Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்ரஸாக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும்

Featured Replies

மத்ரஸாக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும்.

மத்ரஸா பதிவு நடவடிக்கைகள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஊடாகவே மேற்கொள்ளவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நாட்டில உள்ள குர்ஆன் மத்ரஸாக்கனை பதிவுசெய்யும் நடவடிக்கைக்கு பொறுப்பாக ராணுவ அதிகாரி ஒருவரை நியமித்திருப்பது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளை மீளப் பதிவு செய்து முழுமையான மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நாம் அறிகிறோம். இருந்தபோதும் நாட்டிலுள்ள அனைத்து மத்ரஸாக்களும் அரபுக் கல்லூரிகளும் கலாசார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2015 க்கு முன்னர் மத்ரஸாக்கள் பதிவு செய்தல் மற்றும் அரபுக் கலாசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும், நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீமின் முயற்சியினால் பெரும்பாலான மத்ரஸாக்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில்இன்னும் பதிவுசெய்யப்படாத மத்ரஸாக்கள் இருப்பின் அவற்றை பதிவுசெய்து கொள்வதற்கான கால அவகாசத்தை அரசாங்கத்தால் வழங்க முடியும்.

இதனை தவிர்த்து அனைத்து மத்ரஸாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளையும் மீண்டும் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதுகால விரயத்தை வீணாக்குவதுடன் அரசுக்கு மேலும் செலவீனத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. அதனால் கடந்தகாலப் பதிவுகளை பேணுவதே சிறப்பானதாக அமையும்.
அத்துடன் மத்ரஸாக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது முஸ்விம் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/74609

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அரபுக்காரன் வந்து தீவிரவாதம் படிப்பிக்க முடியாதே...யு.என்.பீயை ஏமாற்றி செய்யிறதெல்லம் செய்தாயிற்று....இப்ப ஒன்றுமே செய்யேலாமல் கிடக்கு....இல்லையென்றால் வன்னியும் யாழ்ப்பாணமும் பறிபோயிருக்கும்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு வந்தால் இரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி. 

இந்த நிலை மாறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

மிகவும், சிறப்பான செய்தி. :)
நாங்கள், இதை வர வேர்(ற்)க்கின்றோம். 👓

12 hours ago, ampanai said:

அத்துடன் மத்ரஸாக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது முஸ்விம் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

பாம்பின் கால் பாம்பறியும் என்றதால இருக்கும்.

இப்படியான ஒருவர் இருந்தால்தான் அது மதரஸவா இல்லை வேறு ஏதும் சடடவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படும் இடமா எண்டு கண்டு பிடிக்கலாம்। மடியில் கனம் இல்லாவிடடாள் வழியில் பயப்பட தேவையில்லை। 

On 1/31/2020 at 6:11 PM, alvayan said:

ஏன் அரபுக்காரன் வந்து தீவிரவாதம் படிப்பிக்க முடியாதே...யு.என்.பீயை ஏமாற்றி செய்யிறதெல்லம் செய்தாயிற்று....இப்ப ஒன்றுமே செய்யேலாமல் கிடக்கு....இல்லையென்றால் வன்னியும் யாழ்ப்பாணமும் பறிபோயிருக்கும்..

இது தவறான ஊகம்... பல தமிழ் மக்கள் ஜ.தே.க காலத்தில் தான் வன்னியில் முஸ்லிம் குடியேற்றங்கள் நடந்ததாக நினைக்கின்றனர்..ஆனால் அது தவறு முஸ்லிம் குடியேற்றங்கள் கடந்த ராஜபக்‌ஷ காலத்தில் தான் நடந்தது. இன்னமும் தெளிவாக சொன்னால் நல்லாட்சி அரசாங்கம் வந்த படியால் தான் இந்த்ஹ முஸ்லிம் குடியேற்றங்கள்  தடுத்து நிறுத்தப்பட்டன; மஹிந்த காலதில் வடக்கின்    அடாவடி அமைச்சர்    அரசுடன் இருந்தபடியால் அவர் சட்ட விரோத குடியேற்றங்கள் நடத்திய போது அவரை மக்களால் எதிர்க்க முடியவில்லை; எதிர்த்தவர்களையும் தனது அதிகாரம் மூலம் அடாவடி அமைச்சர் அடக்கினார். உதாரணமாக மன்னார் குடியேற்றங்கள்,வில்பத்து குடியேற்றம்,பம்பைமடு வவுனியா குடியேற்றங்கள் எல்லாம் மகிந்தவின் காலத்தில் தான் நடந்தன. இந்த நேரத்தில் மன்னார் மாவட்ட நீதிபதி அச்சுற்த்தப்பட்டார்,மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்பும் ஒரு மத குரு என்றும் பாராமல் கேவலப்படுத்தப்பட்டார் ஆனால் வத்திக்கனின் தலையீட்டை அடுத்து அமைச்சர் கொஞ்சம் அடங்கினார்.அதே போல் வவுனியாவில் புற்று நோய் வைத்தியசாலை அமைய இருந்த இடத்தை குடியேற்றத்துக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்த இரண்டு அரச அதிகாரிகளை இடமாற்றம் செய்து மூன்றாவதாக ஒருத்தரை நியமித்து வெற்றி கண்டார் அமைச்சர்.

இதெல்லாம் நடந்தது மகிந்த்வின் ஆட்சி காலத்தில். ஆனால் மக்கள் வெளிப்படையாக இக்குடியேற்றங்களை கோத்தா ஆட்சி அதிகாரம் இழந்து  அரச வன்முறை ஓய்வுக்கு வந்த பின்னரே எதிர்க்க தொடங்கினர்.

இவர் மன்னாரை ஒரு வழி பன்னி விட்டு முல்லைத்தீவு மற்றும் வவுனியா,கிளினொச்சியில் கை வைக்க முயன்ற போது மக்கள் எது வித அச்சமும் இல்லாமல் இவர்களை எதிர்த்தார்கள் அதனால் இந்த பிரதேசங்கள் தப்பி பிழைத்தன....ஆனால் இவர்கள் ஓயவில்லை இப்பொழுது இவர்களது யுக்தி என்னவென்றால் தமிழரை வைத்து தமிழர் காணிகளை வாங்கி அங்கு குடியேற்றுவது.....இப்படி தான் சுன்னாகத்திலும்,அராலியிலும் இரண்டு குடியேற்றங்கள் வரப்போகின்றன.

23 hours ago, Dash said:

இது தவறான ஊகம்... பல தமிழ் மக்கள் ஜ.தே.க காலத்தில் தான் வன்னியில் முஸ்லிம் குடியேற்றங்கள் நடந்ததாக நினைக்கின்றனர்..ஆனால் அது தவறு முஸ்லிம் குடியேற்றங்கள் கடந்த ராஜபக்‌ஷ காலத்தில் தான் நடந்தது. இன்னமும் தெளிவாக சொன்னால் நல்லாட்சி அரசாங்கம் வந்த படியால் தான் இந்த்ஹ முஸ்லிம் குடியேற்றங்கள்  தடுத்து நிறுத்தப்பட்டன; மஹிந்த காலதில் வடக்கின்    அடாவடி அமைச்சர்    அரசுடன் இருந்தபடியால் அவர் சட்ட விரோத குடியேற்றங்கள் நடத்திய போது அவரை மக்களால் எதிர்க்க முடியவில்லை; எதிர்த்தவர்களையும் தனது அதிகாரம் மூலம் அடாவடி அமைச்சர் அடக்கினார். உதாரணமாக மன்னார் குடியேற்றங்கள்,வில்பத்து குடியேற்றம்,பம்பைமடு வவுனியா குடியேற்றங்கள் எல்லாம் மகிந்தவின் காலத்தில் தான் நடந்தன. இந்த நேரத்தில் மன்னார் மாவட்ட நீதிபதி அச்சுற்த்தப்பட்டார்,மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்பும் ஒரு மத குரு என்றும் பாராமல் கேவலப்படுத்தப்பட்டார் ஆனால் வத்திக்கனின் தலையீட்டை அடுத்து அமைச்சர் கொஞ்சம் அடங்கினார்.அதே போல் வவுனியாவில் புற்று நோய் வைத்தியசாலை அமைய இருந்த இடத்தை குடியேற்றத்துக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்த இரண்டு அரச அதிகாரிகளை இடமாற்றம் செய்து மூன்றாவதாக ஒருத்தரை நியமித்து வெற்றி கண்டார் அமைச்சர்.

இதெல்லாம் நடந்தது மகிந்த்வின் ஆட்சி காலத்தில். ஆனால் மக்கள் வெளிப்படையாக இக்குடியேற்றங்களை கோத்தா ஆட்சி அதிகாரம் இழந்து  அரச வன்முறை ஓய்வுக்கு வந்த பின்னரே எதிர்க்க தொடங்கினர்.

இவர் மன்னாரை ஒரு வழி பன்னி விட்டு முல்லைத்தீவு மற்றும் வவுனியா,கிளினொச்சியில் கை வைக்க முயன்ற போது மக்கள் எது வித அச்சமும் இல்லாமல் இவர்களை எதிர்த்தார்கள் அதனால் இந்த பிரதேசங்கள் தப்பி பிழைத்தன....ஆனால் இவர்கள் ஓயவில்லை இப்பொழுது இவர்களது யுக்தி என்னவென்றால் தமிழரை வைத்து தமிழர் காணிகளை வாங்கி அங்கு குடியேற்றுவது.....இப்படி தான் சுன்னாகத்திலும்,அராலியிலும் இரண்டு குடியேற்றங்கள் வரப்போகின்றன.

சரியாக பதிவிட்டிருக்கிறீர்கள்। குடியேற்றம்  மட்டுமல்ல , காணி கொள்ளையும் இதே காலத்தில்தான் நடந்தது।  ஷாப்பிங் பையுடன் போனவன் எல்லாம் இப்போது கோடீஸ்வரர்கள்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.