Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Featured Replies

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் தனக்கும் இடையில் இவ்வாறு தொலைபேசியில் உரையாடல் இடம்பெற்றதாக இந்தியப்பிரதமர் மோடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை ஜனாதிபதியுடன் சிறப்பான முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாகவும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக போராடுகின்றது.

இலங்கைய எமது அயல்நாடு என்ற வகையில் வைரஸ் தாக்கம் மற்றும் பொருளாதாரத் தாக்கத்திலிருந்து இலங்கை மேலெழுவதற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தவும், முதலீட்டு தொடர்புகளை மேலும் வலுப்படுத்தவும் இந்த கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு ஏற்பட்டதாக இந்தியப் பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/82576

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ரெளடிதான் 😜

இலங்கை இந்தியாவுக்கு சார்பாக மாறுமென்று மோடி பகல் கனவு காண்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ampanai said:

பொருளாதாரத் தாக்கத்திலிருந்து இலங்கை மேலெழுவதற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் அதிக வரி செலுத்தும் மாநிலம் தமிழ் நாடு. ஏழைகள் கூடிய மாநிலமும் அதேதான். அவர்கள் பொருளாதாரத்தில் மேலெழும்ப ஏதாவது செய்வதை விடுத்து, கோத்தாவிற்கு வால் பிடிக்கிறார்.  

2 minutes ago, satan said:

இந்தியாவில் அதிக வரி செலுத்தும் மாநிலம் தமிழ் நாடு. ஏழைகள் கூடிய மாநிலமும் அதேதான். அவர்கள் பொருளாதாரத்தில் மேலெழும்ப ஏதாவது செய்வதை விடுத்து, கோத்தாவிற்கு வால் பிடிக்கிறார்.  

தமிழ்நாடு அவரின் பிடியில் இருக்கிறது. பயப்பட அவசியம் இல்லை. கோட்டாவை நம்ப முடியாது என்று மோடி மாமாவுக்கு நன்றாக தெரியும். அதுதான் பட்டர் பண்ணி பார்க்கிறார். அவருக்கு சுற்றி உள்ள எல்லா நாடுகளாலும் பிரச்சினை.

  • கருத்துக்கள உறவுகள்

கலோ.. காலைல முட்டை ஆப்பமும் , சம்பலுமா..?

281.png

ஓகே.. உடம்ப பார்த்துக்குங்க ஜி..😊

  • தொடங்கியவர்

இந்தியா, சீனாவிடம் இருந்து உலக பொருளாதார பங்கில் ஒரு பகுதியை பெற முனைகின்றது. 

சீனா, இந்தியாவை ஒரு 'அமைதியில்லா' நாடாக வைத்திருந்து, மேற்குலக முதலீடுகளை தடுக்க முயலுகின்றது. அதற்கு, சிங்களத்தையும் சீன பயன்படுத்தும்.  

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ampanai said:

இந்தியா, சீனாவிடம் இருந்து உலக பொருளாதார பங்கில் ஒரு பகுதியை பெற முனைகின்றது. 

சீனா, இந்தியாவை ஒரு 'அமைதியில்லா' நாடாக வைத்திருந்து, மேற்குலக முதலீடுகளை தடுக்க முயலுகின்றது. அதற்கு, சிங்களத்தையும் சீன பயன்படுத்தும்.  

101 % தோழர்..👍

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை – இந்தியாவிடம் 8 ஆயிரத்து 360 கோடி ரூபா கேட்டுள்ளதாக தெரிவிப்பு

May 25, 2020

gottapaya-rajapaksha-modi.jpg

அன்னிய செலாவணி கையிருப்பை சரிசெய்வதற்காக இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ இந்தியாவிடம் 8 ஆயிரத்து 360 கோடி ரூபா கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இலங்கையில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.  இதன்போது கொரோனாவை கட்டுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதார பாதிப்பை சீர்செய்யவும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக மோடி உறுதியளித்திருந்தார்.

அதன்போது கோத்தாபய ராஜபக்ஸ கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் ஏற்பட்டுள்ள அன்னிய செலாவணி கையிருப்பு சரிந்து வருவதால், பின்னர் திரும்ப பெற்றுக்கொள்ளும் முறையில், இந்தியா 8 ஆயிரத்து 360 கோடி ரூபா வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சார்க் மாநாட்டின்போது, இந்தியாவிடம் கேட்டிருந்த 3 ஆயிரத்து 40 கோடி ரூபாவுடன் சேர்த்து இந்த பணத்தையும் வழங்குமாறு கோத்தாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை கட்டுமான பணியை விரைவுபடுத்துமாறு இந்திய நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோத்தாபய ராஜபக்ஸ மோடியிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #இலங்கை  #இந்தியா #அன்னியசெலாவணி #கோத்தாபய
 

http://globaltamilnews.net/2020/143627/
 

இந்தியாவை ஏமாற்றுவதில் கில்லாடிகளான சொறிலங்கா அரசு இந்தியாவை மீண்டும் ஏமாற்ற பிளான் போட்டிருக்கு!

  • தொடங்கியவர்
3 hours ago, கிருபன் said:

அன்னிய செலாவணி கையிருப்பை சரிசெய்வதற்காக இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ இந்தியாவிடம் 8 ஆயிரத்து 360 கோடி ரூபா கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா ஒருநாள் முழுமையாக சிங்களத்தை உணரும்பொழுது, அதவது சிங்களம் சீனாவின் பக்கமே அறுதியாக நிற்கும் என்பதை உணரும்பொழுது, இலங்கையும் ஒரு பாகிஸ்தானாக, தலையிடி தேசமாக மாறி இருக்கும். 

 

On 24/5/2020 at 03:02, satan said:

இந்தியாவில் அதிக வரி செலுத்தும் மாநிலம் தமிழ் நாடு. ஏழைகள் கூடிய மாநிலமும் அதேதான். அவர்கள் பொருளாதாரத்தில் மேலெழும்ப ஏதாவது செய்வதை விடுத்து, கோத்தாவிற்கு வால் பிடிக்கிறார்.  

தவறான புள்ளிவிபரம். குறிப்பாக ஏழைகள் கூடிய மாநிலம் என்பது மிகவும் தவறு. இன்னமும் கூறினால் இந்தியாவில் அதிகம் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்று தான் தமிழ் நாடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.