Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா பரவலுக்கு மத்தியில் அலையெனத் திரண்ட 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Alarming-photo-shows-crowd-of-100000-amid-coronavirus-lockdown-3.jpg

கொரோனா பரவலுக்கு மத்தியில் அலையெனத் திரண்ட 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள்!

பங்களாதேஷில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இஸ்லாமிய மதபோதகரின் இறுதி ஊர்வலத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த உத்தரவை மீறி பிரம்மன்பரியா மாவட்டத்தில் மதபோதகர் மவுலானா சுபாயர் அஹ்மத் அன்சாரியின் (Maulana Zubayer Ahmad Ansari) இறுதிச் சடங்கில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வெள்ளமெனத் திரண்ட மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது.

Alarming-photo-shows-crowd-of-100000-amid-coronavirus-lockdown-2.jpg

Alarming-photo-shows-crowd-of-100000-amid-coronavirus-lockdown-4.jpg

Alarming-photo-shows-crowd-of-100000-amid-coronavirus-lockdown-5.jpg

http://athavannews.com/கொரோனா-பரவலுக்கு-மத்தியி/

தலையங்கத்தை பார்த்துவிட்டு யாராக இருக்கும் என எட்டிப்பார்த்தால்...

ம் ம்  ..

அதுதான் திரி பற்றி எரியவில்லை 😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லூருக்கு முன்னாலை மூண்டு சனம் நிண்டதுக்கு ஒட்டுமொத்த தமிழினத்துக்குமே பாடம் எடுத்த பகுத்தறிவாளர்களை காணவில்லை.k62.gif

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

நல்லூருக்கு முன்னாலை மூண்டு சனம் நிண்டதுக்கு ஒட்டுமொத்த தமிழினத்துக்குமே பாடம் எடுத்த பகுத்தறிவாளர்களை காணவில்லை.k62.gif

தலையை சொறிஞ்சு கொண்டு.... இவையளுக்கு பாடம் எடுக்கிறதுக்கு.... இளுத்துப் போர்த்திக் கொண்டு படுக்கலாம் எண்டு போயிருப்பினம்... 🤗

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

தலையங்கத்தை பார்த்துவிட்டு யாராக இருக்கும் என எட்டிப்பார்த்தால்...

ம் ம்  ..

அதுதான் திரி பற்றி எரியவில்லை 😃

என்ன எல்லோரும் (செம) கடுப்பில இருக்கிறீங்கள் போல 😀

1 hour ago, குமாரசாமி said:

நல்லூருக்கு முன்னாலை மூண்டு சனம் நிண்டதுக்கு ஒட்டுமொத்த தமிழினத்துக்குமே பாடம் எடுத்த பகுத்தறிவாளர்களை காணவில்லை.k62.gif

வந்துவிட்டேன் ஐயா வந்து வந்துவிட்டேன். 😂

என்னைப் பகுத்தறிவாளர் என உயர்வாகக் கூறியதற்கு நன்றி 😂

(ஆனால் நான் என்னை அப்படி நினைக்கவில்லை😜)

19 minutes ago, Kapithan said:

என்ன எல்லோரும் (செம) கடுப்பில இருக்கிறீங்கள் போல 😀

சின்ன பாம்பு என்றாலும் பெரிய தடியை கொண்டு அடிக்கவேண்டும் - பட்டறிவு 🙂 

"அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது."

"வெள்ளமெனத் திரண்ட மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது"

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ampanai said:

சின்ன பாம்பு என்றாலும் பெரிய தடியை கொண்டு அடிக்கவேண்டும் - பட்டறிவு 🙂 

"அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது."

"வெள்ளமெனத் திரண்ட மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது"

இந்த அறிவில்லாத பங்களாதேசக்  கூட்டத்தப்பற்றி நான் என்ன கூற வேண்டுமென்று விரும்புகிறீர்கள் ? 🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 கொரோனா விடயத்தில் எந்த நாட்டில் அறிவுள்ளவர்கள் இருக்கின்றார்கள் என்று உங்களால் கூற முடியுமா ஐயா? hehehe

2 hours ago, Kapithan said:

இந்த அறிவில்லாத பங்களாதேசக்  கூட்டத்தப்பற்றி நான் என்ன கூற வேண்டுமென்று விரும்புகிறீர்கள் ? 🤔

 

இன்றைய நிலையில் பங்களாதேஷில் 110 பேர் தான் கொரோனாவினால் மரணித்துள்ளார்கள்.
இந்த இழப்பு கொரோனாவின் அபாயத்தை அந்த மக்களுக்கு உணர்த்த போதவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 கொரோனா விடயத்தில் எந்த நாட்டில் அறிவுள்ளவர்கள் இருக்கின்றார்கள் என்று உங்களால் கூற முடியுமா ஐயா? hehehe

 

இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள் ? 🤔

சூழலுக்கேற்ப மக்கள் அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பது சரியா தவறா ? 🤔

சுற்றிவளைக்காமல் நேராக பதிலைக் கூறுங்கள். 🙂

கதையைத் திசை திருப்புதல் கூடாது.👍

இப்படிக்கு,

மேன்மை மிகு பகுத்தறிவாளர்.😎

Edited by Kapithan
எழுத்துப் பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.