Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

June 19, 2020

fg-3.jpeg

அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில்  துப்பாக்கியால் சுட்டு  மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனைகாவல் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில்    இடம்பெற்றுள்ளது.

இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர்  யாழ்ப்பாணம் நெல்லியடியை  சேர்ந்த   கமல்ராஜ் (21) என்ற   அரச புலனாய்வு உத்தியோகத்தராவார்.  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில்  காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (பிஸ்டல்) கைதுப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக  கல்முனை  காவல்துறையினர் தெரிவித்தனர். #புலனாய்வுஉத்தியோகத்தர்  #துப்பாக்கி  #மரணம் #நெல்லியடி  #கமல்ராஜ்

police-1-800x360.jpeg

fg-1.jpeg

police-2-800x360.jpegpolice-4-800x360.jpeg

 

http://globaltamilnews.net/2020/145241/

  • கருத்துக்கள உறவுகள்

கொலை என்றும் ,காதல் பிரச்சனை என்றும் சொல்லினம் 
 

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள இரண்டாவது படத்தில் முன்னாள் அதிபர் மைத்திரி அவர்களுடன் மாவையர் சித்தார்த்தன் ஆகியோர் அவருடன் காணப்படுகின்றனர் இப்போ தெரிகிறதா இவர்கள் எல்லோரும் யார் என. 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Elugnajiru said:

மேலே உள்ள இரண்டாவது படத்தில் முன்னாள் அதிபர் மைத்திரி அவர்களுடன் மாவையர் சித்தார்த்தன் ஆகியோர் அவருடன் காணப்படுகின்றனர் இப்போ தெரிகிறதா இவர்கள் எல்லோரும் யார் என. 

இது யாழ்ப்பாணத்திற்கு மைத்திரி போன போது எடுத்த படம் இரு நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இனி கொலையுதிர் காலம் விபத்துக்கள் தற்கொலைகள் இனி கூடும் .

ஆட்சி புரிபவர் யார் என்று தெரியும் தானே .

2 hours ago, பெருமாள் said:

இனி கொலையுதிர் காலம் விபத்துக்கள் தற்கொலைகள் இனி கூடும் .

ஆட்சி புரிபவர் யார் என்று தெரியும் தானே .

முதல் கேள்வி இந்த 21 வயது இளைஞரை தமிழருக்கு விரோதமான இலங்கை அரச பாதுகாப்பு தரப்பில் இணைய தூண்டியது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

என்னவென்றே சிந்திக்கத் தெரியாத வயது....அதில்  சி .ஐ.டி ..வேலை....அதற்குள்  தற் கொலை....நேற்று மட்டும் 4 இளையவர் பலி நம்மினத்தில்...என்ன நடக்குது அங்கு..

9 hours ago, Elugnajiru said:

மேலே உள்ள இரண்டாவது படத்தில் முன்னாள் அதிபர் மைத்திரி அவர்களுடன் மாவையர் சித்தார்த்தன் ஆகியோர் அவருடன் காணப்படுகின்றனர் இப்போ தெரிகிறதா இவர்கள் எல்லோரும் யார் என. 

எல்லாரும் ஒன்டுக்குள்ள ஒன்று

இது கொலையா இருக்கும் என தான் நான் நினைக்கிறன்  

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பின் புதிய வடிவம். எப்படியும் இந்தக் கொலைகாரரின் ஆட்சி முடிவுக்கு வருமுன், தமிழினம் அழிக்கப்பட்டுவிடும். இல்லையேல் இவர்கள் அரசியலில் இருந்து அழிக்கப்படுவார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Elugnajiru said:

மேலே உள்ள இரண்டாவது படத்தில் முன்னாள் அதிபர் மைத்திரி அவர்களுடன் மாவையர் சித்தார்த்தன் ஆகியோர் அவருடன் காணப்படுகின்றனர் இப்போ தெரிகிறதா இவர்கள் எல்லோரும் யார் என. 

கமல்ராஜ் பிறந்தது 1999 இல். அவருக்கு பத்து வயது ஆகும்போதே போராட்டம் முடிந்துவிட்டது. 

சிறந்த தடகளவீரனாக இருந்ததால் மைத்திரியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தேசிய புலனாய்வுத்துறையிலும் வேலை கிடைத்தது.

இப்போதைய இளைஞர்கள் உலகம் முழுவதும் வியாபித்துள்ள நுகர்வோர் கலாச்சாரத்திற்குள் மூழ்கி வாழ்வில் நல்ல நிலைக்கு வர பணம் முக்கியம் என்பதை உணர்ந்துள்ளார்கள். எனவே அவர் தேசிய புலனாய்வுத் துறையில் வேலை செய்ததை புரிந்துகொள்ளலாம்.

ஆனால் என்ன காரணத்திற்காக இந்த மரணம் நடந்தது என்று தெரியவில்லை.

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.