Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாபயவின் படுமோசமான செயல்களை கண்டித்து விரைவில் காட்டமான அறிக்கை

Featured Replies

"பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். இதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ராஜபக்ச அரசின் இந்த படுமோசமான செயல்களைக் கண்டித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டமான அறிக்கையை விரைவில் நாம் வெளியிடவுள்ளோம்."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான, நீதியான, சட்டத்தை மதிக்கும் சமூகம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். அதில் முந்நாள், இந்நாள் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளை மாத்திரம் உள்ளடக்கிய 13 பேரை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். அதிலும் பௌத்த மதம் சார்ந்த பிக்குகள், படை அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளடங்கலாக 11 சிங்களவர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். ஒரு தமிழரோ, ஒரு முஸ்லிமோ இல்லாமல் இந்தச் செயலணியை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உருவாக்கியுள்ளார்.

இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், ஜனாதிபதி கோட்டாபயவின் இந்த சர்வாதிகார ஆட்சி முறைக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் காட்டமான அறிக்கையை வெளியிடவுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/144690

  • தொடங்கியவர்

அண்மையில் சகுனி சம்மந்தனின் அறிக்கைகள் விரைவில் ... விரைவில்..... என்று வெளிவருகிறது.

ஏன் உடன் வெளியிட முடியாது?

இது சிங்கள அரச கொலைகாரர்களுடன் பேரம் பேசி தங்களுக்கு சலுகைகளை பின்கதவால் பெறும் தந்திரம்.

சலுகைகள் கிடைத்தால் அறிக்கைகள் வரவே வராது.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவமயமாகும் ஸ்ரீலங்கா! சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்

இராணுவமயமாகும் ஸ்ரீலங்கா! சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்

பாதுகாப்புப் படையினர் ஆதிக்கம் செலுத்தும வகையில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கான பிரகடனத்தை ரத்துச்செய்யவேண்டும் என்று ஐஎப்ஜே என்ற சர்வதேச அறங்கூறுநர் சபை கோரியுள்ளது.

இந்த செயலணியில் முழுமையாக இராணுவ, உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த செயலணிக்கு தலைமை தாங்க உள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி செயலணி அமைப்பானது, தனது அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்துவதற்காக கொரோனா வைரஸை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் இலங்கை அரசாங்கத்தின் மற்றும் ஒரு செயலாகும்' என்று ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான சர்வதேச அறங்கூறுநர் சபையின் பிராந்திய இயக்குனர் ஃபிரடெரிக் ராவ்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க்குற்றவாளிகள் உட்பட்ட படைத்தரப்பின் பலரை உள்ளடக்கியுள்ள இந்த செயலணிக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் இந்த செயலணி, பேச்சு சுதந்திரம் மற்றும் அரசியல் விமர்சகர்களை அடக்குவதற்கு மற்றொரு கருவியாக பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை என்று சர்வதேச அறங்கூறுநர் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை நீதித்துறை அல்லது நாடாளுமன்ற மேற்பார்வை பற்றி எந்த கரிசனையில் இல்லாமல், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களுக்கு ஏற்ப இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது, 'என்று ராவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி செயலணியை நிறுவும் சிறப்பு வர்த்தமானியை ரத்துச்செய்யவேண்டும் என்று சர்வதேச அறங்கூறுநர் சபை கோரியுள்ளது.

https://www.ibctamil.com/

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 எதற்கும் அறிக்கை வந்ததும் வெளியால வருவம்..

Imj.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

அதிகார மமதையில் தானே வலிய மாட்டிக்கொள்ளப் போறார். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

அதிகார மமதையில் தானே வலிய மாட்டிக்கொள்ளப் போறார். 

மாட்டினாலும் வெளியே கொண்டுவரத்தான் எங்கள் தமிழ்த் தலைவர்கள் இருக்கிறார்களே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

மாட்டினாலும் வெளியே கொண்டுவரத்தான் எங்கள் தமிழ்த் தலைவர்கள் இருக்கிறார்களே.

குதிரைகளுக்குப்  பதிலாக மனிதர்களைக் கொண்டிழுத்தால் அத்தோடு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். 😏

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

மாட்டினாலும் வெளியே கொண்டுவரத்தான் எங்கள் தமிழ்த் தலைவர்கள் இருக்கிறார்களே.

அந்தக் குதிரைகளை நம்பித்தான் சிங்களம் சர்வதேசத்துடன் சொக்கட்டான் ஆடுது. ஒன்றா? இரண்டா? ஒன்று படுத்தாலும், மற்றது இழுத்து காப்பாற்றும் என்கிற துணிவு, அனுபவம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.