Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அங்கயன், வியாழேந்திரனுக்கு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைமையே கிட்டியது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அங்கயன், வியாழேந்திரனுக்கு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைமையே கிட்டியது!

மஸ்தானுக்கும் அதே நிலை!

1574903770_ankajan%20%20viyajen.jpg
By:

Submitted: 2019-11-27 20:16:41

அங்கஜன் இராமநாதன்,எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகளே வழங்கப்பட்டுள்ளன.

நேற்று இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோரும், மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தல், அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகள், இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் விபரம் பின்வருமாறு:

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுத் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கம்பஹா மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவியானார்.

களுத்துறை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக பியெல் நிஷாந்தவும், கண்டி மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சரத் அமுனுகமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுவின் தலைவராக லக்ஷ்மன் வசந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக முத்து சிவலிங்கமும்.

காலி மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சந்திம வீரக்கொடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவர் நிரோஷன் பிரேமரத்ன ஆவார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதனும், மன்னார் மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக காதர் மஸ்தானும், மட்டக்களப்பு மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக எஸ்.வியாழேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட இணைப்புக்குழு தலைவர் திருமதி ஸ்ரீயாணி விஜேவிக்ரம ஆவார்.

அனுராதபுர மாவட்ட இணைப்புக்குழு தலைவராக வீரகுமார திசாநாயக்கவும், பதுளை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக தேனுக விதானகமகேயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சாரதி துஷ்மன்னவும், இரத்தினபுரி மாவட்ட இணைப்புக்குழு தலைவராக துனேஷ் கங்கந்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

http://aruvi.com/article/tam/2019/11/28/4873/

வாழ்த்துக்கள். வியாழேந்திரன் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். முஸ்லீம் மக்களின் நிலைக்கு தமிழ் மக்களின் பொருளாதார கடடமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

இத்தனை நாளும் முஸ்லீம் அமைச்சர்கள் முஸ்லீம் பகுதிகளை மாத்திரமே கவனித்தார்கள். நீங்கள் இனி தமிழ் பகுதிகளையும் முஸ்லீம் பகுதிகளின் நிலைமைக்கு கொண்டு வர வேண்டும். அதட்கு பின்னர் எல்லா இடங்களையும் ஒரே விதத்தில் கவனிக்கலாம். எல்லா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் , அதிகாரிகளும் இதட்கு உதவி செய்ய வேண்டும்.

மன்னாருக்கு காதர் மஸ்தானை நியமித்திருக்கிறார். இவர் றிஷார்டை போன்று இனவாதியாக இல்லாவிடடாலும் , எதை செய்யப்போகிறார் எண்டு கவனிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für திருநெல்வேலி சந்தையில் நாமல் ராஜபக்ச

Ähnliches Foto

யாழ்ப்பாண சந்தை, திருநெல்வேலி சந்தை முழுக்க...
நாமல் ராஜபக்சவை கூட்டிக் கொண்டு, கோத்தபாயவுக்கு  வாக்குச்  சேகரித்த,
அங்கஜனுக்கு கனமான பதவி கொடுத்திருக்கலாம். :)

வியாழேந்திரனுக்கு... வாழ்த்துக்கள். 
நீங்கள் தமிழருக்கு செய்யப் போகும்... நல்ல திட்டங்களை பார்க்க ஆவலாக உள்ளோம்.

எல்லாரையும் வாழ்த்துங்கோ,  நல்லவ கெட்டவன்  என்று யாரும் கிடையாது. தமிழன் தலையில்  யாரும் மிளகாய் அரைக்கலாம்

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நேசன் said:

எல்லாரையும் வாழ்த்துங்கோ,  நல்லவ கெட்டவன்  என்று யாரும் கிடையாது. தமிழன் தலையில்  யாரும் மிளகாய் அரைக்கலாம்

நேசன் அவர்களே..... 
ஈழப் போர் முடிந்த அவலத்தின் பின், பத்து வருடங்கள்...
சம் சும்  கும்பலுக்கு...  தமிழ் மக்கள் ஆதரவளித்தும்... 
கிடைத்த பலன்  என்ன

அந்தக் கோஷ்டிகளிடம் இருந்து,
வியாழேந்திரன்,  விலகியதற்கான... காரணத்தை சொன்ன, 
காணொளிகளை பார்த்திருக்கின்றீ ர்களா
அதனை முதலில், பார்த்து விட்டு... கருத்து எழுதுங்களேன். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 11/27/2019 at 8:27 PM, தமிழ் சிறி said:

யாழ்ப்பாண சந்தை, திருநெல்வேலி சந்தை முழுக்க...
நாமல் ராஜபக்சவை கூட்டிக் கொண்டு, கோத்தபாயவுக்கு  வாக்குச்  சேகரித்த,
அங்கஜனுக்கு கனமான பதவி கொடுத்திருக்கலாம். :)

வியாழேந்திரனுக்கு... வாழ்த்துக்கள். 
நீங்கள் தமிழருக்கு செய்யப் போகும்... நல்ல திட்டங்களை பார்க்க ஆவலாக உள்ளோம்.

அமைதி அமைதி அமைதி அடுத்த தேர்தல் முடிந்ததும் இவருக்கு பொறுப்பான பதவி வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

அமைதி அமைதி அமைதி அடுத்த தேர்தல் முடிந்ததும் இவருக்கு பொறுப்பான பதவி வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்.

அது, பிழைத்தால்..... சம்பந்தனுக்கு... 
முழு மொட்டை....   அடிக்க, ரெடியா...?

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ எங்கட  புள்ளியான் என்ன ரொமாட்டோ சட்னியா.? பார்த்து ஏதாவது போட்டு கொடுங்கப்பா..! 😢

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நேசன் said:

எல்லாரையும் வாழ்த்துங்கோ,  நல்லவ கெட்டவன்  என்று யாரும் கிடையாது. தமிழன் தலையில்  யாரும் மிளகாய் அரைக்கலாம்

 

நல்லவன் யாரு கெட்டவன் யாரு என்று சொல்லுங்களன் ...பிளிஸ்🤔🥺

அப்போ அறுபது வருடமாக ஈழத்தை எடுத்து தருவோமெண்டு தமிழனின் தலையில் மிளகாய் அரைத்தவர்களை வாழ்த்த சொல்கிறீர்களா ராஜா. இங்குள்ளவனுக்குத்தான் தெரியும் நாட்டின் நிலைமை. இவளவு காலமும்  எதிர்ப்பு அரசியல் செய்து இருந்ததையும் இழந்ததுதான் மிச்சம். வெளி நாட்டில் வசிப்பவர்கள் கள நிலவரம் தெரியாமல் எதையும் எழுதலாம். தமிழர்கள் எண்டு சொன்னால் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களை மட்டும் தமிழர்கள் என்று நினைக்க வேண்டாம். வன்னி , கிழக்கிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகள் வேறு , யாழ்பாணத்தவர்களுடைய பிரச்சினை வேறு. இங்கு இவளவு காலமும் சிங்களவர்களை குடியேத்தினார்கள். இப்போது முஸ்லிம்களையும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குடியேத்துகிறார்கள். தமிழர்கள் வன்னியிலும் , கிழக்கிலும் ஒருவித முன்னேற்றமும் இல்லாமல் சீவிக்கிறார்கள். சிலர் அரசியலுக்காக ஈழக்கொடியை , 13 கோரிக்கைகள் என்ற நிறைவேறாத , உலக நாடுகள் அங்கீகரிக்காத தீர்மானகளை வைத்து அப்பாவி தமிழர்களை ஏமாத்துகிறார்கள். இனியும் இங்கு ஏமாத்து வேலைக்கு தமிழர்கள் இடம் கொடுக்க மாடடார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.