Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாபய ராஜபக்­ச - மோடி சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மோடி கலந்துரையாடுவார் 13 குறித்து பேசப்படாது; புதுடில்லி தகவல்

Featured Replies

ஜனாதிபதி கோட்டா இந்திய பிரதமர் மோடி சந்திப்பில் தமிழர் பிரச்சினைகுறித்து மோடி கலந்துரையாடுவார் என புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மேலும் இச் சந்திப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து கலந்துரையாடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரும் வெள்ளிக்கிழமை புதுடில்லிக்குப் பயணமாகிறார். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, தமிழர் பிரச்சினை குறித்து, இந்தியப் பிரதமர் மோடி கலந்துரையாடு வார் என்று  அவர்கள் எதிர்பார்ப்பதாக புதுடில்லி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அத்துடன், இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் இந்திய வீட்டுத் திட்டம் மற்றும் பிற திட்டங்களைத் தொடருவது குறித்தும் கலந்துரையாடப்படும் என்றும், இது பெரும்பாலும் தமிழர்களுக்கு பயனளிக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
எனினும், கடந்த அரசினால் விவாதிக்கப்பட்டு வந்த 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து, கோட்டாபய ராஜபகஷவுடனான முதல் சந்திப்பில், இந்தியப் பிரதமர் மோடி அழுத்தங்களைக் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் புதுடில்லி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.                 
 
  • கருத்துக்கள உறவுகள்

கடஞ்சா,

எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். “மோடி இலங்கை இந்துக்கள் சார்பாக, ஒரு தீர்வைத் தரும்படி இலங்கையை நெருக்குவார்” என்ற  பெயருடைய ஒரு குழந்தை அனாதரவாக கோயில் நிர்வாக சபையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதைதான் எங்கள் அதிகாரப்பரவல் செயல் திட்டம். 

இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்கள் கழித்து எங்கள் நிலமையைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.  தமிழரையும் எங்கள் அதிகாரப் பரவலாக்கத்தின் நிலையும்   ??? 

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கையுடனான ஒவ்வொரு சந்திப்பிலும்   முதன்மை விடயமாக 13 ம் திருத்தமே இருந்தது. அதை நடைமுறைப் படுத்த முடியாது என்ற துணிவிலேயே அது பற்றி இந்தியா பேசியது. இப்போது அதனை எந்த தடையும் இன்றி நடைமுறைப்படுத்தக. கூடிய சூழ்நிலையில் அதை பற்றி பேச விருப்பமில்லை இந்தியாவுக்கு. 

அதே போல டக்ளஸ்ஸும் யு த்த காலத்தில்  ஒவ்வொரு பத்திரிகை பேட்டியிலும் முதலாவது வசனமாக பாடமாக்கி ஒப்புவித்த விடயம் “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி”என்ற மத்திரத்தையே அமுவே  எமது கொள்கை  அதை அடைய புலிகள் தடை என்ற விடயமே. ஆனால் இப்போது அவரது  அந்த கொள்கையை அமுல்படுத்த்கூடிய  சூழ்நிலை இருப்பதால் அதை மறந்தமாதரி அவர் விட்டு விட்டார்.  

தாங்கள் தோல்வியடைந்து அழிகப்பட்டால் தமிழ் மக்களின்  அரசியல் அபிலாசைகள் எல்லாம் குழி தோன்றி புதைக்ப்படும் என ற தீர்கக தரிசனம்  புலிகளுக்கு கூட இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்சமே. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

கடஞ்சா,

எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். “மோடி இலங்கை இந்துக்கள் சார்பாக, ஒரு தீர்வைத் தரும்படி இலங்கையை நெருக்குவார்” என்ற  பெயருடைய ஒரு குழந்தை அனாதரவாக கோயில் நிர்வாக சபையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

ஆம், இது வேறு தளத்திலும் வாசித்தேன்.

ஆயினும், இது முதல் சந்திப்பு, கோத்தா அதிபராக,  ஆனால் கறாராக (reading riot act in polite manners) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது நான் கேள்விப்படுகிறது.

ஜெயசங்கர் சொல்லியது தமிழரின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வு, இறைமை பற்றியும் விளக்கத்தில் ஜெயசங்கர் வலியுறுத்தினார்  என்பதும் வெளிவந்தது.

மோடியினால், ஜெயசங்கர் வழியாக, கையளிக்கப்பட்ட கடிதத்தில் இருந்த 3 விடயங்களில் இது ஒன்று என்பதும் நான் கேள்விப்படுகிறது.

எவ்வாறெனினும், பகிரங்கமான காலவரையறை தேவை என்பதையம்,  அது இல்லாத வரைக்கும் ஒன்றையுமே கருத்தில் எடுக்க முடியாது என்பதையும்,  அவர்களிடம் பிஜேபி மூத்த தலைமைக்கு கொண்டு செல்லுமாறு சொல்லிவிட்டேன். 

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கையுடனான ஒவ்வொரு சந்திப்பிலும்   முதன்மை விடயமாக 13 ம் திருத்தமே இருந்தது. அதை நடைமுறைப் படுத்த முடியாது என்ற துணிவிலேயே அது பற்றி இந்தியா பேசியது. இப்போது அதனை எந்த தடையும் இன்றி நடைமுறைப்படுத்தக. கூடிய சூழ்நிலையில் அதை பற்றி பேச விருப்பமில்லை இந்தியாவுக்கு. 

அதே போல டக்ளஸ்ஸும் யு த்த காலத்தில்  ஒவ்வொரு பத்திரிகை பேட்டியிலும் முதலாவது வசனமாக பாடமாக்கி ஒப்புவித்த விடயம் “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி”என்ற மத்திரத்தையே அமுவே  எமது கொள்கை  அதை அடைய புலிகள் தடை என்ற விடயமே. ஆனால் இப்போது அவரது  அந்த கொள்கையை அமுல்படுத்த்கூடிய  சூழ்நிலை இருப்பதால் அதை மறந்தமாதரி அவர் விட்டு விட்டார்.  

தாங்கள் தோல்வியடைந்து அழிகப்பட்டால் தமிழ் மக்களின்  அரசியல் அபிலாசைகள் எல்லாம் குழி தோன்றி புதைக்ப்படும் என ற தீர்கக தரிசனம்  புலிகளுக்கு கூட இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்சமே. 

ஹிட்லர் சொன்னதாக கூறப்படும் வாக்கியத்தின் சாராம்சம்  ஒன்று இவ்வாறு போகிறது. 

"""90 % மான யூதர்களை அளித்தபின் மிகுதி 10 % மான யூதர்களை ஏன் விட்டு வைத்தீர்கள் எனக் கேட்ட போது ஹிட்லர் கூறினாராம் நான் ஏன் 90 % மான யூதர்களை அழித்தேன் என பிற்கால சந்ததியினர் உணரவேண்டுமல்லலவா அதனால் தான் 10%மானவர்களை அழிக்காது விட்டேன். """

 

மேலே எழுதியவற்றின்  உண்மை போய் தெரியாது. மேலும்  யூத இனப்படுகொலையை நான் நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால் சொல்லப்படும் விடயம்  எங்கள் இனத்திற்கும் மருவளமாக கூறினால் பொருந்தலாம். அது இவ்வாறு வரும். 

புலிகள் தம்மை அழித்துக்கொண்டது,  அவர்கள் இல்லாதபோதுதான் அவர்களின் பெறுமதி தெரியவேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம் 

(குறிப்பு :அரசியல் வித்தகர்கள் தயவுசெய்து logic,  history எல்லாம் பார்க்காதீர்கள்.  எனது ஆதங்கத்தை எல்லாம் கொட்டியுள்ளேன்.  அம்புட்டுதே  )

Edited by Maharajah
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:
ஜனாதிபதி கோட்டா இந்திய பிரதமர் மோடி சந்திப்பில் தமிழர் பிரச்சினைகுறித்து மோடி கலந்துரையாடுவார் என புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மேலும் இச் சந்திப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து கலந்துரையாடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழர்களின் பிரச்சனையை தீர்க்காமல் வைத்திருந்தாலேயே இதைச் சொல்லி சொல்லி  இலங்கைக்குள் நுழையலாம்.

இந்தியாவைப் பொறுத்த வரை தமிழர்கள் ஊறுகாய் தான்.

  • தொடங்கியவர்
7 hours ago, ampanai said:

எனினும், கடந்த அரசினால் விவாதிக்கப்பட்டு வந்த 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து, கோட்டாபய ராஜபகஷவுடனான முதல் சந்திப்பில், இந்தியப் பிரதமர் மோடி அழுத்தங்களைக் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் புதுடில்லி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன

டெல்லிக்கு சிங்களம் முழுமையாக சீன அரசின் பக்கம் சாய்ந்து விடும் என்ற பயம் உள்ளது. ஏற்கனவே மகிந்த அரசுடன் நல்ல உறவு இல்லை. பலமான எதிர்க்கட்சியும் இல்லை, றோ வாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை, சிங்கள தேசியவாதம் பலமான நிலையில்.... 

டெல்லி அமத்தி தான் வாசிக்கவேண்டிய நிலையில். . டெல்லி டவுண், ஆனால் அவுட் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.