Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீழ்த்தப்பட்ட தமிழரும் ஆண்ட அந்நியரும்

Featured Replies

2 minutes ago, nedukkalapoovan said:

நாங்கள் காசு தமிழனுக்குள் சுழல்வதில் பொறாமைப்படவில்லை. நாங்களும் கொஞ்சத்தை ஆட்டையைப் போட்டிருக்கலாம் என்று கவலையடையவுமில்லை. நமக்கு சொந்தமில்லாததிற்கு நாம் ஆசைப்படுவதும் இல்லை. அதுபோக.. சிங்களவனிடம்.. அந்நியரிடம் போகாமல்.. துரோகிகளிடம் சிக்காமல்.. தமிழனிடம் இருப்பது பறுவாயில்லை.

அதற்காக  ஈழத்தமிழனத்தின் அழிவுக்கு உதவி நின்ற கருணாநிதி என்ற துரோகியை வரலாற்றில் மறைக்க முடியாது. மறைக்க உதவும் மாட்டோம். 

எமது வீட்டில் தமிழன் திருடினால் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை. அப்படியான முட்டாள்கள் இந்த உலகில் இருப்பார்கள் என்று நான் நம்ப வில்லை.   அப்பிடயான வடிக்கட்டிய முட்டாள்கள் அங்கு இருக்கிறார்களா? மக்களின் பணத்தை நம்ப வைத்தை மோசடி செயத அயோக்கிய தமிழர்களை விட கருணநிதி பரவாயில்லை. 

நான் உழைத்த பணத்தை ஒரு தமிழன் திருடினால் பரவாயில்லை என்று நினைக்கும் உங்களுடன் இதுவரை விவாதம் செய்த‍து நேரவிரயம் தான்.  

நன்றி

  • Replies 76
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் வாக்குவாதப்பட்டு முடியுங்கோ ...நான் கடைசியில் வந்து யார் சரியென்று சொல்கிறேன் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, tulpen said:

எமது வீட்டில் தமிழன் திருடினால் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை. அப்படியான முட்டாள்கள் இந்த உலகில் இருப்பார்கள் என்று நான் நம்ப வில்லை.   அப்பிடயான வடிக்கட்டிய முட்டாள்கள் அங்கு இருக்கிறார்களா? மக்களின் பணத்தை நம்ப வைத்தை மோசடி செயத அயோக்கிய தமிழர்களை விட கருணநிதி பரவாயில்லை. 

நான் உழைத்த பணத்தை ஒரு தமிழன் திருடினால் பரவாயில்லை என்று நினைக்கும் உங்களுடன் இதுவரை விவாதம் செய்த‍து நேரவிரயம் தான்.  

நன்றி

எனது வீட்டில் எனது தம்பி திருடியதை ஏற்றுக்கொள்ள முடியாத நான்.. என் பணத்தை அடுத்தவன் அந்நியன் கொடியவன் கையில் ஒப்படைப்பேன் என்று நிற்பவர்கள் அதி புத்திசாலிகள் ஆவர். மேலும்.. என்னை என் வீட்டில் வைத்தே அழிக்க பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு நல்லவன் போல் நாடகம் ஆடிக் கொண்டு..கொள்ளி கொடுத்து விடுபவன்.. நல்லவன்.. வல்லவன்.. அப்பாவி... என்பது மிகப் பெரிய புத்திசாலித்தனமாகும்.

நன்றி. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, ரதி said:

இருவரும் வாக்குவாதப்பட்டு முடியுங்கோ ...நான் கடைசியில் வந்து யார் சரியென்று சொல்கிறேன் 

 

கருணாநிதிக்கு வக்காளத்து வாங்குபவர்களால் எங்கும் பிரச்சனைதான்....😁
தமிழ்நாட்டில் கூட ஈழத்தமிழர் விடயத்தில் கருணநிதிக்கு இப்படி வக்காளது வாங்குபவர்கள் குறைவு அல்லது இல்லையென்றே சொல்லலாம்.😎

9 hours ago, குமாரசாமி said:

கருணாநிதிக்கு வக்காளத்து வாங்குபவர்களால் எங்கும் பிரச்சனைதான்....😁
தமிழ்நாட்டில் கூட ஈழத்தமிழர் விடயத்தில் கருணநிதிக்கு இப்படி வக்காளது வாங்குபவர்கள் குறைவு அல்லது இல்லையென்றே சொல்லலாம்.😎

திருட்டுக் கும்பலுக்கு வக்காலத்து  வாங்குபவர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? 

கருணாநிதிக்காக நான் வக்காலத்து  வாங்கவில்லை என்பது எனது எழுத்தை வாசிப்பவர்கள் அனைவருக்கும்  தெரியும். கருணாநிதி ஒரு சாதாரண சுயநல  இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர் என்றே ஒன்றுக்கு பலதடவை எழுதியும் தமிழ் வாசித்து புரியும் திறன் இல்லை என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. 

தாயகத்தில் போராடிய புலிகளால் இனி தாக்குப்பிடிக்க முடியாது இனி எம்மை கேள்வி கேட்க யாருமில்லை என்ற துணிவில் ஏற்கனவே மண்மீட்பு நிதிக்காக தொடர்ந்து உதவி வரும் குடும்பங்களை குறிவைத்து அவர்களை கடனாளியாக்கி மில்லியன் கணக்கான பணத்தை திருடிய திருட்டு கும்பல் யுத்த நிறுத்த காலத்தில் தாயகத்தில் போராடிய தளபதிகளுடன் நெருங்கிய தொடர்பில்  இருந்தவர்களே. போராளிகளின் தியாகத்தில் குளிர் காய்ந்த இவர்கள்   கருணாநிதியைச்  சாட்டி  தாம் அடித்த கொள்ளையை மறைக்க எடுத்த நடவடிக்கைகளையே நான்  விமர்சித்தேன். இந்த திருட்டு கும்பலுக்கு வக்காலத்து வாங்குபவர்களை விட சிங்களவன் எவ்வளவோ மேல். 
 
நல்ல காலம் பிரபாகரன் போராடி நாடு பிடித்து இந்த திருட்டு கும்பல்  கையில் கொடுத்திருந்தால் இவர்களின் நீதி நிர்வாகம் எப்படி இருந்திருக்கும்? திருடிய பணம் சக  தமிழனிடம்  தானே உள்ளது. திருடிய பணத்தில் சக தமிழன் ஜாலியாக இருப்பது உனக்கு பொறாமையா  என்று திருட்டு கொடுத்தவனிடம் கேட்டிருப்பார்கள். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people sitting

சொந்தவனை நம்பாமல் அடுத்தவனை நம்பி அவனின் ஏவலுக்காய் சொந்தவனைக் கொன்று தாமும் அழிந்து தம் இனத்தையும் அழித்தவரானோம்.. அடிமைகளாக்கியரானோம். !!

1 hour ago, nedukkalapoovan said:

Image may contain: 2 people, people sitting

சொந்தவனை நம்பாமல் அடுத்தவனை நம்பி அவனின் ஏவலுக்காய் சொந்தவனைக் கொன்று தாமும் அழிந்து தம் இனத்தையும் அழித்தவரானோம்.. அடிமைகளாக்கியரானோம். !!

உண்மை தான் நெடுக்கு.  நான் வடை சுட்டேன். நீ போண்டா சுட்டாய். அவன் முறுக்கு சுட்டான். மற்றவன் ரொட்டி சுட்டான் என்று சாதரணமாக சமையலறையில்  கதைப்பது போல போல ஆளையாள் சுட்டு அழிந்து அடிமையானோம். 

Edited by tulpen

16 hours ago, ரதி said:

இருவரும் வாக்குவாதப்பட்டு முடியுங்கோ ...நான் கடைசியில் வந்து யார் சரியென்று சொல்கிறேன் 

 

வாக்குவாதப்பட்டு கதைச்சு முடிஞ்சு அலுப்பில இரண்டு பெக் அடிச்சிட்டு படுத்திட்டம். நீங்க வந்து தீர்ப்பைச் சொல்லுங்கோ. 😀

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜி ஆர் இன்று இருந்திருந்தால் கூட அவரால் மத்திய அரசை மீறி ஒரு மண்ணையும் அசைக்க முடியாது.
கருணாநிதியோ ,எம்ஜிஆரோ இயக்கங்களை பிளவுபடுத்தவில்லை...இந்திய மத்திய அரசும் ,றோவும் தான் இயக்கங்களிடையே பிளவை உண்டாக்கியது...[எங்கட பெடியங்களுக்கு எங்கே போச்சுது அறிவு?]
ஆனால் தெரிந்தோ/தெரியாமலோ இந்த இருவரும் பதவி ஆசை காரணமாய் அதற்கு துணை போயினர்.
நெடுக்கர் ,கருணாநிதி,இயக்கங்களை சேர்த்து வைக்க முயலவில்லை என்று சொல்கிறார்...ஏன் அதை எம்ஜிஆர் முயற்சிக்கவில்லை?
இன்னும் கூட சிலர் ,சீமான் எடுத்து தருவார் என்று  அடுத்த வரை நம்பி இருக்கினம்.
இலங்கையர் நாங்கள் தான் முதலில் சிங்களவர் ,தமிழர் பிறகு இலங்கையர் என்று சொல்லுவது. ஆனால் ,
இந்தியர் எப்பவுமோ தங்கள் முதலில் இந்தியர் பிறகு தான் கன்னடர் ,தெலுங்கர் ,தமிழன் என்று சொல்லுவினம் ...அது அவர்களது இரத்தத்தில் ஊறியது...மாற்றுவது கஷ்டம்.
இந்தியா என்ற நாடு துண்டு ,துண்டாய் பிரிந்தாலே ஒழிய,தமிழ் நாட்டில் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது ...சீமான் முதலமைச்சராய் வந்தால் கூட,அவருக்கு உண்மையில் எங்களுக்கு நாடு கிடைக்க வேணும் என்று விருப்பம் இருந்தால் கூட மத்திய அரசை மீறி ஒரு துரும்பையும் அசைக்க முடியாது.
தனிய கருணாநிதியை மட்டும் குற்றம் சாட்டுவதை விடுத்து உருப்படியான வேலை இருந்தால் பாருங்கள்.
நெடுக்கர் ரொம்ப ஓவராய் உணர்ச்சி வசப்பட்டு புலிகளின் பேரை சொல்லி காசை அடித்தவர்களுக்கே வக்காலத்து வாங்குகிறார். ஊரில் எத்தனையோ போராளிகள் ,அங்கவீனமானவர்கள் ,போராட்டத்திற்கு உதவிய மக்கள் வறுமையால், தகுந்த சிகிசசை பெற வசதி இல்லாததால் நாளாந்தம் செத்து கொண்டு இருக்கிறார்கள்...அடித்த காசில் ஒரு 10% அங்குள்ள மக்களுக்கு கொடுத்தால்  கூட காணும்.

இந்த காசு அடித்தலில் சம்மந்தப்படாத நெடுக்கரே காசு அடித்தவர்களுக்காய் இவ்வளவு வக்காலத்து வாங்கிறார் என்றால் காசை அடித்தவர்கள் எப்படி கதைப்பார்கள்.😧
புலம் பெயர் நாடுகளில் உள்ள மாவீரர் குடும்பங்களுக்கு உழைத்து வாழத் தெரியாதா?...அவர்களுக்கு ஏன் மாதாந்த கொடுப்பனவு ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்காக்கு முழுசா வாசிக்க ரைம் இல்லைப் போல.

தேசிய தலைவருக்கே தெரியாத அதிகாரங்களை எல்லாம் அக்கா சொல்லுறா.

தேசிய தலைவரே சொல்கிறார்.. ஹிந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தம்மை விடுவித்தது மட்டுமன்றி.. எம் ஜி ஆரின் தமிழ் நாடு அரசே ஆயுதங்களையும் அனுப்பி வைத்தது என்று.

ஒரு மாநில அரசு நினைத்தால்.. அதன் மக்களை ஒருங்கிணைத்து நிறைய விடயங்களை சாதிக்க முடியும் என்பது வங்கதேசமும்.. பங்கிளாதேஷ் உருவான வரலாறும் சாட்சி.

கருணாநிதி எப்போதுமே சுயநல ஆட்சி தான். அதற்கு ஈழத்தமிழ் துயர் ஒரு முதலீடு அவ்வளவே. 

நிதிச் செயற்பாடுகளை 100% கண்காணிக்க முடியாது. எப்போதுமே எல்லா விடுதலை அமைப்புக்களுக்குள்ளும் நிதி.. தலைமைத்துவ பிரச்சனைகள் இருந்தே வந்துள்ளன.

எங்களுடைய நிலைப்பாடு.. எமது போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில்.. எமது மக்களின் பணத்தை சிங்களவனும்.. அந்நியனும்.. துரோகிகளும் அனுபவிப்பதை விட.. நம்மவர்களே அனுபவிக்கட்டும்.  இல்லை அதனை சிங்களவனும் அந்நியனும் துரோகிகளும் தான் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை என்ன செய்ய முடியும். இலங்கையில் 10 பணக்காரர்களுக்கு கருணா என்ற துரோகி வந்திட்டார். டக்கிளஸ் இன்னொரு பக்கம். ஏன் அவர்களிடம் போய் காசுக்கணக்கு பார்க்கிறீர்கள் இல்லை..?! பயம் போல.

எத்தனையோ புலம்பெயர் போராளிகள் மக்கள் வேலைக்குப் போக முடியாத அளவுக்கு உள வளப்பிரச்சனையோடு இருக்கிறார்கள்.. உடல் நலிவுற்றிருக்கிறார்கள்.. அதாவது தெரியுமா உங்களைப் போன்றோருக்கு..?! 

விடயங்களை அறியாமல் கதைக்கப்படாது. 

 

On 6/5/2020 at 08:47, tulpen said:

இப்படி கனவுலகில் வாழ்வதை விட தோல்விக்கு எமது தரப்பில் உள்ள தவறுகளை ஆராய்வது  பலன் தரும். நாம் எபோதும் 100 வீதம் சரி. எமது தோல்விக்கு அடுத்தவன்தான் காரணம் என்று  பழி போட்டு அந்த கருத்தை வளர்ப்பதும்  எமது  எதிர்கால அழிவுக்கான வித்து தான். 

நிச்சயமாக, தனிப்பட்ட வாழ்விலும் சரி ஒரு தேசத்தின் வளர்ச்சியிலும் சரி நாம் மற்றவரால் தான் அழிந்தோம் என்று குற்றம் சாட்டிக் கொண்டு காலத்தை கழிப்போமானால் அதுவே எமது அழிவுக்கான முழுமுதற் காரணமாகிவிடும். 

அதைவிடுத்து இந்த வீழ்ச்சிக்கான எனது அல்லது எமது பலவீனம் என்ன என்பதை அடையாளம் கண்டு அதனை நிவர்த்தி செய்வதன் மூலம் எம்மை மற்றவர்கள் வீழ்த்துவதற்கு காரணமான இருந்த ஒரு காரணியை இல்லாது செய்ய முடியும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அக்காக்கு முழுசா வாசிக்க ரைம் இல்லைப் போல.

தேசிய தலைவருக்கே தெரியாத அதிகாரங்களை எல்லாம் அக்கா சொல்லுறா.

தேசிய தலைவரே சொல்கிறார்.. ஹிந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தம்மை விடுவித்தது மட்டுமன்றி.. எம் ஜி ஆரின் தமிழ் நாடு அரசே ஆயுதங்களையும் அனுப்பி வைத்தது என்று.

ஒரு மாநில அரசு நினைத்தால்.. அதன் மக்களை ஒருங்கிணைத்து நிறைய விடயங்களை சாதிக்க முடியும் என்பது வங்கதேசமும்.. பங்கிளாதேஷ் உருவான வரலாறும் சாட்சி.

கருணாநிதி எப்போதுமே சுயநல ஆட்சி தான். அதற்கு ஈழத்தமிழ் துயர் ஒரு முதலீடு அவ்வளவே. 

நிதிச் செயற்பாடுகளை 100% கண்காணிக்க முடியாது. எப்போதுமே எல்லா விடுதலை அமைப்புக்களுக்குள்ளும் நிதி.. தலைமைத்துவ பிரச்சனைகள் இருந்தே வந்துள்ளன.

எங்களுடைய நிலைப்பாடு.. எமது போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில்.. எமது மக்களின் பணத்தை சிங்களவனும்.. அந்நியனும்.. துரோகிகளும் அனுபவிப்பதை விட.. நம்மவர்களே அனுபவிக்கட்டும்.  இல்லை அதனை சிங்களவனும் அந்நியனும் துரோகிகளும் தான் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை என்ன செய்ய முடியும். இலங்கையில் 10 பணக்காரர்களுக்கு கருணா என்ற துரோகி வந்திட்டார். டக்கிளஸ் இன்னொரு பக்கம். ஏன் அவர்களிடம் போய் காசுக்கணக்கு பார்க்கிறீர்கள் இல்லை..?! பயம் போல.

எத்தனையோ புலம்பெயர் போராளிகள் மக்கள் வேலைக்குப் போக முடியாத அளவுக்கு உள வளப்பிரச்சனையோடு இருக்கிறார்கள்.. உடல் நலிவுற்றிருக்கிறார்கள்.. அதாவது தெரியுமா உங்களைப் போன்றோருக்கு..?! 

விடயங்களை அறியாமல் கதைக்கப்படாது. 

 

இயக்கங்களை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்து... அதற்கு எம்ஜிஆரையும்,கருணாநிதியையும் பயன்படுத்தி கொண்டார்கள்...ஆரம்பத்தில் கருணாநிதி புலிகளுக்கு உதவி இருந்தால்,எம்ஜிஆரும் புலிகளுக்கு உதவி இருப்பாரா? எம்ஜியாராலும் ஒரு லிமிட்டுக்குள் இருந்து தான் உதவ முடிந்தது.

கருணாநிதிக்கு வக்காலத்து வாங்க வேண்டிய தேவை எனக்கில்லை.
ஊரில் எவ்வளவோ சனம் வறுமையில் இருக்க வீம்புக்காய்  புலிகளது காசை ஆட்டையை போட்டவளுக்கு வக்காலத்து வாங்கும் உங்களுடன் கதைத்து பிரயோசனம் இல்லை...கோபத்துடன் விடை பெறுகிறேன்  😧
 

On ‎07‎-‎05‎-‎2020 at 21:58, குமாரசாமி said:

கருணாநிதிக்கு வக்காளத்து வாங்குபவர்களால் எங்கும் பிரச்சனைதான்....😁
தமிழ்நாட்டில் கூட ஈழத்தமிழர் விடயத்தில் கருணநிதிக்கு இப்படி வக்காளது வாங்குபவர்கள் குறைவு அல்லது இல்லையென்றே சொல்லலாம்.😎

அண்ணா, தமிழர்கள் பெரும்பாலோனோர் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் , அவர் தடக்கி வீழ்ந்தாலும் அவரில் தான் பிழை சொல்லுவார்கள்...அதே ஒருவரை பிடித்து விட்டால் அவர் வேணுமென்றே இன்னொருவரை தடக்கி வீழ்த்தினாலும் அவருக்கு வக்காலத்து வாங்குவார்கள்.
ஒருவரை பிடிக்குதோ, இல்லையோ பிழையென்றால் பிழை ,சரி என்றால் சரி என்று ஏற்கும் பக்குவம் பெரும்பாலோனோருக்கு இல்லை.:38_worried:


 

On ‎06‎-‎05‎-‎2020 at 08:08, nedukkalapoovan said:

Image may contain: 5 people, text

 

"தமிழரசன் தமிழர் " யார் இவர் ?

2 hours ago, ரதி said:

எம்ஜி ஆர் இன்று இருந்திருந்தால் கூட அவரால் மத்திய அரசை மீறி ஒரு மண்ணையும் அசைக்க முடியாது.
கருணாநிதியோ ,எம்ஜிஆரோ இயக்கங்களை பிளவுபடுத்தவில்லை...இந்திய மத்திய அரசும் ,றோவும் தான் இயக்கங்களிடையே பிளவை உண்டாக்கியது...[எங்கட பெடியங்களுக்கு எங்கே போச்சுது அறிவு?]
ஆனால் தெரிந்தோ/தெரியாமலோ இந்த இருவரும் பதவி ஆசை காரணமாய் அதற்கு துணை போயினர்.
நெடுக்கர் ,கருணாநிதி,இயக்கங்களை சேர்த்து வைக்க முயலவில்லை என்று சொல்கிறார்...ஏன் அதை எம்ஜிஆர் முயற்சிக்கவில்லை?
இன்னும் கூட சிலர் ,சீமான் எடுத்து தருவார் என்று  அடுத்த வரை நம்பி இருக்கினம்.
இலங்கையர் நாங்கள் தான் முதலில் சிங்களவர் ,தமிழர் பிறகு இலங்கையர் என்று சொல்லுவது. ஆனால் ,
இந்தியர் எப்பவுமோ தங்கள் முதலில் இந்தியர் பிறகு தான் கன்னடர் ,தெலுங்கர் ,தமிழன் என்று சொல்லுவினம் ...அது அவர்களது இரத்தத்தில் ஊறியது...மாற்றுவது கஷ்டம்.
இந்தியா என்ற நாடு துண்டு ,துண்டாய் பிரிந்தாலே ஒழிய,தமிழ் நாட்டில் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது ...சீமான் முதலமைச்சராய் வந்தால் கூட,அவருக்கு உண்மையில் எங்களுக்கு நாடு கிடைக்க வேணும் என்று விருப்பம் இருந்தால் கூட மத்திய அரசை மீறி ஒரு துரும்பையும் அசைக்க முடியாது.
தனிய கருணாநிதியை மட்டும் குற்றம் சாட்டுவதை விடுத்து உருப்படியான வேலை இருந்தால் பாருங்கள்.
நெடுக்கர் ரொம்ப ஓவராய் உணர்ச்சி வசப்பட்டு புலிகளின் பேரை சொல்லி காசை அடித்தவர்களுக்கே வக்காலத்து வாங்குகிறார். ஊரில் எத்தனையோ போராளிகள் ,அங்கவீனமானவர்கள் ,போராட்டத்திற்கு உதவிய மக்கள் வறுமையால், தகுந்த சிகிசசை பெற வசதி இல்லாததால் நாளாந்தம் செத்து கொண்டு இருக்கிறார்கள்...அடித்த காசில் ஒரு 10% அங்குள்ள மக்களுக்கு கொடுத்தால்  கூட காணும்.

இந்த காசு அடித்தலில் சம்மந்தப்படாத நெடுக்கரே காசு அடித்தவர்களுக்காய் இவ்வளவு வக்காலத்து வாங்கிறார் என்றால் காசை அடித்தவர்கள் எப்படி கதைப்பார்கள்.😧
புலம் பெயர் நாடுகளில் உள்ள மாவீரர் குடும்பங்களுக்கு உழைத்து வாழத் தெரியாதா?...அவர்களுக்கு ஏன் மாதாந்த கொடுப்பனவு ?

என்னக்க சொல்லுறியள்!! உண்மையவோ?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

பிரபாகரன் போராடி நாடு பிடித்து இந்த திருட்டு கும்பல்  கையில் கொடுத்திருந்தால் இவர்களின் நீதி நிர்வாகம் எப்படி இருந்திருக்கும்?

நாடு மக்கள் கண் முன்னாலே சூறையாடபடும்.

தமிழீழம் என்ற நாட்டை கருணாநிதி உருவாகாமல் தடுத்துவிட்டார் என்கின்ற மாதிரி பாரதிய ஜனதா கட்சியினரும் சீமான் கட்சியினரும் தங்களது அரசியல் நோக்கத்திற்காக முகநூலில் பிரசாரம் செய்துவருகின்றனர்.

2 hours ago, ரதி said:

இந்த காசு அடித்தலில் சம்மந்தப்படாத நெடுக்கரே காசு அடித்தவர்களுக்காய் இவ்வளவு வக்காலத்து வாங்கிறார் என்றால் காசை அடித்தவர்கள் எப்படி கதைப்பார்கள்.😧
புலம் பெயர் நாடுகளில் உள்ள மாவீரர் குடும்பங்களுக்கு உழைத்து வாழத் தெரியாதா?...அவர்களுக்கு ஏன் மாதாந்த கொடுப்பனவு ?

💯

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kaalee said:

என்னக்க சொல்லுறியள்!! உண்மையவோ?

ஏன் என்னட்ட கேக்கிறியல் நெடுக்கர் தான் எழுதினவர் அவரிடம் கேளுங்கள் 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

இயக்கங்களை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்து... அதற்கு எம்ஜிஆரையும்,கருணாநிதியையும் பயன்படுத்தி கொண்டார்கள்...ஆரம்பத்தில் கருணாநிதி புலிகளுக்கு உதவி இருந்தால்,எம்ஜிஆரும் புலிகளுக்கு உதவி இருப்பாரா? எம்ஜியாராலும் ஒரு லிமிட்டுக்குள் இருந்து தான் உதவ முடிந்தது.

அந்த லிமிட்டுக்குள் இருந்து உருப்படியா உதவி இருந்தால் கூட முள்ளிவாய்க்காலை தவிர்த்திருக்கலாம். எப்படி எப்பரேசன் லிபரேசனின் போது.. ஹிந்திய மத்திய அரசு செயற்படத் தூண்டப்பட்டதோ அப்படி அல்லது அதை விட முன்னேற்றகரமான ஒரு நகர்வை தமிழகம் சார்ந்தும் செய்திருக்கலாம்.

ஆனால்.. கருணாநிதி எல்லாவற்றையும் திட்டமிட்டு தடுத்ததோடு.. சொக்கத்தங்கம் சோனியாவோடு.. தனது குடும்ப அரசியல் செய்து கொண்டிருந்தார். ஒரு காலத்தில் எம் ஜி ஆருக்கு போட்டியாக.. அதிமுகவுக்கு போட்டியாக ஈழத்தமிழருக்கு.. தமிழீழம் தான் ஒரே தீர்வு என்று சொல்லிக் கொண்டிருந்த கருணாநிதி கடைசியில் அந்தர் பல்டி அடித்ததையும் உலகம் அறியும். நீங்கள் அறியாவிட்டால்.. நாம் என்ன செய்வது.

ஈழ விடுதலைப் போராட்டம் என்பது தனியே ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது என்பதிலும்.. தமிழகம் சார்ந்து தான் அது முன்னேறியது.. முன்னெடுக்கப்பட்டது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் நபரல்ல தாங்கள். அந்த வகையில்.. இது தான் உங்களின் மேலோட்டமான கருத்தாக அமைய முடியும்.

மேலும்..

கையாடப்பட்ட நிதி தொடர்பில்.. மீண்டும் தெளிவாகச் சொல்கிறேன்.. அந்நிய அரசுகளின் முடக்கங்களின் ஊடாக அது அந்நியரை சேர்வதிலும்.. சிங்கள அரசை அடைவதிலும்.. துரோகிகளை அடைவதிலும்.. புலம்பெயர்ந்தவர்களை அடைவது எவ்வளவோ மேல். அது தாயகத்துக்கு ஏதோ ஒரு வழியில் போய் சேரும். இதில் ஒரு நையாப் பைசா கூடக் கொடுக்காதவர்கள் எதுக்கு அதிகம் அலட்டிக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை. 

On 6/5/2020 at 03:08, nedukkalapoovan said:

Image may contain: 5 people, text

 

படம் மாற்றியமைக்கபட வேண்டும் 

 

எனது என்னபடி, கருணாநி, எம் ஜி ஆர், ஜெயலலிதா 3 பேரையும் ஒரே பிளேட்டில் தான் போடுவன், பிரபாகரன் இவர்களை யூஸ் பண்ணினார் இந்தியாவால் பழிவாங்கப்பட்டார்  

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

"தமிழரசன் தமிழர் " யார் இவர் ?

தமிழரசன் ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.

 

தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. 1987 செப்டம்பர் முதல் நாளன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றியதாக கூறி திட்டமிட்டு காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்றனர்.[3] கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் தமிழ் தேசிய தலைவர் தமிழரசன் மற்றும் நண்பர்கள் இறந்தனர்.[4]

https://ta.wikipedia.org/wiki/தமிழரசன்

 

Edited by nedukkalapoovan

3 hours ago, nedukkalapoovan said:

தமிழரசன் ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.

 

தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. 1987 செப்டம்பர் முதல் நாளன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றியதாக கூறி திட்டமிட்டு காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்றனர்.[3] கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் தமிழ் தேசிய தலைவர் தமிழரசன் மற்றும் நண்பர்கள் இறந்தனர்.[4]

https://ta.wikipedia.org/wiki/தமிழரசன்

 

மேற்படி தமிழரசனின் சம்பவத்தை  மலையாள எம்.ஜி.ஆர் ஏதோ வேண்டுமென்று  திட்டமிட்டு மணியரசனைக் கொன்றது  போல்  காட்டி வெறுப்பை விதைப்பதற்காக  விஷமத்துடன் சிலரால்  உருவாக்கப்பட்ட மீம்ஸ் தான்  நெடுக்கர் இணைத்த மீம்ஸ். இப்படித்தான் வரலாறுகள் மீம்ஸ் கிரியேற்றர்களால்  தான் அண்மைக் காலத்தில்     எழுதப்பட்டு பொய்களைக் காவிச் செல்வோரால்  பரப்பப்படுகின்றன. 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மேற்படி தமிழரசனின் சம்பவத்தை  மலையாள எம்.ஜி.ஆர் ஏதோ வேண்டுமென்று  திட்டமிட்டு மணியரசனைக் கொன்றது  போல்  காட்டி வெறுப்பை விதைப்பதற்காக  விஷமத்துடன் சிலரால்  உருவாக்கப்பட்ட மீம்ஸ் தான்  நெடுக்கர் இணைத்த மீம்ஸ். இப்படித்தான் வரலாறுகள் மீம்ஸ் கிரியேற்றர்களால்  தான் அண்மைக் காலத்தில்     எழுதப்பட்டு பொய்களைக் காவிச் செல்வோரால்  பரப்பப்படுகின்றன. 

தமிழ் தேசியப் போராளி தமிழரசன் எம் ஜி ஆர் காலத்தில் தான் கொல்லப்பட்டார். மாறுவேடத்தில் சென்ற பொலிஸார் நடத்திய தாக்குதலில்.. தற்பாதுகாப்புக்காக சுடக்கூடிய சூழலிலும் அதனைப் பாவிக்காது இறந்து போயுள்ளார்.

அதாகப்பட்டது.. தமிழரசன் மரணம் எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததால்.. அவர் பொறுப்பாக்கப்பட்டிருக்கிறார்.

எம் ஜி ஆர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு உதவியவர்.. அதனை வளர்க்க உதவியவர் என்ற காரணத்துக்காக அவர் 100% நேர்மையுள்ள ஒரு தலைவர் என்று சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்த வரை அவர் எமக்கு பெரும் உதவிகளை அளித்துள்ளார். அதனால்.. அவர் எமக்கு நல்லவர். இதே தமிழகத்தில் அவர் மீதும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் உளர். 

என்னால்.. இந்த மீம்ஸின் பொருளை விளங்க முடிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

தமிழரசன் ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.

 

தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. 1987 செப்டம்பர் முதல் நாளன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றியதாக கூறி திட்டமிட்டு காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்றனர்.[3] கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் தமிழ் தேசிய தலைவர் தமிழரசன் மற்றும் நண்பர்கள் இறந்தனர்.[4]

https://ta.wikipedia.org/wiki/தமிழரசன்

 

இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ்... இவரை  பொதுமக்கள் தான் அடித்துக் கொன்றார்கள் என்று நீங்கள் தந்த இணைப்பில் இருக்கு ...ஆனால் நீங்கள் , இவரைக் காவற்துறை தான் பொதுமக்களோடு நின்று கொலை செய்தது என்று சொல்கிறீர்கள்.
இவரையே உங்கள் எம்ஜிஆரால் காப்பாற்ற முடியவில்லை... அவரை அடித்து கொலை செய்யும் படி போலீசுக்கு உத்தரவு போட்டதே இவராய்த் தான் இருக்கும் .
இந்த லட்சணத்தில்  இவர் உங்களுக்கு உதவுவார் என்று மனப்பால் குடிக்கிறீர்கள் 

19 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் தேசியப் போராளி தமிழரசன் எம் ஜி ஆர் காலத்தில் தான் கொல்லப்பட்டார். மாறுவேடத்தில் சென்ற பொலிஸார் நடத்திய தாக்குதலில்.. தற்பாதுகாப்புக்காக சுடக்கூடிய சூழலிலும் அதனைப் பாவிக்காது இறந்து போயுள்ளார்.

அதாகப்பட்டது.. தமிழரசன் மரணம் எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததால்.. அவர் பொறுப்பாக்கப்பட்டிருக்கிறார்.

எம் ஜி ஆர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு உதவியவர்.. அதனை வளர்க்க உதவியவர் என்ற காரணத்துக்காக அவர் 100% நேர்மையுள்ள ஒரு தலைவர் என்று சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்த வரை அவர் எமக்கு பெரும் உதவிகளை அளித்துள்ளார். அதனால்.. அவர் எமக்கு நல்லவர். இதே தமிழகத்தில் அவர் மீதும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் உளர். 

என்னால்.. இந்த மீம்ஸின் பொருளை விளங்க முடிகிறது. 

தமிழக அரசில் யார் முதலமைச்சராக இருக்கிறாரோ அவர் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பானவர். மாநிலத்தில் சட்ட விரோதமாக நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவரது கடமை. அதை எம். ஜி. ஆர்  நேர்மையுடன் செய்தார். தமிழரசன்  வங்கியைக் கொள்ளை அடிக்க திட்டமிட்டாலோ காவிரி அணையை வெடிகுண்டு வைக்க திட்டமிட்டாலோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுய சட்ட. கடப்பாடு தமிழக முதலமைச்சருக்கு உண்டு. அதைத் தான் அவர் செய்தார். மீம்ஸ் சொல்லுவது வேண்டுமென்றே மலையாளி எம்ஜிஆர் தமிழன் தமிழரசனைக்  கொன்றதாக வெறுப்பு பிரச்சாரம். 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ்... இவரை  பொதுமக்கள் தான் அடித்துக் கொன்றார்கள் என்று நீங்கள் தந்த இணைப்பில் இருக்கு ...ஆனால் நீங்கள் , இவரைக் காவற்துறை தான் பொதுமக்களோடு நின்று கொலை செய்தது என்று சொல்கிறீர்கள்.
இவரையே உங்கள் எம்ஜிஆரால் காப்பாற்ற முடியவில்லை... அவரை அடித்து கொலை செய்யும் படி போலீசுக்கு உத்தரவு போட்டதே இவராய்த் தான் இருக்கும் .
இந்த லட்சணத்தில்  இவர் உங்களுக்கு உதவுவார் என்று மனப்பால் குடிக்கிறீர்கள் 

  

8 minutes ago, tulpen said:

தமிழக அரசில் யார் முதலமைச்சராக இருக்கிறாரோ அவர் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பானவர். மாநிலத்தில் சட்ட விரோதமாக நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவரது கடமை. அதை எம். ஜி. ஆர்  நேர்மையுடன் செய்தார். மணியரசன் வங்கியைக் கொள்ளை அடிக்க திட்டமிட்டாலோ காவிரி அணையை வெடிகுண்டு வைக்க திட்டமிட்டாலோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுய சட்ட. கடப்பாடு தமிழக முதலமைச்சருக்கு உண்டு. அதைத் தான் அவர் செய்தார். மீம்ஸ் சொல்லுவது வேண்டுமென்றே மலையாளி எம்ஜிஆர் தமிழன் மணியரசனைக் கொன்றதாக வெறுப்பு பிரச்சாரம். 

 

இவரை பொதுமக்கள் மத்தியில் கலந்திருந்த பொலஸ் அடித்துக் கொன்றதாகவே தமிழ் விக்கிபீடியா குறிப்புச் சொல்கிறது.

இதில் மக்கள் பலருக்கு இவரை அடையாளம் காண முடியவில்லை. இவர் ஒரு தலைமறைவுப் போராளி என்பதால்.. நக்சல் என்று நினைத்து அடித்திருப்பார்கள். ஆனால்.. இவரை கொல்ல திட்டமிட்ட பொலிஸூக்கு இவரைத் தெரியும். தெரிந்தே கைது பண்ணாமல் கொன்றிருக்கிறார்கள்.

அந்த வகையில் எம் ஜி ஆர் பொறுக்காக்கப்பட்டிருக்கிறார்.. இவர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தால். இது எம் ஜி ஆருக்கு தெரியாமல் கூட நிகழ்ந்திருக்கலாம்.வ் அல்லது எம் ஜி ஆருக்கு நக்சல் என்று சொல்லப்பட்டிருக்கலாம். எது எப்படியோ இவரின் மரணம் எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தால்.. அதில் அவருக்கும் பொறுப்பிருக்குது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

  

 

இவரை பொதுமக்கள் மத்தியில் கலந்திருந்த பொலஸ் அடித்துக் கொன்றதாகவே தமிழ் விக்கிபீடியா குறிப்புச் சொல்கிறது.

இதில் மக்கள் பலருக்கு இவரை அடையாளம் காண முடியவில்லை. இவர் ஒரு தலைமறைவுப் போராளி என்பதால்.. நக்சல் என்று நினைத்து அடித்திருப்பார்கள். ஆனால்.. இவரை கொல்ல திட்டமிட்ட பொலிஸூக்கு இவரைத் தெரியும். தெரிந்தே கைது பண்ணாமல் கொன்றிருக்கிறார்கள்.

அந்த வகையில் எம் ஜி ஆர் பொறுக்காக்கப்பட்டிருக்கிறார்.. இவர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தால். இது எம் ஜி ஆருக்கு தெரியாமல் கூட நிகழ்ந்திருக்கலாம்.வ் அல்லது எம் ஜி ஆருக்கு நக்சல் என்று சொல்லப்பட்டிருக்கலாம். எது எப்படியோ இவரின் மரணம் எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தால்.. அதில் அவருக்கும் பொறுப்பிருக்குது. 

ஒரு முதலமைச்சருக்கு தெரியாமல் நடந்திருக்காது ...முதலமைச்சருக்கு என்று ஒரு கடப்பாடு உண்டு அதைத் தான் அந்த நேரம் அவர் செய்தார்...அவரை மாதிரி தான் பொறுப்பான  பதவியில் அமருபவர்கள் செய்வார்கள்.

ஈழ விடயத்திலும் ஒரு லிமிட்டுக்கு அப்பால் இவர்களால்  ஒன்றும் செய்ய முடியாது ...அயல் நாட்டு விடயத்தில் மூக்கை நுழைக்கும் அதிகாரம் மற்ற நாடுகளுக்கே இல்லாத போது ,மாநில முதலமைச்சர்கள் எப்படி தலையிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஒரு முதலமைச்சருக்கு தெரியாமல் நடந்திருக்காது ...முதலமைச்சருக்கு என்று ஒரு கடப்பாடு உண்டு அதைத் தான் அந்த நேரம் அவர் செய்தார்...அவரை மாதிரி தான் பொறுப்பான  பதவியில் அமருபவர்கள் செய்வார்கள்.

ஈழ விடயத்திலும் ஒரு லிமிட்டுக்கு அப்பால் இவர்களால்  ஒன்றும் செய்ய முடியாது ...அயல் நாட்டு விடயத்தில் மூக்கை நுழைக்கும் அதிகாரம் மற்ற நாடுகளுக்கே இல்லாத போது ,மாநில முதலமைச்சர்கள் எப்படி தலையிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் 

முதலமைச்சருக்கு தெரியாமலே இது நிகழ்ந்திருக்கலாம். இருந்தாலும் ஆட்சியில் இருந்தவர் என்ற வகையில்.. அவர் மீது பழிபோவது தவிர்க்க முடியாதது. 

இதே எம் ஜி ஆர் தான் ஒப்பரேசன் லிபரேசனின் போது உதவிகளை நேரடியாக அனுப்பினார் என்பதையும் மறக்க வேண்டாம். அதுவே இறுதியில் இந்திய - இலங்கை ஒப்பந்தம்.. ஹிந்தியப் படை வரவு வரை போனது. ஒப்பரேசன் லிபரேசனால் வரவிருந்த பெரும் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டது.. மேலும் போராளிகளுக்கு தம்மை மீள ஆசுவாசப்படுத்த ஒரு கால அவகாசத்தை வழங்கியது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.