Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போருக்குத் தயாராகுமாறு சீன ஜனாதிபதி இராணுவத்திற்கு கட்டளை

Featured Replies

உலகமே கொரோனாவால் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீன  ஜனாதிபதி ஜி ஜின்பிங் போருக்குத் தயார் நிலையில் இருக்கும்படி தனது இராணுவத்தினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் மூன்றரை இலட்சம் பேரை பலி கொண்டுள்ள கொரோனா வைரசுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்கா பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான சொற்போர் வலுத்துள்ளது.

இன்னொரு புறம் இந்திய எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்திருப்பதால் இந்தியாவும் படைப்பலத்தை அதிகரித்து வருகிறது.

இதனால் லடாக் எல்லைக் கோடு அருகே கடந்த 22 நாட்களாக பதற்றநிலை நீடித்து வருகிறது. சீனப்படைகளும் இதுவரை பின்வாங்குவதாக தெரியவில்லை.

கொரோனா வைரசால் உலகமே ஆடிப்போயிருக்கும் நிலையிலும் படைகளை தயார் நிலையில் இருக்கும்படி சீன ஜனாதிபதி ஜின்பிங் கட்டளையிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதி மக்கள் விடுதலை இராணுவத்தின் கூட்டத்தில் உரையாற்றும் போது இராணுவத்தை பலப்படுத்தி போருக்குத் தயாராக இருக்கும்படி கூறியதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/82834

 

  • கருத்துக்கள உறவுகள்

சீனா ஹிந்தியாவை பல வழிகளிலும் நாசம் பண்ண கணக்குப் போட்டுத்தான் செயற்படுகிறது போல் தெரிகிறது. போர் வருதோ இல்லையோ.. கொரோனாவால்.. பொருண்மிய ரீதியில் அதளபாதளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஹிந்தியாவுக்கு சீனா நிச்சயம் ஒரு உச்சந்தலை சம்மட்டி அடி கொடுக்கும். 

பிராந்தியத்தில் சீனாவுக்கு ஏட்டிக்குப்போட்டியான ஹிந்தியாவின் நகர்வுகளை கவனித்த பின் கொரோனா பாதிப்பின் விளைவையும் கணக்குப் பண்ணி சீனா நகர்த்தும் காய் நகர்த்தலே இது.

மோடி மாமா உள்வீட்டிலையே சுரண்டிப் பெயின்ட் அடிக்க வேண்டியான். சீனா ஹிந்தியாவைச் சுரண்டி உலகுக்கே பெயின்ட் அடிக்கப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

 

34 minutes ago, ampanai said:

இன்னொரு புறம் இந்திய எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்திருப்பதால் இந்தியாவும் படைப்பலத்தை அதிகரித்து வருகிறது.

இதனால் லடாக் எல்லைக் கோடு அருகே கடந்த 22 நாட்களாக பதற்றநிலை நீடித்து வருகிறது. சீனப்படைகளும் இதுவரை பின்வாங்குவதாக தெரியவில்லை.

👍..👌

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே கொறொனாவால் உலகு பெரும் பொருண்மிய நெருக்கடியை சந்தித்துவரும் சூழலில் மும்முனை யுத்தமேகம் சீனாவின் தரை மற்றும் கடல்வழியாக நகர்வதுபோல் தோன்றுகிறது. யுத்தம் நடந்தால் தற்போதிருக்கும்  உலகத்தின் தளம்பல் நிலையில் மேலதிக வீச்சாக மேலுமொரு பொருண்மியத் தாழ்வுநிலை உலகை உலுப்பலாம். இது தேவையா என்பதை நாடுகள் சிந்திக்க வேண்டும். 

இவர்கள் முவரிடமும் ஒரு வினா. அதாவது  தேசத்தைப் பறித்தெடுக்க முனைவதைத் தடுக்கவும், மக்களைக் காக்கவும் ஆயுதம் ஏந்துவது தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம்  என்றால்  நீங்கள் செய்வது என்ன? இன்னொரு நாட்டை, வளங்களை ஆக்கிரமிப்பது பயங்கரவாதமில்லையா? ஏறக்குறைய ISIS போல் நடக்க முயல்வது எப்படி பயங்கரவாதமில்லையென்று  கூறமுடியுமா?

Edited by nochchi

  • தொடங்கியவர்

இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்ட பின்னராக, அதன் வெளிவிவகார கொள்கையில் நீண்ட கால அடிப்படையில் சீனா ஒரு எதிரியாக நிச்சயமாக பார்க்கப்படும்.

சீனாவின் முன்னைய தலைவர் அதை ஒரு பொருளாதார வல்லரசாக மாற்ற திட்டங்களை போட்டார். அந்த வெற்றியில், தற்போதைய சீன கம்னியூஸ்ட்  ஆட்சியாளர்கள், தங்களை முதலில் ஆசியாவிலும் பின்னர் உலகிலும் வல்லரசாக முயன்று வருகின்றனர். 

இடையில் வந்தது/உருவாக்கப்பட்டது கோவிட் 19. எதுவானாலும், அது சீனாவின் திட்டங்களில் சடுதியான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. சீனா, தான் முன் வைத்த காலை பின் வைக்க தயாரில்லை - ஆசியாவில் ஒரு வல்லரசே இருக்க முடியும். 

இந்தியா தான் அதை ஒன்றில் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லை .....     

  • தொடங்கியவர்
6 hours ago, nochchi said:

இவர்கள் முவரிடமும் ஒரு வினா. அதாவது  தேசத்தைப் பறித்தெடுக்க முனைவதைத் தடுக்கவும், மக்களைக் காக்கவும் ஆயுதம் ஏந்துவது தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம்  என்றால்  நீங்கள் செய்வது என்ன? இன்னொரு நாட்டை, வளங்களை ஆக்கிரமிப்பது பயங்கரவாதமில்லையா? ஏறக்குறைய ISIS போல் நடக்க முயல்வது எப்படி பயங்கரவாதமில்லையென்று  கூறமுடியுமா?

வளங்கள் என பார்க்கும் பொழுது தென் சீன கடல், ஆர்டிக் இந்த இரண்டிலும் வல்லாதிக்க நாடுகள் போட்டி இடுகின்றன. 

சீனாவின் குறியாக இருக்கும் வளம் - அமெரிக்க டாலர். அதனை உலகின் வர்த்தகத்தில் முதன்மை இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.