Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்

Featured Replies

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த கால விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முற்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.எனவே இது அந்த குற்றப்பத்திரிகைகளை மூடி வைக்கும் செயற்பாடாக உள்ளதாக கருதப்படுகிறது. என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.
qq.jpg

அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி தானே நியமித்த நீதிபதியின் முன் அவரே சென்று  சாட்சியம் வழங்கி அவரே தீர்ப்பு வழங்க முற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிபதிகளுக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். தான் தமிழ் மக்களின் எதிர் பார்ப்பு இந்த விடயத்தில் கூட ஐ.நா சபை உறுப்படியாக நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

எனவே இனி எதிர்வரும் காலங்களிலாவது  இலங்கை அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 30.140.1 தீர்மாணங்களில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்ட பின்னராவது  சரியான ஒரு நடவடிக்கையை எடுக்க ஐ.நா முயற்சிக்க வேண்டும்.

மேலும் உள்ளுர் விசாரணை என்பது எப்படி அமையும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாக அமையும். குற்றவாளிகளும் அவர்களே நீதிபதிகளும் அவர்களே என்ற ரீதியில் இருக்கும் இந்த அரசிடம் இருந்து ஒரு துளி நியாயத்தைக் கூட எதிர்பார்க்க முடியாது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம் பெற்ற தாக்குதலுக்கானசூத்திரதாரிகளை இன்னும் கண்டு பிடிக்கவில்லை அவை பற்றிய ஒழுங்கான அறிக்கை தயாரிக்கப்படவில்லை காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை இந்த அரசு கிடப்பில் போட்டு விட்டது.

மன்னார் மனிதப் புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் ஒழுங்காக பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.அந்த எலும்புக் கூடுகள் யாருடையது, எந்த காலத்துக்கு உரியது என்ற நம்பகமான அறிக்கையை வெளியிட இந்த அரசு தயங்குகிறது.

வடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். யுத்த காலத்தில் இராணுவப் பாதுகாப்பு எப்படி இருந்ததோ  அவ்வாறே அனைத்துப்பகுதிகளிலும் உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு தமிழ் மக்கள் வாக்கவில்லை என்று தமிழ் மக்களை பழிவாங்குகிறாரா? இவ்வாறான சோதனை நடவடிக்கைகளால் தமிழ் மக்களை அடி பணிய வைத்து விடலாம் என்று ஜனாதிபதி கணவு காண்கிறாரா? இவ்வாறான அடக்கு முறைகளை நேரடியாக கண்காணிப்பதற்கு ஐ.நா  அலுவலகம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்து பகுதிகளில் திறக்கப்பட வேண்டும்

அப்போது தான் தமிழ் மக்களின் ஜனநாயக வாழ்வுரிமை உரிதிப்படுத்தப்படும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/76581

  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தல் நெருங்க நெருங்க தானே இப்படியான அறிக்கைகள் வருகின்றன.  உலக நாடுகளை வளைத்துபோட்டு சிறிலங்கா இனவாத அரசுக்கு ஒரு பாடம் கற்பிப்பதை விட்டு விட்டு இப்போ குய்யோ முறையோ என நடிப்பது சுயநலம் அன்றி வேறொன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதைச் சொல்ல இவைக்கு 100 நாள் தேவைப்பட்டுள்ளது.

இவர்களும் சோதனை சாவடிகள் பெருகட்டும் என்று காத்திருந்த கணக்கா.. சரியா தேர்தல் வர மக்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். 

மக்களோ வாள் வெட்டு.. கஞ்சா.. உள்ளூர் காடைத்தனம்.. குறையும்.. என்று சோதனை சாவடிகளை இட்டு தமக்குத் தாமே தேற்றிக் கனகாலமாகி விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு தமிழ் மக்கள் வாக்கவில்லை என்று தமிழ் மக்களை பழிவாங்குகிறாரா? இவ்வாறான சோதனை நடவடிக்கைகளால் தமிழ் மக்களை அடி பணிய வைத்து விடலாம் என்று ஜனாதிபதி கணவு காண்கிறாரா?

ஈழத்து எம் ஜி ஆர் போவாராம், இராணுவம் நிலை கொண்டிருந்த இடத்தை விட்டு பின்தள்ளிப்போவார்களாம், அதை ஒரு சிலர் படம் பிடித்து போடுவார்களாம்.  எங்கள் மக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் ஒரே அரசியற் தலைவர் இவரே, என்று மக்கள் இவருக்கு வாக்களிப்பார்களாம்.  இல்லை.... தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இவர் சும்மா இருக்கமாட்டார், எங்களோடு பேசி தீர்த்துவிட்டுத்தான் மற்ற வேலை பார்ப்பார் என்று மத்தியிலிருந்து ஒரு கதை அடிபட்டுது. நானும் ஐயா தூங்காமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். அவர் இன்னும் தூங்கி எழும்பவில்லைபோல் இருக்கிறது. 

7 hours ago, ampanai said:

வடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். யுத்த காலத்தில் இராணுவப் பாதுகாப்பு எப்படி இருந்ததோ  அவ்வாறே அனைத்துப்பகுதிகளிலும் உள்ளது.

பல வாரங்களாக 2 அல்லது 3 இடங்களில் இறக்கப்பட்டு தமிழ் மக்கள் கஷ்டப்படுத்தப்படுகிறார்கள்.

டக்கி தன்ர காமாலைக் கண்ணுக்கு எந்த சோதனைச் சாவடியும் தென்படேலை என்டும் அப்பிடி இருந்திருந்தா தான் ஒருகாலை தூக்காமல் வந்திருக்க முடியாது என்டும் தன்ர விசுவாசத்தை வெளிப்படுத்தி இருக்கு.

அடிக்கடி தாங்களே தமிழர்ற்ற ஏக பிரதிநிதிகள் கூறும் சம்பந்தன் சுமந்திரன் கோஷ்டி இதைப்பற்றி மூச்சு கூட வெளிவிடேல்லை. அவை குகதாசன் குடுத்த கனடா பணத்தை எண்ணி முடியேல்லை போல இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு தமிழ் மக்கள் வாக்கவில்லை என்று தமிழ் மக்களை பழிவாங்குகிறாரா? இவ்வாறான சோதனை நடவடிக்கைகளால் தமிழ் மக்களை அடி பணிய வைத்து விடலாம் என்று ஜனாதிபதி கணவு காண்கிறாரா? இவ்வாறான அடக்கு முறைகளை நேரடியாக கண்காணிப்பதற்கு ஐ.நா  அலுவலகம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்து பகுதிகளில் திறக்கப்பட வேண்டும்

உதுக்குத்தான் முன்னாடியே கத்தினோம் , கூத்தமைப்பிற்கு குத்தி ஒன்றும் ஆகப்போவதில்லை 
கோத்தா அல்லது அவன் ஆதரவு கட்சிக்கு  குத்தி நிம்மதியாகவேனும் சீவியுங்கள் என்று .
உங்கள் தமிழ் தேசிய கொள்கைகளை பார்த்து கண்ணீர் விட்ட புலம்பெயர்ஸ் ஒருவரும் உங்களுடன் வந்து உங்களுடன் சேர்ந்து சோதனைச்சாவடிகளில் இறங்கி ஏறப்போவதில்லை . இதுவும் ஒருவகையில் நல்லதுதான் 
சோதனைச்சாவடிகளில் வைத்து காய்ச்சி எடுத்தால் சிலவேளைகளில்  உங்கள் மர மண்டைகளில் இருந்து கூத்தமைப்பு மாய்மாலம்  வெளியேறி தெளிவு பிறக்கலாம்.  அவனே ஐ நாவுக்கு செருப்பால் அடித்தது போல் இணை அனுசரணையில் இருந்து வெளியேறுகிறோம் என்று சொல்லிப்போட்டு கெத்தாக வர்ரான் 
இங்கே சிவ் மோகன் மாமா ஐநா கடை திறந்து யாவாரம் பார்க்கப் போறாராம்  

Edited by அக்னியஷ்த்ரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.