Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமையை என்னிடம் தாருங்கள் தீர்வு நிச்சயம் – சங்கரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் வழங்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். மேலும்,

மக்கள் தலைமையை மாற்ற சொல்லி கேட்கிறார்கள். இருந்த தலைமையை என்னிடம் தாருங்கள் என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். சமஸ்டி இனி சரிவராது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இந்திய முறையிலான தீர்வை முன்வைத்து தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட உள்ளது, இந்திய முறையிலான தீர்வை தற்போது உள்ள நாட்டின் இரு பிரதான தலைவைர்களும் அறிந்தவர்கள். அவர்கள் அதனை ஏற்றவர்கள்.

இந்த நிலையில் குறித்த முறையை முன்னிலைப்படுத்தி நாம் போட்டியிட உள்ளோம். கிழக்கில் உள்ள பலருடன் பேசியுள்ளோம். அவர்களும் இணைந்த செயற்படுவதற்கு உள்ளனர். அதேபோன்று வடக்கிலும் அவ்வாறான கூட்டு ஒன்று உருவாக்கப்படும்.

நான் பகிரங்கமான அழைப்பினை விடுக்கின்றேன். தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற அத்தனை பேரும் மீட்டும் இணையுங்கள். எனக்கு வயது 87 ஆகியுள்ளது. இந்த நிலையில் பாரம்பரிய கட்சியினை பாதுகாப்பதற்கான சூழல் தற்போது எழுந்துள்ளது.

வெவ்வேறு காரணங்களை கூறி தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்த பிரிந்து சென்று தமிழரசு கட்சியில் இணைந்தவர்கள் இன்று விட்ட தவறுகளை உணர்கின்றீர்கள் என நம்புகின்றேன்.

தற்போது ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில்கொண்டு மீண்டும் இந்த கட்சியை பலம் மிக்க கட்சியாக செயற்படுத்த மீள இணையுமாறு அழைக்கின்றேன் – என்றார்.

https://newuthayan.com/தலைமையை-என்னிடம்-தாருங்க/

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்க மாட்டா.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

எனக்கு வயது 87 ஆகியுள்ளது

சிவனே என்று இருப்பதை விட்டு என்ன கூட்டு வேண்டிக்கிடக்கு.😂

இப்பத்தாண்டா தமிழனுக்கு விடிவு   பிறந்திருக்கு. இம்முறை உங்களுக்குத்தான் எங்கள் ஒட்டு ஐயா. இனி தமிழனுக்கு ஈழம் கிடைத்த மாதிரித்தான்.

ஆனந்தசங்கரி ஒரு வாலறுந்த நரி.   தமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் வழங்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்திருப்பது இந்த ஆண்டின் முக்கிய பகிடியாகும். திருவாளர் ஆனந்தசங்கரி அரசியலில் செல்லாக்காசாகி 16 ஆண்டுகள் கழிந்து விட்டன.  அவரது முதல் எதிரி அவரது வாய்!

மேலும் மக்கள் தலைமையை மாற்றச சொல்லி கேட்கிறார்கள். இருந்த தலைமையை என்னிடம் தாருங்கள் என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்கிறார். சமஸ்டி இனிச் சரிவராது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் என்பவர் அதே மூச்சில்  இந்திய முறையிலான தீர்வை தான் பெற்றுத் தருவேன் என்கிறார்.
இந்திய அரசியலமைப்பு முறை சமஷ்டி அரசியலமைப்பின் அம்சங்களைப் பேரளவு கொண்டதுதான் என்கிற உண்மை கூட சங்கரியாருக்குத்  தெரியாமல் இருக்கிறது. 

ஆனந்தசங்கரி தவிகூ  தலைவராக வந்தது ஒரு விபத்து.  திரு  மு. சிவசிதம்பரம் யூன் 2002 இல் மறைந்த போது அந்த இடத்துக்கு ஆனந்தசங்கரி தெரிவு செய்யப்பட்டார்.  தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கட்சியின் கொள்கைக்கு முரணாகச் செயற்படுகிறார்இ 2001ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கைக்கு எதிராகச் செயற்படுகிறார்இ  தமிழர்களின் அபிலாசைகளுக்கு முரணாகச்  செயற்படுகிறார் எனக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனையிட்டு கட்சிக்குள் காரசாரமான விவாதம் நடைபெற்றது. 

தமிழ் மக்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளைக் கண்டித்தும் விமர்சனம் செய்தும் தொடர்ச்சியாக அறிக்கை விட்டும் வருகிறார் என்றும் ஆனந்தசங்கரி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. வெளிநாட்டு இராசதந்திரிகளைச் சந்தித்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகிறார் என்றும் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் கிடையாது என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார் போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இருந்தும் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் கடுமையாக விமர்ச்சித்து வந்தார். வி.புலிகளை தமிழர்களது ஏகப் பிரதிநிதியாக அங்கீகரிக்க மறுத்து விட்டார். 

இதன் காரணமாக  ஆனந்தசங்கரிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒள்று  கொழும்பில் நொவெம்பர் 30- 2001  ஆம் திகதி நடந்த த.வி.கூ இன்   செயல்குழுக்  கூட்டத்தில்  கொண்டு வரப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு  ஆதரவாக  25 பேரும்  எதிர்த்து 11 பேரும் வாக்களித்தனர். ஆதரவாக வாக்களித்தவர்கள் மீது ஆனந்தசங்கரியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஆனால்  தவிகூ இன்  செயல் குழுவில்  பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிய சனநாயக முடிவைத்  தன்னை ஒரு சனநாயகவாதி - சனநாயக விழுமியங்களைப் பேணிக் காக்கும் கட்சியின் தலைவர்  என்று பிதற்றிக்  கொள்ளும் ஆனந்தசங்கரி ஏற்க மறுத்து விட்டார். 

மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காது ஆனந்தசங்கரி நீதிமன்றம் சென்றார்.  சனநாயகத்தை மதிப்பவர் - நேர்மையானவர் - நாணயமானவர்  என்றால்  அவர் தனது பதவியை உதறித்தள்ளிவிட்டு வெளியேறியிருப்பார். ஆனால் ஆனந்தசங்கரி அப்படிச் செய்யவில்லை. அவரது பதவி ஆசை அப்படிச் செய்ய விடவில்லை!
ஒரு புதிய தலைவரை தெரிவு செய்ய  தவிகூ இன் பொதுச் செயலாளர் சம்பந்தன்  அம்பாரை திருக்கோயிலில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதற்கு எதிராக ஆனந்தசங்கரி  நீதிமன்றம்  சென்று தடையுத்தரவு வாங்கினார்.

இதனை அடுத்து ஆனந்தசங்கரியோடு மல்லுக்கு நிற்க விரும்பாத த.வி.கூட்டணியினர் பழைய தமிழ் அரசுக் கட்சியை மீளமைத்தனர். அதன் பின்னர் அன்று தொடங்கி இன்றுவரை  ஆனந்தசங்கரி அரசியல் பாலைவனத்தில்   விடப்பட்டுள்ளார். போட்டியிட்ட எல்லாத் தேர்தல்களிலும் த.வி.கூ  மண்ணைக் கவ்வியுள்ளது. 2013  வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட ஆனந்தசங்கரி கட்டுக்காசை இழந்தார். 

இன்று த.வி.கூ ஆனந்தசங்கரியின்  வீட்டுச் சொத்துக்களில் ஒன்றா மாறிவிட்டது. அவர்தான் தலைவர் பொதுச் செயலாளர் பொருளாளர் எல்லாமே அவர்தான். 

இப்போது தமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் வழங்குமாறு  ஆனந்தசங்கரி புலம்புகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nakkeeran said:

ஆனந்தசங்கரி ஒரு வாலறுந்த நரி.  

 

Bildergebnis für வாலறுந்த நரி

நரிக்கு... வாலை  விட, வாய்தான்... முக்கியம். :grin:  😝

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.