Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேரரின் கோரிக்கையை நிராகரித்த வாரியப்பொல பொலிஸ் பரிசோதகருக்கு நேர்ந்த கதி

Featured Replies

சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர் ஒருவரைக் கைதுசெய்ய வேண்டாம் என தேரர் ஒருவர் விடுத்த கோரிக்கையை மீறி செயற்பட்டமைக்காக,  பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரி ஒருவர் மீது பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவமொன்று வாரியப்பொல பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

வாரியப்பொல பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமைகளுக்காக சென்ற, அப்பொலிஸ் நிலையத்தின் சுற்றிவளைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி இரவு, பிரதேசத்தின் சட்ட விரோத மதுபான உற்பத்தியாளராக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர், குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசியில் அழைத்து, தன்னை  கைதுசெய்ய வேண்டாம் என கோரியுள்ளார்.

இது குறித்து உடனடியாக ஏனைய அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ள பொலிஸ்  பரிசோதகர், அது தொடர்பில் பொலிஸ் புத்தகத்திலும் தேவையான பதிவுகளை இட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், நேற்று 20 ஆம் திகதி காலை, பிரதேசத்தின் விகாரை ஒன்றின் விகாரதிபதி எனக் கருதப்படும் தேரர் ஒருவர்,  தொலைபேசியில் அழைத்து,   பொலிஸ் புத்தக பதிவுகளை நீக்குமாரும், சந்தேக நபரை கைது செய்ய வேண்டாம் எனவும் பொலிஸ் பரிசோதகரிடம் கோரியுள்ளார்.

இதேவேளை வேறு கடமைகளுக்காக வெளியே சென்ற போது, குறித்த பொலிஸ் பரிசோதகரை தேரர் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும்,அன்றைய தினம்  வெளியே கடமைகளை முடித்துவிட்டு  குறித்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நிலையம் வந்த போது, அங்கு குறித்த தேரர், சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர் என கருதப்படும் நபர் உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர்.

இந்நிலையில்,  வாரியப்பொல பொலிஸ் நிலையத்தின், சிறைக் கூடத்துக்கு அருகே, தேரருடன் வந்த நபர் ஒருவர் குறித்த பொலிஸ் பரிசோதகரை சுவருடன் சேர்த்து பிடித்து தாக்கிகியுள்ளதாகவும், இதன்போது உடன் இருந்த தேரர் உள்ளிட்டோர் அந்த பொலிஸ் அதிகாரியை மிகக் கேவலமாக திட்டியதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும்  தாக்குதல் நடாத்திய நபரை உடனடியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். சுவருடன் சேர்த்து தாக்கும்போது பொலிஸ் பரிசோதகரின் தலைப் பகுதியில்  உபாதை ஏற்பட்டுள்ள நிலையில், அவர் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இன்று வாரியபொல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில், பொலிஸ் பரிசோதகர் மீதான தாக்குதலின் போது, அங்கு சென்ற,  சட்டவிரோத கோரிக்கையை முன்வைத்த தேரர் கைதுசெய்யப்படாத நிலையில், அது குறித்து பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்னவை வீரகேசரி வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், குறித்த சம்பவத்தில் கூறப்படும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விசாரணை தகவல்களுக்கு அமைய  மேலதிக கைதுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/80458

காவிகள் மேல் கை வைக்க முடியாது। இது இலங்கையிலும் , இந்தியாவிலும் எழுதப்படாத சடடம்।

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

வாரியப்பொல பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமைகளுக்காக சென்ற, அப்பொலிஸ் நிலையத்தின் சுற்றிவளைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அவசர  பட்டு விட்டார் பொறுப்பதிகாரி. இளைஞராக இருப்பார் போலும்.  தேரரே உரிமையாளர் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்  இனிப் பழகி விடுவார். தீமைகள் அகற்றப்படாவிட்டால் நல்லவர்களும் தீயவர்களாவது கட்டாயமாகிவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

அவசர  பட்டு விட்டார் பொறுப்பதிகாரி. இளைஞராக இருப்பார் போலும்.  தேரரே உரிமையாளர் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்  இனிப் பழகி விடுவார். தீமைகள் அகற்றப்படாவிட்டால் நல்லவர்களும் தீயவர்களாவது கட்டாயமாகிவிடும். 

மூன்றாம் உலக நாடுகளிலுள்ள மிகப் பெரிய பிரச்சனை நாம் வாழும் சூழலுடன் எங்களை பழக்கப் படுத்திக் கொள்வது. பிழையான சூழல் (Tixic environment) என்று தெரிந்தும் அதனை மாற்றுவதற்கு முயற்சிப்பதில்லை அல்லது மாற்றத்திற்குப் பயப்படுவது. ☹️

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேரர் நிறைய தமிழ்ப் படம் பார்ப்பவர் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

காவிகள் மேல் கை வைக்க முடியாது। இது இலங்கையிலும் , இந்தியாவிலும் எழுதப்படாத சடடம்।

தேரர்களோடு மோத விரும்பாமல், தனது படைகள் இடித்த புத்தவிகாரைகளைத் திரும்பவும் ராச ராச சோழன் கட்டிக் கொடுத்தது சரித்திர வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட தேர ர்களுக்கு இருட்டடிதான் சரி, பகலில் ஒரு வாழ்கை இரவில் மறுமுகம்...

1 hour ago, Paanch said:

தேரர்களோடு மோத விரும்பாமல், தனது படைகள் இடித்த புத்தவிகாரைகளைத் திரும்பவும் ராச ராச சோழன் கட்டிக் கொடுத்தது சரித்திர வரலாறு.

ராஐதந்திரம்  😃

6 hours ago, Paanch said:

தேரர்களோடு மோத விரும்பாமல், தனது படைகள் இடித்த புத்தவிகாரைகளைத் திரும்பவும் ராச ராச சோழன் கட்டிக் கொடுத்தது சரித்திர வரலாறு.

போலீசே கள்ளச்சாராயம் காச்சி தேரர்களுக்கு குடுக்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்; தேரர் கைது

வாரியபொல பொலிஸ் நிலையத்தில் வைத்து கசிப்பு உற்பத்தி சந்தேக நபர் தொடர்பான விவகாரத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கசிப்பு உற்பத்தி செய்யும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய வேண்டாம் என்று குறித்த தேரர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியிடம் கோரியுள்ளார்.

இதனை பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்த அந்த பொலிஸ் அதிகாரி, பதிவேட்டிலும் தொலைபேசி அழைப்பு பற்றி பதிவு செய்துள்ளார்.

மறுநாள் குறித்த பதிவுகளை நீக்குமாறு தொலைபேசியில் அழைப்பெடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியை தேரர் எச்சரித்துள்ளார்.

பின்னர் தேரர் மற்றும் கசிப்பு உற்பத்தியாளர் உள்ளிட்டோர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர். அங்கு அவர்களுடன் சென்ற ஒருவர் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளார்.

சம்பவத்தை அடுத்து தாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையிலேயே தேரர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

https://newuthayan.com/பொலிஸ்-அதிகாரி-மீது-த/

 

  • தொடங்கியவர்
17 minutes ago, உடையார் said:

சம்பவத்தை அடுத்து தாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையிலேயே தேரர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பாவி மக்களை படுகொலை செய்த சிங்கள-பௌத்த படுகொலைகாரர்களுக்கு மன்னிப்பளிக்கும் சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளி கோட்டாபய கள்ளச்சாராய பௌத்த தேரருக்கு மன்னிப்பு கொடுப்பது விரைவில் நடக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.