Jump to content

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழர்களின் பிரதிநிதிகளே காரணம்! டக்ளஸ் தேவானந்தா


Recommended Posts

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழர்களின் பிரதிநிதிகளே காரணம்! டக்ளஸ் தேவானந்தா

SudarSeithy-55.jpg

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சனைகளுக்கு காரணம், வேறு எவரும் இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

காணாமல் போனோரின் உறவுகளை பல மாவட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன். குறிப்பாக காணாமல் போனோரின் உறவுகள் தங்களுடைய பிரச்சினைகளை பலரிடம் தெரிவித்தும் இதுவரை தீர்க்கப்படவில்லை என தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக தங்களுடைய உறவுகளிற்கு என்ன நடந்தது, அவர்களை இழந்தமையால் மன வேதனையிலும், பொருளாதார அலைச்சலிலும் தாங்கள் இருப்பதனால் அவர்கள் தங்களிற்கு உரிய பதிலை பெற்றுத்தருமாறு கேட்டிருந்ததோடு தங்களின் சார்பாக என்னை அரசாங்கத்துடன் கதைக்குமாறு தெரிவித்திருந்தனர். இப்பிரச்சினை தொடர்பாக அமைச்சரவையில் பேசுவதற்குள்ளேன்.

இதேவேளை, சிலர் காணாமல் போனோர் சங்கங்களை அமைத்து அதன் ஊடாக தங்களுடைய வாழ்வாதாரத்தை சிறப்பாக்கி கொள்வதோடு வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக தங்களை தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

முதல் முதல் எங்களால் 1998ஆம் ஆண்டு காணாமல் போனோரை தேடி கண்டுபிடிக்கும் சங்கத்தை அமைத்து அதன் ஊடாக அம்மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பதற்கு முயற்சி எடுத்தோம்.

ஆனால் தவறானவர்கள் பிரச்சினைகளை தீரா பிரச்சினையாக வைத்திருப்பதற்காக அவர்களை தவறாக பயன்படுத்தி வருகின்றார்கள். அம்மக்களிற்கு விரைவாக தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனவர்கள் என்னை சந்திக்க மறுத்தது தொடர்பாக எனக்கு தெரியாது. மேலும் எனக்கு உடனடியாக அவசரமாக கொழும்பு செல்ல இருப்பதால் இச்சந்திப்பை ஒத்தி போட்டுள்ளேன்.

வவுனியா காணாமல் போன சங்கத்தின் செயலாளர் மீதான தாக்குதலினை தங்களின் கட்சி ஆதரவாளர்கள் நிகழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு கட்சி ஆதரவாளர்களினால் நிகழ்த்தப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுப்பீர்களா? என ஊடகவியலாளரினால் கேள்வி எழுப்பப்பட்ட போது,

இச்சம்பவம் செய்திதானே ஒழிய சரியான உறுதிப்பாடு இல்லை. மேலும் கட்சி ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தால் அதற்கான நடவடிக்கை எடுப்பேன். என்றாலும் இச்சம்பவம் தொடர்பாக அறிந்த வரை கட்சி ஆதரவாளர்கள் அவர்களிடம் சென்று நான் அழைப்பு விடுத்துள்ளது பற்றி தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இப்பிரச்சினை பற்றி என்னிடம் கதைத்து தீர்வு காண கூடாதா என்று கூறியதோடு இப்பிரச்சினைகளை தீராத பிரச்சினையாக வைத்திருக்காமல் இதற்கான உண்மையான தீர்வினை பெறவிரும்பினால் எனது அழைப்பை ஏற்று வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு காணாமல் போனோர் சங்க செயலாளர் கட்சி ஆதரவாளர்களை தள்ளியதாக கேள்வி என்றாலும் இச்சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள படியால் இது தொடர்பாக மேலதிகமாக சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் போட்டிபோடுவது அவர்களது அரசியல் கொள்கை. அதாவது வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு கடந்த காலங்களை போல் வெற்றி பெறுவார்களா என்ற கேள்வி இருக்கின்றது.

மேலும் கூட்டமைப்பு காலத்திற்கு காலம் இவ்வாறு சொல்லிக்கொண்டு இருப்பார்கள். மனோகணேசனிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலே ஒப்பந்தம் உள்ளது பற்றி எனக்கு தெரியாது அத்துடன் அதைபற்றி அக்கறையும் இல்லை.

சில தமிழ் தரப்புக்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீராப்பிரச்சினையாக வைத்திருந்து அதற்கு தீர்வை பெற்றுத்தருவோம் என்று மக்களிற்கு பலவிதமான வாக்குறுதிகளையும் பொய்யான உறுதி மொழிகளையும் கொடுத்ததுதான் வரலாறு.

மேலும் இவர்கள் சாதியின் பெயரால் கதைப்பதும், ஐக்கியத்தின் பெயரால் கதைப்பது, ஏகபிரதிநிதித்துவத்தின் பெயரால் கதைப்பது, சர்வதேச சமூகத்தின் பெயரால் கதைப்பார்கள்.

கடந்த முப்பது, முப்பத்தைந்து வருடங்களாக இவற்றின் ஊடாகவே வாக்குகளை அபகரித்தார்கள். திரும்பவும் இவற்றைதான் சொல்ல முற்படுவார்கள். மேலும் முப்பது முப்பத்தைந்து வருடங்களாக இவர்களால் ஏன் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ அல்ல.

தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சினைகளுக்கு காரணமே ஒழிய வேறு எவரும் இல்லை. மக்கள் எங்களுடன் அணிதிரண்டால் விரைவாக நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்போம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பின்னர் 1990ஆம் ஆண்டு மாற்று கருத்து, மாற்று வேலைத்திட்டத்துடனே ஈபிடிபி களமிறங்கியது. வன்முறைக்கு ஊடாக தீர்வு காண முடியாது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கலாம் என்று தெரிவித்து இருந்தோம்.

அன்று இருந்த தமிழ் தரப்பு கூறியது வன்முறைக்கு ஊடாகவே தீர்வு காணமுடியும் என்று கூறியது. அதாவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக சென்றால் அவர்கள் துரோகிகளாக கருதப்பட்டு கொல்லப்படுவார்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் இன்று வன்முறையா, ஜனநாயக அணுகுமுறையா வெற்றி பெற்றிருக்கிறது.

ஏன் வன்முறையால் தான் வெற்றி பெற முடியும் என்று சொன்னவர்கள் கூட ஒரு நேரத்தில் ஏக பிரதிநிதித்துவம் என்ற பேரில் மக்களை உசுப்பேத்தி வாக்குகளை அபகரித்தனர்.

ஒரு பக்கம் தங்களிடம் ஆயுத பலம் இருக்கு என்றார்கள், இன்னொரு பக்கம் நாடாளுமன்றத்தில் ஏக பிரதிநிதித்துவம் இருக்கு என்றார்கள் ஏன் அவர்களினால் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. பிரச்சினை தீர்க்க முடியாதத்திற்கு காரணம் அவர்களே ஒழிய இந்திய அரசாங்கமோ, இலங்கை அரசாங்கமோ அல்ல.

தமிழ் தலைமை என்று சொல்லப்பட்டவர்கள் சரியாக பிரச்சினைகளை அணுகவில்லை என்பது என்னுடைய அனுபவம்.

எனக்கு 15 வருடத்திற்கு மேல் ஆயுத போராட்டத்தினுடைய முன் அனுபவம். இருபத்தைந்து, முப்பது வருடத்திற்கு மேல் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்ட அனுபவம் இருக்கின்றது.

இந்த அனுபவங்களிற்கு ஊடாகவே இந்த கொள்கைகளும், வேலைத்திட்டங்களும் அமைந்திருக்கின்றது. அந்த வகையில் வர இருக்கின்ற சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்தி கொண்டால் விரைவாக தீர்வை காண முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.sudarseithy.com/?p=37373

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nunavilan said:

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழர்களின் பிரதிநிதிகளே காரணம்! டக்ளஸ் தேவானந்தா

அதுகும்... ஒரு காரணம் என்றாலும்,
இவரும்... ஒரு காரணம் என்று  அல்லவா, இது வரை நினைத்துக் கொண்டு இருந்தேன். :grin:

Link to comment
Share on other sites

இவர் சொல்வது எல்லாம் உண்மையாக இல்லாவிடடாலும் , சில உண்மையான கருத்துக்களும் உண்டு. இருந்தாலும் ஒற்றுமையே பலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 தமிழ் தரப்பு கூறியது வன்முறைக்கு ஊடாகவே தீர்வு காணமுடியும் என்று கூறியது

அது பிழை என்றால்  நீங்கள் ஏன்  ஆயுதம் தூக்கினனீங்கள்?  அரசியலிலும் இருந்து என்னத்தை கிளிச்சநீங்கள்? மண்கொள்ளை, இளைஞர் கொலை. வேறு நன்மை.....? நீங்கள் எவ்வளவு கூவினாலும் மக்கள் அவர்களைத்தான் தெரிகிறார்கள். மக்களுக்கு  தெரியும் உங்களின் கடந்தகாலம்  என்ன?  கூடி கும்மாளம் அடிக்கத்தான்   உம்மால் முடியும்.  ஒன்றும் அசைக்க முடியாது என்பது நீர் சொல்லாமலே புரியும். நப்பாசையில புலம்பி துலையும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
    • எனக்கும் இதே கொள்கை தான், மற்றும் சொந்த இடம் சாவகச்சேரி தான் என்பதால் நீங்கள் சொல்லும் தகவல் உண்மை என இத்தால் அறிவிக்கப்படுகின்றது 🥹
    • இந்தியா மட்டுமா காரணம் ? சீனா, பாகிஸ்தான் , ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் காரணமில்லையா?   செப்டம்பர் 11 தாக்குதல் ,  நீண்டகால சமாதான பேச்சுவார்த்தை,  கருணா பிரிவு, தொழில்நுட்ப வளர்ச்சி , குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயமாக சேர்தல் ( இதில் பல எதிரானவர்களும் இயக்கத்தில் ஊடுருவினார்கள்), காட்டி கொடுப்பு …… 2004 - 2009 காங்கிரஸ் கூட்டணியில் 16 தொகுதியில் திமுக வென்றிருந்தது. அந்த 16 பேரும் ஆதரவை விழக்கியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?  பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வென்ற 6 பெறும் ,  தமிழகத்தில்  இரு கம்னியூஸ்ட் காட்சிகளிலும் இருந்து வென்ற 4 பேரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார்கள். திமுக , காங்கிரஸ் ஆதரவை விலக்கினால் பாட்டாளி கட்சியும் ஆதரவை நீக்குமா?  இதே கூட்டணியில் இருந்த மதிமுக (4 வேட்பாளர்கள்) 2006 இல் ஆதரவை விலக்கியிருந்தது. அப்படி திமுக, காங்கிரசுக்கு ஆதரவை 2009 ஆரம்பத்தில்விலக்கபூபோவதாக சொன்னால்  ( வன்னியை மெல்ல மெல்லமாக சிங்களப்படைகள் 2009 சனவரியில் இருந்து கைப்பற்றியது) , 3 மாதத்தில் தேர்தல் வருகுதுதானே என்பதினால் காங்கிரஸ் தனது இலங்கைக்கு எதிராக செயல்பட்டிருக்குமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.