Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் – சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் – சம்பந்தன்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரத்தியேக சந்திப்பு ஆகியவை தொடர்பாக முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் குறித்து தமிழ் பத்திரிகைக்கு பதிலளிக்கையில் நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்.ஆகவே எமது செயற்பாடுகள் பற்றி விமர்சிப்பவர்களுக்கு அப்பால் அவைபற்றிய சரியான புரிதல் பொதுமக்களுக்கு உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள அத்தனை தமிழ் கட்சிகளும் கூட்டமைப்பை விமர்சிப்பதையே பிரதான கருமமாக கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்களின் விமர்சனங்களுக்கெல்லாம் நாம் பதிலளிக்க வேண்டிய அவசிமில்லை.நாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பங்களை உரிய தருணங்களில் பயன்படுத்தியுள்ளோம். தொடர்ந்தும் பயன்படுத்துவோம். அதில் மாற்றுக்கருத்திற்கு இடமிருக்க முடியாது.அந்தவகையில்தான் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளுக்குள் பிரதமர் அனைத்து உறுப்பினர்களுக்கான சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்தச்சந்திப்பில் நாம் கலந்து கொண்டோம்.எமது மக்களின் சமகால நெருக்கடிகள், அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் தீர்வுகள் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து குறிப்பிட்டு அறிக்கையொன்றையும் கையளித்திருந்தோம்.

அதனையடுத்து பிரதமருக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்றும் நடைபெற்றது. இதன்போது நாம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுக்களை முன்னெடுத்திருந்தோம். ஐந்து தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சாசனத்தினை தொடர்ந்தும் பின்பற்ற முடியாது.அதன்மீதான மதிப்பும் மரியாதையும் இழக்கப்பட்டாகிவிட்டது. ஆகவே தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அமைவாக புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அத்துடன், தமிழ் மக்களின் இதர பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதில் வேறுகாரணங்களைக் காட்டி தாமதப்படுத்த முடியாது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சமாந்தரமாக ஜனநாயக பண்புக்களுக்கு மதிப்பளித்து சட்டத்தின் ஆட்சி முன்னெடுக்கப்பட வேண்டும்.அத்துடன், அரசியல் இலாபங்களை அடைவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டிய தரப்பினருடன் உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம் என மேலும் தெரிவித்தார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/நாம்-பேசவேண்டிய-விடயங்கள/

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே எப்ப எங்க என்ன பேசுறீங்க என்று வெளில எதுவும் சொல்லாமலே.. பேசிக்கிட்டே இருங்க. நடப்பில் எதுவும் நடப்பதாக இல்லை.  இதில் இருந்து தெரியனும் என்ன பேசுறீங்கன்னு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் – சம்பந்தன்

வானத்தில் என்னய்யா உமக்கு வேலை..?

ஒரு சின்ன மீற்றிங்..👍

maxresdefault.jpg

வழமையான அரசியல் பொருளாதார களம் அல்ல தற்பொழுது இலங்கையில் உள்ளது. ஆனால், சிங்கள தரப்பை எவ்வளவு தூரம் தமிழர் அதிகாரப்பரவல் பற்றிய மாற்றத்தை கொண்டுவரும் என தெரியவில்லை. ஒரு காரணம், பௌத்த மற்றும் இராணுவ கட்டமைப்பாட்டுக்கள் மத்தியில் மாற்றம் வர வேண்டும். ஆனால், மகிந்த கூட்டம் சற்று மாறலாம் என சம்பந்தர் கணக்கு போட்டு நகருகிறார்.   

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் – சம்பந்தன்

ஐயா உங்களுக்கு வயதும் போட்டுது.நீங்கள் முன்னாலையும் பின்னாலையும் கூட்டிக்கொண்டு திரியுற ஆளும் பெரிசாய் சொல்லுறதுக்கில்லை.கெதியாய் பிரச்சனையை முடிக்கப்பாருங்கோ....இல்லாட்டி எல்லாத்தையும் விட்டுட்டு போங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள அத்தனை தமிழ் கட்சிகளும் கூட்டமைப்பை விமர்சிப்பதையே பிரதான கருமமாக கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்களின் விமர்சனங்களுக்கெல்லாம் நாம் பதிலளிக்க வேண்டிய அவசிமில்லை

இந்த அராயக போக்கால்தான் கட்சியை விட்டு பலர் வெளியேறிய வண்ணம் உள்ளார்கள். கூட்டமைப்பை  கூட்டமைப்பாக வைத்திருக்க முடியவில்லை.

போன முறையும் மகிந்தவுடன்  பல சுற்றுக்கள் மூடிய அறையில் பேசியவை தமிழ் மக்கள் இன்று வரை அறியவில்லை. மீண்டும் மூடிய அறையில் பேச்சுவார்த்தையா?
தமிழ் மக்கள் வாக்களித்து  உங்களை பாராளுமன்றம் அனுப்பியது அவர்களின் பிரச்சனையை தீர்க்க. அரசுடன் பேசியவைகளை அவர்களுக்கு சொல்லாமல் கமுக்கமாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்.

97074594_2683595798631855_11806324789818

சம்பந்தன் ஐயாவோட காலத்துக்கு பின்னர் இந்த கட்சி நிச்சயமாக இருக்கும்। ஆனால் ஆட்கள் இல்லாமல் , சங்கரியின் கட்சியைப்போல இருக்கும்। ஐயா அதுக்கு முன்னர் எதாவது பரிகாரம் செய்தால் நல்லது। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.