Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் 4 ஆயிரம் கிலோ பூசணிக்காயை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை விவசாயி!

Featured Replies

In இலங்கை     April 19, 2020 7:35 am GMT     0 Comments     1060     by : Benitlas

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மடுக்கரை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பூசணிக்காய் பயிர்ச்செய்கையினால் அதிக விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் பூசணிக்காயை விற்பனை செய்ய முடியாமல்  ஏழை விவசாயி ஒருவர் தவித்து வருகிறார்.

சுமார் 4 ஆயிரம் கிலோ பூசணிக்காயை குறித்த விவசாயி அறுவடை செய்துள்ளார். குறித்த விவசாயிக்கு பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

தோட்டச்   செய்கையை   வாழ்வாதாரத்  தொழிலாக  செய்து வரும்  இவர் ஏற்கனவே கடனைப் பெற்று பூசணி செய்கையை மேற் கொண்டுள்ளார்.

தனது தோட்டத்தில் விளைந்து அறுவடை செய்து வைத்துள்ள சுமார் 4 ஆயிரம் கிலோ பூசணிக்காயை விற்பனை  செய்ய முடியாமல் தவித்து வருகின்றார்.

நாடு சீராக இருந்த போது ஒரு ஏக்கர் பரப்பளவில் பூசணி பயிர் செய்துள்ளார். நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது.  அறுவடை செய்யும் நேரத்தில் ‘கொரோனா’ வைரஸ் பிரச்சினையால்  போக்குவரத்து தடை ஏற்பட்டு தம்புள்ளை மரக்கறி சந்தை சீராக  இயங்கவில்லை.

இதனால் 4 ஆயிரம் கிலோ பூசணிக்காயை  விற்பனை செய்ய முடியாமல் வீட்டில் உள்ள மூன்று அறைகளிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் கஷ்டப்பட வேண்டி உள்ளது என குறித்த விவசாயி தெரிவித்துள்ளார்.

தோட்டம் செய்வதற்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீள செலுத்த வேண்டும். அரசாங்கம் மரக்கறி வகைகளை கொள்வனவு செய்வதாக அறிய முடிகின்றது.  அது பற்றி எந்த முடிவும் இல்லை.

எனவே அரச அதிகாரிகள் எம்மீது அக்கறை கொண்டு இவற்றை விற்பனை செய்து தருவதற்கு நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற முன்வர வேண்டும் எனவும் அவர் கண்ணீரோடு கோரியுள்ளார்.

மேலும் பூசணி  தேவைப்படும்  உள்ளுர் வியாபாரிகள் 0772378121 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பூசணிக்காயை கொள்வனவு செய்து உதவிபுரியுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Image12.jpg

Image11.jpg

Image9.jpg

Image10.jpg

Image5.jpg

Image5-1536x864.jpghttp://athavannews.com/மன்னாரில்-4-ஆயிரம்-கிலோ-பூ/

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கமோ அல்லது ஏதாவது அமைப்புகளோ அந்த விவசாயிக்கு உதவ முன் வரவேண்டும் ..... அப்பொழுதுதான் விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதில் ஒரு நம்பிக்கை ஏற்படும்.....!  

இவ்வளவையும் பெறுவதற்கு அவரின் உழைப்பு அபரிமிதமானது.....!  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

அரசாங்கமோ அல்லது ஏதாவது அமைப்புகளோ அந்த விவசாயிக்கு உதவ முன் வரவேண்டும் ..... அப்பொழுதுதான் விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதில் ஒரு நம்பிக்கை ஏற்படும்.....!  

இவ்வளவையும் பெறுவதற்கு அவரின் உழைப்பு அபரிமிதமானது.....!  

முத்தின பூசனி காய் பல மாதங்களுக்கு வைத்திருக்கலாம் பழுதாகாமல், செய்திகளில் அரசங்கம் இப்ப நேரடியாக கொள்வனவு செய்கின்றார்கள் என்று இருந்திச்சு ??? உரியவர்களை தொடர்பு கொண்டால் அவர் இவற்றை விற்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

முத்தின பூசனி காய் பல மாதங்களுக்கு வைத்திருக்கலாம் பழுதாகாமல், செய்திகளில் அரசங்கம் இப்ப நேரடியாக கொள்வனவு செய்கின்றார்கள் என்று இருந்திச்சு ??? உரியவர்களை தொடர்பு கொண்டால் அவர் இவற்றை விற்க முடியும்

உண்மைதான் உடையார், ஒரு தொழிலாளியின் உழைப்பு வீணாகப் போய் விடக் கூடாது......!

அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் இவை பற்றி கூடிய அக்கறை எடுக்கவேண்டும்.  

பழப்பாகு (ஜாம்) செய்வதற்கு பெருமளவு பயன்படுத்தப்படுவது என்பதால் விற்பதில் சிரமமிருக்காது.

உரியவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, உடையார் said:

முத்தின பூசனி காய் பல மாதங்களுக்கு வைத்திருக்கலாம் பழுதாகாமல், செய்திகளில் அரசங்கம் இப்ப நேரடியாக கொள்வனவு செய்கின்றார்கள் என்று இருந்திச்சு ??? உரியவர்களை தொடர்பு கொண்டால் அவர் இவற்றை விற்க முடியும்

ஒழுங்காய் முத்தின பூசணிக்காய் எண்டால் நவம்பர் மட்டும் வைச்சிருக்கலாம்.

இந்த நேரத்திலைதான் எங்கடை அரசியல்வாதிகள் வேலைசெய்ய வேணும்.

கோவிட் 19 தொற்றல் பரவலை தடுக்கவேண்டும். அதற்கு வீட்டில் இருக்கவேண்டும் 

ஆனால், வரும் பசிக்கு என்ன தீர்வு என்ன என்று யாருக்கும்  தெரியாது, வசதியும் அதிகாரமும் உள்ளவர்களை தவிர்த்து 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, போல் said:

அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் இவை பற்றி கூடிய அக்கறை எடுக்கவேண்டும்.  

பழப்பாகு (ஜாம்) செய்வதற்கு பெருமளவு பயன்படுத்தப்படுவது என்பதால் விற்பதில் சிரமமிருக்காது.

உரியவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

போல்  நல்ல உதவி செய்தீர்கள் அவர்களுக்கு, பழப்பாகு உற்பத்தியாளர்கள் இவற்றை மொத்தமாக வாங்கலாம். 

9 hours ago, குமாரசாமி said:

ஒழுங்காய் முத்தின பூசணிக்காய் எண்டால் நவம்பர் மட்டும் வைச்சிருக்கலாம்.

இந்த நேரத்திலைதான் எங்கடை அரசியல்வாதிகள் வேலைசெய்ய வேணும்.

ஆமாம் குமாரசாமி, அரசியல் வாதிகள் இந்த நேரத்தில் உதவினால் மக்கள் அவர்களை என்றென்றும் மறவார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.