Jump to content

“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”

இலங்கையின் ஆதிக்குடிகள் என நம்பப்படும் வேடுவ இன மக்கள், ஐந்து இந்திய பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது .


இவர்கள் ஒடிசாவில் உள்ள சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும், நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட மொழி பேசும் பழங்குடியினருடனும் இலங்கையின் வேடுவர்கள் வலுவான மரபணு ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதாக இந்திய மற்றும் இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது.

மைட்டோகாண்ட்ரியன் என்ற அறிவியல் சஞ்சிகையில் இந்த வாரம் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வு கட்டுரையில் இலங்கையின் சிங்கள அல்லது தமிழ் மக்களை விடவும், இந்த ஐந்து பழங்குடியினருடன் வேடுவ இனத்தவருக்கு அதிக மரபணு ஒற்றுமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://thinakkural.lk/article/299759

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

 

 

மைட்டோகாண்ட்ரியன் என்ற அறிவியல் சஞ்சிகையில் இந்த வாரம் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வு கட்டுரையில் இலங்கையின் சிங்கள அல்லது தமிழ் மக்களை விடவும், இந்த ஐந்து பழங்குடியினருடன் வேடுவ இனத்தவருக்கு அதிக மரபணு ஒற்றுமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://thinakkural.lk/article/299759

 

அப்ப ஜாவா கச்சேரி  காரர்தான் ..இந்த இலங்கைக்கு சொந்தக்காரரோ...அதுதான் ரணிலு கிழக்கு ஆளுனரையே மாற்ற வெளிக்கிடுதோ?😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புத்த பிக்குகளும், இலங்ககை  தோ(தொ)ல்  பொருள் திணைக்களமும்... 
வானத்துக்கும், பூமிக்கும் எகிறி குதிக்கப் போகிறார்களே.... 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, alvayan said:

அப்ப ஜாவா கச்சேரி  காரர்தான் ..இந்த இலங்கைக்கு சொந்தக்காரரோ...அதுதான் ரணிலு கிழக்கு ஆளுனரையே மாற்ற வெளிக்கிடுதோ?😁

சாவகச்சேரி என்பது முதலில் ஜாவகர் -சேரி எனப்பட்டதாம்?

ஆனால் இது இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இருந்து ஒல்லாந்தர் கொண்டு வந்தமர்த்திய ஜாவகர்கள்.

ஆனால் இலங்கையில் நாகர், இயக்கர், வேடர் என்ற ஆதிகுடிகள் இருந்தன என சொல்கிறார்கள். 

இவர்களுடன் இருளருக்கும், பள்ளருக்கும் தொடர்பு இருக்கிறதாயின், விஜயனுக்கு முந்திய இலங்கையின் ஆதி குடிகள் திராவிட/தொல் தமிழரே என்பதை நிறுவ உதவியாக இருக்க கூடும்.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சாவகச்சேரி என்பது முதலில் ஜாவகர் -சேரி எனப்பட்டதாம்?

ஆனால் இது இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இருந்து ஒல்லாந்தர் கொண்டு வந்தமர்த்திய ஜாவகர்கள்.

ஆனால் இலங்கையில் நாகர், இயக்கர், வேடர் என்ற ஆதிகுடிகள் இருந்தன என சொல்கிறார்கள். 

இவர்களுடன் இருளருக்கும், பள்ளருக்கும் தொடர்பு இருக்கிறதாயின், விஜயனுக்கு முந்திய இலங்கையின் ஆதி குடிகள் திராவிட/தொல் தமிழரே என்பதை நிறுவ உதவியாக இருக்க கூடும்.

நீங்கள் என்னத்தை நிறுவினாலும், அவங்கள் சம்மதிக்க வேணுமே. 😂
மகா வம்சத்தையே... அடிக்கடி திருத்திக் கொண்டு இருக்கிற ஆட்கள் அல்லவா அவர்கள். 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, தமிழ் சிறி said:

இலங்ககை தோல் பொருள்

இதற்கு பொறுப்பான அமைச்சர் டயனா கமகேயா🤣

4 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் என்னத்தை நிறுவினாலும், அவங்கள் சம்மதிக்க வேணுமே. 😂
மகா வம்சத்தையே... அடிக்கடி திருத்திக் கொண்டு இருக்கிற ஆட்கள் அல்லவா அவர்கள். 🤣

ம்ம்ம்…..அதுவும் உண்மையே.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இதற்கு பொறுபான அமைச்சர் டயனா கமகேயா🤣

அந்த மனிசி சுவிசிலை இருந்தது. டீசன்ரான பொம்பிளை என்று பார்த்தால்...
பாராளுமன்றத்தில் நடந்த ஒரு சண்டையில்... "சோடா மூடி" ரேஞ்சிலை நின்று சண்டை பிடிக்குது. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய நாட்களில், இலங்கையருக்கும் குறிப்பாக சிங்களத்திற்கும்  இந்தியருக்கும் இடையில் மரபணு ஒற்றுமையாக இருக்கிறது என்று கூறும் ஒரு போக்கு அதிகரித்துச் செல்கிறது. 

மறைமுக நிகழ்ச்சிநிரல் ஏதேனும்? 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

"சிங்களத்திற்கும் [இலங்கை வேடருக்கும்]  [தென்] இந்தியருக்கும் இடையில் மரபணு ஒற்றுமையாக இருக்கிறது என்பது எதிர்பார்த்த ஒன்றே. இது ஒரு புதுமையும் அல்ல மறைமுக நிகழ்ச்சிநிரலும் அல்ல"    

 

டிஎன்ஏ விஞ்ஞான ஆய்வின்படி இன்றைய மனித இனம் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்ற உண்மை இப்ப எமக்கு தெரியும். ஆகவே ஆஃப்பிரிக்க மக்களே உலகின் முதல் குடிமக்கள். மற்ற இன்றைய மக்கள் அனைவரும் தமது பரம்பரையின் சுவடுகளை தேட ஆஃப்பிரிக்காவிற்கு திரும்ப வேண்டும். முன்னைய ஆப்பிரிக்க மக்களின் ஆதி  இடப் பெயர்வு நடைபெறவில்லை என்றால், மனித இனம் உடல் அமைப்பில் நீக்ரோ இனத்தைப் போன்றே இருந்து இருப்பார்கள். அது மட்டும் அல்ல, ஆப்பிரிக்காவை தவிர்ந்த மற்ற உலகின் பகுதிகளில் மனித இனம் என்று ஒன்று இருந்து இருக்காது. மனித இனம் பல கட்டங்களாக ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்ததாக பெரும் பாலான மானுட வியலாளர்கள் நம்புகிறார்கள். ஒரு மில்லியன் சகாப்தத்திற்கு முன், ஆசுத்திராலோ பித்தேக்கசு அஃபெரென்சிசு  [Australopitheus Afarensis] க்குப் பிறகே, ஹோமோ எரக்டஸ் (Homo erectus) எனப்படும் எழு நிலை தொல்முன்மாந்தன் அல்லது நிமிர்ந்தநிலை மனிதர்கள் என அழைக்கப்படும் மனித இனத்தின் பழமையான மூதாதையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியே நடந்து சென்று ஐரோப்பா மத்திய கிழக்கு, ஆசியா போன்ற பகுதிகளில் குடியேறினார்கள் என்பதில் இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதன் பின், நமது மூன்றாவது மூதாதையர் நியாண்டர்தால் [Neanderthal] மனிதனை தொடர்ந்து பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின், ஹோமோசேப்பியன்ஸ் [Homo sapiens] என்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தும் மனிதன், மரபணு அடையாளம் காட்டி அல்லது குறியீடு M168 கொண்ட இவ் மனிதன்,  இரண்டாவது அலையாக ஆப்பிரிக்காவை விட்டு இடம் பெயர்ந்தது. இவன், அதற்கு முன் இடம் பெயர்ந்த தனது முன்னைய மூதாதையர்களை வெற்றி கொண்டான் என்கின்றனர். இந்த கருதுகோளின் படி இன்றைய நவீன மனிதன், இந்த ஹோமோ சேப்பியன்ஸின் சந்ததி ஆகும். இவர்கள் காட்டில் விலங்குகளை வேட்டையாடி காய் கனிகளை சேகரித்து உண்டு வாழ்ந்தனர். இந்நிலையில் இருந்த கற்கால மனிதன் ஒரு பகுதியாக நடந்தும் இன்னும் ஒரு பகுதியாக கட்டு மரம் போன்ற சிறு படகிலும் பயணம் செய்து இடம் பெயர்வு நடந்து இருக்கலாம் என கருதப் படுகிறது. இந்த முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்கள் [beachcombers], ஆப்ரிக்காவின் கடற்கரையோரமாக  தென் இந்தியா, இலங்கை, அந்தமான் வழியாக இடம் பெயர்ந்தார்கள். இவர்கள் தான் இந்திய, இலங்கையின் முதலாவது குடியிருப்பாளர்கள் 

இது இலங்கை வேடர்களிடமும் காணப்பட்டது!. இன்று இந்த  கடற்கரையோர அடையாளம் காட்டி , இந்தியாவின் குடித்தொகையில் ஆக 5% மட்டுமே. அவையும் தென் இந்தியாவின் கரையோரங்களில் மட்டுமே காணப்படுகின்றது. இறுதியாக, இவர்கள்  விரைவாக இந்தியாவின் கடற்கரையோரமாக பயணித்து தென்கிழக்கு ஆசியாவையும் அவுஸ்ரேலியாவையும் பெரும்பாலும் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு அடைந்தார்கள். அதன் பிறகு, கொஞ்சம் காலம் கடந்து, இரண்டாவது குழு ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, மத்திய கிழக்கு, தெற்கு மத்திய ஆசியாவிற்கு இடம் பெயர்ந்தார்கள். 

[இலங்கை அன்று பிரிபடாத ஒரு பகுதியாக தென் இந்தியாவுடன் ஒட்டி இருந்தது, கடந்த பத்து இலட்சம் வருட காலப்பகுதியில், இலங்கை பல சந்தர்ப்பங்களில் இந்திய உப கண்டத்துடன் இணைந்து இருந்தது. கடைசியாக இடம்பெற்ற பிரிவு கி மு 5000, அதாவது இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும், தமிழகமும் கடைசியாக ஒரே பகுதியாக இருந்துள்ளது. எனவே இலங்கையின் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி ஆராய்வது இயலாத விடயம் ஆகும். இலங்கையும் இந்தியாவும் ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்ததனால், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் கூட இரு நாடுகளிலும் ஒரே விதமாக இருந்ததாகவும் கருதப் படுகிறது.] 

இந்தியாவில்,குறிப்பாக தென் இந்தியாவில் குடியேறிய  முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்களின் வழித்தடம் - M130 (M168-M 130) ஆகும். இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் pre-Dravidian] என அழைக்கலாம்.

இவைகளை தொடர்ந்து M89, 45,000 ஆண்டு அளவிலும் பின் ஈரான் சமவெளியில் அல்லது தென் மத்திய ஆசியாவில் M9, 40,000 ஆண்டு அளவிலும் தோன்றின. அங்கு இருந்த இந்து குஷ் (Hindu Kush), இமயமலை (Himalayas), தியன்-சான் (Tian-Shan) போன்ற பெரிய மலைத் தொடர்கள் இவர்களின் இடம் பெயர்தலுக்கு மிக இடைஞ்சலாக இருந்தன. இதனால் இந்த யூரேசிய மரபுக்குழு [Eurasian Clan M9] இரண்டு தொகுதியாக பிரிவு பட்டு இருக்கலாம்? ஒன்று இந்து குஷ்ஷினது வடக்கு பக்கமாகவும் மற்றது தெற்கு பக்கமாக பாகிஸ்தானுக்கும் இடம் பெயர்ந்து இருக்கலாம். இந்த தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த பழைய கற் காலத்தின் இறுதி பகுதி [Upper Palaeolithic, Late Stone Age / (40,000-10,000 B.C.)] மக்களின் Y-குரோமோ சோம்மில் [chromosome / மரபணுச் சரம் / மரபணுத் தாங்கி]  திடீர் மாற்றம் ஏற்பட்டு மரபணு அடையாளம் காட்டி M20 தோன்றியது. இது இந்தியா தவிர வெளியில்  கணிசமான அளவு இல்லை-மத்திய கிழக்கு மக்களில் ஒரு வேளை 1-2 சத வீதம் இருக்கலாம் என்றாலும் துணைக்கண்டத்தில், தென் இந்தியாவில் இது கிட்டத்தட்ட  50 சத வீதத்திற்கு அதிகமாக  உள்ளது. இந்த M20 (M168-M9-M20) மரபணு அடையாளம் காட்டியை காவும் கூட்டம் கிட்டத் தட்ட 30,000 ஆண்டுகளுக்கு முன் பெரும் அளவில் இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்து உள்ளது. இந்த முன்னைய மூதாதையரை / மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-Dravidian] என அழைக்கலாம்.

[இப்படி இந்த யூரேசிய மரபுக்குழு M9 இன் சில உறப்பினர்கள் இந்தியா நோக்கி குடிபெயரும் போது மற்ற உறுப்பினர்கள் வடக்கு நோக்கி மத்திய ஆசிய, ஐரோப்பா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இந்த கூட்டத்தில் இருந்து படிப்படியாக M173 மரபணு அடையாளம் காட்டி தோன்றி, அது முதலாவது பெரிய மனித குடி பெயர்தலாக ஐரோப்பாவிற்குள் நுழைந்தார்கள். எப்படியாயினும் எதிர்பாராத சில காரணங்களால், M173 கூட்டத்தின் சில உறுப்பினர்கள் திரும்பி தெற்கு ஆசிய நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இது காலநிலைகளால் ஏற்பட்டும் இருக்கலாம்? இந்த திரும்பிய கூட்டத்தில் இருந்தே [M168 > M89 > M9 > M45 > M207 > M173 > M17] M17 என்ற இந்தோ – ஐரோப்பியர் குறியீடு [Indo-European marker] தோன்றியது. இது முதலாவதாக 10,000-15,000 ஆண்டுகளுக்கு முன் உக்ரைன் மற்றும் தெற்கு ரசியாவில் [Ukraine or southern Russia] தோன்றியது. பின் கூர்கன் மக்கள் (Kurgan people) மூலம் யுரேசியா [Eurasia], ஸ்டெப்பி [steppe] பகுதி முழுதும் பரவி, அங்கிருந்து கிழக்கு, மத்திய ஐரோப்பா பகுதிகளுக்கும், ஈரானின் ஊடாக, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியே கி.மு. 1500 ஆண்டுகள் அளவில் வட இந்தியாவிற்கும் பரவியது என கண்டு பிடித்து உள்ளனர். மேலும் தேர் / ரதம் கி மு 3000 ஆண்டளவில் இவர்களால் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும் இந்த அகன்று பரந்த மரங்கள் அற்ற புல்வெளியான ஸ்டெப்பி பகுதியில் தான், இதற்கு ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன், குதிரைகள் இவர்களால் பழக்கப்படுத்தப்பட்டன (domesticated). இன்று 35% க்கும் அதிகமான இந்தி (Hindi / ஹிந்தி] மொழி பேசும் இந்தியா ஆண்கள், இந்த மரபணு குறியீட்டை கொண்டுள்ளார்கள். ஆனால் திராவிட மொழி பேசுபவர்களில் இது 10% க்கும் குறைவாகவே உள்ளது. இது 10,000 ஆண்டுகளுக்குள் தான், அதிகமாக 5000 ஆண்டுகளுக்குள், ஸ்டெப்பியில் [புல்வெளி] இருந்து கணிசமான இந்த குழு இந்தியாவிற்குள் வந்ததை காட்டுகிறது]


அதாவது, 

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல் ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த ப்ரொஜக்டிற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் (GP) [Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப் படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம். ஒவ்வொரு வழித்தடமும், ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. ஸ்பென்சர் வெல்ஸ் [Spencer Wells] [இவரை நான் பத்தாவது உலகத் தமிழ் மகாநாட்டில் [10 th World Tamil Conference, Chicago / 4 th to 6 th July 2019] ஒரு முறை சந்தித்தேன்] எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்"[Indian marker] என அழைக்கப்படும் M 20, திராவிடர்களின் மூதாதையர் வழி  L(HAPLOGROUP –L) மரபுக் காட்டி, 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள்ளது என்பதை அறியமுடிகிறது. இவர்கள் மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் [Baluchistan] ஊடாக சிந்து சம வெளி வந்து, அங்கு இருந்து இறுதியாக விந்திய மலைத்தொடரின் [Vindhya Range] தெற்கு பகுதிக்கு சென்றார்கள். இந்த மலைத் தொடர் இந்தியாவைப் புவியியல் அடிப்படையில் வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாகப் பிரிக்கின்றது. அங்குதான் திராவிடர்கள் வாழும் இன்றைய நாலு தென் மாகாணங்கள் அமைந்துள்ளன, இந்த முன்னைய மூதாதையரை / மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-dravidian] என அழைக்கலாம். இந்த மரபுக் காட்டி M 20 யைக் கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தின் இந்த முக்கிய இடம் பெயர்வு, தனக்கு முன்னால், இன்றைக்கு சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியா கரையோரம் இடம் பெயர்ந்த மரபுக் காட்டி M 130 கொண்ட  ஆதி மனிதக் கூட்டத்தினை எதிர்கொண்டது. இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் [pre-dravidian] என அழைக்கலாம். இந்த முதனிலைத் திராவிடர் கூட்டம், முந்திய திராவிட கூட்டத்துடன் கலந்தன. இந்த கலப்பில் இருந்தே திராவிட வரலாறு பிறந்தது. மரபுக் காட்டி M 20 கூடுதலாக தெற்கு மக்களிடம் மட்டும் காணப்படுவதுடன் சிலவேளை 50 வீதத்திற்கும் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு வெளியில் இங்கும் அங்கும்மாக மட்டுமே காணப்படுகிறது. அதே வேளையில் மரபுக் காட்டி M 130 இந்தியாவில் தெற்கில் மட்டுமே முதன்மையாக காணப்படுவதுடன் அதுவும் 5 வீதம் அளவிலேயே காணப்படுகிறது.

மேலும் இந்த இரண்டு மரபுக் காட்டிகளின் கலப்பில் கரையோர மக்கள் கூட்டத்தின் ஆண் வழி பங்களிப்பு குறைவாக இருப்பது அறியமுடிகிறது. ஆகவே தென் இந்தியா புகுந்த மரபுக் காட்டி M 20 கூட்டத்தினர், அங்கு ஏற்கனவே குடியிருந்த மரபுக் காட்டி M 130 கூட்டத்தினரிடம் இருந்து தமக்கு மனைவிமாரை அல்லது ஒரு வாழ்க்கைத் துணைவியை பெற்றனர் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இவர்கள் கரையோர ஆண்களை பெரும்பாலும் துரத்தி, அல்லது கொலைசெய்து, அல்லது அவர்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கொடுக்காமல் இருந்து இருக்கலாம். என நம்பப்படுகிறது. மேலும் விந்திய மலைத் தொடரின் தெற்கில் வாழ்ந்த இந்த முந்திய திராவிட குழு, முதனிலைத் திராவிடர் குழுவின் பேச்சை ஏற்றுக் கொண்டு இருக்கலாம். அத்துடன் இமயமலை இந்தியா உபகண்டத்தை வட மத்திய ஆசியாவில் இருந்து பிரிக்கிறது. ஆகவே இது ஆதி தென் இந்தியா மக்களின் வடக்கிற்கான நடமாட்டத்தை கடினமாக்கிறது. அதே போல சிந்து நதியும் தார் பாலைவனமும் மேற்கிற்கான இயற்கை தடையாக உள்ளது. அரக்கன் மலைத் தொடர்கள் இந்தியா உப கண்டத்திற்கும் தென் கிழக்கு ஆசியாவிற்குமான பயண முட்டுக் கட்டையாக உள்ளது. இதனால் ஏற்பட்ட நீண்ட கால தனிமை, நாளடைவில், தனித்துவமான திராவிட இனத்திற்குரிய பண்புகள் தோன்ற வழிவகுத்தது எனலாம்.

உதாரணமாக 

இந்தியாவின் பழமையான மக்கள் நெகிரிட்டோ (Negrito) க்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தியாவிற்கு 60,000 ஆண்டுகளுக்கு முன் வந்த இனக் குழுக்களில் முதன்மையானவர்கள் அவர்கள் தான். அவர்கள் கேரளா மற்றும் அந்தமான் தீவுகளின் மலைப்பகுதிகளில் குடியேறினர். ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர், தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் இருளர், மற்றும் புலியன் போன்ற சில பழங்குடியினர் [Kadar, Irula and Puliyan tribes] நெகிரிட்டோக்களுடன் அதிக அளவில் ஒத்திருக்கிறார்கள். அவை  ஆஃப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அவற்றின் அண்டை தீவுகளுடன் தொடர்புடையவை. நெகிரிட்டோக்கள் கருப்பு (கருமையான) தோல், கம்பளி முடி, அகன்ற மற்றும் தட்டையான மூக்கு மற்றும் சற்று நீண்டு சென்ற தாடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. பலாங்கொடை மனிதன் தெற்காசியாவில் இதுவரை கண்டு பிடிக்கப் பட்ட மறுக்க முடியாத பழமையான ஹோமோ சேபியன்ஸ் புதை படிவமாகும். அவை குறைந்தது 28,000 ஆண்டுகள் பழமையானவை மற்றும் அவை கண்டு பிடிக்கப்பட்ட இலங்கையின் இடத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அந்த காலத்தில் இலங்கை தென் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. அதாவது மகாவம்ச விஜயன் இலங்கைக்கு வருவதற்கு குறைந்தது 25,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும்.  

எனவே, 
 
மரபுக் காட்டி M 130 யை குறிப்பிட்ட அளவு கொண்ட இலங்கை வேடரும்
இந்தியாவின் பழங்குடியினருக்கும் இடையில் ஒற்றுமை இருப்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றே! 

சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று, ‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள், முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள் தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள உயிரணுக்கள் தொடர்பான மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான ஆய்வு மையத்தினர் [‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’ / 'the Centre for Cellular and Molecular Biology / Hyderabad].

இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு விருமாண்டிக்கு கிடைத்திருக்கின்றது. இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து  இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வ குடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டு பிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர், பிபிசி [BBC] தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 

எனது முன்னைய கட்டுரைகளில் இருந்து தொகுத்தது


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  

No photo description available. No photo description available.No photo description available. No photo description available. 217628547_10219562471835173_5849850544804892974_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=fN48NuHRPlYAb46qBSO&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA3eofsBRYfBUaLdkcBcG6KAiyMh1ge1w9dV-uVpDgh2g&oe=662B6426No photo description available.

Edited by kandiah Thillaivinayagalingam
  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kandiah Thillaivinayagalingam said:

"சிங்களத்திற்கும் [இலங்கை வேடருக்கும்]  [தென்] இந்தியருக்கும் இடையில் மரபணு ஒற்றுமையாக இருக்கிறது என்பது எதிர்பார்த்த ஒன்றே. இது ஒரு புதுமையும் அல்ல மறைமுக நிகழ்ச்சிநிரலும் அல்ல"    

 

டிஎன்ஏ விஞ்ஞான ஆய்வின்படி இன்றைய மனித இனம் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்ற உண்மை இப்ப எமக்கு தெரியும். ஆகவே ஆஃப்பிரிக்க மக்களே உலகின் முதல் குடிமக்கள். மற்ற இன்றைய மக்கள் அனைவரும் தமது பரம்பரையின் சுவடுகளை தேட ஆஃப்பிரிக்காவிற்கு திரும்ப வேண்டும். முன்னைய ஆப்பிரிக்க மக்களின் ஆதி  இடப் பெயர்வு நடைபெறவில்லை என்றால், மனித இனம் உடல் அமைப்பில் நீக்ரோ இனத்தைப் போன்றே இருந்து இருப்பார்கள். அது மட்டும் அல்ல, ஆப்பிரிக்காவை தவிர்ந்த மற்ற உலகின் பகுதிகளில் மனித இனம் என்று ஒன்று இருந்து இருக்காது. மனித இனம் பல கட்டங்களாக ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்ததாக பெரும் பாலான மானுட வியலாளர்கள் நம்புகிறார்கள். ஒரு மில்லியன் சகாப்தத்திற்கு முன், ஆசுத்திராலோ பித்தேக்கசு அஃபெரென்சிசு  [Australopitheus Afarensis] க்குப் பிறகே, ஹோமோ எரக்டஸ் (Homo erectus) எனப்படும் எழு நிலை தொல்முன்மாந்தன் அல்லது நிமிர்ந்தநிலை மனிதர்கள் என அழைக்கப்படும் மனித இனத்தின் பழமையான மூதாதையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியே நடந்து சென்று ஐரோப்பா மத்திய கிழக்கு, ஆசியா போன்ற பகுதிகளில் குடியேறினார்கள் என்பதில் இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதன் பின், நமது மூன்றாவது மூதாதையர் நியாண்டர்தால் [Neanderthal] மனிதனை தொடர்ந்து பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின், ஹோமோசேப்பியன்ஸ் [Homo sapiens] என்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தும் மனிதன், மரபணு அடையாளம் காட்டி அல்லது குறியீடு M168 கொண்ட இவ் மனிதன்,  இரண்டாவது அலையாக ஆப்பிரிக்காவை விட்டு இடம் பெயர்ந்தது. இவன், அதற்கு முன் இடம் பெயர்ந்த தனது முன்னைய மூதாதையர்களை வெற்றி கொண்டான் என்கின்றனர். இந்த கருதுகோளின் படி இன்றைய நவீன மனிதன், இந்த ஹோமோ சேப்பியன்ஸின் சந்ததி ஆகும். இவர்கள் காட்டில் விலங்குகளை வேட்டையாடி காய் கனிகளை சேகரித்து உண்டு வாழ்ந்தனர். இந்நிலையில் இருந்த கற்கால மனிதன் ஒரு பகுதியாக நடந்தும் இன்னும் ஒரு பகுதியாக கட்டு மரம் போன்ற சிறு படகிலும் பயணம் செய்து இடம் பெயர்வு நடந்து இருக்கலாம் என கருதப் படுகிறது. இந்த முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்கள் [beachcombers], ஆப்ரிக்காவின் கடற்கரையோரமாக  தென் இந்தியா, இலங்கை, அந்தமான் வழியாக இடம் பெயர்ந்தார்கள். இவர்கள் தான் இந்திய, இலங்கையின் முதலாவது குடியிருப்பாளர்கள் 

இது இலங்கை வேடர்களிடமும் காணப்பட்டது!. இன்று இந்த  கடற்கரையோர அடையாளம் காட்டி , இந்தியாவின் குடித்தொகையில் ஆக 5% மட்டுமே. அவையும் தென் இந்தியாவின் கரையோரங்களில் மட்டுமே காணப்படுகின்றது. இறுதியாக, இவர்கள்  விரைவாக இந்தியாவின் கடற்கரையோரமாக பயணித்து தென்கிழக்கு ஆசியாவையும் அவுஸ்ரேலியாவையும் பெரும்பாலும் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு அடைந்தார்கள். அதன் பிறகு, கொஞ்சம் காலம் கடந்து, இரண்டாவது குழு ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, மத்திய கிழக்கு, தெற்கு மத்திய ஆசியாவிற்கு இடம் பெயர்ந்தார்கள். 

[இலங்கை அன்று பிரிபடாத ஒரு பகுதியாக தென் இந்தியாவுடன் ஒட்டி இருந்தது, கடந்த பத்து இலட்சம் வருட காலப்பகுதியில், இலங்கை பல சந்தர்ப்பங்களில் இந்திய உப கண்டத்துடன் இணைந்து இருந்தது. கடைசியாக இடம்பெற்ற பிரிவு கி மு 5000, அதாவது இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும், தமிழகமும் கடைசியாக ஒரே பகுதியாக இருந்துள்ளது. எனவே இலங்கையின் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி ஆராய்வது இயலாத விடயம் ஆகும். இலங்கையும் இந்தியாவும் ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்ததனால், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் கூட இரு நாடுகளிலும் ஒரே விதமாக இருந்ததாகவும் கருதப் படுகிறது.] 

இந்தியாவில்,குறிப்பாக தென் இந்தியாவில் குடியேறிய  முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்களின் வழித்தடம் - M130 (M168-M 130) ஆகும். இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் pre-Dravidian] என அழைக்கலாம்.

இவைகளை தொடர்ந்து M89, 45,000 ஆண்டு அளவிலும் பின் ஈரான் சமவெளியில் அல்லது தென் மத்திய ஆசியாவில் M9, 40,000 ஆண்டு அளவிலும் தோன்றின. அங்கு இருந்த இந்து குஷ் (Hindu Kush), இமயமலை (Himalayas), தியன்-சான் (Tian-Shan) போன்ற பெரிய மலைத் தொடர்கள் இவர்களின் இடம் பெயர்தலுக்கு மிக இடைஞ்சலாக இருந்தன. இதனால் இந்த யூரேசிய மரபுக்குழு [Eurasian Clan M9] இரண்டு தொகுதியாக பிரிவு பட்டு இருக்கலாம்? ஒன்று இந்து குஷ்ஷினது வடக்கு பக்கமாகவும் மற்றது தெற்கு பக்கமாக பாகிஸ்தானுக்கும் இடம் பெயர்ந்து இருக்கலாம். இந்த தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த பழைய கற் காலத்தின் இறுதி பகுதி [Upper Palaeolithic, Late Stone Age / (40,000-10,000 B.C.)] மக்களின் Y-குரோமோ சோம்மில் [chromosome / மரபணுச் சரம் / மரபணுத் தாங்கி]  திடீர் மாற்றம் ஏற்பட்டு மரபணு அடையாளம் காட்டி M20 தோன்றியது. இது இந்தியா தவிர வெளியில்  கணிசமான அளவு இல்லை-மத்திய கிழக்கு மக்களில் ஒரு வேளை 1-2 சத வீதம் இருக்கலாம் என்றாலும் துணைக்கண்டத்தில், தென் இந்தியாவில் இது கிட்டத்தட்ட  50 சத வீதத்திற்கு அதிகமாக  உள்ளது. இந்த M20 (M168-M9-M20) மரபணு அடையாளம் காட்டியை காவும் கூட்டம் கிட்டத் தட்ட 30,000 ஆண்டுகளுக்கு முன் பெரும் அளவில் இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்து உள்ளது. இந்த முன்னைய மூதாதையரை / மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-Dravidian] என அழைக்கலாம்.

[இப்படி இந்த யூரேசிய மரபுக்குழு M9 இன் சில உறப்பினர்கள் இந்தியா நோக்கி குடிபெயரும் போது மற்ற உறுப்பினர்கள் வடக்கு நோக்கி மத்திய ஆசிய, ஐரோப்பா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இந்த கூட்டத்தில் இருந்து படிப்படியாக M173 மரபணு அடையாளம் காட்டி தோன்றி, அது முதலாவது பெரிய மனித குடி பெயர்தலாக ஐரோப்பாவிற்குள் நுழைந்தார்கள். எப்படியாயினும் எதிர்பாராத சில காரணங்களால், M173 கூட்டத்தின் சில உறுப்பினர்கள் திரும்பி தெற்கு ஆசிய நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இது காலநிலைகளால் ஏற்பட்டும் இருக்கலாம்? இந்த திரும்பிய கூட்டத்தில் இருந்தே [M168 > M89 > M9 > M45 > M207 > M173 > M17] M17 என்ற இந்தோ – ஐரோப்பியர் குறியீடு [Indo-European marker] தோன்றியது. இது முதலாவதாக 10,000-15,000 ஆண்டுகளுக்கு முன் உக்ரைன் மற்றும் தெற்கு ரசியாவில் [Ukraine or southern Russia] தோன்றியது. பின் கூர்கன் மக்கள் (Kurgan people) மூலம் யுரேசியா [Eurasia], ஸ்டெப்பி [steppe] பகுதி முழுதும் பரவி, அங்கிருந்து கிழக்கு, மத்திய ஐரோப்பா பகுதிகளுக்கும், ஈரானின் ஊடாக, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியே கி.மு. 1500 ஆண்டுகள் அளவில் வட இந்தியாவிற்கும் பரவியது என கண்டு பிடித்து உள்ளனர். மேலும் தேர் / ரதம் கி மு 3000 ஆண்டளவில் இவர்களால் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும் இந்த அகன்று பரந்த மரங்கள் அற்ற புல்வெளியான ஸ்டெப்பி பகுதியில் தான், இதற்கு ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன், குதிரைகள் இவர்களால் பழக்கப்படுத்தப்பட்டன (domesticated). இன்று 35% க்கும் அதிகமான இந்தி (Hindi / ஹிந்தி] மொழி பேசும் இந்தியா ஆண்கள், இந்த மரபணு குறியீட்டை கொண்டுள்ளார்கள். ஆனால் திராவிட மொழி பேசுபவர்களில் இது 10% க்கும் குறைவாகவே உள்ளது. இது 10,000 ஆண்டுகளுக்குள் தான், அதிகமாக 5000 ஆண்டுகளுக்குள், ஸ்டெப்பியில் [புல்வெளி] இருந்து கணிசமான இந்த குழு இந்தியாவிற்குள் வந்ததை காட்டுகிறது]


அதாவது, 

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல் ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த ப்ரொஜக்டிற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் (GP) [Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப் படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம். ஒவ்வொரு வழித்தடமும், ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. ஸ்பென்சர் வெல்ஸ் [Spencer Wells] [இவரை நான் பத்தாவது உலகத் தமிழ் மகாநாட்டில் [10 th World Tamil Conference, Chicago / 4 th to 6 th July 2019] ஒரு முறை சந்தித்தேன்] எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்"[Indian marker] என அழைக்கப்படும் M 20, திராவிடர்களின் மூதாதையர் வழி  L(HAPLOGROUP –L) மரபுக் காட்டி, 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள்ளது என்பதை அறியமுடிகிறது. இவர்கள் மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் [Baluchistan] ஊடாக சிந்து சம வெளி வந்து, அங்கு இருந்து இறுதியாக விந்திய மலைத்தொடரின் [Vindhya Range] தெற்கு பகுதிக்கு சென்றார்கள். இந்த மலைத் தொடர் இந்தியாவைப் புவியியல் அடிப்படையில் வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாகப் பிரிக்கின்றது. அங்குதான் திராவிடர்கள் வாழும் இன்றைய நாலு தென் மாகாணங்கள் அமைந்துள்ளன, இந்த முன்னைய மூதாதையரை / மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-dravidian] என அழைக்கலாம். இந்த மரபுக் காட்டி M 20 யைக் கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தின் இந்த முக்கிய இடம் பெயர்வு, தனக்கு முன்னால், இன்றைக்கு சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியா கரையோரம் இடம் பெயர்ந்த மரபுக் காட்டி M 130 கொண்ட  ஆதி மனிதக் கூட்டத்தினை எதிர்கொண்டது. இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் [pre-dravidian] என அழைக்கலாம். இந்த முதனிலைத் திராவிடர் கூட்டம், முந்திய திராவிட கூட்டத்துடன் கலந்தன. இந்த கலப்பில் இருந்தே திராவிட வரலாறு பிறந்தது. மரபுக் காட்டி M 20 கூடுதலாக தெற்கு மக்களிடம் மட்டும் காணப்படுவதுடன் சிலவேளை 50 வீதத்திற்கும் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு வெளியில் இங்கும் அங்கும்மாக மட்டுமே காணப்படுகிறது. அதே வேளையில் மரபுக் காட்டி M 130 இந்தியாவில் தெற்கில் மட்டுமே முதன்மையாக காணப்படுவதுடன் அதுவும் 5 வீதம் அளவிலேயே காணப்படுகிறது.

மேலும் இந்த இரண்டு மரபுக் காட்டிகளின் கலப்பில் கரையோர மக்கள் கூட்டத்தின் ஆண் வழி பங்களிப்பு குறைவாக இருப்பது அறியமுடிகிறது. ஆகவே தென் இந்தியா புகுந்த மரபுக் காட்டி M 20 கூட்டத்தினர், அங்கு ஏற்கனவே குடியிருந்த மரபுக் காட்டி M 130 கூட்டத்தினரிடம் இருந்து தமக்கு மனைவிமாரை அல்லது ஒரு வாழ்க்கைத் துணைவியை பெற்றனர் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இவர்கள் கரையோர ஆண்களை பெரும்பாலும் துரத்தி, அல்லது கொலைசெய்து, அல்லது அவர்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கொடுக்காமல் இருந்து இருக்கலாம். என நம்பப்படுகிறது. மேலும் விந்திய மலைத் தொடரின் தெற்கில் வாழ்ந்த இந்த முந்திய திராவிட குழு, முதனிலைத் திராவிடர் குழுவின் பேச்சை ஏற்றுக் கொண்டு இருக்கலாம். அத்துடன் இமயமலை இந்தியா உபகண்டத்தை வட மத்திய ஆசியாவில் இருந்து பிரிக்கிறது. ஆகவே இது ஆதி தென் இந்தியா மக்களின் வடக்கிற்கான நடமாட்டத்தை கடினமாக்கிறது. அதே போல சிந்து நதியும் தார் பாலைவனமும் மேற்கிற்கான இயற்கை தடையாக உள்ளது. அரக்கன் மலைத் தொடர்கள் இந்தியா உப கண்டத்திற்கும் தென் கிழக்கு ஆசியாவிற்குமான பயண முட்டுக் கட்டையாக உள்ளது. இதனால் ஏற்பட்ட நீண்ட கால தனிமை, நாளடைவில், தனித்துவமான திராவிட இனத்திற்குரிய பண்புகள் தோன்ற வழிவகுத்தது எனலாம்.

உதாரணமாக 

இந்தியாவின் பழமையான மக்கள் நெகிரிட்டோ (Negrito) க்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தியாவிற்கு 60,000 ஆண்டுகளுக்கு முன் வந்த இனக் குழுக்களில் முதன்மையானவர்கள் அவர்கள் தான். அவர்கள் கேரளா மற்றும் அந்தமான் தீவுகளின் மலைப்பகுதிகளில் குடியேறினர். ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர், தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் இருளர், மற்றும் புலியன் போன்ற சில பழங்குடியினர் [Kadar, Irula and Puliyan tribes] நெகிரிட்டோக்களுடன் அதிக அளவில் ஒத்திருக்கிறார்கள். அவை  ஆஃப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அவற்றின் அண்டை தீவுகளுடன் தொடர்புடையவை. நெகிரிட்டோக்கள் கருப்பு (கருமையான) தோல், கம்பளி முடி, அகன்ற மற்றும் தட்டையான மூக்கு மற்றும் சற்று நீண்டு சென்ற தாடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. பலாங்கொடை மனிதன் தெற்காசியாவில் இதுவரை கண்டு பிடிக்கப் பட்ட மறுக்க முடியாத பழமையான ஹோமோ சேபியன்ஸ் புதை படிவமாகும். அவை குறைந்தது 28,000 ஆண்டுகள் பழமையானவை மற்றும் அவை கண்டு பிடிக்கப்பட்ட இலங்கையின் இடத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அந்த காலத்தில் இலங்கை தென் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. அதாவது மகாவம்ச விஜயன் இலங்கைக்கு வருவதற்கு குறைந்தது 25,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும்.  

எனவே, 
 
மரபுக் காட்டி M 130 யை குறிப்பிட்ட அளவு கொண்ட இலங்கை வேடரும்
இந்தியாவின் பழங்குடியினருக்கும் இடையில் ஒற்றுமை இருப்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றே! 

சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று, ‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள், முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள் தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள உயிரணுக்கள் தொடர்பான மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான ஆய்வு மையத்தினர் [‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’ / 'the Centre for Cellular and Molecular Biology / Hyderabad].

இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு விருமாண்டிக்கு கிடைத்திருக்கின்றது. இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து  இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வ குடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டு பிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர், பிபிசி [BBC] தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 

எனது முன்னைய கட்டுரைகளில் இருந்து தொகுத்தது


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  

No photo description available. No photo description available.No photo description available. No photo description available. 217628547_10219562471835173_5849850544804892974_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=fN48NuHRPlYAb46qBSO&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA3eofsBRYfBUaLdkcBcG6KAiyMh1ge1w9dV-uVpDgh2g&oe=662B6426No photo description available.

நன்றி.

இந்த மரபணு சுட்டிகளில் ஒன்று மதுரையிலும், அதேபோல் அபர்ஜினிகளிடமும் பரவலாக உள்ளது என 2000 ஆண்டுகளில் ஒரு ஆராய்சியும் நிறுவியுள்ளது.

இனத்தூய்மை வாதம் இங்கே எவரும் பேச முடியாதது என்பதை இது காட்டுகிறது. சுத்தி சுத்தி பார்த்தால் எல்லாரும் ஆபிரிக்கரே.

அதே போல் ஆபிரிக்காவின் ரிட் வெளியில் இருப்போரை தவிர மிகுதி இடங்களில் உள்ள மிச்சம் எல்லாரும், வந்தேறிகளே.

இந்திய தீபகற்பகத்துள் முதலில் வந்த குழுக்கள் இரெண்டை திராவிட குடிகள் என வகைப்படுத்தின், அதன் பின் வந்தோரை ஆரியர் எனலாம் என நினைக்கிறேன்.

இதில் திராவிட குழுக்கள் கடைசி பனிக்காலம் முடியும் முன் தரை வழியாக இலங்கை வந்து அங்கே யக்கர், நாகர், வேடராக பரவி இருக்கலாம்.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kandiah Thillaivinayagalingam said:

"சிங்களத்திற்கும் [இலங்கை வேடருக்கும்]  [தென்] இந்தியருக்கும் இடையில் மரபணு ஒற்றுமையாக இருக்கிறது என்பது எதிர்பார்த்த ஒன்றே. இது ஒரு புதுமையும் அல்ல மறைமுக நிகழ்ச்சிநிரலும் அல்ல"    

 

இலங்கை ஒரு தீவு. அதைச் சுற்றி இந்திய துணைக் கண்டத்தைத் தவிர சூழ வேறு நிலப்பரப்பு ஏதும் இல்லாத போது, இலங்கையர் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் இந்தியக் கண்டத்திலுள்ளவர்களுடன் மொழிவழி, பண்பாட்டு, கலை கலாச்சார, மரபணு ஒற்றுமை இருப்பது சிறு குழந்தைய் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே. இதை புரிந்துகொள்வத்ற்கு PhD முடித்திருக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. 

எனது கேள்வி அதுவல்ல.

எனது கேள்வி, இந்த ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு  அதன் முடிவுகளை அடுத்தடுத்து வெளியிட வேண்டிய தேவை /காரணம் ஏதேனும் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதன் பின்ணணியில் இருப்பது யார்? அதற்கான் தேவை என்ன? அந்தத் தேவை  ஏன் தற்போது எழுகிறது என்பதே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் முன்னமே, குறைந்தது 1976 இல் இருந்து - Genetic distance analysis by Dr R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia - மற்றும் பலரால்  'சிங்களவர்கள் பற்றிய மரபணு ஆய்வுகள்' வெளிவந்து விட்டன.  

ஆனால் இங்கு விவாதிக்கப்பட்டது அல்லது வெளியிடப்பட்டது 

Sri Lanka's only indigenous population Vedda share genetic link with ethnic populations in India Vedda, the only indigenous population in present-day Sri Lanka, is believed to be the direct descendants of the island’s early inhabitants.
[இலங்கையின் ஒரே பழங்குடி மக்கள்தொகையான வேடர்  இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களுடன் மரபணு தொடர்பைப் கொண்டுள்ளது. 

எனவே இன்றைய இலங்கையில் உள்ள இந்த வேடர்கள் , தீவின் ஆரம்பகால மக்களின் நேரடி வழித்தோன்றல்கள் என்று இதனால் நம்பப்படுகிறது.

அவ்வளவுதான்!! . 

அதாவது இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த, ஜோதிமாணிக்கம் என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும், திரு விருமாண்டிக்கு கிடைத்தது போல அல்லது ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர், தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் இருளர், மற்றும் புலியன் போன்ற பழங்குடியினர் போன்றோர் போல 


எனவே உங்கள்  கேள்வி, 

இந்த ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு  அதன் முடிவுகளை அடுத்தடுத்து வெளியிட வேண்டிய தேவை /காரணம் ஏதேனும் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதன் பின்ணணியில் இருப்பது யார்? அதற்கான் தேவை என்ன? அந்தத் தேவை  ஏன் தற்போது எழுகிறது என்பதே. 

இங்கு தேவையற்ற , பொருத்தமற்ற ஒன்றே என்பது என் தாழ்மையான எண்ணம்.

மேலும் இதே வலைத்தளத்தில் / யாழ் இணையத்தில் 

nunavilan என்பவரால்  


இலங்கையில் சிங்களவர்
 
நூல் திறனாய்வு: முனைவர்.க.சுபாஷிணி

[இலங்கையில் சிங்களவர்
 - இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும் - 
நூலாசிரியர்: பக்தவச்சல பாரதி]

பதியப்பட்டது October 20, 2021 இல்

இலங்கை மானுடவியல் ஆய்வுகளில் குறிப்பாக மரபணு ஆய்வு எனும் பொழுது இந்த நூலில் நூலாசிரியர் 6 ஆய்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றார் என்றும் அதன் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது 


எனவே 

அண்மைய நாட்களில், இலங்கையருக்கும் குறிப்பாக சிங்களத்திற்கும்  இந்தியருக்கும் இடையில் மரபணு ஒற்றுமையாக இருக்கிறது என்று கூறும் ஒரு போக்கு அதிகரித்துச் செல்கிறது.  என்பது முற்றிலும் பிழை 

இது எப்பவோ முடிந்த முடிவு.

இங்கு குறிப்பாக கூறியது இலங்கை 'வேடர்கள்  தான் இலங்கைத்தீவின்  தீவின் ஆரம்பகால மக்களின் நேரடி வழித்தோன்றல்கள்' என்பதே 

இறுதியாக 


இலங்கையர் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் இந்தியக் கண்டத்திலுள்ளவர்களுடன் மொழிவழி, பண்பாட்டு, கலை கலாச்சார, மரபணு ஒற்றுமை இருப்பது சிறு குழந்தைய் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே.

சொல்ல இலகுவாக இருக்கும். அங்கு ஆராயும் பொழுது தான் சிக்கல்கள் தெரியும் 


உதாரணமாக 


இந்தியாவிலேயே, ஒரே நிலப்பரப்பிலேயே,  வட இந்தியர்  தென்  இந்தியர் - இவர்களுக்கிடையில் வேறு பாடு உண்டு 


அதேபோல 

சுமேரியருக்கும், அவர்களை சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய  மக்களுக்கும் தொடர்பு இல்லை 

நன்றி 

srilanka2.jpg 350px-Sri_Lankan_migration.png 350px-Genetic_admixture_of_Sinhalese_by_Papiha.PNG 350px-Genetic_admixture_of_Sinhalese.PNG

 

 

 

 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

எனது கேள்வி, இந்த ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு  அதன் முடிவுகளை அடுத்தடுத்து வெளியிட வேண்டிய தேவை /காரணம் ஏதேனும் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதன் பின்ணணியில் இருப்பது யார்? அதற்கான் தேவை என்ன? அந்தத் தேவை  ஏன் தற்போது எழுகிறது என்பதே. 

வேறென்ன பாலம் போடத்தான் அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

சாவகச்சேரி என்பது முதலில் ஜாவகர் -சேரி எனப்பட்டதாம்?

அப்புறம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

அப்புறம் ?

Know the Etymology: 39
Place Name of the Day: Saturday, 03 June 2017

 

Cāvakac-cēri

சாவகச்சேரி
Cāvakac-cēri

Cāvakar+cēri

The Javanese settlement

சொல்வது நானல்ல - சாட்சாத் தமிழ்நெற்.கொம்

https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22810

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
1 hour ago, goshan_che said:

Know the Etymology: 39
Place Name of the Day: Saturday, 03 June 2017

 

Cāvakac-cēri

சாவகச்சேரி
Cāvakac-cēri

Cāvakar+cēri

The Javanese settlement

சொல்வது நானல்ல - சாட்சாத் தமிழ்நெற்.கொம்

https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22810

 

 

நானறிந்தது, உங்கே சந்திரபானு அரசனின் காலத்தில் சாவகர்கள் வந்திருந்தவர்களாம். அதனால் தான் உதற்கு சாவகச்சேரி என்ற பெயர் வந்தது என்று.

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நன்னிச் சோழன் said:

 

நானறிந்தது, உங்கே சந்திரபானு அரசனின் காலத்தில் சாவகர்கள் வந்திருந்தவர்களாம். அதனால் தான் உதற்கு சாவகச்சேரி என்ற பெயர் வந்தது என்று.

 

தகவலுக்கு நன்றி.

ஜாவாவிற்கு அருகில் உள்ள சுமாத்திரா தீவில் உள்ள மெதான் நகரில் ஐரோப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் குடியிருப்புகளும் கோவில்களும் இருந்தனவாம்.  இப்போதும் உள்ளன. 

கடாரம் வரை தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்த தமிழ் பேரரசுகள் இந்த நாடுகளின் முக்கிய நகர்களில் எல்லாம், chamber of commerce போல ஒரு அமைப்பை, தமிழரை கொண்டு நிறுவி அதன் வழி, வரி மட்டும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தினார்களாம். அதேபோல் கோவில்களும், அதை சுற்றி தமிழ் குடியிருப்புக்களும் அமைத்துள்ளார்கள்.

வெள்ளையர் வெள்ளயருக்கென இலங்கை காலி கோட்டை, சென்னையில் அமைத்த நகர்கள் போல என நினைக்கிறேன்.

ஆகவே தமிழர்கள் அங்கே போனது போல ஜாவாகாரர் இங்கேயும் வந்திருப்பர் என்பது அத்தனை நடக்கவியலாத காரியம் அல்ல.

https://en.m.wikipedia.org/wiki/Kampung_Madras
 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 minutes ago, goshan_che said:

தகவலுக்கு நன்றி.

ஜாவாவிற்கு அருகில் உள்ள சுமாத்திரா தீவில் உள்ள மெதான் நகரில் ஐரோப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் குடியிருப்புகளும் கோவில்களும் இருந்தனவாம்.  இப்போதும் உள்ளன. 

கடாரம் வரை தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்த தமிழ் பேரரசுகள் இந்த நாடுகளின் முக்கிய நகர்களில் எல்லாம், chamber of commerce போல ஒரு அமைப்பை, தமிழரை கொண்டு நிறுவி அதன் வழி, வரி மட்டும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தினார்களாம். அதேபோல் கோவில்களும், அதை சுற்றி தமிழ் குடியிருப்புக்களும் அமைத்துள்ளார்கள்.

வெள்ளையர் வெள்ளயருக்கென இலங்கை காலி கோட்டை, சென்னையில் அமைத்த நகர்கள் போல என நினைக்கிறேன்.

ஆகவே தமிழர்கள் அங்கே போனது போல ஜாவாகாரர் இங்கேயும் வந்திருப்பர் என்பது அத்தனை நடக்கவியலாத காரியம் அல்ல.

ஓம், இந்த சந்திரபானு அரசன் சாவகத் தீவிலிருந்து படையெடுத்து இலங்கைக்கு வந்தவன் தான். அவனுடைய மகன் பெயர் கூட "சாவக மைந்தன்" தான். அவன் இலங்கையில் தான் பிறந்தவன். அவனை தென்னிலங்கை சிங்கள அரசன் ஒருவர் தான் பின்னர் விரட்டியடித்தவன் என்று வரலாற்றில் படித்துள்ளேன். 

இது 13/14ம் நூற்றாண்டுகளில் நடந்ததாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


சந்திரபானு (ஆங்கிலம்: Chandrabhanu அல்லது Chandrabhanu Sridhamaraja; தாய்: จันทรภาณุ ศรีธรรมราช) என்பவர் தாய்லாந்து நாட்டில் இருந்த தாமிரலிங்க இராச்சியத்தை 1230-ஆம் ஆண்டில் இருந்து 1263-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அரசராவார்.

தென் தாய்லாந்தில் இவர் கட்டிய கோயில் மூலமும் பாண்டியர் கீழ் சில ஆண்டுகள் இலங்கையை ஆண்டதன் மூலமும் அதிகம் அறியப்படுகிறார்.

இவர் 1247-ஆம் ஆண்டில் இரண்டாம் பராக்கிரம்மபாகு என்னும் சிங்கள் அரசனை எதிர்த்து தோல்வி அடைந்தார். பின்னர் பாண்டியர் உதவியுடன் சில ஆண்டுகள் வட இலங்கையை ஆண்டான்.

எனவே அவனுடன் போர்வீரர்களாகவோ, உதவியாளராகவோ கட்டாயம் 
அவன் ஆண்டுகொண்டு இருந்த தாமிரலிங்க இராச்சியத்தில் இருந்து, அவனின் தமிழ் போர்வீரர்கள் மற்றும் உதவியாளர்களுடன் சிலரோ , பலரோ வந்திருக்கலாம். அவர்களின் மொழி, பண்பாடு  வித்தியாசம் என்பதால், அதிகமாக அந்த சமூகம் எங்கேயோ ஓரிடத்தில் தனியாக 
குடியமர்த்தப்பட்டு இருக்கலாம். அதுவே  சாவகச்சேரி [Cāvakac-cēri.] யாக இருந்து இருக்கலாம் என்று ஊகிக்கிறேன் .

  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 


ஏற்கனவே இருக்குற மக்கள் தொகை காணாது  இதுல இது வேறையா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@நன்னிச் சோழன் @kandiah Thillaivinayagalingam

வேறு ஒரு விடயத்தை பற்றி தேடும் போது இந்த சாவகர் என்பதற்கு இன்னொரு அர்த்தம் கிடைத்தது.

பண்டைய தமிழ் நம்பிக்கைகளில் ஒன்றான சமணத்தின் உட்பிரிவுகளில் ஒன்றுக்கு பெயர் சாவகம்/உலகாயதம். இதன்வழி ஒழுகியோரும் சாவகர் என அழைக்கப்பட்டுள்ளனராம்.

இது இறை நம்பிக்கை மறுப்பு, ஆசார மறுப்பு, பகுத்தறிவுவாதம் என கிட்டதட்ட இன்றைய பகுத்தறிவு/சுயமரியாதை/பெரியார் கொள்கைகளை சிலதை ஒத்து இருந்துள்ளது போல் தெரிகிறது.

சிலசமயம் இவர்கள் கூடி வாழ்ந்த இடமே சாவகர்-சேரி ஆமியும் இருக்கலாம்.

 https://ta.m.wikipedia.org/wiki/உலகாயதம்

இந்த இணைப்பு - சாவக நம்பிக்கையின் சாரம் என கீழ் கண்டவாறு உள்ளது.

வானுலகு, மோட்சம், நரகம், மறு உலகில் உயிர், வினைக் கோட்பாடு என்பன ஒன்றும் இல்லை. நால்வகை வருணப்பாகுபாடு, அவர்களுக்குரிய தொழில்கள், நியதிகள் என்பன ஒருவித உண்மை விளைவினையும் பயனையும் உண்டாக்கா. ஆண்மைத்திறமும் அறிவாற்றலும் இல்லாதவர்களின் பிழைப்பின்பொருட்டுத்தான் வேதங்கள், வேள்விகள், முத்தீ வளர்த்தல் உடம்பில் நீறுபூசுதல் என்பன உண்டாகி உள்ளன....உயிர் உள்ளவரைக்கும் மனிதன் மகிழ்ச்சியாக வாழட்டும். கடன்பட்டாவது நெய்யுணவு கொள்ளட்டும். ஒருமுறை உடம்பு சாம்பாலான பின்னர், மீண்டும் அது எப்படி எப்பொழுது இங்குத் திரும்பும்? சடங்குகள் எல்லாம் பிராமணர்களின் பிழைப்புக்காக உண்டாக்கப்பட்டவை.

@கிருபன் @பாலபத்ர ஓணாண்டி உங்கள் பார்வைக்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, goshan_che said:

@நன்னிச் சோழன் @kandiah Thillaivinayagalingam

வேறு ஒரு விடயத்தை பற்றி தேடும் போது இந்த சாவகர் என்பதற்கு இன்னொரு அர்த்தம் கிடைத்தது.

பண்டைய தமிழ் நம்பிக்கைகளில் ஒன்றான சமணத்தின் உட்பிரிவுகளில் ஒன்றுக்கு பெயர் சாவகம்/உலகாயதம். இதன்வழி ஒழுகியோரும் சாவகர் என அழைக்கப்பட்டுள்ளனராம்.

இது இறை நம்பிக்கை மறுப்பு, ஆசார மறுப்பு, பகுத்தறிவுவாதம் என கிட்டதட்ட இன்றைய பகுத்தறிவு/சுயமரியாதை/பெரியார் கொள்கைகளை சிலதை ஒத்து இருந்துள்ளது போல் தெரிகிறது.

சிலசமயம் இவர்கள் கூடி வாழ்ந்த இடமே சாவகர்-சேரி ஆமியும் இருக்கலாம்.

 https://ta.m.wikipedia.org/wiki/உலகாயதம்

இந்த இணைப்பு - சாவக நம்பிக்கையின் சாரம் என கீழ் கண்டவாறு உள்ளது.

வானுலகு, மோட்சம், நரகம், மறு உலகில் உயிர், வினைக் கோட்பாடு என்பன ஒன்றும் இல்லை. நால்வகை வருணப்பாகுபாடு, அவர்களுக்குரிய தொழில்கள், நியதிகள் என்பன ஒருவித உண்மை விளைவினையும் பயனையும் உண்டாக்கா. ஆண்மைத்திறமும் அறிவாற்றலும் இல்லாதவர்களின் பிழைப்பின்பொருட்டுத்தான் வேதங்கள், வேள்விகள், முத்தீ வளர்த்தல் உடம்பில் நீறுபூசுதல் என்பன உண்டாகி உள்ளன....உயிர் உள்ளவரைக்கும் மனிதன் மகிழ்ச்சியாக வாழட்டும். கடன்பட்டாவது நெய்யுணவு கொள்ளட்டும். ஒருமுறை உடம்பு சாம்பாலான பின்னர், மீண்டும் அது எப்படி எப்பொழுது இங்குத் திரும்பும்? சடங்குகள் எல்லாம் பிராமணர்களின் பிழைப்புக்காக உண்டாக்கப்பட்டவை.

@கிருபன் @பாலபத்ர ஓணாண்டி உங்கள் பார்வைக்கும்.

ஐய்னே, இது புதிய தகவல். மிக்க நன்றி

ஆனால், அங்கே சமணம் இருந்தது தொடர்பாக நானறிந்ததில்லை. நீங்கள்?

அவர்கள் அங்கிருந்திருந்தால் இதுவும் நீங்கள் கூறியது போன்று ஒரு பொருளாக இருக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

ஐய்னே, இது புதிய தகவல். மிக்க நன்றி

ஆனால், அங்கே சமணம் இருந்தது தொடர்பாக நானறிந்ததில்லை. நீங்கள்?

அவர்கள் அங்கிருந்திருந்தால் இதுவும் நீங்கள் கூறியது போன்று ஒரு பொருளாக இருக்கலாம்.

நானும் அறிந்ததில்லை. ஆனால் சமணத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிட்ட படியால் - இருந்து சுவடழிந்து போயிருக்கலாம். ஊகம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
39 minutes ago, goshan_che said:

நானும் அறிந்ததில்லை. ஆனால் சமணத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிட்ட படியால் - இருந்து சுவடழிந்து போயிருக்கலாம். ஊகம்தான்.

இருக்கலாம்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (10) இரவு முதல் இன்று (11) இரவு வரை கலிபோர்னியா தெற்கு அலபாமா வரையான பகுதிகளுக்கு சூரிய காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய காந்த புயல் காரணமாக பூமியின் வட அரைக்கோளத்தில் பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செயற்கைக் கோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/301379
    • “சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” - ஜாமீனில் விடுதலையான கேஜ்ரிவால் முழக்கம் 11 MAY, 2024 | 09:29 AM   புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுதலையான பின்னர், ““சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” என்று தனது கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் முழங்கினார். திஹார் சிறையின் 4-வது கேட் வழியாக சிறையில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் வெளியே வந்தபோது அவரை ஆம் ஆத்மி தொண்டர்கள் குழு ஒன்று கையில் கொடியுடன் கோஷம் எழுப்பி வரவேற்றனர். அவர்களுடன் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களான அதிஷி, சவுரப் பரத்வாஜ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் இருந்தனர். 50 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வந்திருக்கும் டெல்லி முதல்வருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கேஜ்ரிவால், “உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் உங்களின் ஆசிர்வாதங்களை வழங்கினீர்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களால்தான் நான் இன்று உங்கள் முன்பு நிற்கிறேன். நான் திரும்பி வருவேன் என்று உங்களுக்கு வாக்கு கொடுத்திருந்தேன். இதோ உங்கள் முன்பு நிற்கிறேன். சர்வாதிகாரத்துக்கு எதிராக நாம் அனைவரும் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். சனிக்கிழமை காலை 11 மணிக்கு கன்னாட் பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று, அதன் பிறகு மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற இருக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் சந்திப்போம்" என்றார். முன்னதாக, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ம் தேதி நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு சில முக்கிய நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டது. அதன்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாக ரூ.50,000-க்கான தனிநபர் பத்திரம் வழங்க வேண்டும். அவர் ஜாமீனில் இருக்கும் காலங்களில் முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது. அவர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி இல்லாமல் எந்த அலுவலக கோப்புகளிலும் அவர் கையெழுத்திடக் கூடாது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு பற்றி பேசவோ அல்லது தன் மீதான குற்றச்சாட்டு பற்றி விவாதிக்கவோ கூடாது. இந்த வழக்கில் தொடர்புடைய எந்த சாட்சிகளுடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/183209
    • பட மூலாதாரம்,GETTY IMAGES/TEZUKA PRODUCTIONS CO., LTD. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 11 மே 2024, 07:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "பள்ளி முடிந்து மாலை வீடு வந்தவுடன், கை, கால் கழுவிவிட்டு டிவியின் முன்பாக கார்ட்டூன் நெட்வொர்க் சேனலை போட்டுக்கொண்டு இமை மூடாமல் டிராகன் பால் ஸி, போகிமான் ஆகிய தொடர்களை கார்ட்டூன் நெட்வொர்க்கில் பார்க்காமல் நாள் ஓடாது. ஒருநாள், ஒரு எபிசோட் பார்க்காதபோது, பலநாள் காத்திருந்த முக்கியக் காட்சிகள் அன்றெனப் பார்த்து ஒளிபரப்பாகிவிடவே, அவற்றை அடுத்த நாள் பள்ளியில் வகுப்புத் தோழர்கள் விவரித்துப் பெருமிதம் கொள்ளும்போது மனதுக்குள்ளேயே பொருமிக்கொள்வோம்." இந்த அனுபவத்தைப் பகிராத 90ஸ் கிட்ஸ்களை அரிதாகவே காண முடியும் என்னும் அளவுக்கு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தைகளின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகி, இந்தியாவில் பிரபலமடையத் தொடங்கின அனிமேக்கள். அப்படிப்பட்ட அனிமேக்களும் அவற்றின் உருவாக்கத்தில் கணிசமான பங்கு வகிக்கும் ஜப்பானிய காமிக்ஸ் வடிவமான மாங்காக்களும் இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்கா வீசிய இரண்டு அணுகுண்டுகள் குறித்த ஜப்பான் மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஊடகமாகவே செயல்பட்டதாகவும் அதன் வரலாறு கூறுகிறது. ஜப்பான் மட்டுமின்றி இன்று உலகம் முழுக்கவே பலரின் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட அனிமேக்களும் மாங்காக்களும் அணுகுண்டுக்குப் பிந்தைய ஜப்பானில் வகித்த பங்கு என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.   அணுகுண்டுகள் ஜப்பானியர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES அணுகுண்டு தாக்குதலை நடத்துவதற்கு முன்பே ஜப்பான் தோற்றுவிட்டது, ஆனால் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருந்தது. அதுவரைக்கும் பசிபிக் பெருங்கடலில் முழு ஆதிக்கம் செலுத்தி வந்த நாடு, அமெரிக்காவிடம் வீழ்ந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக சரணடையவில்லை. அமெரிக்கா நிபந்தனையற்ற சரணடைதலை ஜப்பானிடம் கோரியபோது, தங்கள் பேரரசருக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்பது உட்பட சில நிபந்தனைகளுடன் மட்டுமே சரணடைய முடியும் என்று ஜப்பான் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தச் சூழ்நிலையில், ஜப்பானை அணுகுண்டு குறித்து அமெரிக்கா எச்சரித்தபோதும் அது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்று ஜப்பான் ராணுவம் நினைத்தது. இவற்றைத் தொடர்ந்தே ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுப் பேரழிவு நடத்தப்பட்டது என்பது வரலாறு. இந்த நிலையில், இப்படிக் கற்பனை செய்து பாருங்கள். நாம் வாழும் ஊருக்கு அருகிலேயே இருக்கும் - அதாவது சுமார் 100கி.மீட்டருக்கு உள்ளாக இருக்கும் ஓர் ஊரில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. அதனால் வானுயர் எழும் காளான் புகைத் திரளைக் காணும்போது நாம் எப்படி உணர்வோம்! அத்தகைய பேரழிவைக் கண்முன் காணும்போது ஏற்படும் கலக்கம், அச்சுறுதல், நடுக்கம், வேதனை, வெறுப்பு அத்தனையும் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பைக் கண்ட மக்களை ஆட்கொண்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆகஸ்ட் 9, 1945 அன்று அமெந்ரிக்கா நாகசாகி மீது அணுகுண்டை வீசிய பிறகான நிலை ஜப்பானிய மாங்கா கலைஞரான கட்சுஹிரோ ஒட்டோமோ எழுத்தில் உருவான அகிரா என்ற அனிமேவின் இறுதிக்காட்சிகளில் எழும் பிரமாண்ட புகைத்திரளால், நியோ-டோக்கியோ என்ற நகரமே வெறும் எலும்புக்கூடாய்க் காட்சியளிப்பதைப் பார்த்தால், உங்களுக்கு ஓரளவுக்கு அந்த உணர்வின் தாக்கம் கிடைக்கும். ஒரு வெடிகுண்டு! ஒரேயொரு முறை வெடித்து, மொத்த நகரத்தையும் விழுங்கிச் செரித்து, அதன் எலும்புக்கூட்டை மட்டும் துப்பும்போது, அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள், அனாதையான குழந்தைகள், இந்தக் கொடூரங்களைக் கண்ணால் பார்த்தவர்கள் என அனைவரையும் ஒவ்வொரு வகையில் பாதித்தது. “இவையனைத்துமே ஜப்பானியர்களுக்கு பேரதிர்ச்சிகரமான அனுபவங்கள். பல ஆண்டுகளாக, பேரழிவு அவர்களின் மனக்கண்ணில் இருந்து நீங்காமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. இத்தகைய கொடுமையான நிலையில் இருந்து தாங்கள் மீண்டுவர, இலக்கியம், இசை, கலை ஆகியவற்றில் அந்தத் தாக்கத்தின் உருவகத்தைக் கொண்டு வருவதை, குணப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாகச் செய்ததாக” தி கான்வர்சேஷன் இதழில் வெளியான அனிமே குறித்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகிரா அத்தகைய உருவகங்களுக்கான ஓர் உதாரணம் மட்டுமே. இப்படியாகப் பல மாங்காக்கள் மற்றும் அனிமேக்களில் அணுகுண்டு வெடிப்பின் உருவகங்களையும் குறியீட்டையும் காண முடியும். இன்று வரை பல அனிமேக்களில் அந்த பிரமாண்ட புகைத்திரளின் உருவகம் வெவ்வேறு வடிவங்களில் இடம்பெறவே செய்கின்றன. எடுத்துக்காட்டாக, இன்று மிகப் பிரபலமாக இருக்கும் நருட்டோ அனிமேவில் வரும் பெயின் (Pain) என்ற கதாபாத்திரம், கொனோஹா கிராமத்தின் மேலே வானில் நின்றுகொண்டு தனது 'ஷின்ரா டென்சேய்' என்ற சக்தியைப் பயன்படுத்துவார். அது அந்தக் கிராமம் முழுவதையும் மிகப் பிரகாசமான ஒளியால் மூடிப் பிறகு பெருவெடிப்பை ஏற்படுத்தும். அணுகுண்டை நேரில் பார்த்தவர்களின் சாட்சியமும் இதை ஒத்தே இருக்கின்றன. இதேபோல் ஒன் பீஸ் தொடரிலும் வேகாபங்க் என்ற விஞ்ஞானி உருவாக்கிய மதர் ஃப்ளேம் என்ற ஆயுதமாகவும் பயன்படுத்தவல்ல ஆற்றலும் அணு ஆற்றலையே மையாமக் கொண்டுள்ளது.   அனிமே, மாங்கா என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அனிமேக்களின் வரலாறு 1907ஆம் ஆண்டில் இருந்தே தொடங்குகிறது. இருப்பினும், அவற்றுக்கு அனிமே என்ற குறிப்பிட்ட சுருக்கம் பயன்படுத்தப்பட்டது 1960களில் இருந்துதான் என்கிறார் ஜோனாதன் க்ளிமென்ட்ஸ். முதன்முதலாக 1962ஆம் ஆண்டில் எய்கா ஹ்யோரான் என்ற திரைப்படங்களை விமர்சிக்கும் இதழில் இவை குறித்து கட்டுரை எழுதிய மோரி டகுயாதான் அனிமே என்ற அனிமேஷனுக்கான சுருக்கத்தை முதன்முதலில் பயன்படுத்தியதாகவும் 2013 வெளியான தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அனிமே என்பது ஏதோ உருவாக்கப்பட்ட பதம் அல்ல, அது அனிமேஷன் என்ற ஆங்கில சொல்லின் சுருக்கப்பட்ட வடிவமே என்கிறார் அனிமே சார்ந்த வணிகப்பொருட்களுக்கான அனிசிங்க் என்ற நிறுவனத்தின் இணை-நிறுவனரும் அனிமேக்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவருமான நிகில் ரவிக்குமார். அதே கூற்றை அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜப்பானிய படிப்புகள் துறையின் பேராசிரியர் சூசன் ஜே.நேப்பியர் தனது ‘அனிமே ஃப்ரம் அகிரா டூ பிரின்சஸ் மோனோனோகே’ என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அவர் தனது நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “அனிமேஷன் என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமான அனிமே, இப்போது அமெரிக்க சொல்லகராதியில் ஒரு தனி இடத்தைப் பிடித்துவிட்டது. அதாவது, நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் குறுக்கெழுத்துப் புதிர்களில் இடம்பெறும் அளவுக்கு அதன் பயன்பாடு பெருகியுள்ளது.” அடிப்படையில், ஜப்பானியர்களை பொறுத்தவரை மேற்கத்திய படைப்பாக இருந்தாலும் சரி, ஜப்பானிய படைப்பாக இருந்தாலும் சரி அனைத்துமே அனிமேதான். ஆனால், ஜப்பானிய அனிமேக்களின் கதைக்களம், சண்டை, அதிரடி, காமெடி போன்றவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் கதைக்களத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட தருணத்தின் சூழலை உணர்வுபூர்வமாகக் கடத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதை மாங்காக்கள் மிக ஆழமாகச் செய்வதாகக் கூறுகிறார் நிகில். மாங்கா என்பது மேற்கத்திய, இந்திய காமிக்ஸ் புத்தகங்களைப் போன்றது. அதுவும் காமிக்ஸ் புத்தகம்தான். ஆனால், கதை மீதான மாங்காவின் அணுகுமுறை காமிக்ஸில் இருந்து அதைத் தனித்துவமாக்குகிறது. நிகிலின் கூற்றின்படி, காமிக்ஸ்களை பொறுத்தவரை அதிரடியில் அதிக கவனம் செலுத்தும். ஆனால் மாங்காக்கள் “ஒவ்வொரு தருணத்தின்மீதும் அதிக கவனம் செலுத்தும். ஒரு திறந்திருக்கும் கதவு, சூரிய உதயம், ஒருவரின் கண்ணீர், பசி, மகிழ்ச்சி என அனைத்தையும் மாங்காக்களில் வரும் ஓவியங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குத் துல்லியமாகக் கடத்தும். அதுதான் அவற்றின் தனித்துவம்.”   காட்ஸில்லா – உயிருள்ள அணுகுண்டு உருவாக்கப்பட்டதன் பிண்ணனி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஷிரோ ஹோண்டாவின் இயக்கத்தில் 1954ஆம் ஆண்டு வெளியான கோஜிரா படத்தில் வரும் காட்சி ஜப்பான் இரு அணுகுண்டுகளால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிடம் சரணடைந்த பிறகு, அந்நாடு மீண்டும் தன்னை கட்டமைத்துக்கொள்ள அமெரிக்கா உதவியது. அதைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலில் அமெரிக்கா தனது அணுகுண்டுகளை சோதிக்கத் தொடங்கியது. இப்படியாக மார்ச் 1, 1954 அன்று மார்ஷல் தீவுகளில் உள்ள பிகினி அடோல் என்ற சிறிய தீவில் ஓர் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்தப் பகுதியில் கடந்து சென்ற ஒரு மீன்பிடிப் படகு அந்த அணுகுண்டு வெடிப்பில் வெளியான கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டது. அந்த அணுகுண்டு ஹிரோஷிமாவில் வெடிக்கப்பட்டதைவிட 1,000 மடங்கு சக்தி வாய்ந்தது. இதன் பாதிப்புகளால், அந்த மீன்பிடிப் படகில் இருந்த ஐகிச்சி குபோயாமா உயிரிழந்தார். இது ஜப்பான் மக்களிடையே அணுகுண்டு சோதனைக்கு எதிராகக் கொந்தளிக்க வைத்தது. ஐகிச்சி குபோயாமாவின் கடைசி விருப்பமாக இருந்தது ஒன்று மட்டுமே, “அணுகுண்டுக்குப் பலியான கடைசி உயிர் தனதாக இருக்க வேண்டும்.” இதைத் தொடர்ந்துதான் ஜப்பானில் அணுகுண்டுக்கு எதிரான இயக்கமே உருவானது. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்படியாக ஜப்பான் மக்கள், ஹிரோஷிமா, நாகசாகியை தொடர்ந்தும் அணுகுண்டுகளின் பாதிப்புகளை எதிர்கொண்டனர். அதன் விளைவாக உருவானதே ஜப்பானிய மொழியில் கோஜிரா என்றழைக்கப்படும் காட்ஸில்லா. காட்ஸில்லா என்பது அணுகுண்டின் பண்புகளை உருவகப்படுத்திய ஓர் உயிருள்ள கதாபாத்திரம்தான் என்கிறார் அனிசிங்க் நிறுவனத்தின் இணை-நிறுவனர் நிகில். காட்ஸில்லா கதையில் அதன் அறிமுகமே கடலில் ஒரு மீன்பிடிப் படகைத் தாக்குவதில் இருந்துதான் தொடங்கும். ஐகிச்சி குபோயாமா இருந்த மீன்பிடிப்படகு அணுகுண்டு வெடிப்பில் சிக்கியதைக் குறிக்கும் குறியீடுதான் அந்தக் காட்சி. கலை எப்படி ஜப்பானிய மக்கள் தங்கள் வலிகளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றுதான் காட்ஸில்லா. இப்படியாக, பேர்ஃபூட் ஜென், பிரின்சஸ் மோனோனொகே, கிரேவ் ஆஃப் ஃபயர்ஃப்ளைஸ் போன்ற கதைகளின் மூலம், இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தை உருவகப்படுத்தி, ஜப்பான் மக்களின் உணர்ச்சியைக் கடத்துவதற்கான ஓர் ஊடகமாக அனிமேக்கள் பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது.   அனிமே மற்றும் மாங்காக்களில் அணுகுண்டின் தாக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES “அனிமே உட்பட ஜப்பான் இலக்கியங்கள் போரின் ஆயுதங்களைப் பற்றிப் பேசியதைவிட, அந்த ஆயுதங்கள் ஏற்படுத்தும் விளைவுகளையே பேசின. அவ்வளவு கொடூரமான ஆயுதங்களை நாம் பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வியை முன்வைத்தன” என்கிறார் நிகில். “எவ்வளவு பெரிய போர்வீரனாக இருந்தாலும், முழுவதும் எரிந்து கருகிப்போன ஒரு குழந்தையின் சட்டையையும் கடைசியில் மிச்சமிருந்த அந்தக் குழந்தையின் ஒற்றைச் செருப்பையும் காட்டினால், போர் குறித்த அவனது வெறி சலனப்படும்.” அதைத்தான் மாங்காக்களும் அனிமேக்களும் உருவகப்படுத்த முயன்றன என்று கூறும் நிகில், ‘இன் திஸ் கார்னர் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற அனிமே திரைப்படத்தைக் குறிப்பிடுகிறார். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அனிமே துறை மிகவும் இளம் கட்டத்தில் இருந்தது. ஆகவே, அனிமேவை ஒரு முக்கிய ஊடகமாக வைத்து அணுகுண்டின் தாக்கத்தில் இருந்து ஜப்பான் மக்கள் விடுபட்டனர், அல்லது அதையே முற்றிலும் வடிகாலாகப் பயன்படுத்தினர் என்று கூற இயலாது என்பது நிகிலின் கூற்று. ஆனால், ‘இன் திஸ் கார்னர் ஆஃப் தி வேர்ல்ட்’ போன்ற அனிமே திரைப்படங்கள் ஜீரணிக்கவே முடியாத அணுகுண்டின் விளைவுகளைக் கையாள்வதற்கான ஒரு வடிகாலாக அமைந்தது என்பதையும் மறுக்க முடியாது. மேலும், இந்தக் குறிப்பிட்ட படத்தை ஜப்பான் அரசாங்கமே காட்சிப்படுத்தி, மக்களிடையே விளம்பரப்படுத்தும் அளவுக்கு, அது இரண்டாம் உலகப்போரின் விளைவுகளைப் பற்றியும் மீண்டு வருதல் குறித்தும் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.   அனிமேக்களில் அணுகுண்டு தாக்கத்தை தொடக்கி வைத்த முன்னோடிகள் பட மூலாதாரம்,TEZUKA PRODUCTIONS CO., LTD. நவீன அனிமேக்களின் தந்தையாகக் கருதப்படும் ஒசாமு டெசுகா மற்றும் மியாசாகி ஹயாவோ ஆகியோர்தான் அணுகுண்டின் தாக்கத்தைத் தங்கள் அனிமேக்களில் வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். ஒசாமு டெசுகாவின் மாங்கா படைப்புகளில் விவரிக்கப்பட்ட அணுகுண்டு வெடிப்பின் காட்சி, அதைப் பார்ப்பவர்களுக்கு அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அளவுக்கு மனதில் அழுத்தமாகப் பதிந்தன. அவரது படைப்புகள் தாங்கவொண்ணா துக்கத்தைக் கையாள்வது, இயற்கையின் அத்தனை அழகையும் அதை அடக்கி ஆள வேண்டுமென்ற மனிதனின் ஆசையால் அழித்துவிட முடியும் என்பன போன்றவற்றைப் பேசின. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒசாமு டெசுகாவின் ஆஸ்ட்ரோபாய் அவரது பெரும்பாலான படைப்புகள், அனாதையாக்கப்பட்ட ஓர் இளம் கதாபாத்திரம் தன்னந்தனியாக உயிர் பிழைக்கப் போராடுவதைச் சுற்றியிருக்கும். அவரது ஆஸ்ட்ரோபாய் என்ற மாங்காவில், தனது மகனின் இழப்பை ஈடுகட்ட ஒரு விஞ்ஞானி ஆண்ட்ராய்டு சிறுவனை உருவாக்குகிறார். பின்னர், அதனால் மகனின் இழப்பை ஈடுகட்ட முடியாது என்றுணர்ந்து கைவிடுகிறார். அநாதையாக்கப்படும் அந்த ஆஸ்ட்ரோபாய் பிறகு போராடி ஒரு சூப்பர் ஹீரோ ஆகிறார். அவரைப் போலவே, அணுகுண்டு வெடிப்பை நேரில் கண்டு உயிர் பிழைத்த கெய்ஜி நகாஸாவா உருவாக்கிய பேர்ஃபூட் ஜென் அணுகுண்டால் அழிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனின் கதையைப் பேசியது. “நகாஸாவா தனது தங்கை பிறந்து சில வாரங்களிலேயே கதிர்வீச்சு பாதிப்பால் உயிரிழந்தைக் கண்முன் கண்டவர். அவரது தாயும் அதே பிரச்னையால் காலப்போக்கில் மரணித்தார்,” என்று தி கான்வர்சேஷன் இதழ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. பேர்ஃபூட் ஜென்னின் கதையும் அத்தகைய ஒன்றுதான்.   மரணம், மறுபிறவி, வாழ்வின் ஒளி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கெய்ஜி நகாஸாவா இந்த முன்னோடிகளின் படைப்புகள் அதிகம் பேசியது ஒரு பேரழிவின் விளைவுகள், மரணங்கள், இழப்புகள் மற்றும் அதன் பிறகும் நீடிக்கும் இந்த வாழ்வில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் அந்தச் சிறிய ஒளி. அனைத்தையும் இழந்த பிறகும், ஒருவன் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும், வாழ்வைப் புதிதாகத் தொடங்க வேண்டும் என்பதை இவர்களது கதைகள் வலியுறுத்தின. பட மூலாதாரம்,GETTY IMAGES டெசுகாவின் ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போன்றது. முற்றிலும் அழிந்த பிறகும் அதன் அத்தியாயம் முடிந்துவிடாமல், மீண்டும் உயிர்த்தெழுந்து சிறகடித்துப் பறந்து வரும். அவை அனைத்துமே அப்போதைய ஜப்பான் மக்களின் போருக்குப் பிறகு, அதனால் விளைந்த ஒரு பேரழிவுக்குப் பிறகான மீட்சியை, எழுச்சியை உருவகப்படுத்தின. போருக்கு முன்பு மேற்கத்திய வடிவங்களைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட அனிமே கதைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய சகாப்தம் அனிமே மற்றும் மாங்காக்களில் தொடங்கியது. ஒசாமு டெசுகா, மியாசாகி ஹயாவோ, கட்சுஹிரோ ஒட்டோமோ, கெய்ஜி நகாஸாவாவை தொடர்ந்து அடுத்து வந்த மாங்கா, அனிமே கலைஞர்களும் அவர்களைப் பின்பற்றி மரணம், மறுபிறவி, வாழ்வின் ஒளி அதாவது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை மையமாக வைத்துப் படைப்புகளை உருவாக்கினார்கள். அதன்மூலம், ஜப்பான் மக்கள் எப்படி அது சந்தித்த வரலாற்றின் மிகப்பெரும் அழிவில் இருந்து, அது தந்த வலியில் இருந்து தன்னைக் குணப்படுத்திக் கொண்டனர் என்பதையும் அறிய முடிகிறது. https://www.bbc.com/tamil/articles/cz5dj6rlr8ro
    • போன வருடம்தான் கேரளா, மூனார் & பல  இடங்களுக்கு போய் வந்தோம், படத்தை பார்க்கும்போது, அந்த இடங்கள் மீண்டும் மனதில் வந்து போச்சு. அப்படியே எடுத்தைள்ளார்கள், போகும்போது ஒரு பாதையோரக்கடையில் உடன் பெரித்த நன்னீர் மீனும் பிளேன்ரியும் குடித்த ஞாபகம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை, குளிருக்கு, அந்த மாதிரி👍
    • பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கட்டுரை தகவல் எழுதியவர், வினீத் கரே பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மக்களவைத் தேர்தல் 2024 ஏழு கட்டங்களாக நடந்து வரும் நிலையில், தேர்தல் பிரசாரங்களில் 'முஸ்லிம்களுக்கு எதிரான' கருத்துகளைப் பரப்புவது வெளிநாடுகள் உட்பட பல்வேறு தரப்பினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோதி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் எனப் பல நிபுணர்கள் கணித்து வரும் நிலையில் பாஜக தேர்தல் பிரசார பாணி தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்திய தேர்தல் பிரசாரம் குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர், "இதுபோன்ற தேர்தல் பிரசாரத்தை நான் பார்த்ததே இல்லை. இவர்களின் கருத்துகள் விஷமத்தனமாக உள்ளது. இப்படியெல்லாம் பேசுவார்கள் என்று கற்பனைகூட செய்து பார்க்கவில்லை" என்று கூறினார். 'இந்தப் போக்கு நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல' மும்பை கலவரத்திற்குப் (1993) பிறகு அமைதியான சூழலை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மும்பையின் சமூகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான ஆய்வு மையத்தின் பொறியாளர் இர்பானின் கூற்றுப்படி, ``இதுபோன்ற தேர்தல் பரப்புரைகள் மக்கள் மத்தியில் பிரிவினையை அதிகரிக்கும். நாட்டின் எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல.” என்கிறார். ”இதற்கு முன்பு நடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் `ஊழல் எதிர்ப்பு’, `இந்தியாவுக்கு நல்ல காலம் பிறக்கிறது (அச்சே தின்)’, `தேசியவாதம்’ உள்ளிட்ட வாக்கியங்களின் அடிப்படையில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. 2024 தேர்தல் 'முஸ்லிம்களுக்கு எதிரான' கருத்துகளை முன்வைத்து நடத்தப்படுகின்றன,” என்றார். அமெரிக்காவில் இயங்கி வரும் வில்சன் மையத்தின் தெற்காசியா பிரிவின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன் கூறுகையில், ``பிரதமர் மோதியும் பாஜகவும் 400 இடங்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்கிறார்கள்,” என்றார். ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் பிரதமர் மோதி ஆற்றிய பிரசார உரை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலையங்கம் எழுதியிருந்தது , இந்தக் கட்டுரையின் தலைப்பு - "No, Prime Minister". ராஜஸ்தானில் ஒரு தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய உரையை மேற்கோள் காட்டி முஸ்லிம்களை பற்றி கருத்து தெரிவித்தார், அதில் முஸ்லிம்களை 'ஊடுருவுபவர்கள்' மற்றும் 'அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்' என்று குறிப்பிட்டார்.   அடுத்தடுத்து வெளியான அறிக்கைகள் பட மூலாதாரம்,ANI இந்த பிரசார விவகாரம் இத்துடன் முடியவில்லை. கர்நாடக பாஜக, இட ஒதுக்கீடு தொடர்பாக பதிவிட்ட ட்வீட், 'முஸ்லிம்களுக்கு எதிரான' தேர்தல் விளம்பரம் ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் பாஜக தலைவர்கள் பேசிய கருத்துகள் தவறானவை என்றும் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறி வருகின்றனர். இது தவிர, ‘‘தனிப்பட்ட சட்டம் மூலம் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என காங்கிரஸ் கூறுகிறது” என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். பாஜக தலைவர் ஜேபி நட்டா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தபோது, இது காங்கிரஸ் கட்சியின் அறிக்கையா அல்லது முஸ்லீம் லீக்கின் அறிக்கையா என்று யோசித்தேன்,” என்றார். பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு,அமித் மாளவியா தேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது உரையில், "காங்கிரஸ் இம்முறை தேர்தல் அறிக்கையில், மத சிறுபான்மையினருக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது, இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அவர்களை ஆயுதப்படையில் சேர்க்கலாம்," என்றார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒரு பேரணியில் பேசியபோது, "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், காங்கிரஸ் அந்நிய சக்திகளோடு கைகோர்த்திருப்பது தெரிகிறது. உங்கள் பிள்ளைகளின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறார்கள்" என்று கூறினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஷரியா, தாலிபன் போன்ற வார்த்தைகள் எங்குமே குறிப்பிடப்படவில்லை. பிரதமர் மோதி, பன்ஸ்வாராவில் ஆற்றிய உரை குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: “இந்தியா கூட்டணிக்கு, நாட்டு மக்களை விடவும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள்தான் முக்கியம்,” என்று குறிப்பிட்டார்.   வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்களின் கருத்து என்ன? பாஜகவின் பிரசாரம் மீதான விமர்சனங்கள் குறித்து வலதுசாரி சுவ்ரோகமல் தத்தா பேசுகையில், "இந்த நாட்டில் உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டது இல்லையா? கஜ்வா-இ-ஹிந்த் என்ற சித்தாந்தம் இந்த நாட்டிற்குள் வரவில்லையா? ஓட்டு ஜிகாத் இந்த நாட்டிற்கு வரவில்லையா? இந்த உண்மைகளை பிரதமர் அம்பலப்படுத்துகிறார், அவர் அப்படி என்ன குற்றம் செய்துவிட்டார்?” என்றார். பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக், பிரதமர் மோதியின் பிரசாரம் மீதான விமர்சனங்களை ஏற்கவில்லை. ஜமால் சித்திக் பேசுகையில், “மோதி ஜி எப்போதும் முஸ்லிம்களின் நலன் பற்றியே சிந்தித்தவர் ஊடுருவியவர்கள் என்றால் முஸ்லிம் என்று அர்த்தம் இல்லை. அதை ஏன் முஸ்லிம்கள் மீது திணிக்கிறோம்? பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நாட்டை உடைக்க முயல்கின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்புகளை மக்களிடம் இருந்து கொள்ளையடித்து வருகிறார்கள். ஆம், இந்து, முஸ்லிம் என இரு தரப்பிலும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள்," என்றார்.   தேர்தல் ஆணையம் 'மௌனம்' காப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தேர்தல் ஆணையத்துக்கு சுமார் 200 புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில், 169 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பாஜக சார்பில் 51 புகார்கள் அளிக்கப்பட்டு, அதில் 38 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸிடம் இருந்து 59 புகார்கள் பெறப்பட்டன, அவற்றில் 51 புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ``விஷமத்தனமான கருத்துகளை” உள்ளடக்கிய தேர்தல் பிரசாரங்கள் நடக்கும் இந்தக் காலகட்டத்தில், ஆளும் பாஜக தலைவர்கள் மீது காட்டும் கடுமையை, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் காட்டுவதில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. முன்னர், பாஜக தலைவர்கள் பிரசாரத்தில் இந்து மத சின்னங்களைப் பயன்படுத்தியதற்காக தேர்தல் ஆணையம் பாஜக மீது நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரெக் ஓ பிரையன், தேர்தல் ஆணையம் ஒரு "பாகுபாடான நடுவர்" போல் நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பிரதமரின் பேச்சுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிபிசியிடம் பேசுகையில், "சாதி, மதம், சமூகம் குறித்த கருத்துகளுக்கு தேர்தல் ஆணையம் மௌனம் காப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் கூறுகையில், ``கடந்த காலங்களில் சர்ச்சையான பிரசார உரைகளுக்கு தேர்தல் ஆணையம் கடுமை காட்டியிருந்தால் இன்று இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது.,’ என்றார். தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட மாதிரி நடத்தை விதிகளின்படி, தேர்தல் பிரசாரத்தின்போது மத சின்னங்களை பயன்படுத்தி வாக்கு கேட்கக்கூடாது. மதம், சாதி அடிப்படையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கக்கூடாது. தேர்தல் நடத்தை நெறிகளின்படி, எந்தவொரு மத அல்லது இன சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை மேற்கொள்வது அல்லது முழக்கங்களை எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளைக் காரணம் காட்டி, பிரதமர் மோதி மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிரதமர் மோதியின் பன்ஸ்வாரா பிரசாரப் பேச்சுக்கான நோட்டீஸ் பிரதமருக்கு அனுப்பப்படாமல், கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பப்பட்டது கேள்விகளின் தீவிரத்தை மேலும் அதிகரித்தது. இதேபோன்று, ராகுல் காந்தியின் பேச்சு குறித்து கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, இப்படி நடப்பது இதுவே முதல் முறை. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் , “பிரதமரின் தரக்குறைவான கருத்துகளால் சாமானிய மக்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. சமமாக நடத்துகிறோம் என்பதை நிரூபிக்க ராகுல் காந்தியின் கருத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்? தேர்தல் ஆணையத்திற்கு இது அவசியமா? பாஜக தலைவர் ஹேமமாலினி குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலாவை தேர்தல் ஆணையம் கண்டித்ததையும், அவரது தேர்தல் பிரசாரத்துக்கு 48 மணிநேரம் தடை விதித்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். இது தவிர, பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநெட்-ஐ குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது,” என்று குறிப்பிட்டார்.   அழுத்தமான பேச்சுகளுக்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES பிரதமர் மோதியின் பன்ஸ்வாரா பிரசார உரை, இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்பாகப் பேசப்பட்டது. வாக்குப்பதிவின் இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பிகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பல தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைகழகத்தில் பணிபுரியும் இந்திய அரசியல் துறை பேராசிரியர் இர்பான் நூருதீன் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில், சில சந்தர்ப்பங்களில் கட்சியின் முக்கிய அடிப்படைக் கொள்கைகளை நிலைநாட்டும் வகையில் மறைமுகமாக பிரதமர் மோதி செயல்பட்டார். தீவிரமாக சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசுவதை மற்ற பாஜக தலைவர்களிடம் ஒப்படைத்தார், ஆனால் இந்த முறை எல்லாம் மாறிவிட்டது. பிரதமர் மோதியே மயானம் மற்றும் சுடுகாடு பற்றிக் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது,” என்று விவரித்தார். ``கிராமங்கள் மற்றும் நகரங்களில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ள சவால் ஆகியவை முக்கியமான பிரச்னையாக இருப்பதால் பொருளாதாரம் தொடர்பான பேச்சுகள் வாக்காளர்களை ஈர்க்கவில்லை என்பதை பாஜக புரிந்து கொண்டது என்பதற்கு இதுவொரு அறிகுறி,” என்று பேராசிரியர் நூருதீன் கூறுகிறார். மேலும் பேசிய அவர், ``தேர்தலுக்கு முன் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்தது, பாஜக கட்சியினர் மத்தியில், இது ஹிட்-விக்கெட் (hit-wicket) என்று ஒருதரப்பும் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டது என்று மற்றொரு தரப்பும் நம்பியது. இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தது, 'ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது' என்ற முழக்கத்தை எழுப்ப வழிவகுத்தது.” பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,அரவிந்த் கெஜ்ரிவால் கேஜ்ரிவாலின் கைது பாஜகவின் அதீத நம்பிக்கையின் விளைவு என்று அவர் கருதுகிறார். ``ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவின் மூலம் தேர்தலில் பலன் கிடைக்கும் என பாஜக எதிர்பார்த்தது. ஆனால் அது கிடைக்கவில்லை. மகாராஷ்டிராவில் கட்சிகள் உடைந்ததால் பலர் பாஜகவில் இருந்து விலகிச் சென்றனர்,’’ என்றும் அவர் குறிப்பிட்டார். சமீபத்திய தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல் காந்தியை தாக்கும் வகையில் பேசிய பிரதமர் மோதி, அதானி மற்றும் அம்பானி பற்றிக் குறிப்பிட்டார். இதுகுறித்துப் பேசிய நூருதீன் ``பாஜக-வுக்கு நெருக்கமானவர்கள் என நம்பப்படும் நபர்களை பிரசாரத்தில் குறிப்பிடுகிறார். இதெல்லாம் நம்பும்படி இல்லை,” என்கிறார். மைக்கேல் குகல்மேன் கூறுகையில், ``பிரதமர் மோதி தேர்தலில் தானும் தனது கட்சியும் சிறப்பாகச் செயல்படுவதாக நம்புகிறார். அவர் தனது முக்கிய ஆதரவாளர்களைத் தாண்டி மேலும் பலரை கட்சியில் இணைக்க முயல்கிறார்.” " இது புத்திசாலித்தனமான கொள்கை அல்ல. கட்சியில் மக்களைs சேர்க்க விரும்பினால், அவர்கள் முஸ்லிம் வாக்காளர்களை நல்ல முறையில் அணுக வேண்டும், சுதந்திர எண்ணம் கொண்ட வாக்காளர்களிடம் பேச வேண்டும், பாஜகவை சார்ந்த வாக்காளர்களை அணுக வேண்டும். நீங்கள் அவர்களை உங்கள் பக்கம் ஈர்க்க முயல்கிறீர்கள் என்றால், பயன்படுத்தும் கடுமையான மொழியைத் தவிர்ப்பது நல்லது. தற்போதைய பிரசார பாணி துரதிர்ஷ்டவசமானது,” என்று மைக்கேல் குகல்மேன் கூறுகிறார். பாஜகவின் கொள்கைகளை ஆதரிப்பவரான டாக்டர் சுவ்ரோகமல் தத்தா கூறுகையில், "பிரதமர் மோதி மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சுகள் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் அல்ல, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையது." ” பிரிவினை ஏற்படுத்தும் செயல்கள் செய்தது காங்கிரஸ்தான் என்று பிரதமர் மோதி தொடர்ந்து கூறி வருகிறார், இதுபோன்று மீண்டும் நடக்கக் கூடாது. இதைப் பார்த்து நாடும், சமுதாயமும் உஷாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் நம்மை எச்சரிக்கிறார். இந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் இருக்கிறார்." "மேலும், நாட்டின் தேசிய வளங்களில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது வரலாற்று ரீதியாக உண்மை கிடையாது,” என்றார். விமர்சகர்களின் கருத்துப்படி, மன்மோகன் சிங்கின் பேச்சை முன்வைத்து பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பகிரும் கருத்தும், சூழலும் தவறானது என்கின்றனர்.   அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இதை எப்படிப் பார்க்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில், மேற்கத்திய ஊடகங்களில் இந்தியா மற்றும் இந்திய அரசியலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் செய்திகள் நல்ல தொணியில் இல்லை. இந்திய ஜனநாயகம் குறித்து வரும் செய்திகள், பாஜக தலைவர்களின் பேச்சுகள், நிஜ்ஜார் படுகொலை தொடர்பான செய்திகளைப் பார்க்கும்போது அமெரிக்காவில் இந்த விவகாரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது.” ``செய்திகள், கட்டுரைகள் அல்லது வேறு எந்தப் பதிவாக இருந்தாலும், இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைந்து வருவதாகவும், சிறுபான்மையினரின் நிலை சரியில்லை என்றும் மேற்கத்திய ஊடகங்களில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் உலக அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்," என்கிறார். பேராசிரியர் இர்பான் நூருதீன் கூறுகையில், "தற்போது உலகின் கவனம் இந்தியா மற்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்மறை அம்சங்களை நோக்கியே உள்ளது. நிஜ்ஜார் கொலை வழக்கில் வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க நாளிதழில் சமீபத்தில் வெளியான செய்தி அறிக்கை மற்றும் இந்திய உளவாளிகள் என்று குறிப்பிட்டு ஆஸ்திரேலியாவில் வெளியான செய்தி அறிக்கை ஆகியவை இதற்கு சான்று’’ என்று சுட்டிக்காட்டுகிறார். நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்தியா மறுத்து வருகிறது. பேராசிரியர் நூருதீன் மேலும் கூறுகையில், “உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் நாடுகள் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும்தான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பியூ ரிசர்ச் நடத்திய ஆய்வறிக்கையின்படி ஐரோப்பாவில் காலப்போக்கில் இந்தியா மீதான எதிர்மறை எண்ணம் அதிகரித்துள்ளது,” என்றார். மைக்கேல் குகல்மேன் கூறுகையில், "பிரதமராக நரேந்திர மோதியின் பேச்சுகளையும், தேர்தல் பிரசாரங்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், பாஜகவின் கொள்கைகள் குறித்து பல முஸ்லிம்கள் கவலைப்பட்டாலும், பிரதமர் மோதியின் ஆட்சியில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா உடனான மத்திய கிழக்கு நாடுகளின் உறவுகள் வலுப்பெற்றுள்ளதால் இந்திய நிலைமைகள் பற்றி அவை எதுவும் கூறாது, இது தவிர ஏராளமான இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர்,” என்றார். மைக்கேல் குகல்மேனின் கூற்றுப்படி, ”பாகிஸ்தான் மற்றும் சீனாவை தவிர, வேறு எந்த நாட்டின் தலைவரும் தேர்தல் பிரசாரங்களைக் குறிப்பிட்டு இந்தியாவை விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் வெளிநாட்டு மண்ணில் நிஜார் படுகொலை போன்ற குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வரும்போது இந்த நிலைமை மாறுகிறது." "இந்தியா மதச்சார்பின்மையில் இருந்து விலகிச் செல்கிறது என்ற கவலை நீண்ட காலமாக இருக்கிறது, தேர்தல் பரப்புரை பேச்சுகள் இந்தியாவின் போக்கைப் பற்றிய கவலையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. 'வெறுக்கத்தக்க பேச்சு' என்றே சொல்லத் தோன்றுகிறது” என்றும் அவர் கூறுகிறார்.   குற்றச்சாட்டுகளை மறுக்கும் பாஜக தலைவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். வலதுசாரி சர்வதேச விவகாரங்களின் நிபுணர் சுவ்ரோகமல் தத்தா கருத்துப்படி, இந்தியாவை பற்றி சர்வதேச நாடுகளோ அல்லது மேற்கத்திய நாடுகளோ என்ன சொல்கிறது என்பதைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை.” அவர்கள் முதலில் அவர்கள் பிரச்னைகளைப் பார்க்க வேண்டும். சட்டவிரோத குடியேறிகள் ஸ்வீடன், பிரான்ஸில் போராட்டங்கள் நடத்தினர், பாரிஸிலும் தாக்குதல் நடந்தது, லண்டனில் வெடிகுண்டு தாக்குதல்கள், மாஸ்கோ தியேட்டர்களில் ஐ.எஸ் தாக்குதலில் மக்கள் இறந்தது எனப் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் உள்ள கறுப்பர்கள் மற்றும் ஸ்பானியர்களுக்கு செய்யப்படும் பாகுபாடுகளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் முதலில் சரி செய்ய வேண்டும்,” என்றார். பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக் கூறுகையில், "பிரதமருக்கு முன் கேள்விகள் வரும்போது, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, காங்கிரஸ் இளவரசர் ராகுல் பையா தனது கருத்தைத் தெரிவிக்கும்போது, மோதியை தாக்கும்போது, மோதிஜி உங்கள் கருத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்." சமீபத்தில், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பிரதமர் மோதி, முஸ்லிம்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, "சுயபரிசோதனை செய்து, சிந்தித்துப் பாருங்கள், நாடு முன்னேறி வருகிறது. குறை என்று உங்கள் சமூகத்தில் உணரப்பட்டால், அது காங்கிரஸ் ஆட்சியின்போது அரசு செய்த செயல்பாடுகளின் விளைவுதான்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/c72pg37gvngo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.