Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு

 

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்கமுடியும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.
பதிவு: ஏப்ரல் 09,  2020 04:45 AM
சென்னை, 
 
சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 14 லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேரியா காய்ச்சல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு வழங்கினால் நல்ல பலனை கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்பட சில மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்த
 
இந்தநிலையில் ஏற்கனவே ஆர்டர் கொடுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம், டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. கொரோனா வைரசுக்கு முடிவு கட்டும் மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் கருதப்படுவதால், தற்போது அதற்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது.
 
உலக அளவில் வினியோகம் செய்யப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தில், சுமார் 70 சதவீதம் இந்தியாதான் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 40 டன் அளவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறு உற்பத்தி செய்யப்படுகிறது. இது 200 மில்லி கிராம் அளவிலான 20 கோடி மாத்திரைகளை தயாரிக்க உதவுகிறது. குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின், மலேரியா, முடக்குவாதம், லூபஸ் உள்ளிட்ட சில நோய்களுக்கான எதிர்ப்பு வைரசாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
கொரோனா தாக்குதலுக்குள்ளான அதிக ஆபத்து உள்ளவர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள், கொரோனா வைரஸ் சந்தேகத்துக்கு இடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பராமரிப்பில் ஈடுபடுபவர்கள், ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியவர்களுடன் வீட்டு தொடர்பில் உள்ளவர்கள் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.
 
இந்தியாவை பொறுத்தமட்டில் இப்கா ஆய்வகங்கள், சைடஸ் கேடிலா மற்றும் வால்லஸ் பார்மெட்டிக்கல்ஸ் ஆகிய 3 மருந்து கம்பெனிகள் தான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. கொரோனாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இப்கா ஆய்வகங்கள் மற்றும் சைடஸ் கேடிலா ஆகிய மருந்து கம்பெனிகளிடம் 10 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
 
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பில் இப்கா ஆய்வகங்கள் நிறுவனம் சர்வதேச அளவில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முறைப்படி 14 மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அந்தவகையில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆர்டர் செய்துள்ள மாத்திரைகளை வைத்து பார்த்தால் சுமார் 71 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

எதுக்காக அமெரிக்கா, இந்தியாவின் கழுத்தினைப் பிடித்து மருந்தை வாங்குகின்றது என்று பல இந்தியர்களுக்கே குழப்பம்.

மருந்தியல் துறை குறித்த விளப்பம் இருந்தால் இதனை புரிந்து கொள்ள முடியும்.

மேலை நாடுகளில், ஒரு மருந்து தொடர்பான ஆய்வுகள் மிகவும் ஒழுங்கு படுத்தப்பட்டு உள்ளன. 

பரிசோதனை கூட கான்செப்ட் வெற்றி என்றால், மிருகங்களில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். அது வெற்றி என்றால் மட்டுமே மனிதரில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். இந்த அனுமதி பெற மிக கடுமையான, highly regularise விதிமுறைகள் உண்டு. அவசரமாக செய்து பெற முடியாது.

இவர்கள் மருந்து தயாரித்து வெளியே விட 18 தொடக்கம் 24 மாதங்கள் ஆகலாம் என்று சொல்லி விட்டனர். அதுக்குள் கோரோனோ சன்னதம் ஆடி முடித்து, உருமாறி வேறு கோலமெடுத்திருக்கும்.

இந்தியா போன்ற நாடுகள் மருந்தியல் துறையில் மிக வேகமாக முன்னேறி வர காரணம் என்னவென்றால் அங்கே மிருகங்களில் பரிசோதனை என்பது பெயரளவில் தான் உண்டு.

காரணம் மருந்துக்கே பணம் இல்லாத ஏழைகளுக்கு, இந்த மருந்துகளை செலுத்தி பரிசோதனை செய்து பார்த்துவிடுகின்றனர். ஆகவே விரைவாக மருந்து சந்தைக்கு வருகின்றது.

இலங்கைக்கும் இந்த வகை மருந்து போயுள்ளது.

இந்த நிறுவனங்கள் செலவு செய்வதால், ஏழைகளுக்கு மருந்து செலவு இல்லை. சிலவேளை பணமும் கிடைக்கும் என்பதால், அவர்களும் கையெழுத்தினை போட்டு விட்டு இசைந்து போகின்றனர். அவர்களுக்கும் வேறு வழி இல்லை என்பதே நிதர்சனம். 

இத்தகைய வழியில் பரிசோதனை செய்யப்பட்ட மருந்து குறித்த விபரம் அறிந்தே, பெரும் சிக்கலில் உள்ள அமெரிக்காவின் ஜனாதிபதி, இந்தியாவின் கழுத்தினை பிடித்து தனக்கு தருமாறு கேட்டு இருக்கிறார்.

மேலே உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுப்பு மிக முக்கியமானது. (certified)

இது இல்லாமல் அமெரிக்கா அந்த மருந்தினை இறக்குமதி செய்து அமெரிக்காவில் பயன்படுத்த முடியாது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

எதுக்காக அமெரிக்கா, இந்தியாவின் கழுத்தினைப் பிடித்து மருந்தை வாங்குகின்றது என்று பல இந்தியர்களுக்கே குழப்பம்.

மருந்தியல் துறை குறித்த விளப்பம் இருந்தால் இதனை புரிந்து கொள்ள முடியும்.

மேலை நாடுகளில், ஒரு மருந்து தொடர்பான ஆய்வுகள் மிகவும் ஒழுங்கு படுத்தப்பட்டு உள்ளன. 

பரிசோதனை கூட கான்செப்ட் வெற்றி என்றால், மிருகங்களில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். அது வெற்றி என்றால் மட்டுமே மனிதரில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். இந்த அனுமதி பெற மிக கடுமையான, highly regularise விதிமுறைகள் உண்டு. அவசரமாக செய்து பெற முடியாது.

இவர்கள் மருந்து தயாரித்து வெளியே விட 18 தொடக்கம் 24 மாதங்கள் ஆகலாம் என்று சொல்லி விட்டனர். அதுக்குள் கோரோனோ சன்னதம் ஆடி முடித்து, உருமாறி வேறு கோலமெடுத்திருக்கும்.

இந்தியா போன்ற நாடுகள் மருந்தியல் துறையில் மிக வேகமாக முன்னேறி வர காரணம் என்னவென்றால் அங்கே மிருகங்களில் பரிசோதனை என்பது பெயரளவில் தான் உண்டு.

காரணம் மருந்துக்கே பணம் இல்லாத ஏழைகளுக்கு, இந்த மருந்துகளை செலுத்தி பரிசோதனை செய்து பார்த்துவிடுகின்றனர். ஆகவே விரைவாக மருந்து சந்தைக்கு வருகின்றது.

இலங்கைக்கும் இந்த வகை மருந்து போயுள்ளது.

இந்த நிறுவனங்கள் செலவு செய்வதால், ஏழைகளுக்கு மருந்து செலவு இல்லை. சிலவேளை பணமும் கிடைக்கும் என்பதால், அவர்களும் கையெழுத்தினை போட்டு விட்டு இசைந்து போகின்றனர். அவர்களுக்கும் வேறு வழி இல்லை என்பதே நிதர்சனம். 

இத்தகைய வழியில் பரிசோதனை செய்யப்பட்ட மருந்து குறித்த விபரம் அறிந்தே, பெரும் சிக்கலில் உள்ள அமெரிக்காவின் ஜனாதிபதி, இந்தியாவின் கழுத்தினை பிடித்து தனக்கு தருமாறு கேட்டு இருக்கிறார்.

மேலே உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுப்பு மிக முக்கியமானது. (certified)

இது இல்லாமல் அமெரிக்கா அந்த மருந்தினை இறக்குமதி செய்து அமெரிக்காவில் பயன்படுத்த முடியாது.

நன்றி விளக்கத்துக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, Nathamuni said:

இந்தியா போன்ற நாடுகள் மருந்தியல் துறையில் மிக வேகமாக முன்னேறி வர காரணம் என்னவென்றால் அங்கே மிருகங்களில் பரிசோதனை என்பது பெயரளவில் தான் உண்டு.

இன்னொரு வருத்தத்திற்கான மருந்து கோரோனா நோய்க்கும் சரி வருமேன உத்தியோகபூர்வ மான ஆதாரங்கள் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

இன்னொரு வருத்தத்திற்கான மருந்து கோரோனா நோய்க்கும் சரி வருமேன உத்தியோகபூர்வ மான ஆதாரங்கள் உண்டா?

இந்த மருந்தை சீன மருத்துவர்கள் வெற்றிகரமாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை இதுபற்றி உலகறிய முதல் ஜப்பானிய விஞ்ஞான சஞ்சிகையில் சில வாரங்களுக்கு முதல் படித்தேன். Breakthrough (வெற்றிகரமான கண்டுபிடிப்பு) என்ற பிரிவில் மிகக்குறைவான தகவல்களுடன் இந்த விபரம் வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து தென் கொரியாவிலும் தாய்வானிலும் இந்த மருந்து பயன்படுத்தப் படுவதாக இவ்வாறான மருத்துவத்துறை நிபுணரான நண்பர் ஒருவர் தகவல் அனுப்பி இருந்தார். அவர் களத்தில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடும் வைத்தியர்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இன்னொரு வருத்தத்திற்கான மருந்து கோரோனா நோய்க்கும் சரி வருமேன உத்தியோகபூர்வ மான ஆதாரங்கள் உண்டா?

இந்த மருந்தை இந்தியர்களை விட அமெரிக்கர்கள் சிறப்பாக செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

காரணம் அமெரிக்க சட்டதிட்டம்.

புது மருந்துக்கு பரீட்சையமான பெயர்...
அமெரிக்காவே செய்முறைகளை கொடுத்து மனிதரில் பரீட்சித்து வெற்றியானதும் திரும்பி இந்தியாவிடம் இருந்து வாங்குவதாக காட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

எதுக்காக அமெரிக்கா, இந்தியாவின் கழுத்தினைப் பிடித்து மருந்தை வாங்குகின்றது என்று பல இந்தியர்களுக்கே குழப்பம்.

மருந்தியல் துறை குறித்த விளப்பம் இருந்தால் இதனை புரிந்து கொள்ள முடியும்.

மேலை நாடுகளில், ஒரு மருந்து தொடர்பான ஆய்வுகள் மிகவும் ஒழுங்கு படுத்தப்பட்டு உள்ளன. 

பரிசோதனை கூட கான்செப்ட் வெற்றி என்றால், மிருகங்களில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். அது வெற்றி என்றால் மட்டுமே மனிதரில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். இந்த அனுமதி பெற மிக கடுமையான, highly regularise விதிமுறைகள் உண்டு. அவசரமாக செய்து பெற முடியாது.

இவர்கள் மருந்து தயாரித்து வெளியே விட 18 தொடக்கம் 24 மாதங்கள் ஆகலாம் என்று சொல்லி விட்டனர். அதுக்குள் கோரோனோ சன்னதம் ஆடி முடித்து, உருமாறி வேறு கோலமெடுத்திருக்கும்.

இந்தியா போன்ற நாடுகள் மருந்தியல் துறையில் மிக வேகமாக முன்னேறி வர காரணம் என்னவென்றால் அங்கே மிருகங்களில் பரிசோதனை என்பது பெயரளவில் தான் உண்டு.

காரணம் மருந்துக்கே பணம் இல்லாத ஏழைகளுக்கு, இந்த மருந்துகளை செலுத்தி பரிசோதனை செய்து பார்த்துவிடுகின்றனர். ஆகவே விரைவாக மருந்து சந்தைக்கு வருகின்றது.

இலங்கைக்கும் இந்த வகை மருந்து போயுள்ளது.

இந்த நிறுவனங்கள் செலவு செய்வதால், ஏழைகளுக்கு மருந்து செலவு இல்லை. சிலவேளை பணமும் கிடைக்கும் என்பதால், அவர்களும் கையெழுத்தினை போட்டு விட்டு இசைந்து போகின்றனர். அவர்களுக்கும் வேறு வழி இல்லை என்பதே நிதர்சனம். 

இத்தகைய வழியில் பரிசோதனை செய்யப்பட்ட மருந்து குறித்த விபரம் அறிந்தே, பெரும் சிக்கலில் உள்ள அமெரிக்காவின் ஜனாதிபதி, இந்தியாவின் கழுத்தினை பிடித்து தனக்கு தருமாறு கேட்டு இருக்கிறார்.

மேலே உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுப்பு மிக முக்கியமானது. (certified)

இது இல்லாமல் அமெரிக்கா அந்த மருந்தினை இறக்குமதி செய்து அமெரிக்காவில் பயன்படுத்த முடியாது.

 

27 minutes ago, Nathamuni said:

இந்த மருந்தை இந்தியர்களை விட அமெரிக்கர்கள் சிறப்பாக செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

காரணம் அமெரிக்க சட்டதிட்டம்.

புது மருந்துக்கு பரீட்சையமான பெயர்...
அமெரிக்காவே செய்முறைகளை கொடுத்து மனிதரில் பரீட்சித்து வெற்றியானதும் திரும்பி இந்தியாவிடம் இருந்து வாங்குவதாக காட்டலாம்.

சரியாக, கணித்துள்ளீர்கள் .... நாதமுனி. 
எனக்கும்... இந்த, மருந்துப் பிரச்சினை...  விளங்காமல் இருந்தது.
இப்போ... புரிந்து விட்டது. :)

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

எதுக்காக அமெரிக்கா, இந்தியாவின் கழுத்தினைப் பிடித்து மருந்தை வாங்குகின்றது என்று பல இந்தியர்களுக்கே குழப்பம்.

மருந்தியல் துறை குறித்த விளப்பம் இருந்தால் இதனை புரிந்து கொள்ள முடியும்.

மேலை நாடுகளில், ஒரு மருந்து தொடர்பான ஆய்வுகள் மிகவும் ஒழுங்கு படுத்தப்பட்டு உள்ளன. 

பரிசோதனை கூட கான்செப்ட் வெற்றி என்றால், மிருகங்களில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். அது வெற்றி என்றால் மட்டுமே மனிதரில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். இந்த அனுமதி பெற மிக கடுமையான, highly regularise விதிமுறைகள் உண்டு. அவசரமாக செய்து பெற முடியாது.

இவர்கள் மருந்து தயாரித்து வெளியே விட 18 தொடக்கம் 24 மாதங்கள் ஆகலாம் என்று சொல்லி விட்டனர். அதுக்குள் கோரோனோ சன்னதம் ஆடி முடித்து, உருமாறி வேறு கோலமெடுத்திருக்கும்.

இந்தியா போன்ற நாடுகள் மருந்தியல் துறையில் மிக வேகமாக முன்னேறி வர காரணம் என்னவென்றால் அங்கே மிருகங்களில் பரிசோதனை என்பது பெயரளவில் தான் உண்டு.

காரணம் மருந்துக்கே பணம் இல்லாத ஏழைகளுக்கு, இந்த மருந்துகளை செலுத்தி பரிசோதனை செய்து பார்த்துவிடுகின்றனர். ஆகவே விரைவாக மருந்து சந்தைக்கு வருகின்றது.

இலங்கைக்கும் இந்த வகை மருந்து போயுள்ளது.

இந்த நிறுவனங்கள் செலவு செய்வதால், ஏழைகளுக்கு மருந்து செலவு இல்லை. சிலவேளை பணமும் கிடைக்கும் என்பதால், அவர்களும் கையெழுத்தினை போட்டு விட்டு இசைந்து போகின்றனர். அவர்களுக்கும் வேறு வழி இல்லை என்பதே நிதர்சனம். 

இத்தகைய வழியில் பரிசோதனை செய்யப்பட்ட மருந்து குறித்த விபரம் அறிந்தே, பெரும் சிக்கலில் உள்ள அமெரிக்காவின் ஜனாதிபதி, இந்தியாவின் கழுத்தினை பிடித்து தனக்கு தருமாறு கேட்டு இருக்கிறார்.

மேலே உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுப்பு மிக முக்கியமானது. (certified)

இது இல்லாமல் அமெரிக்கா அந்த மருந்தினை இறக்குமதி செய்து அமெரிக்காவில் பயன்படுத்த முடியாது.

அமெரிக்காவின் உடனடி தேவைக்கு  எந்த சிக்கல்களும் இல்லாமல் வாங்கி பயன்படுத்தி கொள்ள போகிறார்கள். உடனடி தேவைக்கு வேறு  தெரிவில்லை. ஏற்கனவே சில நாடுகள் பயன்படுத்தி உள்ளதால்  அமெரிக்கா பயன்படுத்த நினைக்கிறது. பிறேசிலும் ஏற்கனவே இம்மருந்தை வாங்கி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:

இந்த மருந்தை சீன மருத்துவர்கள் வெற்றிகரமாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை இதுபற்றி உலகறிய முதல் ஜப்பானிய விஞ்ஞான சஞ்சிகையில் சில வாரங்களுக்கு முதல் படித்தேன். Breakthrough (வெற்றிகரமான கண்டுபிடிப்பு) என்ற பிரிவில் மிகக்குறைவான தகவல்களுடன் இந்த விபரம் வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து தென் கொரியாவிலும் தாய்வானிலும் இந்த மருந்து பயன்படுத்தப் படுவதாக இவ்வாறான மருத்துவத்துறை நிபுணரான நண்பர் ஒருவர் தகவல் அனுப்பி இருந்தார். அவர் களத்தில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடும் வைத்தியர்.

கற்பகதரு... உங்கள் தகவல், 
நாதமுனியின் கருத்துக்கு.. வலு சேர்க்கின்றது, ஆனாலும்...
சீனா... கண்டு பிடித்த மருந்தும்,  
இந்தியாவின்  மருந்தும்... ஒரே மருந்தா?  

அல்லது... உலக வல்லரசு நாடுகளான..
சீனா, ரஷ்யா, அமெரிக்கா, (இந்தியா), போன்றவை...
இதற்குள்... இந்த வைரஸ் பரப்பலை வைத்து,
வேறு லாபங்களை எதிர் பார்க்கின்றார்களோ... என்ற சந்தேகமும் உள்ளது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அமெரிக்காவின் உடனடி தேவைக்கு  எந்த சிக்கல்களும் இல்லாமல் வாங்கி பயன்படுத்தி கொள்ள போகிறார்கள். உடனடி தேவைக்கு வேறு  தெரிவில்லை. ஏற்கனவே சில நாடுகள் பயன்படுத்தி உள்ளதால்  அமெரிக்கா பயன்படுத்த நினைக்கிறது. பிறேசிலும் ஏற்கனவே இம்மருந்தை வாங்கி உள்ளது.

 

92332574_2637702406512487_1093783524382605312_n.jpg?_nc_cat=100&_nc_sid=dbeb18&_nc_ohc=JFsceRyLh7oAX92SFn5&_nc_ht=scontent-frx5-1.xx&oh=2b2a8837d7f2e806291e22079c7c9e79&oe=5EB5D52E

 

நுணாவிலான்.... பிரேசில்,  இந்த மருந்தை... 
இந்தியாவிடம் இருந்து... வாங்க பாவித்த  "ரெக்னிக்கை"  பார்த்தால்,
மெய் சிலிர்க்க, வைக்குது.  :grin:

இந்தியாவின் உடம்பிலை...  எந்த இடத்தில,  "வீக் பாயிண்ட்"  இருக்கோ... 
அங்கே.. கை வைத்து,  காரியத்தை சாதித்து விட்டது பிரேசில். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடன் ஒப்பிடிகையில், பிரித்தானியாவில் சிசேரியன் அதிகம். இது குறித்து நமது டாக்டர் இடத்தில் கேட்ட போது சொன்னார்....

அங்கே தவறு இழைக்கும் டாக்டர்களுக்கு இன்சூரன்ஸ் தொல்லை இல்லை....

அதனால் புதியவற்றை முயலலாம்.

உதாரணமாக தலைக்குப் பதிலாக காலால் பிறந்த பிள்ளைகள் அங்குண்டு. டாக்டர்களுக்கு அதை எப்படி கையாண்டு டெல்வரி பண்ணமுடியும் என்று அனுபவத்தில் கற்றுக்கொண்டு விடுவார்கள். இங்கே அப்படி நிலையெண்டால், சிசேரியன் தான். ஆகவே அனுபவம் கிடையாது.

லண்டணில் ஒரு சோமாலி பெண்ணக்கு

காலால் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு சிசேரியனுக்கு தேதி குறிக்கப்படுகின்றது. ஆனாலும் முன்னதாகவே பிரசவவலி. ஒரு சிங்கள டாக்டர், பிரசவம் பார்கிறார்.

சிசேரியன் செய்ய உடனடி வசதி இல்லை. ஆனாலும் தன்னால் டெல்வரி பண்ணமுடியும், உறுபபில் சிறிய வெட்டு போட்டு, பிரசவத்தின் பின் தையல் போடலாம் என்று சொல்லி ஒப்புதல் பெற்று வெற்றிகரமாக செய்கிறார்.

ஆனாலும் வெள்ளைகளால் கோள் மூட்டப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ள, பிறப்புறுப்பு விருத்த சேதனம் தான் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவ சங்க ஆதவுடன், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டார்.

இது தான் அமெரிக்கா, இந்தியா போன நிதர்சனம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இந்த மருந்தை இந்தியர்களை விட அமெரிக்கர்கள் சிறப்பாக செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

காரணம் அமெரிக்க சட்டதிட்டம்.

புது மருந்துக்கு பரீட்சையமான பெயர்...
அமெரிக்காவே செய்முறைகளை கொடுத்து மனிதரில் பரீட்சித்து வெற்றியானதும் திரும்பி இந்தியாவிடம் இருந்து வாங்குவதாக காட்டலாம்.

இது புது மருந்தல்ல, பழைய மலேரியா மருந்தையே கிடைக்கும் இடங்களில் வாங்கி பாவிக்கிறர்கள்.

அமெரிக்க பொருட்கள் எல்லாம் உற்பத்தி செய்யப்படுவது சீனாவிலே.

பெரும்பாலான கணணி மென்பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்கின்றன. கூகிழ் மற்றும் மைக்கிறோசொவ்ற் நிறுவனங்களின் தலைவர்கள் இந்தியர்களாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இவற்றுக்கு முதலே மருந்துகளை அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்க ஆரம்பித்துவிட்டன. இப்போது இந்தியா தனது நாட்டு தயாரிப்பு என்று சொல்லி விற்கும் அளவுக்கு இந்தியாவில் மருந்து தயாரிப்பு முதிர்ச்சி அடைந்த துறையாக வந்து விட்டது.

4 hours ago, தமிழ் சிறி said:

கற்பகதரு... உங்கள் தகவல், 
நாதமுனியின் கருத்துக்கு.. வலு சேர்க்கின்றது, ஆனாலும்...
சீனா... கண்டு பிடித்த மருந்தும்,  
இந்தியாவின்  மருந்தும்... ஒரே மருந்தா?  

இது பழைய கண்டுபிடிப்பான, மலிவான மலேரியா மருந்து. இலங்கையிலேயே பல ஆண்டுகளாக பாவனையில் இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகிறது. வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.