Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால், வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால்,  வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு

ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பிரசாரக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “ அதியுச்ச அதிகாரப் பங்கீட்டுடன் நான் அரசியற் தீர்வினைத் தருவேன் என்று கோட்டாபயவின் விஞ்ஞாபனத்தில் கூறியிருக்கின்றாரா? அரசியற் தீர்வு சம்பந்தமாக எதையும் சொல்லியிருக்கின்றாரா? இல்லை, அவ்வாறான ஒருவருக்கு நாங்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்.

ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல், நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும்.

அதனை நாங்கள் பெறுவதாக இருந்தால், அதனை நாங்கள் முன்னெடுப்பதாக இருந்தால். எமது நியாயமான நிலைப்பாட்டை உணர்ந்திருக்கும் சர்வதேச சமூகம் எங்களுடன் இருக்கின்றபோது இவற்றை நிறைவேற்றுவதாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவது அதற்கு உதவாது, அதற்குப் பாரிய பாதகத்தை ஏற்படுத்தும். எனவே இதனை அனைவரும் உணர்ந்து தமது வாக்குகளை பயன்படுத்தவேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/அதிகாரப்-பகிர்வு-வேண்டும/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-20190822170034.jpg

 

roflphotos-dot-com-photo-comments-20190815105818.jpg

Edited by தமிழ் சிறி

42 minutes ago, தமிழ் சிறி said:

அதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால்,  வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு

கடந்த 5 வருடங்களாக எங்களை நம்பி ஏமாந்ததுபோல இன்னும் பலகாலம் ஏமாற வேண்டுமென்றால் சஜித்துக்கு வாக்களியுங்கள் என்று கூத்தமைப்பின் சம்பந்தன் கோருகிறார்.

நம்பி ஏமாற விருப்பமில்லாத தமிழர் சிவாஜிலிங்கத்துக்கு தான் வாக்களிப்பர்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Rajesh said:

கடந்த 5 வருடங்களாக எங்களை நம்பி ஏமாந்ததுபோல இன்னும் பலகாலம் ஏமாற வேண்டுமென்றால் சஜித்துக்கு வாக்களியுங்கள் என்று கூத்தமைப்பின் சம்பந்தன் கோருகிறார்.

நம்பி ஏமாற விருப்பமில்லாத தமிழர் சிவாஜிலிங்கத்துக்கு தான் வாக்களிப்பர்!

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Rajesh said:

கடந்த 5 வருடங்களாக எங்களை நம்பி ஏமாந்ததுபோல இன்னும் பலகாலம் ஏமாற வேண்டுமென்றால் சஜித்துக்கு வாக்களியுங்கள் என்று கூத்தமைப்பின் சம்பந்தன் கோருகிறார்.

நம்பி ஏமாற விருப்பமில்லாத தமிழர் சிவாஜிலிங்கத்துக்கு தான் வாக்களிப்பர்!

சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்தால் கோத்தபாய ஆட்சி வந்தவுடன் சிவாஜிலிங்கம் காணாமல் போய்விடுவார். 

 சிவாஜிலிங்கம் காணாமல் போக வேண்டும் என்று விரும்புபவர்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கலாம்.

ஐயா அதிகாரப்பகிர்வுக்கு வாக்களித்து களைத்துவிட்டொம். இனி மக்கள் நிம்மதியாக படுத்து உறங்க எதாவது செய்யுங்கள். எங்களுக்கு அதிகாரம் கிடைக்கமுதல் சோனவன் வன்னியயும் , கிழக்கையும் கொண்டுபோய் விடுவான். பிச்சை வேணாம் நாயை பிடி எண்ட நிலைமைதான் இங்குள்ள தமிழர்களுக்கு. 

1 hour ago, Jude said:

சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்தால் கோத்தபாய ஆட்சி வந்தவுடன் சிவாஜிலிங்கம் காணாமல் போய்விடுவார். 

 சிவாஜிலிங்கம் காணாமல் போக வேண்டும் என்று விரும்புபவர்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கலாம்.

இப்பிடியான பூச்சாண்டிகளை சிறுபிள்ளைத்தனமான மனநிலை உடையவர்கள் நம்பலாம்!

"ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது." 

 

சுத்த பொய். அதியுச்ச அதிகாரப்பகிர்வாம் !

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 5 ஆண்டுகளாக மைத்திரிக்கு நல்லாட்சி பத்திரம் வழங்கியும் ரணிலின் ஆட்சிக்கு நீதிமன்றப் படி ஏறியும் சம் சும் மாவை கும்பல் பெற்றுத் தந்த அதிஉச்ச அதிகாரம் என்ன..??!

விகாரை அமைப்புக்களும்.. புதிய வடிவில் காணி அபகரிப்பும்.. காணாமல் போன உறவுகளின் கோரிக்கைகள் மழுங்கடிப்பும்.. அரசியல் கைதிகள் என்போரே இல்லை என்ற அறிவிப்பும்.. தான்.. பெற்றுத்தரப்பட்ட அதிஉச்ச உரிமைகள்.

அதுபோக.. ஒற்றையாட்சி.. ஒருமித்த நாட்டுக்கு விளக்கம் கொடுத்தே 5 வருடம் போய்விட்டது. மேலும் 100 நாளைக்குள் ஜனாதிபதி பதவியையே இல்லாமல் செய்வேன் என்று வந்த மைத்திரி.. ஜனாதிபதி பதவியை இப்போ பத்திரமாகக் காப்பாற்றி.. அடுத்த சிங்களக் கொடுங்கோலர்களின் கையில் தாரைவார்க்க தயாராகி விட்டார்.

போர்க்குற்றவாளிகள் எல்லோரும்.. மறப்போம் மன்னிப்போமுக்குள் அடக்கப்பட்டு விட்டார்கள். சர்வதேச விசாரணை உள்ளூர் விசாரணையாகி.. இப்ப அது இல்லாத விசாரணை ஆகிவிட்டது. 

இவை தான் கூத்தமைப்பு செய்த சாதனைகள். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.