Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`பிரதமராக இருந்தாலும் அதே ரூல்தான்!' -ஜெசிந்தாவுக்கு அனுமதி மறுத்த நியூஸி., உணவகம்; சுவாரஸ்ய சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`பிரதமராக இருந்தாலும் அதே ரூல்தான்!' -ஜெசிந்தாவுக்கு அனுமதி மறுத்த நியூஸி., உணவகம்; சுவாரஸ்ய சம்பவம்

பிரதமர் ஜெசிந்தா

 

உணவு உண்ணச் சென்ற நியூஸிலாந்து பிரதமருக்கு அனுமதி மறுத்து, காக்க வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளது. தற்போது, இந்தச் செய்தி வைரலாகிவருகிறது.

அனைத்து நாடுகளைப் போலவே நியூஸிலாந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,499 - ஆக உள்ளது. அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 1,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் சிலர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளால் அங்கு வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் கொரோனா இல்லாத நியூஸிலாந்து உருவாகும் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீனாவில் வைரஸ் உறுதியான அடுத்த மாதம், அதாவது பிப்ரவரி இறுதியில், நியூஸிலாந்தில் முதல் வைரஸ் பரவல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தங்கள் நாட்டுக்குள் நுழையும் அனைவரும் கட்டாயமாக இரண்டு வாரங்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து அங்கு வைரஸ் பரவல் அதிகரிக்கவே, மார்ச் மாத மத்தியில் வெளிநாட்டு மக்கள் நியூஸிலாந்துக்கு வர தடை பிறப்பிக்கப்பட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஆரம்பம் முதலே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்ட ஊரடங்கில், மக்கள் வெளியில் நடமாடுவது முதல் பெரும் தொழிற்சாலை உற்பத்தி வரை என அனைத்துக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒரே மாதத்தில் அங்கு வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கமாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, ஏப்ரல் இறுதியிலிருந்து தற்போது வரை அங்கு வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது. இதனால் நியூஸிலாந்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் முதல் கட்டமாக, கடுமையான விதிகளுடன் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக விலகல் என்பதுதான் அந்நாட்டின் முக்கிய தாரக மந்திரமாக உள்ளது. எனவே, முதல்கட்ட தளர்வில் பொதுமக்கள் கட்டாய சமூக இடைவெளியுடன் வெளியில் நடமாடலாம், உணவகங்கள், போக்குவரத்து போன்றவற்றில் எண்ணிக்கையில் கட்டுப்பாடு, சில தொழில்கள் இயங்க அனுமதி, ஆகிய பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் நியூஸிலாந்து பிரதமர். கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டுவந்த குஷியில் உள்ளது நியூஸிலாந்து.

இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் விதித்த கட்டுப்பாடுகளால் அவருக்கே ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், தன் வருங்கால கணவர் கிளார்க் கேஃபோர்ட் மற்றும் சில நண்பர்களுடன் அந்நாட்டு தலைநகரான வெல்லிங்டனில் இருக்கும் ஒரு கஃபேவுக்குச் சென்றுள்ளார். நியூஸிலாந்து அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே உணவகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில், பிரதமர் ஜெசிந்தா அங்கு சென்றபோது அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்துள்ளன

 

 

ஜெசிந்தா ஆர்டர்ன்

 

இதனால் பிரதமரை உள்ளே அனுமதிக்க முடியாது என அந்த கஃபே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எந்த விதிமுறைகளையும் மீறாமல், எதையும் மாற்றாமல், சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து பின் இருக்கை கிடைத்ததும் உணவு உண்டுவிட்டுச் சென்றுள்ளார் ஜெசிந்தா. அப்போது, அங்கிருந்த கஃபே ஊழியர்களிடம், ஊரடங்கு காலத்தில் அவர்கள் அனுபவித்த சிரமங்களையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

அந்த கஃபேயில் நடந்த அனைத்து சம்பவங்களையும் நேரில் பார்த்த ஒரு வாடிக்கையாளர், தன் ட்விட்டர் பக்கத்தில் அதைப் பதிவிட்டுள்ளார். இதற்கு, ஜெசிந்தாவின் வருங்கால கணவர் கிளார்க் பதில் அளித்துள்ளார். அதில், “ இந்தக் குழப்பத்துக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். சரியான முறையில் இதைக் கையாளத் தவறிவிட்டேன், முன்கூட்டியே இருக்கை புக் செய்யவில்லை. ஆனால், அவர்களுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். நியூஸிலாந்து பிரதமரின் செயலைப் பாராட்டியும், அனைத்து ஆண்களும் இறுதியில் இப்படித்தான் செய்வார்கள் எனவும் ஜெசிந்தாவின் காதலரை கிண்டல் செய்தும் நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்துவருகின்றனர்.

https://www.vikatan.com/news/international/new-zealand-pm-denied-table-in-cafe-due-to-social-distancing

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

" அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி" இப் பொன்மொழி நியூஸிக்கு மட்டுமல்ல நம்ம நாடுகளுக்கும் மிக மிக பொருந்தும்.......!    👏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

இதனால் பிரதமரை உள்ளே அனுமதிக்க முடியாது என அந்த கஃபே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

A Man Stopped Boris Johnson in a Park to Speak to Him. It's Not ...

அங்குதன்னும்  கடைசியில் உள்ளே விட்டார்கள் இங்கு uk யில் பார்க்கில்  நடந்து போற பிரதமருக்கு பார்க்கில் நடக்க வந்த ஒன்று அட்வைஸ் குடுக்குது எல்லாம் கொரனோ காலம் .😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

A Man Stopped Boris Johnson in a Park to Speak to Him. It's Not ...

அங்குதன்னும்  கடைசியில் உள்ளே விட்டார்கள் இங்கு uk யில் பார்க்கில்  நடந்து போற பிரதமருக்கு பார்க்கில் நடக்க வந்த ஒன்று அட்வைஸ் குடுக்குது எல்லாம் கொரனோ காலம் .😃

கைநீட்டி பயங்கர அட்வைஸ் போல்😃, அவரும் நின்று கதை கேட்கின்றார் 

  • கருத்துக்கள உறவுகள்

Politicians London Stock Photos (Exclusive) | Shutterstock

3 minutes ago, உடையார் said:

கைநீட்டி பயங்கர அட்வைஸ் போல்😃, அவரும் நின்று கதை கேட்கின்றார் 

இவரும்  கோஸ்ரா  கோப்பி யை சூடு ஆறுமுன்  சாவகாசமாய் குடித்தபடியே மண்டையை ஆட்டி கேட்டு விட்டு ஆவண செய்கிறேன்  என்று சொல்லிக்கொண்டு நகர்ந்து இருக்கிறார் .

இப்படியான செய்திகள் கொர்னோ திசை திருப்பல் வகைக்குள்  வரும் .நாதமுனி வடிவா விளங்கப்படுத்துவார் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

கைநீட்டி பயங்கர அட்வைஸ் போல்😃, அவரும் நின்று கதை கேட்கின்றார் 

 

5 hours ago, பெருமாள் said:

Politicians London Stock Photos (Exclusive) | Shutterstock

இவரும்  கோஸ்ரா  கோப்பி யை சூடு ஆறுமுன்  சாவகாசமாய் குடித்தபடியே மண்டையை ஆட்டி கேட்டு விட்டு ஆவண செய்கிறேன்  என்று சொல்லிக்கொண்டு நகர்ந்து இருக்கிறார் .

இப்படியான செய்திகள் கொர்னோ திசை திருப்பல் வகைக்குள்  வரும் .நாதமுனி வடிவா விளங்கப்படுத்துவார் .

போட்டிருக்கிற உடைகளை பார்த்தா ஓடப் போன ஆளாத் தெரியலை.

5 hours ago, பெருமாள் said:

இப்படியான செய்திகள் கொர்னோ திசை திருப்பல் வகைக்குள்  வரும் .நாதமுனி வடிவா விளங்கப்படுத்துவார் .

நாதமுனி உடனடியாக மேடைக்கு வரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

போட்டிருக்கிற உடைகளை பார்த்தா ஓடப் போன ஆளாத் தெரியலை.

நாதமுனி உடனடியாக மேடைக்கு வரவும்.

 

5 hours ago, பெருமாள் said:

Politicians London Stock Photos (Exclusive) | Shutterstock

இப்படியான செய்திகள் கொர்னோ திசை திருப்பல் வகைக்குள்  வரும் .நாதமுனி வடிவா விளங்கப்படுத்துவார் .

நாதமுனி வந்து.. என்ன சொல்கிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளேன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

நாதமுனி வந்து.. என்ன சொல்கிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளேன். :grin:

ஓ பிரதமர் ஓடுற உடுப்பை போட மறந்துட்டார் என்று சொல்வாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.