Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பெண் சட்டத்தரணியை அசிங்கப்படுத்திய இராணுவத்தினர்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் பெண் சட்டத்தரணி ஒருவருடன் இராணுவத்தினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ள சம்பவெமான்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்.நகரை அண்மித்த பகுதியில் குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனிஸ்ட பெண் சட்டத்தரணி தனது சிரேஸ்ட சட்டத்தரணியின் அலுவலகத்தில் கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 7 மணியளவில் வீடு திரும்பிய போது வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குறித்த பெண் சட்டத்தரணியை மறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது தான் சட்டத்தரணி என , தனது அடையாள அட்டையை அவர் இராணுவத்தினரிடம் காண்பித்துள்ளார். அவ்வேளை அவருடைய கைப்பையை தாம் சோதிக்க வேண்டும் என கோரிய இராணுவத்தினர் கைப்பையினுள் இருந்த பொருட்களை வீதிகளில் கொட்டி , கைப்பையை சோதனையிட்ட பின்னர் வீதியில் கொட்டப்பட்ட பொருட்களை பொறுக்கி எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அதற்கு சம்மதிக்காத சட்டத்தரணி , பொருட்களை வீதியில் கைவிட்டு விட்டு தனது கைப்பையை இராணுவத்தினரிடமிருந்து வாங்கி சென்றுள்ளனர்.

இராணுவத்தினரின் இந்த அநாகரிக செயற்பாடு குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சிரேஸ்ட சட்டத்தரணிகள் ஆலோசித்து வருவதாக அறிய முடிகிறது.

யாழில். கடந்த இரு தினங்களாக மாலை வேளைகளில் பல இடங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதி சோதனை நடவடிக்கைகளும் பதிவுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/143747?ref=imp-news

7 hours ago, போல் said:

இராணுவத்தினரின் இந்த அநாகரிக செயற்பாடு குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சிரேஸ்ட சட்டத்தரணிகள் ஆலோசித்து வருவதாக அறிய முடிகிறது.

இதுல யோசிக்க என்ன இருக்கு?

இது போன்ற அடாவடிகளுக்கு நடவடிக்கை எடுக்கேல்லை என்டா சட்டத்தரணிகள் என்டு உங்களை அழைக்கிறது வெட்கக்கேடு!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

இதுல யோசிக்க என்ன இருக்கு?

இது போன்ற அடாவடிகளுக்கு நடவடிக்கை எடுக்கேல்லை என்டா சட்டத்தரணிகள் என்டு உங்களை அழைக்கிறது வெட்கக்கேடு!

எந்த சட்டத்திற்கு அமைவாக சீனா சட்டமா? சிறிலங்கா சட்டமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண்கள் இராணுவத்திற்கு.. தமிழ் ஆண்கள்.. இந்துமா சமுத்திரத்திற்கு என்று முழங்கிய நவீன இடியமீனின் ஆட்சியில்.. இதெல்லாம் சர்வ சாதாரணம். வாழ்த்துக்கள் ஊத்தபாய. தொடருங்கள்.. உங்கள்.. இடியமீன் சாகசங்களை. உங்களை கதிரையில் ஏற்றி வைத்து மகிழ்பவர்களுக்கு... நல்லாட்சி நாயகர்கள் மூலம் உங்களை காத்தருளியவர்களுக்கு நன்றியும் சூட்கேசும் கொடுத்து அனுப்புங்கள். சுமந்திரன் என்ற பன்னாடை வந்து துண்டை விரிச்சிட்டு நிற்கும். 

டக்கிளஸ் என்ற கூனிக்குறுகி.. குனிந்து பொறுக்க நிற்கும். அங்கால.. கும்மானை அம்போன்னு விட்டிட்டியள்.. அவருக்கும்.. அடுத்த கட்டத்துக்கு ஏதாச்சும் கொடுத்தால் தான் அவர் கிழக்கையும்.. டக்கியர் வடக்கையும் உங்களுக்கு குத்தகைக்கு விடுவர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, போல் said:

-----இதன்போது தான் சட்டத்தரணி என , தனது அடையாள அட்டையை அவர் இராணுவத்தினரிடம் காண்பித்துள்ளார். அவ்வேளை அவருடைய கைப்பையை தாம் சோதிக்க வேண்டும் என கோரிய இராணுவத்தினர் கைப்பையினுள் இருந்த பொருட்களை வீதிகளில் கொட்டி , கைப்பையை சோதனையிட்ட பின்னர் வீதியில் கொட்டப்பட்ட பொருட்களை பொறுக்கி எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அதற்கு சம்மதிக்காத சட்டத்தரணி , பொருட்களை வீதியில் கைவிட்டு விட்டு தனது கைப்பையை இராணுவத்தினரிடமிருந்து வாங்கி சென்றுள்ளனர்.

இரவு 7 மணிக்கு... இந்தச் சம்பவம் நடந்த போதும்,
வீதியில் இராணுவம் கொட்டிய... தனது பொருட்களை, எடுத்துச்  செல்லாத...
துணிந்த, ரோசமுள்ள... பெண் சடடத்தரணியை பாராட்ட வேண்டும்.

இந்தச் செயல்... அங்குள்ள ராணுவத்தினனை, 
ஒரு கணம்...  வெட்கப்பட வைத்திருக்கும் என்றே நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தச் செயல்... அங்குள்ள ராணுவத்தினனை, 

ஒரு கணம்...  வெட்கப்பட வைத்திருக்கும் என்றே நினைக்கின்றேன். 

கோத்தபாயா கூட்டு ராணுவத்துக்கு வெட்கமா......? வெட்கம் என்றால் அது, கிலோ என்னவிலை என்று கேட்கும். 

15 hours ago, தமிழ் சிறி said:

இரவு 7 மணிக்கு... இந்தச் சம்பவம் நடந்த போதும்,
வீதியில் இராணுவம் கொட்டிய... தனது பொருட்களை, எடுத்துச்  செல்லாத...
துணிந்த, ரோசமுள்ள... பெண் சடடத்தரணியை பாராட்ட வேண்டும்.

இந்தச் செயல்... அங்குள்ள ராணுவத்தினனை, 
ஒரு கணம்...  வெட்கப்பட வைத்திருக்கும் என்றே நினைக்கின்றேன். 

ம்ம்ம்! அந்த பெண் பாராட்டுக்கு உரியவர்.

மனித குணங்களில் ஏதாவது அந்த சொறிலங்கா ராணுவ ரவுடிகளிடம் மிஞ்சியிருந்தால் ஒரு கணம்...  வெட்கப்பட வைத்திருக்கும்!

  • தொடங்கியவர்

சட்டத்தரணி றோய் டிலக்சனின் வீட்டில் அத்துமீறித் தாக்குதல் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

625.500.560.350.160.300.053.800.900.160.90-720x450.jpg

மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான திரு.றோய் டிலக்சன் அவர்களின் ஆதனத்திற்குள் கடந்த (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

இதன்போது, வீட்டின் உடமைகளுக்கும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளுக்கும் வாளால் வெட்டி ஆயுததாரிகள் அட்டகாசம் புரிந்தனர்.

குறித்த சட்டத்தரணியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த அடாவடித்தனமான செயற்பாட்டிற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் தனது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்வதாக சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

தொழில் ரீதியாக ஓர் சட்டத்தரணியாக தனது கடமைகளைச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மேற்கொண்டு வரும் திரு.றோய் டிலக்சன் அவர்களின் ஆதனத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிராக உரிய தரப்புக்கள் அனைத்தும் உரிய நடவடிக்கைகளை எடுத்து சட்டத்தரணிகளின் தொழில் செய்வதற்குரிய பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டுமென்று கோருகின்றோம்.

பாதிக்கப்பட்ட எமது உறுப்பினர் திரு.றோய் டிலக்சன் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் பக்க பலமாக இருக்கும் என்பதோடு அவருக்கு நீதி கிடைப்பதற்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கி நிற்கின்றது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/சட்டத்தரணி-றோய்-டிலக்சனி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.