Jump to content

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த நாடுகளுக்கு 20 வயதை கடந்து வந்தவர்கள் அனைவருக்குமே சாதிபாகுபாடு என்பது மனதில் உறங்கி கொண்டே இருக்கிறது, ஆனால் அதை வெளிப்படையாக காட்டமுடியாததுக்கு இரண்டே காரணங்கள்தான்.

1)  எந்த ஒரு மனிதனிலும் தங்கி எவரும் இல்லை, எவருக்கும் சலாம் போடவேண்டிய அவசியமில்லை,

2) அப்படி திமிர்காட்டி நேரடி ஒடுக்குமுறைகாட்டினால் சட்டம் எந்த பாகுபாடும் பார்க்காமல் குற்றவாளிகள் மீது மட்டுமே  நடவடிக்கை எடுக்கும். அங்கே தனிமனிதர்கள் தமது அந்தஸ்தை காண்பித்து சட்டத்தை வளைத்து தமக்கு சாதகமாய் ஆக்கமுடியாது.

தாயகத்தில் சாதிய செல்வாக்கில் உள்ளவர்கள் தமது செல்வாக்கு அந்தஸ்தை பாவித்து காவல்துறையை தமது வீட்டுக்கே கூட்டி வந்து விருந்து வைப்பார்கள், அல்லது தனிப்பட்ட ரீதியில் கவனிப்பார்கள், அங்கே ஒடுக்கப்பட்ட ஏழைகள் பக்கம் இருக்கும் நீதி சபையேறாது.

புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறையாக பிறந்தவர்களிடம் 50% சாதி உணர்வு இருக்கும் அது அவர்களாய் உணர்ந்ததல்ல பெற்றோர்களால் அறிவுறுத்தப்பட்ட வளர்ப்பு அது.,

அதுக்கடுத்த தலைமுறையில் 75% சாதி இல்லாமல் போகும் ,

அதுக்கடுத்த தலைமுறையில் சாதி மட்டுமல்ல தமிழும் இல்லாமல் போகும்.

அதுக்கு அடுத்த அடுத்த தலைமுறைகள் எப்படி தமது மூதாதையர்கள் வெளிநாடுகளுக்கு வந்தார்கள் என்ற வரலாற்றையே குத்து மதிப்பாகதான் அறிந்து வைத்திருப்பார்கள்.

ஒரு கட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் சாதி முற்றாகவே இல்லாமல் போகும்.

ஆனால் எத்தனை தலைமுறைகள் அல்ல நூற்றாண்டுகள் ஆனாலும் தாயகத்தில் சாதிவெறி என்பது இருந்தே ஆகும், இப்போது இருப்பதைவிட அது பல மடங்கு அதிகரித்தும் செல்லவும் வாய்ப்பு உண்டு.

சாதி தவறு மனிதனை பிரித்து பார்க்ககூடாது, சாதியில் ஒன்றுமில்லை என்று குரல் எழுப்புகிறவர்களில் 90% வீதத்திற்கு அதிகமானோர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்பதே கசப்பான உண்மை.

என்றைக்கு உயர் சாதியென்று தம்மை கருதிகொள்பவர்களில் 90% வீதம்பேர் சாதி தவறென்று  குரல் கொடுக்கிறார்களோ அன்றுதான் சாதிய ஒழிப்பு சாத்தியப்படும்.ஆனால் அதற்கான சாத்தியங்கள் ஒருபோதுமேயில்லை.

பையன் இங்கே குறிப்பிட்ட  மீனவர் சாதி என்பது வெள்ளாளர்களுக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள்,அதனால் போனால் போவுதென்று சகித்து கொண்டிருப்பார்கள்.

இதுவே அதற்குகீழ் உள்ள மரமேறுபவர்கள்,மூட்டை சுமப்பவர்கள், முடி வெட்டுபவர்கள், சலவை தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை காதலித்திருந்தால் கண்டிப்பா ஒரு பிரளயமே நடந்திருக்கும், ஆக குறைந்தது பிள்ளைகளுடனான உறவையாவது முறித்து கொண்டிருப்பார்கள்.

 

தாயகத்தை பொறுத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள் சாதிகளை ஒழிப்பினை ஒரு போதும் சந்திக்க முடியாவிடினும் தூர நின்றுகொண்டே ஒரு மறைமுக சமத்துவத்தை ஏற்படுத்த மூன்று விஷயங்கள்  மட்டுமே அவர்களுக்கு கை கொடுக்கும் 

அவை:

கல்வி

பொருளாதாரம்.

கண்ணியமான பழக்க வழக்கங்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, valavan said:

புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறையாக பிறந்தவர்களிடம் 50% சாதி உணர்வு இருக்கும் அது அவர்களாய் உணர்ந்ததல்ல பெற்றோர்களால் அறிவுறுத்தப்பட்ட வளர்ப்பு அது.,

அதுக்கடுத்த தலைமுறையில் 75% சாதி இல்லாமல் போகும் ,

 

வளவன், உங்கள் கருத்தோடு ஒத்துக்கொள்ள முடிகின்றது 

ஆனால் தரவுகள் இல்லாமல் வீதங்களை சொல்லமுடியாது. கள ஆய்வு செய்து தரவுகளைக் வைத்துத்தான் நம்பகமான நம்பர்களைச் சொல்லலாம். இல்லாவிட்டால் Finger in the Air Estimate தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இருக்கலாம் ஆனால் பெற்றோரின் விருப்புவெறுப்புக்களும் அவர்களின் கௌரவங்களும் அதில் முக்கிய இடம் வகிக்கும்.

புரிகின்றது விசுகு ஐயா😀

18 வயது தாண்டிய பிள்ளை என்ன உயர்கல்வியை படிக்கவேண்டும் என்று தானே தீர்மானிக்கின்றது. அந்தப் பிள்ளையே என்ன வேலை செய்யவேண்டும் என்று தீர்மானித்து தன் வாழ்வை, எதிர்காலத்தை திட்டமிடுகிறது. இதற்குள் பெற்றோர் தமது விருப்பங்களைச் சொல்லலாம், ஆனால் பொதுவாகத் திணிப்பதில்லை. அப்படித் திணித்து படிப்பு பாழ்பட்ட சிலரையும் பார்த்திருக்கின்றேன்.

படித்து முடித்து வாழ்வைப் பற்றி சுயமாக முடிவெடுக்கக்கூடிய பிள்ளைகளை திருமணம் என்று வரும்போது பெற்றோர் தமது வரட்டுக் கெளரவத்திற்காக வேறுவிதமான முடிவுகளை emotional blackmail மூலம் செய்யப்பண்ணி அவர்களின் வாழ்க்கையைக் கெடுத்ததையும் அறிந்திருக்கின்றேன். 

எனவே, பிள்ளைகளை உனது சொந்தக்காலில் நில், சரி பிழைகளை அறிந்துகொள், தேவையென்றால் உதவிக்கும், ஆலோசனைக்கும் பெற்றோர் இருக்கின்றார்கள் என்று independent ஆக வளர்ப்பதுதான் மேற்குநாடுகளில் பொருந்தும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து இருக்கும் நாடுகளில்  சாதியம் அதிகம் பார்ப்பதில்..
முதலாம் இடம் கனடா
இரண்டாம் இடம் இங்கிலாந்து
மூன்றாமிடம் பிரான்ஸ் அல்லது ஜேர்மனி.

கலியாண புரோக்கரிடம் மாப்பிளை பொம்புளை விசாரிச்சால் புரோக்கர் கேட்பது முதலில் சாதியைத்தான்.

இலங்கையில் சாதியை ஒரு காலமும் அழிக்க முடியாது. இன்றைய தலைமுறையினரிடம் நன்றாகவே ஊறி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து இருக்கும் நாடுகளில்  சாதியம் அதிகம் பார்ப்பதில்..
முதலாம் இடம் கனடா
இரண்டாம் இடம் இங்கிலாந்து
மூன்றாமிடம் பிரான்ஸ் அல்லது ஜேர்மனி.

கலியாண புரோக்கரிடம் மாப்பிளை பொம்புளை விசாரிச்சால் புரோக்கர் கேட்பது முதலில் சாதியைத்தான்.

இலங்கையில் சாதியை ஒரு காலமும் அழிக்க முடியாது. இன்றைய தலைமுறையினரிடம் நன்றாகவே ஊறி விட்டது.

இது புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களின் சனத்தொகை வரிசைப் பட்டியல்.!

சாதியம் போன்ற பிற்போக்குத்தனங்களை தூக்கிப் பிடிப்பவர்களின் வீதப்பட்டியல் இப்படி இருக்காது.

30 வருட போராட்ட காலத்தில் தேசியம் என்று போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள் உள்ளேயே சாதீயம் கனன்றுகொண்டுதான் இருந்திருக்கின்றது என்பது இந்தத் திரியில் வந்த சிலரின் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது.🤨

 

1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

கனடா?

ஐந்தாறு இலட்சம் பேர் இருந்தால் தொகைக் கணக்கில் முன்னுக்கு வரலாம் என்ற ஊகம்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

வளவன், உங்கள் கருத்தோடு ஒத்துக்கொள்ள முடிகின்றது 

ஆனால் தரவுகள் இல்லாமல் வீதங்களை சொல்லமுடியாது. கள ஆய்வு செய்து தரவுகளைக் வைத்துத்தான் நம்பகமான நம்பர்களைச் சொல்லலாம். இல்லாவிட்டால் Finger in the Air Estimate தான்.

இதில் தரவுகள் கள ஆய்வுகள் என்று  என்ன இருக்கிறது கிருபன்,

நாமேதான் தரவுகள், நாமேதான் சாதிய  களத்தில் நிற்பவர்கள்.

இந்த சமூக வலிகளுக்கு வக்கீல்களும் நாங்கள்தான், நீதிபதிகளும் நாங்கள்தான்,

ஆனால் நியாயமான தீர்ப்பு மட்டும் ஒருபோதும் வராது.

இங்கே  சாதியம் என்று சொல்லும்போது உயர் சாதியை சேர்ந்தவர்கள்தான் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்களை கொடுமை படுத்துகிறார்கள்  மனதை உடைக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.

மீன் பிடிப்பவரா இல்லை அவர்கள் பிடித்த மீனை வாங்கி விறபவர்களா உயர்ந்தவர்கள்  என்ற சாதி போராட்டம்..

குப்பை அள்ளுபவரா  ஆஸ்பத்திரிகளில் மனித கழிவுகளை அகற்றுபவரா 

உயர்ந்த சாதி எனும் போராட்டம்..

துணி துவைப்பவரா மயிர் வெட்டுவரா  உயர்ந்தவர்  எனும் சாதி போராட்டம்,

மரமேறுபவரா மூட்டை சுமப்பவரா சாதியில் பெரியவர் என்ற போராட்டம்...

சாதி போராட்டம் என்பது உயர்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலானதல்ல..

தாழ்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலான போரும் கூட.

 

புலம்பெயர் தேசத்தில் ஏறக்குறைய  பெற்றோர்கள் நினைத்தால்கூட  பிள்ளைகள் யாருடன் பழகவேண்டும் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது.

ஏறக்குறைய அவர்கள் விரும்பியவருடன் சாதியை கடந்து அல்ல நாடுகளை கடந்தே டேற்றிங் போகிறார்கள்.

இதன் தலைமுறை கடந்த தொடர்ச்சியாக  ஈழதமிழர் வழி வந்த வாரிசுகள் ஆபாச படங்களில்கூட நடிப்பார்கள்.

அதை தவறு என்று யாரும் சொன்னால் சட்டம் குற்றம் சொல்பவர்களை மட்டுமே தண்டிக்கும்.

அதைதான் வீதங்களில் ஒப்பிட்டு சொன்னேன்..

முத்தாய்ப்பா சொல்லவேண்டுமென்றால் சாதிய கொடுமை என்பது உயர்ந்த சாதி தாழந்த சாதி சம்பந்தப்பட்ட ஒரு விசயம் அல்ல,

தாழ்ந்த சாதி தாழ்ந்த சாதிக்கும் இடையில் சம்பந்தப்பட்ட விசயம்கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கனடா?

என்ன நம்ப முடியேல்லையோ?

உங்கை கனடாவிலை ஒரு பத்து பொடியன்களுக்கும் பத்து பெட்டையளுக்கும் கலியாணம் பேசிப்பாருங்கோ அப்ப தெரியும் சாதி வக்கிரம் எங்கை பதுங்கி இருக்கெண்டு...

இல்லாட்டி ஒரு கலியாண புரோக்கருக்கு உதவியாளராய் கொஞ்ச நாளைக்கு இருந்து பாருங்கோ அப்ப தெரியும் கூத்து...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

 

30 வருட போராட்ட காலத்தில் தேசியம் என்று போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள் உள்ளேயே சாதீயம் கனன்றுகொண்டுதான் இருந்திருக்கின்றது என்பது இந்தத் திரியில் வந்த சிலரின் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது.

களத்தில் இறங்கி மக்களோடு இல்லாமல் உங்களால் இப்படி எழுத வருகிறது. ஆனால் வயதும் அனுபவமும் உள்ள கள உறவுகளின் கருத்தை புரிந்து கொள்ளாமல் திசை திருப்புகிறீர்கள். நீங்கள் உண்மையில் இனியாவது உண்மையை தெரிந்து கொள்ள விரும்பினால் ஒரு திருமண புரோக்கரை தொடர்பு கொள்ளவும். (யாழ் களத்தில் சகாரா இருக்கிறார்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

என்ன நம்ப முடியேல்லையோ?

உங்கை கனடாவிலை ஒரு பத்து பொடியன்களுக்கும் பத்து பெட்டையளுக்கும் கலியாணம் பேசிப்பாருங்கோ அப்ப தெரியும் சாதி வக்கிரம் எங்கை பதுங்கி இருக்கெண்டு...

இல்லாட்டி ஒரு கலியாண புரோக்கருக்கு உதவியாளராய் கொஞ்ச நாளைக்கு இருந்து பாருங்கோ அப்ப தெரியும் கூத்து...:cool:

சாதி உதட்டளவில் இல்லையென்றாலும் உள்ளத்திலிருந்து புகையும் ஓர் தீ தான் திருமணம் வரும் போதும் காதல் வரும் போதும் சண்டைவரும் எரிய ஆரம்பிக்கும் அழிக்க முடியாது 

கிழக்கில் கேணல் ரமணனால் 20 கோவில்களுக்கு மேல் இடிக்கப்பட்டது காரணம் சாதிக்கொரு கோவில் திருவிழா தேர் என புலிகள் காலத்தில் கொஞ்சம் தணிந்து இருந்தாலும் மீண்டும் இலங்கையில் புகைய ஆரம்பித்து இருக்கிறது என்று சொல்லலாம் .

வடகிழக்கில் என்பதை விட இலங்கையில் சுமார் 50 மேற்பட்ட சாதிகள் இருந்ததாக ஏதோ ஓர் புத்தகத்தில் படித்த ஞாபகம் கிடைத்தால் அதன் பக்கத்தை இணைக்கிறேன்.

சாதியும் ஓர் வைரஸ்தான் அழிக்க  முடியாது செய்யும் தொழில்களை வைத்து சாதியை வகுத்துவிட்டானுகள் இன்னும் அது இருக்கிறது .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இது புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களின் சனத்தொகை வரிசைப் பட்டியல்.!

சாதியம் போன்ற பிற்போக்குத்தனங்களை தூக்கிப் பிடிப்பவர்களின் வீதப்பட்டியல் இப்படி இருக்காது.

30 வருட போராட்ட காலத்தில் தேசியம் என்று போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள் உள்ளேயே சாதீயம் கனன்றுகொண்டுதான் இருந்திருக்கின்றது என்பது இந்தத் திரியில் வந்த சிலரின் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது.🤨

 

ஐந்தாறு இலட்சம் பேர் இருந்தால் தொகைக் கணக்கில் முன்னுக்கு வரலாம் என்ற ஊகம்தான். 

 இன்று அந்த தேசியம் உயிர்ப்போடு இருந்திருந்தால் இந்த திரி ஆரம்பித்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது.
சாதீயம் தற்கொலை செய்ய பாதி தூரம் சென்றிருக்கும்.

அவர்கள்.....

எதை தொடக்கூடாதோ அதை தொடவில்லை   (ஆன்மீகம், கோவில்கள்)
எதை தொட வேண்டுமோ அதை தொட்டார்கள்  (சாதி,சீதனம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

அதன்  தாக்கத்தை உணராமல்

அல்லது  இதுவரை அனுபவப்படாததால் 

இப்படி  எழுதுகிறீர்கள்  என்று  தெரிகிறது?

உண்மையில் மாற்றுத்திருமணம்  என்று புறப்பட்ட

அல்:லது தலையை  கொடுத்த  பலரும் சொல்லும்  வார்த்தை

கொஞ்சகால இந்த வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுபோவதற்கு 

தேவையற்று இதற்குள் போய் முட்டி இழுபட்டபடி

 சந்தோஷத்தை தொலைத்து திரிகிறோம் பல வருத்தங்களுடன்.....😡

தாயகத்தில் இவ்:வாறு போராளிகளை  திருமணம்  செய்து விதவையான  பெண்களும்  இவ்வாறு தான்  ஒதுக்கப்பட்டுக்கொண்டிருப்பதை  கேள்விப்படுகிறோம்😡😡😡

தம்பி செய்தது வேறு சாதி பெண்ணை, வீட்டில் தான் இருக்கின்றா பிள்ளைகளுடன், இதுவரை எந்த பிரச்சனையுமில்லை. என் பிள்ளைகளுக்கும் நான் பார்க்கமாட்டேன், அவர்களின் விருப்பம். நான் ஒன்றிரண்டு அல்ல ஐயர் உட்பட பலருடன் நட்பாக பழகியுள்ளேன்.  அதனால் எனக்கு இந்த தாக்கமில்லை. இனியும் இருக்க போவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

 இன்று அந்த தேசியம் உயிர்ப்போடு இருந்திருந்தால் இந்த திரி ஆரம்பித்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது.
சாதீயம் தற்கொலை செய்ய பாதி தூரம் சென்றிருக்கும்.

அவர்கள்.....

எதை தொடக்கூடாதோ அதை தொடவில்லை   (ஆன்மீகம், கோவில்கள்)
எதை தொட வேண்டுமோ அதை தொட்டார்கள்  (சாதி,சீதனம்)

அவர்களும் சாதிப்பிரச்சினை சார்ந்து அமைப்புக்குள் பின்பற்றிய அளவுக்கு மக்களிடம் அமுலாக்கவில்லை காரணம் அதன் வீரியத்தை அறிந்திருந்தார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விசுகு said:

உண்மையை தெரிந்து கொள்ள விரும்பினால் ஒரு திருமண புரோக்கரை தொடர்பு கொள்ளவும்

முதலிலே எழுதியிருக்கின்றேன். கலியாணப் புரோக்கர்களுடன் பேசி திருமணம் பேசும் செய்யும் தேவை ஏற்பட்டதில்லை. அதற்கு எளிமையான காரணம் சாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் மூடப்பழக்கத்தில் நம்பிக்கை இல்லை.  எனவே இந்தத் தேவை இனியும் வராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

களத்தில் இறங்கி மக்களோடு இல்லாமல் உங்களால் இப்படி எழுத வருகிறது. ஆனால் வயதும் அனுபவமும் உள்ள கள உறவுகளின் கருத்தை புரிந்து கொள்ளாமல் திசை திருப்புகிறீர்கள். நீங்கள் உண்மையில் இனியாவது உண்மையை தெரிந்து கொள்ள விரும்பினால் ஒரு திருமண புரோக்கரை தொடர்பு கொள்ளவும். (யாழ் களத்தில் சகாரா இருக்கிறார்)

நித‌ர்ச‌ன‌ உண்மையான‌ க‌ருத்து விசுகு அண்ணா ,

பெய‌ர் எழுத‌ விரும்ப‌ல‌ உங்க‌ளுக்கு தெரிந்த‌ யாழ் க‌ள‌ உற‌வு நீங்க‌ள் சொன்ன‌த‌ தான் போனில் க‌தைக்கும் போது சொன்ன‌வ‌ர் என‌க்கு கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முத‌ல்  , அந்த‌ யாழ் க‌ள‌ உற‌வு இந்த‌ திரியில் எழுதிட்டு தான் இருக்கிறார் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2020 at 08:26, பையன்26 said:

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் சாதி‌ இல்ல‌ த‌மிழீழ‌த்தில் இத‌ என் க‌ண்ணால் பார்த்து இருக்கிறேன் சிறு வ‌ய‌தில் , 

எல்லா புக‌ழும் த‌லைவ‌ர் ஒருவ‌ருக்கே 🙏

 

35 minutes ago, விசுகு said:

அவர்களும் சாதிப்பிரச்சினை சார்ந்து அமைப்புக்குள் பின்பற்றிய அளவுக்கு மக்களிடம் அமுலாக்கவில்லை காரணம் அதன் வீரியத்தை அறிந்திருந்தார்கள்

 

21 minutes ago, பையன்26 said:

நித‌ர்ச‌ன‌ உண்மையான‌ க‌ருத்து விசுகு அண்ணா ,

பெய‌ர் எழுத‌ விரும்ப‌ல‌ உங்க‌ளுக்கு தெரிந்த‌ யாழ் க‌ள‌ உற‌வு நீங்க‌ள் சொன்ன‌த‌ தான் போனில் க‌தைக்கும் போது சொன்ன‌வ‌ர் என‌க்கு கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முத‌ல்  , 

 

ஒரே குழப்பமாக இருக்கு🤔🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

 

 

 

கிருப‌ன் அண்ணா , நான் த‌மிழீழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌த்தில் சாதி இல்லை என்று தான் எழுதினேன் , புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ பிற‌க்கு என்னோடு ப‌டிச்ச‌ ந‌ண்ப‌னிட‌ம் த‌மிழீழ‌த்தில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை கேட்டேன் , அவ‌ன் ஒழித்து ம‌றைக்காம‌ எல்லா உண்மையும் சொன்னான் ,


விசுகு அண்ணா எழுதின‌துக்கு நான் எழுதின‌ ப‌தில் ம‌ற்ற‌ யாழ்க‌ள‌ உற‌வும் நீங்க‌ள் எழுதின‌த‌ தான்  சொன்னார் என்று , அத‌ற்கு தான் எழுதினான் நித‌ர்ச‌ன‌ உண்மை /

எம்ம‌வ‌ர்க‌ள் வ‌ன்னியில் இருந்து இருக்க‌னும் சாதி பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு சாட்டையால் அடி விழுந்து இருக்கும் ,  

மேல‌ குசா தாத்தா சொன்ன‌து போல் எம்ம‌வ‌ர்க‌ள் இருந்து இருக்க‌னும் இந்த‌ திரி திற‌க்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் வ‌ந்து இருக்காது /

மீண்டும் சொல்லுகிறேன் எல்லா புக‌ழும் த‌லைவ‌ர் ஒருவ‌ருக்கே 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருப‌ன் அண்ணா நீங்க‌ள் ப‌ழ‌கும் உற‌வுக‌ள் சாதிய‌ அடியோடு வெறுக்க‌ கூடிய‌வ‌ர்க‌ளாய் இருந்தா அவ‌ர்க‌ள் உண்மையில் மிக‌வும் ம‌னித‌ நேய‌த்த‌ நேசிக்க‌ கூடிய‌வ‌ர்க‌ள் 🙏😍

விசுகு அண்ணா ம‌ற்றும் குசா தாத்தா எழுதுவ‌து வெரும் க‌ற்ப‌னை என்று நினைக்க‌ வேண்டாம் அவ‌ர்க‌ள் எழுதுவ‌தில் ப‌ல‌ நூறு உண்மைக‌ள் அட‌ங்கி இருக்கு 😓

நான் பார்த்த‌ ம‌ட்டில் டென்மார்க்கில் சாதிய‌ எம்ம‌வ‌ர்க‌ள் தூக்கி பிடிப்ப‌து இல்ல 🙏‌ , 

விசுகு அண்ணாவுக்கும் ச‌ரி குசா தாத்தாவுக்கும் ச‌ரி இவ‌ர்க‌ளுக்கு டென்மார்க்கில் நெருங்கிய‌ சொந்த‌ங்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ள் இட‌த்தில்  விசாரிச்சா தெரியும் நான் சொல்லுவ‌து எவ‌ள‌வு உண்மை என்று /

பிரான்ஸ்
க‌ன‌டா போன்ற‌ நாடுக‌ளில் எம்ம‌வ‌ர்க‌ள் அதிக‌ம் சாதிய‌ தூக்கி பிடிப்ப‌வ‌ர்க‌ள்  ,

யாழ்க‌ள‌த்தில் க‌ன‌டாவில் வ‌சிக்கும் ப‌ல‌ உற‌வுக‌ள் இருக்கின‌ம் அவையும் இந்த‌ திரிக்குள் வ‌ந்து எழுதினால் எம் ச‌முதாய‌த்தில் என்ன‌ ந‌ட‌க்குது என்ற‌ உண்மைய‌ அறிய‌லாம் /

நான் அப்ப‌வும் இப்ப‌வும் எப்ப‌வும்  சாதிக்கு முற்றிலும் எதிரான‌வ‌ன் ,

உதார‌ன‌த்துக்கு நான் சாதி ம‌றுப்பு திரும‌ண‌ம் செய்து என்ர‌ சொந்த‌ங்க‌ள் என்னை வீட்டுக்குள் அனைக்காம‌ த‌ள்ளி வைத்தால் நான் ஒரு போதும் க‌வ‌லைப் ப‌ட‌ மாட்டேன் , 
உப்ப‌டி கேவ‌ல‌ம் கெட்ட‌ சொந்த‌ம் என‌க்கு ஒரு போதும்  தேவை இல்லை என்று தான் என் ம‌ன‌சு சொல்லும் ,

என்ர‌ ம‌னைவியின் பிள்ளைக‌ளின் அன்போடு மீதிக் கால‌த்த‌ வாழ்ந்து விட்டு போவேன் 🤞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பையன்26 said:

நான் பார்த்த‌ ம‌ட்டில் டென்மார்க்கில் சாதிய‌ எம்ம‌வ‌ர்க‌ள் தூக்கி பிடிப்ப‌து இல்ல 🙏

இதைத்தான் நான் இலண்டனில் பழகுபவர்களிடம் காண்பது. 

இந்தத் திரியில் பலரும் சொல்வது பேச்சுத் திருமணத்தின்போது சாதி பார்க்கப்படுகின்றது.  ஆனால் எல்லாப் பேச்சுத் திருமணங்களிலும் இல்லை.

 

தாயகத்தில் சாதீயம் முன்னர் இருந்த உக்கிர நிலையில் இருந்து மாறி திருமண விடயத்திலும், சில கோவில்களில் அனுமதி இல்லை என்பதிலும் சுருங்கிவிட்டது. முன்னரைப் போல, கல்வியில், காணி வாங்குவதில், ஏன் பாடசாலை அனுமதிகளில், வேலை பெற்றுக்கொள்வதில் இருந்த உக்கிர நிலையோ, சாப்பாட்டுக் கடைகளில் இரட்டைக் குவளை பாவிக்கும் முறையோ எல்லாம் திரும்பிவராது. 

பழைய வரலாற்றை சிவா சின்னப்பொடி (யாழ் உறுப்பினர்தான்) எழுதிய நினைவழியா வடுக்கள் என்ற புத்தகத்தில் படித்திருந்தேன். நினைத்தே பார்த்திராத கொடுமைகளில் இருந்து  விலகி எவ்வளவு முற்போக்கான மாற்றங்கள் வந்துவிட்டன. இன்னும் முன்னோக்கித்தான் பயணிப்போம் என்பதில் நம்பிக்கை நிறையவே இருக்கின்றது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தாங்கள் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்களை பார்க்க பரிதாபமாய் இருக்கிறது ....அவர்கள் தங்கட பிள்ளைகளுக்கு ,சகோதரங்களுக்கு  தங்களை விட குறைந்த சாதியில் திருமணம் செய்து கொடுப்பார்களா?
அவர்கள் முதலில் சொல்வது நாங்கள் எங்கட ஆட்களுக்குள்ள தான் செய்வம்...அர்த்தம் எங்கட சாதிக்குள் தான் செய்வம்.
புலம் பேர் நாடுகளில் கூட இரண்டாம் தலைமுறைக்கு  திருமணம் பேசும் போது தரகர்மார் முதல் கேட்பது பெற்றோர் ஊரில் எந்த இடம்?, எந்த றோட் ? அர்த்தம் ஊரில் எந்த சாதி என்று அறிவது தான்.
புலிகள் சாதி பார்ப்பதில்லை, தலைவர் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்கள் கண்களை மூடிக் கொண்டு தான் எழுதுகிறார்கள்.
ஏன் தலைவராலோ ,சு,பானாவாலோ தங்களை விட குறைந்த சாதி பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போனது ?[கேட்டால் காதல் என்றுவினம்]...தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார்.
குறைந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு,அவர்களை விட உயர்ந்த சாதியில் திருமணம் செய்து கொடுத்தால் சாதி ஒழியும் என்று நினைப்பதே முட்டாள்தனம்.
ஏன் அவர்கள் தங்களை விட குறைந்த சாதியில் கல்யாணம் கட்ட நினைப்பதில்லை ?...அப்படி கட்டினால் சாதி ஒழியாதோ?
லண்டனில் நான் பார்த்த வரைக்கும் எங்கட ஐயர்மார் அநேகமான தமிழ் குடும்பங்களுடன் சேர்ந்து பழகுவார்கள் ...வீட்டை போய் தேனீர் கூட குடிப்பார்கள் ...அதே நேரத்தில் திருமணம் என்று வந்தால் தங்களுக்குள்ளே தான் செய்வார்கள்.
வெள்ளாளரை தவித்து  அடுத்த நிலையில் உள்ள சாதிக்காரர்கள் தான் தாழ்வு மனப்பான்மை காரணமாய் ,தாங்கள் பெரிது என்று காட்டுவதற்காக அடுத்தவர் வீட்டில் சாப்பிட ,குடிக்க மாட்டார்கள் ...இதுவும் லண்டனில் நான் கண்டது 

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து இருக்கும் நாடுகளில்  சாதியம் அதிகம் பார்ப்பதில்..
முதலாம் இடம் கனடா
இரண்டாம் இடம் இங்கிலாந்து
மூன்றாமிடம் பிரான்ஸ் அல்லது ஜேர்மனி.

கலியாண புரோக்கரிடம் மாப்பிளை பொம்புளை விசாரிச்சால் புரோக்கர் கேட்பது முதலில் சாதியைத்தான்.

இலங்கையில் சாதியை ஒரு காலமும் அழிக்க முடியாது. இன்றைய தலைமுறையினரிடம் நன்றாகவே ஊறி விட்டது.

நிதர்சன உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

இங்கு தாங்கள் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்களை பார்க்க பரிதாபமாய் இருக்கிறது ....அவர்கள் தங்கட பிள்ளைகளுக்கு ,சகோதரங்களுக்கு  தங்களை விட குறைந்த சாதியில் திருமணம் செய்து கொடுப்பார்களா?
அவர்கள் முதலில் சொல்வது நாங்கள் எங்கட ஆட்களுக்குள்ள தான் செய்வம்...அர்த்தம் எங்கட சாதிக்குள் தான் செய்வம்.
புலம் பேர் நாடுகளில் கூட இரண்டாம் தலைமுறைக்கு  திருமணம் பேசும் போது தரகர்மார் முதல் கேட்பது பெற்றோர் ஊரில் எந்த இடம்?, எந்த றோட் ? அர்த்தம் ஊரில் எந்த சாதி என்று அறிவது தான்.
புலிகள் சாதி பார்ப்பதில்லை, தலைவர் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்கள் கண்களை மூடிக் கொண்டு தான் எழுதுகிறார்கள்.
ஏன் தலைவராலோ ,சு,பானாவாலோ தங்களை விட குறைந்த சாதி பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போனது ?[கேட்டால் காதல் என்றுவினம்]...தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார்.
குறைந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு,அவர்களை விட உயர்ந்த சாதியில் திருமணம் செய்து கொடுத்தால் சாதி ஒழியும் என்று நினைப்பதே முட்டாள்தனம்.
ஏன் அவர்கள் தங்களை விட குறைந்த சாதியில் கல்யாணம் கட்ட நினைப்பதில்லை ?...அப்படி கட்டினால் சாதி ஒழியாதோ?
லண்டனில் நான் பார்த்த வரைக்கும் எங்கட ஐயர்மார் அநேகமான தமிழ் குடும்பங்களுடன் சேர்ந்து பழகுவார்கள் ...வீட்டை போய் தேனீர் கூட குடிப்பார்கள் ...அதே நேரத்தில் திருமணம் என்று வந்தால் தங்களுக்குள்ளே தான் செய்வார்கள்.
வெள்ளாளரை தவித்து  அடுத்த நிலையில் உள்ள சாதிக்காரர்கள் தான் தாழ்வு மனப்பான்மை காரணமாய் ,தாங்கள் பெரிது என்று காட்டுவதற்காக அடுத்தவர் வீட்டில் சாப்பிட ,குடிக்க மாட்டார்கள் ...இதுவும் லண்டனில் நான் கண்டது 

வ‌ண‌க்க‌ம் அக்கா இந்த‌ திரியில் உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி ,

நீங்க‌ள் உங்க‌ட‌ அண்ண‌ர் க‌ருணாவை பின் தொட‌ருகிற‌ நீங்க‌ள் ,
நான் சிறு வ‌ய‌து முத‌லே த‌லைவ‌ரின் கொள்கைய‌ பார்த்து வ‌ள‌ந்த‌வ‌ன்🤞 ,


நீங்க‌ள் இப்ப‌டி எழுதுவிங்க‌ள் என்று நான் கொஞ்ச‌மும் நினைத்து கூட‌ பார்க்க‌ல‌ , த‌லைவ‌ரும் அவ‌ரின் பிள்ளைக‌ளும் போர்க் க‌ள‌த்தில் இற‌ந்து விட்டின‌ம் அவ‌ர்க‌ளை தூற்றி எழுதுவ‌து ந‌ல்ல‌ம் இல்ல‌ ,

உங்க‌ட அண்ண‌ருக்கும் த‌லைவ‌ர் தானே பொண்ணு பார்த்து முன் நின்று திரும‌ண‌த்த‌ செய்து வைச்ச‌வ‌ர் ,

த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்து இருந்தா அவ‌ரின் ம‌க‌ளை எம் போராட்ட‌த்தில் இருந்த‌ போராளிக‌ளில் ஒருவ‌ருக்கு தான் திரும‌ண‌ம் செய்து வைத்து இருப்பார் ,

த‌லைவ‌ர் போராளிக‌ள் வ‌ன்னியில் இருந்த‌ போது த‌மிழீழ‌ ம‌க்க‌ள் எப்ப‌டி வாழ்ந்தார்க‌ள் என்ப‌த‌ அவ‌ர்க‌ளின் பாதுகாப்பில் வாழ்ந்த‌ ம‌க்க‌ளுக்கு தெரியும் , இப்ப‌ த‌மிழீழ‌த்தில் ம‌க்க‌ள் எப்ப‌டி வாழுகிறார்க‌ள் என்று ஒட்டு மொத்த‌ த‌மிழீழ‌த்தையும் சுற்றி பார்த்தா தெரியும்  , 

நான் த‌மிழீழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌த்தில் சாதி ச‌ண்டைய‌ பார்த்த‌து இல்ல‌ , சாதிய‌ ப‌ற்றி உற‌வுக‌ள் அல‌ட்டின‌தும் இல்ல‌ ,

ஒரு ‌ ச‌ம்ப‌வ‌த்த‌ உங்க‌ளுக்கு சொல்ல‌ விரும்புகிறேன் , 1995ம் ஆண்டு சிங்க‌ள‌ இராணுவ‌ம் யாழ்ப்பாண‌த்த‌ கைப்ப‌ற்ற‌ , மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்தேன் , என்ர‌ சொந்த‌ங்க‌ளை த‌விற‌ ம‌ற்ற‌ ஊர்க‌ளில் இருந்து மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்த‌ உற‌வுக‌ளை என‌க்கு யார் என்று கூட‌ தெரியாது , பெரிய‌ வீடுக‌ள் இருந்த‌ ப‌டியால் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இட‌ம்பெய‌ர்ந்து வ‌ந்த‌ ம‌க்க‌ளை எங்க‌ட‌ வீடுக‌ளில் தான் த‌ங்க‌ வைச்சோம் ஒன்னா சாப்பிட்டோம் ஒன்னா ப‌ழ‌கினோம் ,
சாதி என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்ல‌ , கிட்ட‌ த‌ட்ட‌ 13 குடும்ப‌ங்க‌ள் 4 வீட்டில் த‌ங்கி இருக்க‌ ஏற்பாடு செய்து கொடுத்தோம் , 

இப்ப‌டித் தான் எங்க‌ட‌ த‌மிழீழ‌ வாழ்க்கை 🤞🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

முதலிலே எழுதியிருக்கின்றேன். கலியாணப் புரோக்கர்களுடன் பேசி திருமணம் பேசும் செய்யும் தேவை ஏற்பட்டதில்லை. அதற்கு எளிமையான காரணம் சாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் மூடப்பழக்கத்தில் நம்பிக்கை இல்லை.  எனவே இந்தத் தேவை இனியும் வராது

ரொம்ப கடினமான பணி ராஜாக்கள் இந்த மாதிரியான முகத்தை கட்டி பயணிக்கும் குதிரைகளுக்கு உலகைக் காட்டுவது. நான் உங்களுக்கு திருமணம் செய்ய தரகர்களை தொடர்பு கொள்ள சொல்லவில்லை எம்மவர் திருமணங்கள் எப்படி ஒப்பேற்ற படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள மட்டுமே. சகாரா இங்கு எழுதினால் என் நேரம் மிச்சமாகும் என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

ரொம்ப கடினமான பணி ராஜாக்கள் இந்த மாதிரியான முகத்தை கட்டி பயணிக்கும் குதிரைகளுக்கு உலகைக் காட்டுவது. நான் உங்களுக்கு திருமணம் செய்ய தரகர்களை தொடர்பு கொள்ள சொல்லவில்லை எம்மவர் திருமணங்கள் எப்படி ஒப்பேற்ற படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள மட்டுமே. சகாரா இங்கு எழுதினால் என் நேரம் மிச்சமாகும் என்று நினைக்கிறேன்

விசுகர்! புத்தக படிப்பை விட,பள்ளி படிப்பை விட சமுதாய அனுபவம் மிக முக்கியம்.  புத்தக அனுபவத்தை மட்டும் வைத்து இங்கே  கருத்தெழுதும் ஒருவரில் அதன் தாக்கம் நன்றாகவே தெரிகின்றது. தானும் தன்னை சுற்றியுள்ளவர்களை வைத்து உலக நடப்பை கணக்கிட்டு வைத்துள்ளார்.
எல்லா சமூத்துடனும் பழகினால் உலக அனுபவம் ,நாட்டு நடப்புகள் தானாக விரல்நுனியில் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

விசுகர்! புத்தக படிப்பை விட,பள்ளி படிப்பை விட சமுதாய அனுபவம் மிக முக்கியம்.  புத்தக அனுபவத்தை மட்டும் வைத்து இங்கே  கருத்தெழுதும் ஒருவரில் அதன் தாக்கம் நன்றாகவே தெரிகின்றது. தானும் தன்னை சுற்றியுள்ளவர்களை வைத்து உலக நடப்பை கணக்கிட்டு வைத்துள்ளார்.
எல்லா சமூத்துடனும் பழகினால் உலக அனுபவம் ,நாட்டு நடப்புகள் தானாக விரல்நுனியில் இருக்கும்.

குமாரசாமி ஐயா, என்னை மேற்கோள் காட்டிச் சொன்னால் எனக்கு ஒன்றும் இரத்தக்கொதிப்பு வராது😎 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.