Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைலாசா நாட்டின் ஜனாதிபதியை தொடர்பு கொள்வது எவ்வாறு?

Featured Replies

நீதிபதிக்கு வந்த சந்தேகம்!

'கைலாசா நாட்டின் ஜனாதிபதி நித்யானந்தாவை எவ்வாறு தொடர்பு கொள்வது?" என உயர்நீதிமன்ற நீதிபதி கிண்டலாகக் கேட்டார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார் நித்யானந்தா. அப்போது அவதூறு கருத்துகளை தெரிவித்ததையடுத்து அவர் மீது கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2011 ஆம் ஆண்டு கொடுத்த பேட்டிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் தன் மீது அர்ஜுன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்.இந்த அவதூறு வழக்கிற்காகவே கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனுவை கடந்த 2014-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி நித்யானந்தாவுக்கு விலக்கு அளித்திருந்தது.

பல வருடங்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர், தான் இவ்வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக கூறினார். மற்றொரு வழக்கறிஞர் நித்யானந்தா சார்பில் ஆஜராக உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நீதிபதி தண்டபாணி "கைலாசா என்ற தனிநாட்டை நித்யானந்தா உருவாக்கி விட்டதாக கேள்விப்பட்டேன். ஒரு நாட்டின் ஜனாதிபதியை எப்படி தொடர்பு கொள்வீர்கள்?" என கிண்டலாக கேட்டார். இந்த வழக்கில் நித்யானந்தா சார்பில் யாரும் ஆஜராகாததை அடுத்து நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த நித்யானந்தா வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டார்.

எனினும் அவர் அவ்வப்போது 'லைவில்' தோன்றி பிரசங்கம் செய்து வருகிறார். இந்த நிலையில் கைலாசா என்ற நாட்டை விலைக்கு வாங்கி விட்டதாகவும் அங்கு குடியேற கடவுச்சீட்டுகளை தயார் செய்துள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நித்யானந்தார். இன்டர்போல் பொலிஸார் இவரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.thinakaran.lk/2020/03/03/கட்டுரைகள்/49063/கைலாசா-நாட்டின்-ஜனாதிபதியை-தொடர்பு-கொள்வது-எவ்வாறு

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ampanai said:

நீதிபதிக்கு வந்த சந்தேகம்!

'கைலாசா நாட்டின் ஜனாதிபதி நித்யானந்தாவை எவ்வாறு தொடர்பு கொள்வது?" என உயர்நீதிமன்ற நீதிபதி கிண்டலாகக் கேட்டார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார் நித்யானந்தா. அப்போது அவதூறு கருத்துகளை தெரிவித்ததையடுத்து அவர் மீது கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2011 ஆம் ஆண்டு கொடுத்த பேட்டிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் தன் மீது அர்ஜுன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்.இந்த அவதூறு வழக்கிற்காகவே கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனுவை கடந்த 2014-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி நித்யானந்தாவுக்கு விலக்கு அளித்திருந்தது.

பல வருடங்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர், தான் இவ்வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக கூறினார். மற்றொரு வழக்கறிஞர் நித்யானந்தா சார்பில் ஆஜராக உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நீதிபதி தண்டபாணி "கைலாசா என்ற தனிநாட்டை நித்யானந்தா உருவாக்கி விட்டதாக கேள்விப்பட்டேன். ஒரு நாட்டின் ஜனாதிபதியை எப்படி தொடர்பு கொள்வீர்கள்?" என கிண்டலாக கேட்டார். இந்த வழக்கில் நித்யானந்தா சார்பில் யாரும் ஆஜராகாததை அடுத்து நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த நித்யானந்தா வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டார்.

எனினும் அவர் அவ்வப்போது 'லைவில்' தோன்றி பிரசங்கம் செய்து வருகிறார். இந்த நிலையில் கைலாசா என்ற நாட்டை விலைக்கு வாங்கி விட்டதாகவும் அங்கு குடியேற கடவுச்சீட்டுகளை தயார் செய்துள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நித்யானந்தார். இன்டர்போல் பொலிஸார் இவரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.thinakaran.lk/2020/03/03/கட்டுரைகள்/49063/கைலாசா-நாட்டின்-ஜனாதிபதியை-தொடர்பு-கொள்வது-எவ்வாறு

நித்தியின் காமெடியை 
இவர்கள் வென்றுவிட்டார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

அட ஆர்குத்தியாவது அரிசியாகட்டும்....! தமிழனுக்கென்று ஒரு தனிநாடு அமையட்டும் என்றால் விடமாட்டாங்கள் போலிருக்கே....!!😩  கைலாசவாசா நீயே துணை.!!! :100_pray: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Paanch said:

அட ஆர்குத்தியாவது அரிசியாகட்டும்....! தமிழனுக்கென்று ஒரு தனிநாடு அமையட்டும் என்றால் விடமாட்டாங்கள் போலிருக்கே....!!😩  கைலாசவாசா நீயே துணை.!!! :100_pray: 

Bildergebnis für swami nithyananda gif

ஓம் நித்தியானந்தம்.

Bildergebnis für swami nithyananda gif

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா..! உங்கள பாக்குரப்ப என் ரத்தமெல்லாம் கொதிக்குது... என்னை அறியாமல் எனக்குள்ள ஒரு வெறி வருது..நானும் உங்கள போல பெரிய சாமியாரா ஆவனும்னு ஒரு வெறி...

57 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für swami nithyananda gif

ஓம் நித்தியானந்தம்.

Bildergebnis für swami nithyananda gif

 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மன்னா..! உங்கள பாக்குரப்ப என் ரத்தமெல்லாம் கொதிக்குது... என்னை அறியாமல் எனக்குள்ள ஒரு வெறி வருது..நானும் உங்கள போல பெரிய சாமியாரா ஆவனும்னு ஒரு வெறி...

 

அவர் மன்னர் அல்ல. மாமா மன்னர்

  • கருத்துக்கள உறவுகள்

d958d5c082d022963fcd804427028357.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.