Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாதான் காரணம்!’ - பிரிட்டிஷ் எழுத்தாளர் #coronavirus

Featured Replies

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் வுகான் நகரத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதமே மர்மக்காய்ச்சல் இருப்பதாக அங்குள்ள மருத்துவர் ஒருவர் சக மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். வுகானின் இறைச்சிக் கூடத்துக்கு அருகே வசிப்பவர்களுக்கு நான்குபேருக்கு ஒரேவிதமான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, நோயாளிகளைக் கையாளும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சமூகஊடகம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 

இதையறிந்த சீன அரசாங்கம் அந்த மருத்துவரை எச்சரித்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மூச்சுவிட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என சீன அரசு நினைத்துள்ளது. ஆனால், ஜனவரி மாதம் சீனா முழுவதும் இந்த நோய் பரவத் தொடங்கியது. மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்தனர். நிலைமை கையை மீறிச் சென்றதையடுத்து சீன அரசு மவுனம் கலைத்தது. மர்மக் காய்ச்சல் குறித்து எச்சரித்த மருத்துவர் ஜனவரி மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.
 
உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். பல நகரங்கள் முடங்கியுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் உலகம் சிக்கியதற்கு சீன அரசும் அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் காரணம் என பிரிட்டிஷ் எழுத்தாளரும் நகைச்சுவை கலைஞருமான பாட் கான்டெல் (Pat Condell) விமர்சித்துள்ளார்.
 
இதுகுறித்து யூடியூபில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``வுகான் நகரத்தில்தான் இந்த வைரஸ், முதன்முதலில் தோன்றியது. ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் இந்த விவகாரத்தை திறம்பட கையாண்டிருக்க வேண்டும். சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இந்த விவகாரத்தை மூடி மறைத்துவிட்டது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

 

இந்த வைரஸ் தொடர்பாக பேசியவர்களை எல்லாம் சீன அரசு கைது செய்தது. சீன அரசு வெளியில் இருந்து கிடைக்கும் உதவிகளை மறுத்துவிட்டது. அவர்கள் மக்களின் உயிர்களைவிட தங்களது முகத்தைக் காத்துக்கொள்ளத்தான் உறுதியாக இருந்தனர். உலகில் ஏற்படும் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிதான் நேரடி காரணம்.

உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவே இப்போது நெருக்கடி நிலையில் உள்ளது. சீன அதிபர் பொறுப்புடன் செயல்படவில்லை. வுகான் நகரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் அவர் எதையும் செய்யவில்லை. மனித வாழ்க்கையைவிட முக்கியமான வேறு விவகாரங்களில் அவர் பிஸியாக இருந்திருக்கலாம் யாருக்குத் தெரியும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதற்குக் காரணம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிதான் என உலக நாடுகளில் இருக்கும் மக்களுக்குத் தெரியும்.

இதை வுகான் வைரஸ் அல்லது ட்ரம்ப் சொல்வது போல் சீனா வைரஸ் என்றுதான் அழைக்க வேண்டும். ஒரு விஷயத்தை அதன் சரியான பெயரில் அழைப்பதுதான் முக்கியம் என கான்பியூசிஸ் கூறுகிறார். இந்த விவகாரத்தை மறைத்தால் உலகமே முடங்கிவிடும் எனத் தெரிந்தும் மறைத்துள்ளனர். அவர்கள் எவ்வளவு பொறுப்பற்றவர்களாவும், நேர்மையற்றவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் உலகின் பார்வையில் சீனாவைத் தலைகுனிய வைத்துவிட்டார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

https://www.vikatan.com/health/international/chinese-communist-party-is-responsible-for-every-death-says-pat-condell?artfrm=v3

  • தொடங்கியவர்

Tedros Adhanom Ghebreyesus - இவரை சீன அரசு பல மில்லியன்கள் கொடுத்து தனது சட்டை பைக்குள் வைத்துள்ளதாகவும் சிலர் குற்றம் சாட்டுகினறனர். 

Tedros: The face of the global response to coronavirus pandemic

  • தொடங்கியவர்

 

மிகவும் ஒடுங்கிய நோக்குடைய உண்மைக்குப் புறம்பான ஒரு பார்வை. அவரிடம் ஏற்கனவேயுள்ள சீனவெறுப்பை உரமூட்ட இதனை ஒரு சந்தர்ப்பமாக பாவிக்கின்றார்.

2 hours ago, ampanai said:

 

 

இவருக்கு  கொரோனாவை பற்றிய அக்கறையை விட  சீன பொதுவுடமை  கட்சியை  குறை கூறுவதே முக்கியமாக உள்ளது..  மேற்குலக நாடுகளால் சமாளிக்க முடியாதபோது சீனா மீது பழியை தூக்கிப்போடுவது தவிர்க்க முடியாமல் நடக்கும். அமரிக்காவில் நெருக்கடி அதிகமாக  டிரம் சீன வைரஸ் என்கின்றார்.  சீனா போல் இவர்களால் நெருக்கடி நிலையை  சமாளிக்கவும் முடியாமல் உள்ளது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் வுகான் நகரத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதமே மர்மக்காய்ச்சல் இருப்பதாக அங்குள்ள மருத்துவர் ஒருவர் சக மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். வுகானின் இறைச்சிக் கூடத்துக்கு அருகே வசிப்பவர்களுக்கு நான்குபேருக்கு ஒரேவிதமான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, நோயாளிகளைக் கையாளும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சமூகஊடகம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 

இதையறிந்த சீன அரசாங்கம் அந்த மருத்துவரை எச்சரித்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மூச்சுவிட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என சீன அரசு நினைத்துள்ளது. ஆனால், ஜனவரி மாதம் சீனா முழுவதும் இந்த நோய் பரவத் தொடங்கியது. மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்தனர். நிலைமை கையை மீறிச் சென்றதையடுத்து சீன அரசு மவுனம் கலைத்தது. மர்மக் காய்ச்சல் குறித்து எச்சரித்த மருத்துவர் ஜனவரி மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.
 
உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். பல நகரங்கள் முடங்கியுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் உலகம் சிக்கியதற்கு சீன அரசும் அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் காரணம் என பிரிட்டிஷ் எழுத்தாளரும் நகைச்சுவை கலைஞருமான பாட் கான்டெல் (Pat Condell) விமர்சித்துள்ளார்.
 
இதுகுறித்து யூடியூபில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``வுகான் நகரத்தில்தான் இந்த வைரஸ், முதன்முதலில் தோன்றியது. ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் இந்த விவகாரத்தை திறம்பட கையாண்டிருக்க வேண்டும். சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இந்த விவகாரத்தை மூடி மறைத்துவிட்டது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

 

இந்த வைரஸ் தொடர்பாக பேசியவர்களை எல்லாம் சீன அரசு கைது செய்தது. சீன அரசு வெளியில் இருந்து கிடைக்கும் உதவிகளை மறுத்துவிட்டது. அவர்கள் மக்களின் உயிர்களைவிட தங்களது முகத்தைக் காத்துக்கொள்ளத்தான் உறுதியாக இருந்தனர். உலகில் ஏற்படும் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிதான் நேரடி காரணம்.

உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவே இப்போது நெருக்கடி நிலையில் உள்ளது. சீன அதிபர் பொறுப்புடன் செயல்படவில்லை. வுகான் நகரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் அவர் எதையும் செய்யவில்லை. மனித வாழ்க்கையைவிட முக்கியமான வேறு விவகாரங்களில் அவர் பிஸியாக இருந்திருக்கலாம் யாருக்குத் தெரியும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதற்குக் காரணம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிதான் என உலக நாடுகளில் இருக்கும் மக்களுக்குத் தெரியும்.

இதை வுகான் வைரஸ் அல்லது ட்ரம்ப் சொல்வது போல் சீனா வைரஸ் என்றுதான் அழைக்க வேண்டும். ஒரு விஷயத்தை அதன் சரியான பெயரில் அழைப்பதுதான் முக்கியம் என கான்பியூசிஸ் கூறுகிறார். இந்த விவகாரத்தை மறைத்தால் உலகமே முடங்கிவிடும் எனத் தெரிந்தும் மறைத்துள்ளனர். அவர்கள் எவ்வளவு பொறுப்பற்றவர்களாவும், நேர்மையற்றவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் உலகின் பார்வையில் சீனாவைத் தலைகுனிய வைத்துவிட்டார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

https://www.vikatan.com/health/international/chinese-communist-party-is-responsible-for-every-death-says-pat-condell?artfrm=v3

நம்பகமற்ற தகவல்களைக் கொண்டு கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

2 hours ago, manimaran said:

மிகவும் ஒடுங்கிய நோக்குடைய உண்மைக்குப் புறம்பான ஒரு பார்வை. அவரிடம் ஏற்கனவேயுள்ள சீனவெறுப்பை உரமூட்ட இதனை ஒரு சந்தர்ப்பமாக பாவிக்கின்றார்.

சரியான கருத்து 👍

4 hours ago, ampanai said:

Tedros Adhanom Ghebreyesus - இவரை சீன அரசு பல மில்லியன்கள் கொடுத்து தனது சட்டை பைக்குள் வைத்துள்ளதாகவும் சிலர் குற்றம் சாட்டுகினறனர். 

Tedros: The face of the global response to coronavirus pandemic

நானும் இவரைக் குற்றம் சாட்டுகிறேன் சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கவில்லை என்று.

1 hour ago, சண்டமாருதன் said:

 

இவருக்கு  கொரோனாவை பற்றிய அக்கறையை விட  சீன பொதுவுடமை  கட்சியை  குறை கூறுவதே முக்கியமாக உள்ளது..  மேற்குலக நாடுகளால் சமாளிக்க முடியாதபோது சீனா மீது பழியை தூக்கிப்போடுவது தவிர்க்க முடியாமல் நடக்கும். அமரிக்காவில் நெருக்கடி அதிகமாக  டிரம் சீன வைரஸ் என்கின்றார்.  சீனா போல் இவர்களால் நெருக்கடி நிலையை  சமாளிக்கவும் முடியாமல் உள்ளது. 

 

 

இவர்கள் தங்கள் தோல்விகண்ட  பொருளாதார சமூக அரசியல் கொள்கைகளை மறைப்பதற்கு சீனா ஒரு துருப்புச் சீட்டு அவ்வளவும்தான்.

  • தொடங்கியவர்

இங்கே, இப்படி, இதில் இருந்து தான் இந்த கோவிட் 19 ஆரம்பித்தது என யாரும் கூற முடியாத நிலை. ஆனால், எல்லோரும், சீன அரசு உட்பட இது சீனாவில் தான் ஆரம்பித்தது என்கிறோம். 

எங்கே, எப்படி, எப்பொழுது இந்த வைரஸ் தனது தொற்றை ஆரம்பித்தது என அறிந்தால், அது ஒரு தீர்விற்கும், குறைப்பிற்கும் உதவி இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இங்கே, இப்படி, இதில் இருந்து தான் இந்த கோவிட் 19 ஆரம்பித்தது என யாரும் கூற முடியாத நிலை. ஆனால், எல்லோரும், சீன அரசு உட்பட இது சீனாவில் தான் ஆரம்பித்தது என்கிறோம். 

எங்கே, எப்படி, எப்பொழுது இந்த வைரஸ் தனது தொற்றை ஆரம்பித்தது என அறிந்தால், அது ஒரு தீர்விற்கும், குறைப்பிற்கும் உதவி இருக்கலாம். 

ஆனால் சீனா, கொறோனா வைரஸ் அமெரிக்க இராணுவத்தால் வுகான் மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்டதாக கூறியுள்ளதே ?🤔

  • தொடங்கியவர்
11 minutes ago, Kapithan said:

ஆனால் சீனா, கொறோனா வைரஸ் அமெரிக்க இராணுவத்தால் வுகான் மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்டதாக கூறியுள்ளதே ?🤔

இத்தாலியிலும், ஸ்பெயினில் உயிர் இழப்புக்கள் சீனாவை விட அதிகரித்துள்ளன. 

அடுத்த இரு வாரங்களில். அமெரிக்காவும் சீனாவை முந்தி விடலாம். 

எனவே, நான் நினைக்கவில்லை அமெரிக்க நாடு தான் கோவிட்டின் பின்னால் உள்ளது என்பதை. 
அத்துடன், அமெரிக்க பொருளாதாரம் பலத்த சரிவில் கூட உள்ளது, இந்த கோவிட்டால். அதுவரை, அமெரிக்க பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ampanai said:

இத்தாலியிலும், ஸ்பெயினில் உயிர் இழப்புக்கள் சீனாவை விட அதிகரித்துள்ளன. 

அடுத்த இரு வாரங்களில். அமெரிக்காவும் சீனாவை முந்தி விடலாம். 

எனவே, நான் நினைக்கவில்லை அமெரிக்க நாடு தான் கோவிட்டின் பின்னால் உள்ளது என்பதை. 
அத்துடன், அமெரிக்க பொருளாதாரம் பலத்த சரிவில் கூட உள்ளது, இந்த கோவிட்டால். அதுவரை, அமெரிக்க பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. 

நீங்கள் மறுத்த மாதிரியே Mr. Pompeoவும் மறுத்துள்ளார். 😀

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் அமெரிக்க செனற் சபையில் நடைபெற்ற நிகள்வு ஒன்றில் கொறோனா தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அக் காணோளியை நான் பார்த்திருந்தேன். 

மேற்கின் பொருளாதார வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல  என்பது என் தனிப்பட்ட கருத்து.

  • தொடங்கியவர்
2 minutes ago, Kapithan said:

நீங்கள் மறுத்த மாதிரியே Mr. Pompeoவும் மறுத்துள்ளார். 😀

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் அமெரிக்க செனற் சபையில் நடைபெற்ற நிகள்வு ஒன்றில் கொறோனா தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அக் காணோளியை நான் பார்த்திருந்தேன்.

அமெரிக்கர்கள் சீன அரசிற்கு அனுப்பியது அவர்களுக்கு எதிராக பாய்ந்திருக்கலாம் என்பது ஏற்புடையது. 

3 minutes ago, Kapithan said:

மேற்கின் பொருளாதார வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல  என்பது என் தனிப்பட்ட கருத்து.

வளர்ந்த பொருளாதார நாடுகள் 1-3 வீதம் வளருவது ஆரோக்கியமானது. அதுவும், பணவீக்கத்திற்கு மேலாக வளரும் பொழுது செல்வமும் வளரும். ஆனால், மேற்குலக தந்து உற்பத்தி வலுவை இழந்தது, குறிப்பாக சீனாவிடம் இழந்தது பெரிய இக்கட்டான நிலையில் அவர்களை இன்று வைத்துள்ளது. 

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்

'அமெரிக்க வீரர் தான் கொரோனாவை பரப்பினார்': சீனா மீண்டும் குற்றச்சாட்டு

'கொரோனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள வனவிலங்குகளின் இறைச்சி விற்கும் சந்தையில் இருந்துதான் பரவியது' என, சீனாவின் மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், 'அமெரிக்க ராணுவ வீரர்கள் தான் வூஹானில் கொரோனா வைரசை பரப்பினர்' என, சீன சுகாதாரத் துறை அமெரிக்கா மீது குற்றம் சுமத்தியது.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், இந்த வைரசை 'சீன வைரஸ்' எனக் குறிப்பிட்டார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.'கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது சீனாவில் தானே தவிர, வைரஸ் உருவானது சீனாவில்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என, சீன அரசு தெரிவித்தது. இந்நிலையில் சீன அரசின் ஆங்கில நாளிதழான 'குளோபல் டைம்ஸ்' இந்த வைரஸ் அமெரிக்காவின் ராணுவ ஆய்வகத்தில் உருவானது எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது.

அந்தக் கட்டுரையை எழுதிய ஜார்ஜ் வெப், 'கொரோனா வைரஸ் அமெரிக்காவின் ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்., மாதம் ஹூபே மாகாணத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. வூஹான் நகரில் அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர் ஒருவரால் பரப்பப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

வைரசுக்கும் சைக்கிள் பந்தய வீரருக்கும் என்ன தொடர்பு என்பதையோ, பரப்பியதற்கான ஆதாரத்தையோ அந்தச் செய்தியில் விளக்கவில்லை. இதனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சீனா தெரிவித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது. இருந்தும், சீனாவில் இருந்து தான், இந்த வைரஸ் உருவானது என்பதற்கான ஆதாரத்தை இதுவரை அமெரிக்கா காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று (27ம் தேதி), 'கடந்த மாதங்களில், கொரோனா விவகாரத்தில், டிரம்பும் ஒரு சில அமெரிக்க அரசியல்வாதிகளும் சீனா மீது பழி சுமத்தும் வகையிலும், இனவெறியை வெளிப்படுத்தும் வகையிலும் பேசி வந்தனர். ஆனால், உண்மையை சீனா கண்டுபிடித்தவுடன், 'சீன வைரஸ் எனக் குறிப்பிட மாட்டேன்' என, மார்ச் 24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியளித்துள்ளார்' என, குளோபல் டைம்ஸ் நாளிதழ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து, மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2510510

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.