Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவிற்கு முன்பே பிரான்சில் கோரோனோ தாக்கிவிட்டதா.?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பம்.. சீனாவிற்கு முன்பே பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்கிவிட்டதா.? வெளியான ஆராய்ச்சி முடிவு.!

france-coronavirus22-1588653816.jpg

பாரிஸ்: கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றுவதற்கு முன்பாகவே பிரான்சில் சிலரை தாக்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்யப்பட்ட ஆராய்ச்சி ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 180 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 35 லட்சம் பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சீனாவில் முதல் நபருக்கு வுஹனில் கடந்த வருடம் டிசம்பர் 8ம் தேதி கொரோனா ஏற்பட்டது.அவருக்கு பெரும்பாலும் டிசம்பர் 1ம் தேதி கொரோனா தாக்கி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதே போல் வுஹனில் இருக்கும் பல்வேறு நபர்கள் டிசம்பரில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர்.

அதற்கு முன்பே

ஆனால் தற்போது, இந்த கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றாமல் அதற்கு முன்பே வேறு ஒரு நாட்டில் பரவி இருக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளது. அதாவது நமக்கு தெரிந்த வகையில் சீனாவில்தான் முதல் நபர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்.

ஆனால் நமக்கு தெரியாமல் வேறு ஏதாவது ஒரு நாட்டில் ஒருவர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருந்தால் என்ன செய்வது என்று மருத்துவர்கள் பலர் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

ஆராய்ச்சி முடிவு

இது தொடர்பாக உலகம் முழுக்க ஆராய்ச்சி நடந்து வருகிறது. தற்போது இருக்கும் கணக்குப்படி பிரான்சில் ஜனவரி இறுதியில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கு முன்பே டிசம்பரிலேயே கொரோனா பாதிப்பு பிரான்சில் ஏற்பட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் ஆண்டிமைக்ரோபியல் ஏஜெண்ட்ஸ் நிறுவனம் செய்த ஆராய்ச்சி ஒன்றில் இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.

ஆராய்ச்சி என்ன சொல்கிறது

இந்த ஆராய்ச்சியின்படி பிரான்சில் கொரோனா போன்ற நோய் அறிகுறியோடு அனுமதிக்கப்பட்ட நபர்களின் ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த வருடம் டிசம்பரில் மூச்சு திணறல், காய்ச்சல், தொண்டை வறட்சி உள்ளிட்ட அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 14 ஐசியூ நோயாளிகளின் உடலில் சோதனை செய்யப்பட்டது.

இவர்களில் ஒருவருக்கு கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் பாதிலேயே இவருக்கு கொரோனா இருந்துள்ளது.

பிரான்ஸ் உண்மையான நிலை .

பாரிஸை சேர்ந்த ஜீன் வெர்டியர் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற அந்த 42 வயது நபருக்கு டிசம்பர் பாதிலேயே கொரோனா ஏற்பட்டுள்ளது இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் இறுதியில் அவர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார். கொரோனா இருப்பது தெரியாமலே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த நபர் இதற்கு முன் சீனா செல்லவே இல்லை. சீனர்களை சந்திக்கவே இல்லை.

தொடர்ந்து நடக்கும் ஆராய்ச்சி

அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இதனால் இவரை போல இன்னும் சிலருக்கு அங்கு டிசம்பரிலேயே கொரோனா வந்து இருக்குமா என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது . இந்த ஆராய்ச்சியை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர்.

இதே போன்ற நோய் அறிகுறியோடு அனுமதிக்கப்பட்ட நபர்களை சோதனை செய்ய உள்ளனர். அங்கு சில நபர்கள், எங்களுக்கு கொரோனா அறிகுறி டிசம்பரிலேயே இருந்தது என்று கூற தொடங்கி உள்ளனர்.

அமெரிக்கா நிலை

பிரான்ஸில் மட்டுமில்லை அமெரிக்காவிலும் கொரோனா தாக்குதல் பிப்ரவரியில் இல்லை மாறாக டிசம்பர் மாதத்திலேயே வந்துவிட்டது என்று மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியாவில் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா கவுண்டியின் தலைமை செயலாளர் ஜெப் ஸ்மித் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கலிபோர்னியாவில் உள்ள சில மருத்துவர்களும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது  அதிர்ச்சி அளிக்கிறது கலிபோர்னியாவில் பிப்ரவரி 6ம் தேதி ஒருவர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளார். அதே போல் பிப்ரவரி 19ம் தேதி இன்னொரு நபர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் டிசம்பர் இரண்டாம் வாரத்திலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல்கூறு சோதனையின் மூலம் இந்த கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் இருவரும் வெளிநாடு செல்லவில்லை. இது அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சீனாதான் தாயகமா.?

அதனால் உண்மையில் இந்த கொரோனா வைரஸ் சீனாவில்தான் தோன்றியதா என்று கேள்வி எழுந்துள்ளது. சீனாவில்தான் இந்த வைரஸ் பரவியதா அல்லது பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த வைரஸ் தோன்றி அங்கிருந்து வேறு எங்கும் பரவியதா என்று கேள்வி எழுந்துள்ளது.

அதே சமயம் இந்த வைரஸ் ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று இடங்களில் கூட தோன்றி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

https://tamil.oneindia.com/news/paris/coronavirus-france-got-its-first-two-covid-19-patients-in-december-itself-may-be-before-china-384546.html

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

வுகான் ஆய்வு கூடத்திலிருந்து வைரஸ் பரவவில்லை- மேற்குலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகள்

கொரோனா வைரஸ் வுகான் ஆய்வுகூடத்திலிருந்து பரவவில்லை என ஐந்து மேற்குலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா பிரிட்டன் கனடா நியுசிலாந்து அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ள ஆவணத்திலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.ஐந்து மேற்குலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் கூட்டாக தயாரித்துள்ள அறிக்கையை பார்வையிட்ட மேற்குலக அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிஎன்என் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.வைரஸ் வுகான் சந்தையிலேயே உருவாகியது என ஐந்து மேற்குலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

தவறுதலாக இது இடம்பெற்றமைக்கான சாத்தியம் முற்றாகயில்லை என்றே நாங்கள் கருதுகின்றோம் என புலனாய்வு தகவல்களை அறிந்துள்ள மேற்குலக இராஜதந்திரி குறிப்பிட்டார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

whuhan-lab1-2-300x176.jpg

இது இயல்பாக இடம்பெற்றவொன்று,மனித விலங்கு தொடர்பினால் உருவான மனித தொற்றுநோய் என மேற்குலக இராஜதந்திரி தெரிவித்துள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

வுகான் சந்தையிலிருந்தே நிச்சயமாக வைரஸ் உருவானது ஆனால் அங்கு எப்படி சென்றது என்பது தெரியவில்லை ஒரு அதிகாரி தெரிவித்தார் என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் சீனாவிடமிருந்து அதிகளவு வெளிப்படை தன்மையும் ஒத்துழைப்பும் இல்லாத பட்சத்தில உண்மையை முழுமையாக அறிய முடியாது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/40409

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, உடையார் said:

வுகான் ஆய்வு கூடத்திலிருந்து வைரஸ் பரவவில்லை- மேற்குலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகள்

 

Κατάσταση έκτακτης ανάγκης σε παγκόσμιο επίπεδο κήρυξε ο ΠΟΥ λόγω ...

சீனாவுக்கும், உலக சுகாதார நிறுவனத்துக்கும்.... "நெஞ்சில் பால் வார்த்த" மாதிரியான செய்தி.
டிரம்ப் தான்.... கொஞ்சம், அவசரப் பட்டு... வார்த்தைகளை கொட்டி விட்டார் போலுள்ளது. :)

சீனா நொவெம்பரிலேயே கொரோனா வைரஸை பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியிருக்கும். இப்படியும் முடிவெடுக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் வந்தாலும் சைனாவில் தான் குட்டி போட்டு குலம் பெருக்கி கதகளி ஆடி பிளைட் டிக்கெட்  விசா இல்லாமல் இவ்வளவு நாடுகளுக்கும் பறந்து பறந்து வந்து அட்டகாசம் பண்ணுது ஒருவேளை பிரான்ஸ் மொழி அதுக்கு பிடிக்கேலை போல் உள்ளது .😀

அண்டர் கிரவுண்டில் இருப்பவர்கள் எல்லாம்  கதநாயகனும் கிடையாது வில்லனும் கிடையாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.