Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பிறகு பிரிட்டன் 2ம் தர நாடாகி விடும்-டொனால்ட் டஸ்க்

Featured Replies

பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பிறகு, உலகில் பிரிட்டன் 2ம் தர நாடாகி விடும் என்று ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, பிரெக்ஸிட் என பரவலாக அழைக்கப்படுகிறது.  இதுகுறித்து பெல்ஜியத்தில் புருக்ஸ் நகரில்  உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் பேசினார்.

அப்போது அவர், பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு பிறகு பிரிட்டன் உலகில் 2ம் தர நாடாக ஆகி விடும் என்றும், சர்வதேச விவகாரங்களில் செலுத்தும் ஆளுமையை பிரிட்டன் இழந்து விடும் என்றும் தெரிவித்தார். பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சீனாவை ஒன்றுபட்ட ஐரோப்பாவால் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்றும் டொனால்ட் டஸ்க் குறிப்பிட்டார்.

 

https://www.polimernews.com/dnews/88768/பிரெக்ஸிட்நடவடிக்கைக்குப்-பிறகுபிரிட்டன்-2ம்-தர-நாடாகிவிடும்-டொனால்ட்-டஸ்க்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இருந்தால் பிரிட்டன் மூன்றாம் தர நாடுகளின் தரவரிசைக்கு போயிடும் என்றுதான் ஐரோப்பில் இருந்து எலக்கசன் மூலம் அறுத்து எடுத்தவங்கள் .

  • தொடங்கியவர்
3 hours ago, பெருமாள் said:

அப்படியே இருந்தால் பிரிட்டன் மூன்றாம் தர நாடுகளின் தரவரிசைக்கு போயிடும் என்றுதான் ஐரோப்பில் இருந்து எலக்கசன் மூலம் அறுத்து எடுத்தவங்கள் .

பிரித்தானியா முதலாம் தர நாடு இல்லை என்று விளம்பரம் செய்தால் வரும் அகதிகளின் எண்ணிக்கை குறையலாம் 🙂 

ஆனாலும், போலாந்துக்காரனும் ரூமேனியனும் விட மாட்டார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ampanai said:

பிரித்தானியா முதலாம் தர நாடு இல்லை என்று விளம்பரம் செய்தால் வரும் அகதிகளின் எண்ணிக்கை குறையலாம் 🙂 

ஆனாலும், போலாந்துக்காரனும் ரூமேனியனும் விட மாட்டார்கள்.
 

எல்லாம் டொனி பிலேயரும் லேபரும் செய்த வேலை. கிழக்கு ஐரோப்பியர்களுக்கு.. எல்லைகளை திறந்து விட்டது மகா தப்பு. 

இப்ப லண்டனில்.. ரயிலில் பயணிப்பதே கடினமானதாகி விட்டது. சொறீலங்காவில் பயணிப்பதை விடக் கேவலமாகி விட்டது. அவ்வளவுக்கு நெருக்குவாரம். 

இப்படியே போனால்.. கிழக்கு ஐரோப்பா பிரிட்டனை சுரண்டி சுரண்டி பணக்காரர் ஆகிடுவாங்கள்.. பிரிட்டன் பிச்சைக்கார நாடாகிடும்.

அதிலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகி எல்லைகளை மூடுவது நல்லம். திறமைசாலிகளுக்கு மட்டும் எல்லையை திறக்கனும்... அவுஸி போல். 

இன்றேல்.. பிரிட்டன் இரண்டாம் தரமல்ல.. 3ம் தர நாடாவது தவிர்க்க முடியாதிருக்கும். 

ஏலவே சுவீடன்.. தோற்றுப்போன நாடாகி விட்டதாம். அவர்களும் இப்போ ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு காலத்தில் எல்லோரும் வேலை செய்த நாட்டில்.. இப்போ... முதியவர்களைக் கூட பராமரிக்க முடியாத அளவுக்கு கஸ்டம். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
7 minutes ago, nedukkalapoovan said:

இப்ப லண்டனில்.. ரயிலில் பயணிப்பதே கடினமானதாகி விட்டது. சொறீலங்காவில் பயணிப்பதை விடக் கேவலமாகி விட்டது. அவ்வளவுக்கு நெருக்குவாரம். 

அதிலும் இந்த பழைய 'ட்யூப்பில்' கொஞ்சம் நெடியவர்கள் வளைந்து தான் பயணிக்க வேண்டும். 

 

7 minutes ago, nedukkalapoovan said:

ஏலவே சுவீடன்.. தோற்றுப்போன நாடாகி விட்டதாம். அவர்களும் இப்போ ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு காலத்தில் எல்லோரும் வேலை செய்த நாட்டில்.. இப்போ... முதியவர்களைக் கூட பராமரிக்க முடியாத அளவுக்கு கஸ்டம். 

ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய வங்கியின் பொருளாதார கொள்கையும் ஒரு காரணம். அவரகளின் பூச்சியத்திற்கு கீழேயான வட்டி வீதம் உழைப்பவர்களை விட சுரண்டுபவர்களை அதிகரிக்க வைத்துவிட்டது.

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

எல்லாம் டொனி பிலேயரும் லேபரும் செய்த வேலை. கிழக்கு ஐரோப்பியர்களுக்கு.. எல்லைகளை திறந்து விட்டது மகா தப்பு. 

இப்ப லண்டனில்.. ரயிலில் பயணிப்பதே கடினமானதாகி விட்டது. சொறீலங்காவில் பயணிப்பதை விடக் கேவலமாகி விட்டது. அவ்வளவுக்கு நெருக்குவாரம். 

இப்படியே போனால்.. கிழக்கு ஐரோப்பா பிரிட்டனை சுரண்டி சுரண்டி பணக்காரர் ஆகிடுவாங்கள்.. பிரிட்டன் பிச்சைக்கார நாடாகிடும்.

அதிலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகி எல்லைகளை மூடுவது நல்லம். திறமைசாலிகளுக்கு மட்டும் எல்லையை திறக்கனும்... அவுஸி போல். 

இன்றேல்.. பிரிட்டன் இரண்டாம் தரமல்ல.. 3ம் தர நாடாவது தவிர்க்க முடியாதிருக்கும். 

ஏலவே சுவீடன்.. தோற்றுப்போன நாடாகி விட்டதாம். அவர்களும் இப்போ ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு காலத்தில் எல்லோரும் வேலை செய்த நாட்டில்.. இப்போ... முதியவர்களைக் கூட பராமரிக்க முடியாத அளவுக்கு கஸ்டம். 

பிரிட்டன் வெளியேற மிச்சம் இருக்கிறவை துண்டை காணம் துணியை காணம் என்று விலகி விடுவினம் இல்லையோ பிரான்சு ஜெர்மன் போலிஸ் போல் அதிக அதிகாரங்களை கொண்டதாக பிரட்டிஷ் போலிஸ் இருக்கணும்  போலந்து காரனும் ருமேனியனும் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பினம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய யூனியன்ரை பாதிப்பு ஜேர்மனிக்கையும் இருக்கு...வெளியிலை காட்டிக்கொள்ளுறாங்களில்லை. AfD எண்ட வெளிநாட்டுகாரர் எதிர்ப்புக்கட்சி நல்லாய் முன்னேறிக்கொண்டு வருது.

https://en.wikipedia.org/wiki/Alternative_for_Germany

12 hours ago, பெருமாள் said:

பிரிட்டன் வெளியேற மிச்சம் இருக்கிறவை துண்டை காணம் துணியை காணம் என்று விலகி விடுவினம் இல்லையோ பிரான்சு ஜெர்மன் போலிஸ் போல் அதிக அதிகாரங்களை கொண்டதாக பிரட்டிஷ் போலிஸ் இருக்கணும்  போலந்து காரனும் ருமேனியனும் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பினம் .

தமிழர்களாகிய நாம் எமது வாலை சுருட்டாமல் எல்லை மீறுவது சக தமிழரிடம் மட்டும் தான் என்பதால் தமிழர்களுக்கு எந்த அதிகாரம் மிக்க  பொலிஸ் வந்தாலும் கவலை இல்லை. 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

தமிழர்களாகிய நாம் எமது வாலை சுருட்டாமல் எல்லை மீறுவது சக தமிழரிடம் மட்டும் தான் என்பதால் தமிழர்களுக்கு எந்த அதிகாரம் மிக்க  பொலிஸ் வந்தாலும் கவலை இல்லை. 😂😂😂

இங்கு மற்ற இனத்தவர்கள் செய்யும் கிரிமினல் வேலைகளில் இரண்டு வீதம் கூட நம்மவர்கள் செய்வதில்லை அப்படி செய்தாலும் எதோ தாங்களா செய்தது போல் கூனி குறுகி கொண்டு செல்லுவினம் குண்டே வைத்து போட்டு துணிவா அல்லா அக்பர் என்று கத்தி கொண்டு திரியும் ஒரு கூட்டம்  அவங்களை விடவா நாங்கள் ?

7 minutes ago, tulpen said:

தமிழர்களாகிய நாம் எமது வாலை சுருட்டாமல் எல்லை மீறுவது சக தமிழரிடம் மட்டும் தான் என்பதால் தமிழர்களுக்கு எந்த அதிகாரம் மிக்க  பொலிஸ் வந்தாலும் கவலை இல்லை. 😂😂😂

சக தமிழரிடம் தானே எங்களின் பலம் தெரியும் (பலவீனம் 😁😁😁😁)

44 minutes ago, பெருமாள் said:

இங்கு மற்ற இனத்தவர்கள் செய்யும் கிரிமினல் வேலைகளில் இரண்டு வீதம் கூட நம்மவர்கள் செய்வதில்லை அப்படி செய்தாலும் எதோ தாங்களா செய்தது போல் கூனி குறுகி கொண்டு செல்லுவினம் குண்டே வைத்து போட்டு துணிவா அல்லா அக்பர் என்று கத்தி கொண்டு திரியும் ஒரு கூட்டம்  அவங்களை விடவா நாங்கள் ?

 உண்மை தான் பெருமாள். அதைத் தான்  நானும் குறிப்பிட்டேன். அடுத்தவன் முன்னால் கூனி குறுகி எமது உரிமைகளை கூட விட்டுக்கொடுக்கும் நாம் எமக்குள் அப்படி அல்ல.

தொழில் கொள்வோர் முன்னால்  தமிழர்கள் பயந்த சுபாவம் உள்ளவர்கள் அடக்க ஒடுக்கமாக கீழ்ப்படிந்து வேலை செய்பவர்கள் என்ற பெயரை எடுத்த நாம் எமக்குள் தமிழ் சங்கங்கள் கோவில்கள்  என்று  சிறிய விடயங்களுக்கும் போலி கெளரவங்களுக்கும்  எமக்குள்  அடிபடுவதை  தவிர ஒரு சமூகமாக அடுத்தவர் முன் நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு எமது  சொந்த “சமூக வர்ததக பொருளாதார கட்டமைப்புக்களை” புலத்தில் கட்டி எழுப்பவில்லை என்பதையே சுருக்கமாக நகைச்சுவையாக குறிப்பிட்டேன். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பொருளாதாரம் பற்றியும் 

சனங்களின்  இடம்  பெயர்வு  சார்ந்தும் கொதித்துப்போய்  பேசுகின்றீர்கள்?

இதெல்லாம் உள்ளே  வரும் போது யோசிப்பதில்லையா?

அல்லது அந்தளவுக்கு சரக்கில்லையா??

வரவும்  உண்டு  செலவும்  உண்டு

பிரித்தானியா  எப்பொழுதுமே  முழுக்க முழுக்க சுயநலத்துடன் சிந்திக்கும் நாடு

வரவு மட்டுமே குறிக்கோள்

ஆனால் இன்றைய  உலக  ஒழுங்கில்  பலமாகுதலே தம்மையும்  காப்பாற்ற  வழி

இனி பிரித்தானியா  தனியே  நின்று.....?.??????

 

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.