Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து அரச நிறுவன உயரதிகாரிகளையும் இராஜினாமா செய்யுமாறு அறிவித்தல்

Featured Replies

அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களையும் பணிப்பாளர்களையும் இராஜினாமா செய்ய அறிவித்தல் விடுக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தரவினால் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

https://www.newsfirst.lk/tamil/2019/11/29/அனைத்து-அரச-நிறுவன-உயரதி/

  • தொடங்கியவர்

EKjVepBWkAAWQTp?format=jpg&name=large

  • கருத்துக்கள உறவுகள்

இராஜினாமா செய்வது.... என்பது, 
ஒருவர், சுயமாக விரும்பி... எழுதிக் கொடுப்பது, என நினைக்கின்றேன். :)

அதனை... அறிவுறுத்தலாக  சொல்வது,  ஸ்ரீலங்காவில்....
அதுகும்.... கோத்தா / மகிந்த ...  ராஜபக்ஸ  சகோதரர்களின்  ஆட்சியில்....
நடப்பது.. வியப்பை... தரவில்லை.  😎

இவங்களை வைத்து,  இன்னும்... ஐந்து வருடத்தை....
எப்படி... தாக்குப் பிடிப்போமோ... தெரியவில்லை.   😮

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இராஜினாமா செய்வது.... என்பது, 
ஒருவர், சுயமாக விரும்பி... எழுதிக் கொடுப்பது, என நினைக்கின்றேன். :)

அதனை... அறிவுறுத்தலாக  சொல்வது,  ஸ்ரீலங்காவில்....
அதுகும்.... கோத்தா / மகிந்த ...  ராஜபக்ஸ  சகோதரர்களின்  ஆட்சியில்....
நடப்பது.. வியப்பை... தரவில்லை.  😎

இவங்களை வைத்து,  இன்னும்... ஐந்து வருடத்தை....
எப்படி... தாக்குப் பிடிப்போமோ... தெரியவில்லை.   😮

ஐந்து வருடங்கள் மட்டுமா?!
குறைந்தது பத்தாண்டுகளாவது ஆட்சி தொடரும்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இராஜினாமா செய்வது.... என்பது, 
ஒருவர், சுயமாக விரும்பி... எழுதிக் கொடுப்பது, என நினைக்கின்றேன். :)

அதனை... அறிவுறுத்தலாக  சொல்வது,  ஸ்ரீலங்காவில்....

இராஜினாமா செய்வது என்பது, ஒருவர், சுயமாக விரும்பி எழுதிக் கொடுப்பது என்பது உண்மை. நான் இப்படி இரண்டு பதவிகளில் இருந்து இராஜினாமா செய்து இருப்பதால் சொல்ல முடிகிறது.

சில பதவிகளில் இருப்பவர்களை, அவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளவர்கள் எந்த நேரத்திலும் காரணம் காட்டாமலே பதவி நீக்கம் செய்யலாம். (at will) என்று எழுதப்பட்டு வழங்கப்படும் நியமனங்கள் இவை. பதவி நீக்கம் செய்வதால் சில பாதகங்கள் இருக்கின்றன. அவற்றை தவிர்க்க இராஜினாமா செய்ய சந்தர்ப்பம் கொடுப்பதும் உண்டு, ஆனால் இது அபூர்வம். இங்கே அதுதான் நடக்கிறது. 

யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரை மைத்திரி பதவி நீக்கம் செய்தபோது இப்படி  சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. பொலிஸ்மா அதிபரை பதவிநீக்கம் செய்ய முதல் இராஜினாமா செய்ய சந்தர்ப்பம் கொடுத்தார். ஆனால்  பொலிஸ்மா அதிபர் பூஜித இராஜினாமா செய்ய மறுத்த நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இன்று சிறையில் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

இராஜினாமா செய்வது.... என்பது, 
ஒருவர், சுயமாக விரும்பி... எழுதிக் கொடுப்பது, என நினைக்கின்றேன். :)

அதனை... அறிவுறுத்தலாக  சொல்வது,  ஸ்ரீலங்காவில்....
அதுகும்.... கோத்தா / மகிந்த ...  ராஜபக்ஸ  சகோதரர்களின்  ஆட்சியில்....
நடப்பது.. வியப்பை... தரவில்லை.  😎

இவங்களை வைத்து,  இன்னும்... ஐந்து வருடத்தை....
எப்படி... தாக்குப் பிடிப்போமோ... தெரியவில்லை.   😮

இது உலகம்  பூராகவும்  உள்ள  நடைமுறை  தானே  சிறி?

அரசுகள்

அரச  தலைவர்கள்  மாறுகின்றபோது

தாம் தேர்தல்  நேரம்  மக்களுக்கு  கொடுத்த  வாக்குறுதியை  செயற்ப்படுத்த???

தமக்கு  சார்பானவர்கள்  முக்கிய  பதவிகளில்  இருக்கணும் என்பதும்

முக்கியமாக தமது  கொள்கைக்கு  முரணான முன்னைய ஆட்சி  அல்லது கட்சியை  சார்ந்தவர்கள் இருப்பது  தமக்கு  தடையாக  இருக்கலாம்  என்பதும்

எல்லா  நாடுகளிலும்  நடப்பது தானே???

Edited by விசுகு

இந்த விடயத்தில்  சுவிஸ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். யார் தற்போதய ஜனாதிபதி என்பதையே கூகிளில் தேடிப்பார்ககும் நிலையில் கணிசமான மக்கள் உள்ளார்கள்.

நாட்டின் அமைச்சர்கள் பொதுப்  போக்குவரத்தை உபயோகித்து அமைச்சரவைக் கூட்டத்திற்கோ பாராளுமன்றத்திற்கோ மக்களோடு மக்களாக செல்வதை பார்க்க முடியும். அப்படி காரில் செல்வதாக இருந்தால் தானே காரை ஓட்டிச் சென்று வாகனத்தரிப்பிடம் தேடி காரை நிறுத்தி விட்டு கட்டண தரிப்பிடமாக இருந்தால்  அதற்கான பணத்தையும் செலுத்திவிட்டு செல்ல வேண்டிய நிலை. 

2015 வரை பாதுகாப்பு அமைச்சராக இருந்த Ueli Mauer கோடை காலத்தில் நல்ல காலநிலை  உள்ள நேரத்தில் பல தடவை   20 Km சைக்கிளில் அலுவலகம் சென்ற வரலாறும் உண்டு. 

அதை விட மக்கள் வரிப்பணத்தில்  மக்களுக்கு செய்யும் அபிவிருத்தித்திட்டங்களை தனது சொந்த பணத்தில் செய்தது போல் எமது நாட்டு அமைசர்கள் போல்   பந்தா காட்ட முடியாத பரிதாப நிலை  இங்குள்ள அமைச்சர்களுக்களுக்கு.  அப்படி சிறிது பெருமை பேசினால் இதை கூட செய்யாமல் விட்டால்  எமது வரிப்பணத்தில் உனக்கு  எதற்கு சம்பளம் என்று நாட்டின் கடை குடிமகன் கேட்டுவிடுவானே என்ற பயப்படும் நிலை. 

எமது நாட்டில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக உள்ள டக்லஸ் தேவானாந்தா வின் கல்வி தரத்தில் உள்ள ஒருவரை  இங்கு சிறிய கிராம சபை உறுப்பினராக கூட தெரிவு செய்ய மாட்டார்கள். வேண்டுமானால் கிராம சபையின்  Hauswart  ஆக இருந்து விட்டு போகலாம். 

ஒரு கிராம சபை தலைவரின் அதிகாரத்தில் நாட்டின் ஜனாதிபதி கூட தலையிட முடியாத அரசியலமைப்பு சட்டம். 

 

2018 ன் சுவிஸ் ஜனாதிபதி Alain Berset  நியூயோர்க் ஐ நா சபையின் 73 வது அசெம்பிளியில்  கலந்து கொள்ள சென்ற போது இடை வேளை நேரத்தில்  வளாக சாலை ஒரத்தில்  தரையில் அமர்த்து கூட்ட அறிக்கைகளை பார்வையிட்டு அடுத்த அமர்வுக்கான தயார்படுத்தலை செய்த விடயம் மற்றய நாட்டு தலைவர்களின் பார்வையில் வித்தியாசமாக பார்க்கபட்ட போதும் சுவிஸ் மக்கள் பார்வையில் அது வழமையான நிகழ்வாகவே பார்க்கப்பட்டது.  

large.D9AD7A47-DB29-4248-A39B-51A661E4DFA3.jpeg.51ebd41511a7dd5f9a209f8294d5a219.jpeg

Edited by tulpen

14 hours ago, தமிழ் சிறி said:

இராஜினாமா செய்வது.... என்பது, 
ஒருவர், சுயமாக விரும்பி... எழுதிக் கொடுப்பது, என நினைக்கின்றேன். :)

அதனை... அறிவுறுத்தலாக  சொல்வது,  ஸ்ரீலங்காவில்....
அதுகும்.... கோத்தா / மகிந்த ...  ராஜபக்ஸ  சகோதரர்களின்  ஆட்சியில்....
நடப்பது.. வியப்பை... தரவில்லை.  😎

இவங்களை வைத்து,  இன்னும்... ஐந்து வருடத்தை....
எப்படி... தாக்குப் பிடிப்போமோ... தெரியவில்லை.   😮

5 வருடம் தேவை இல்லை; பங்குனி மாதம் தேர்தல் வரும் போது 2/3 பெரும்பான்மையுடன் தேர்தலை வென்று அரசியல் சாசனத்தை மாற்றாவிடில் ராஜபக்ச குடும்பம் முன்னாள் பிரதமர் W M தஹனாயக்க போன்று மெதமுலானவுக்கு முதல் பஸ்ஸை பிடிக்க வேண்டியது தான்.... ரணில் செய்த ஒரு நல்ல காரியம் 19  சீர்திருத்தம்.. அல்லாவிடிக் கோத்தா ஜனாதிபதியாக இருந்து எதையும் கிழிக்க முடியாது😀😀😀😀

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Dash said:

5 வருடம் தேவை இல்லை; பங்குனி மாதம் தேர்தல் வரும் போது 2/3 பெரும்பான்மையுடன் தேர்தலை வென்று அரசியல் சாசனத்தை மாற்றாவிடில் ராஜபக்ச குடும்பம் முன்னாள் பிரதமர் W M தஹனாயக்க போன்று மெதமுலானவுக்கு முதல் பஸ்ஸை பிடிக்க வேண்டியது தான்.... ரணில் செய்த ஒரு நல்ல காரியம் 19  சீர்திருத்தம்.. அல்லாவிடிக் கோத்தா ஜனாதிபதியாக இருந்து எதையும் கிழிக்க முடியாது😀😀😀😀

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

பங்குனித்தேர்தலில் மகிந்த  பிரதமர்

அதிகாரம் ஐனாதிபதியின்  கைகளிலிருந்து  பிரதமருக்கு மாறும்

மக்களுக்கு கொடுத்த  வாக்கறுதியையும்

தமிழ்  மக்களை நிரந்தர  அடிமைகளாக்கியமைக்கும்

தொடர்ந்து ஆட்சி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.