Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கடற்படையினரின் பாவனைக்கு கையளிக்கப்பட்ட பாடசாலை

Featured Replies

இந்தியாவிலிருந்து கடற்பரப்பு ஊடாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு மேலதிக படையினரை தங்க வைப்பதற்கு கடற்படையினரால் கோரப்பட்டதற்கு அமைய மாதகல் நுணசை வித்தியாலயம் வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாதகல் நுணசை வித்தியாலயத்துக்கு இன்று புதன்கிழமை கடற்படையினர் அழைத்துவரப்பட்டனர். அதனால் பாடசாலையைச் சூழவுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே பதற்ற நிலை ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தொடர்பான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படப்போவதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டனர்.

மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள பாடசாலையில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படுவது தடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பில் சம்பவ இடத்துக்குச் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ், தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து கடற்பரப்புகள் ஊடாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு மேலதிக துருப்புக்களைத் தங்க வைப்பதற்கு கடற்படையினரால் கோரப்பட்டதற்கு அமைய மாதகல் நுணசை வித்தியாலயம் வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் மாதகலில் ஒரு பாடசாலையும் இவ்வாறு விமானப்படை மற்றும் கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/141283

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையானால் , இனி அப் பாடசாலைகள் நிரந்தரக் கடற்படைத் தளங்களாகும் வாய்ப்புத்தான் அதிகம் ☹️

  • கருத்துக்கள உறவுகள்

 புலிகள் அழிக்கப்பட்டபின் திட்டமிட்டு,  தொடர்ந்து நடக்கும் போதைப்பொருள் கடத்தலை கண்காணிக்க, இப்போ பாடசாலை தேவைப்படுகிறது. சொல்பவர் சொன்னாலும் கேட்பவனுக்கு புத்தி இருக்கவேணும்.

3 hours ago, satan said:

 புலிகள் அழிக்கப்பட்டபின் திட்டமிட்டு,  தொடர்ந்து நடக்கும் போதைப்பொருள் கடத்தலை கண்காணிக்க, இப்போ பாடசாலை தேவைப்படுகிறது. சொல்பவர் சொன்னாலும் கேட்பவனுக்கு புத்தி இருக்கவேணும்.

அவனே போதைப்பொருளை கடத்துவான் தமிழினத்தை அழிக்க 

முடிச்சுப்போட்டு 

அவனே பாடசாலைகளை முடக்குவான் தமிழினத்தை அழிக்க 


மக்களுக்காக குரல் கொடுக்க அங்கே யாரும் இல்லை 😞 

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட காலத்தில் தமிழர்கள் அனைவரும் இதயசுத்தியோடு அதற்கு ஆதரவளித்திருந்தால் இன்று இந்த நிலைமை இல்லை. வேலியில் போன ஓணானை மடியில் கட்டியதுபோல் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களை இன்று அரசியல் தலைவர்களாக்கிக் கட்டிக்கொண்டு குத்துது குடையுது என்று கத்துவதில் எந்தப் பலனுமில்லை. 

பாரிய இனவழிப்புடன் உருவான சர்வதேச அழுத்தத்தை நீர்த்துப் போக துணை செய்த சகுனி சுமந்திரன் ஏற்படுத்திக் கொடுத்த வழியில் ஆக்கிரமிப்பு அதிகரிக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.