Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடைகளை மீறி யாழ். மாணவர்கள் அஞ்சலி

Featured Replies

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர்.

மாவீரர் தின  நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே இந்த தடை, பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று (27) முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் தடைகளை மீறி நுழைந்துள்ளனர்.

அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

-எம்.றொசாந்த்

image_d18a68704b.jpg

image_b2b2685da1.jpgimage_f909fa2cca.jpgimage_0e8f7e3c03.jpgimage_e487977a72.jpgimage_0b6f38f995.jpg

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தடைகளை-மீறி-யாழ்-மாணவர்கள்-அஞ்சலி/71-241610

 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர்.

மாவீரர் தின  நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே இந்த தடை, பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று (27) முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் தடைகளை மீறி நுழைந்துள்ளனர்.

அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!! 🙌

  • கருத்துக்கள உறவுகள்

இரஸிய மாணவர்கள் ஸ்டாலினிடம் போய் கேட்டார்கள் இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாம் இரஸ்ஸியாவிற்காக என்ன செய்யவேண்டும்?
அதற்கு ஸ்டாலின் உங்களுக்கு 3 கடமைகள் உண்டு
1.படித்தல்
2.படித்தல்
3.படித்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

இரஸிய மாணவர்கள் ஸ்டாலினிடம் போய் கேட்டார்கள் இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாம் இரஸ்ஸியாவிற்காக என்ன செய்யவேண்டும்?
அதற்கு ஸ்டாலின் உங்களுக்கு 3 கடமைகள் உண்டு
1.படித்தல்
2.படித்தல்
3.படித்தல்

அவருக்குத் தெரியும் ருசியாவில் பிக்குகள் ஆட்சி இல்லை. அங்கு சிங்களவர் போன்று மக்களும் இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மாவீரர் தினம்: தடைகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்திய மானவர்கள்

மாவீரர்

இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக மாலை 6.05 மணிக்கு அக வணக்கதுடன் மாவீரர்தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர் நீத்த முதல் போராளி லெப். சங்கர் (சத்தியநாதன்) இறந்த நவம்பர் 27ம் தேதியைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் இதே தேதியில் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிர் நீத்தவர்களின் உடல்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் அகப்பட்டுவிடக்கூடாது உயிர் நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் புதைப்பது அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த நடைமுறையை பேணி வந்தனர்.

முதலாவது மாவீரர் நிகழ்வு

1989ஆம் ஆண்டு தொடக்கம் மாவீரர் தினம் எனும் பெயருடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்த் தியாகம் செய்த போராளிகளை நினைவு கூறும் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

புலிகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அன்று தொடங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரை இடம்பெறும். வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால் மாவீரர் தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் அந்த வருடத்தின் மாவீரர்களின் எண்ணிக்கையை தமிழீழ விடுதலை புலிகள் உத்தியோக பூர்வமாக வெளியிடுவார்கள். உரிமைகோர முடியாத தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அவர்கள் இந்த எண்ணிக்கையோடு இணைப்பதில்லை. அது தமிழீழ விடுதலைப் புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது.

மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2008ம் ஆண்டு மாவீரர் தினமே தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர்தினமாகும். அந்த வருடத்தின் அக்டோபர் 30ம் தேதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர்.

இலங்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

2009 மே 19ம் தேதி வரையான போரின் இறுதிநாள் வரை சுமார் 40,000க்கும் அதிகமான போராளிகள் வீரச்சாவு அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

2009 போர் முடிந்த பின்னர் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்வதை தடுக்க இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போரின் பின்னர் இலங்கை இராணுவத்தினரால் மாவீரர்களின் கல்லறைகளும் நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன. 'மாவீரர் துயிலும் இல்லங்கள்' இருந்த இடங்களை அழித்துவிட்டு அதில் இராணுவ முகாம்களை அமைத்தனர். எனினும் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாளினை அனுசரிக்கின்றனர்.

இந்த ஆண்டு மாவீரர் தினம்

இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ தற்பொழுது இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்று இருக்கும் நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் இம்முறை மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இல்லாத துயிலும் இல்லங்களில் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை தமிழ் மக்கள் செறிந்துவாழும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்து வந்த நிலையில் அதனைத் தடைசெய்வதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, மாணவர்களைப் பல்கலைக்கழகத்தினுள் இன்றும் நாளையும் நுழைவதற்குத் தடைவிதித்து அறிவித்தல் விடுத்துள்ளார்.

இலங்கை

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவாலாயத்திற்கு முன்பாக 25,000 மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு வரையில் இந்த கல்வெட்டுக்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

போரில் வீரச்சாவடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தினம்

நிர்வாகத்தின் தடைகளை மீறி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவு தூபியில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவாயில் கதவினை உடைத்து உள் நுழைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50576669

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம், வெளிப்புறம் மற்றும் உரை

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

இரஸிய மாணவர்கள் ஸ்டாலினிடம் போய் கேட்டார்கள் இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாம் இரஸ்ஸியாவிற்காக என்ன செய்யவேண்டும்?
அதற்கு ஸ்டாலின் உங்களுக்கு 3 கடமைகள் உண்டு
1.படித்தல்
2.படித்தல்
3.படித்தல்

👍

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பூ மற்றும் வெளிப்புறம்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.