையர்களிடையேயும் உண்மையான ஒற்றுமை உருவாகுவதை உறுதி செய்யும்.

இதுபோன்று, மாகாணங்களின் அதிகாரங்கள், செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை ஜனாதிபதிகளாகிய ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் கீழ் முன்வைக்கப்பட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும். மையத்தில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதற்கும், மையமும் மாகாணங்களும் தங்களது திறன்களின் அடிப்படையில் அந்தந்த அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்காக மாகாண சபைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இரண்டாவது சபை - செனட் சபை - ஒன்று உருவாக்கப்படும்.

தேவையான நிதிகளைத் திரட்டுவதற்கும் அவற்றின் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்துவதற்கும் மாகாணங்களுக்கு தேவையான அதிகாரங்கள் இருக்கும். மாவட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மத்திய அரசின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் போது மையத்தின் முகவர்களாகவும், மாகாண அரசின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் போது மாகாணத்தின் முகவர்களாகவும் செயற்படுவார்கள். அதிகாரப் பகிர்வு அலகுகளைப் பொறுத்தவரை, உடன்பாடுகளுக்கேற்ப தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிகாரப் பகிர்வை மிகவும் அர்த்தமுள்ளதாகவும் செலவு குறைந்ததாகவும் ஆக்குவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 6 people, people smiling, people standing

இது மட்டு நகரில் இன்று நடந்த கூட்டம் 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

Image may contain: 6 people, people smiling, people standing

இது மட்டு நகரில் இன்று நடந்த கூட்டம் 🤣🤣🤣

இன்று மூன்று இடத்தில் கூட்டம் மட்டக்களப்பில் , களுதாவளையில் , கல்முனையில்  எனது வாக்கு சுற்றியிருக்கும் கூட்டத்தினரால் மாறிவிட்டது இப்படி கனபேர் கிழக்கில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்று மூன்று இடத்தில் கூட்டம் மட்டக்களப்பில் , களுதாவளையில் , கல்முனையில்  எனது வாக்கு சுற்றியிருக்கும் கூட்டத்தினரால் மாறிவிட்டது இப்படி கனபேர் கிழக்கில் 

இது கல்லடியிலாம் ...புல்லாவை தவிர மற்ற முஸ்லீம் தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் நிக்கினம்...காத்தான்குடியை புல்லா குடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரோ🙂 தெரியாது கல்லடியில்  கூட்டம் வைக்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

இது கல்லடியிலாம் ...புல்லாவை தவிர மற்ற முஸ்லீம் தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் நிக்கினம்...காத்தான்குடியை புல்லா குடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரோ🙂 தெரியாது கல்லடியில்  கூட்டம் வைக்கினம் 

அதுவும் பாலத்தின் கீழ் உள்ள ஒரு ஹோட்டல் அருகாமையில் மட்டக்களப்பில் கன இடங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் வந்துதான் கூட்டம் வைக்கிறார்கள் சஜித் ஐயாக்கு 

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

இது மட்டு நகரில் இன்று நடந்த கூட்டம் 🤣🤣🤣

 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்று மூன்று இடத்தில் கூட்டம் மட்டக்களப்பில் , களுதாவளையில் , கல்முனையில்  எனது வாக்கு சுற்றியிருக்கும் கூட்டத்தினரால் மாறிவிட்டது இப்படி கனபேர் கிழக்கில் 

ஹக்கீமின் Twitter பக்கத்துக்கு சென்றால் சஜித்துக்கான பிரச்சார கூட்டங்கள் பலவற்றின் படங்களை பார்க்கலாம். முஸ்லிம்கள் சேர்ந்து நின்று அரசிடமிருந்து பலவற்றை பெறுவதில் கைதேர்ந்தவர்கள்.

அதே நேரம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது நடக்கும்.

Link to comment
Share on other sites

4 hours ago, Lara said:

 

ஹக்கீமின் Twitter பக்கத்துக்கு சென்றால் சஜித்துக்கான பிரச்சார கூட்டங்கள் பலவற்றின் படங்களை பார்க்கலாம். முஸ்லிம்கள் சேர்ந்து நின்று அரசிடமிருந்து பலவற்றை பெறுவதில் கைதேர்ந்தவர்கள்.

அதே நேரம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது நடக்கும்.

அதன் பின்னர் முஸ்லிம்களை சிங்களம் அழிக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Lara said:

 

ஹக்கீமின் Twitter பக்கத்துக்கு சென்றால் சஜித்துக்கான பிரச்சார கூட்டங்கள் பலவற்றின் படங்களை பார்க்கலாம். முஸ்லிம்கள் சேர்ந்து நின்று அரசிடமிருந்து பலவற்றை பெறுவதில் கைதேர்ந்தவர்கள்.

அதே நேரம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது நடக்கும்.

முஸ்லிம்களை வைத்து தமிழர்களை, சிங்களம் அழிக்க நினைக்கும்...அதே தமிழர்களை வைத்து முஸ்லிம்களை அடக்க நினைக்கும்..."தக்கன பிழைக்கும்" ...இப்பத்தைய இலங்கை அரசியல் நிலவரத்தின் படி முதலில்  முஸ்லிம்கள் இல்லாமல் போக வேண்டும் என்பதே சிங்களம் விரும்புகின்றது...அதன் பின்னரே தமிழர்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் ஓரிரு தடவை இறக்கி ஏற்ற வந்திருக்கிறேன். உள்ள முழு ரேமினல்களுக்கும் ஓரேஒரு பாதையை வைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைய ரொம்ப நேரமெடுத்தது.அரைவாசி போனால் பிரச்சனை இல்லை. சாப்பாடு முக்கியம் தலைவரே. சாப்பாடு எப்படி இருந்தது? யோவ் என்ன மப்பா? பயணக்கதை எழுதுறது ரசோதரன்.
    • மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். நிலாமதி அக்கா
    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.