Jump to content

கடல் புலிகளுக்கு அதிநவீன படகுகளை வழங்க இணங்கினோம் என பசில் என்னிடம் தெரிவித்தார் -  சரத் பொன்சேகா அதிரடி கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடல் புலிகளுக்கு அதிநவீன படகுகளை வழங்க இணங்கினோம் என பசில் என்னிடம் தெரிவித்தார் -  சரத் பொன்சேகா அதிரடி கருத்து

(ஆர்.யசி)

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் போராடிக்கொண்டு இருந்த வேளையில் ராஜபக் ஷக்கள் புலிகளுடன் உடன்படிக்கை செய்து அரசியல் பேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.தமிழர்களின் வாக்குகளை நிறுத்தியதற்காக கடல் புலிகளுக்கு அதி நவீன படகுகள் வழங்கப்பட்டதாக  பசில் ராஜபக் ஷ என்னிடம் கூறினார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று வத்தளை பலகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கோத்தாபய ராஜபக் ஷவின் அரசியல் பயணம் தவறான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதிவேக வீதியில் தவறான பக்கம் பயணிக்கும் வாகனத்தை போன்று அவர் பயணிக்க ஆரம்பித்துள்ளார். அவருக்கு அதில் குதுகலமாக இருக்கலாம் ஆனால் நாட்டிற்கும் மக்களுக்கும் இந்த பயணம் ஏற்புடையதல்ல. அவர் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் ராஜபக் ஷக்களுக்கு சகல சலுகைகளும் வழங்கப்படுகின்றது.

ராஜபக் ஷவினரின் நோக்கம் ஒன்றதான். அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் சகல இடங்களிலும் அவர்களின் ஆதிக்கத்தை பெற்றுக்கொள்வது. ஆனால் இது  ஜனநாயக அரசியலில் நல்லதொரு செயற்பாடாக நாம் கருதவில்லை. கருணா அம்மான் கூறிய விடயங்கள் நாட்டிற்கு பாதிப்பில்லையாம், கிரிக்கெட் ஊழல் நாட்டிற்கு அவப்பெயர் இல்லையாம் ஆனால் எதிர்க்கட்சியினர் செய்யும் ஜனநாயக அரசியலை நாட்டிற்கு எதிரான சூழ்ச்சி என ராஜபக் ஷவினர் கூறி பிரசாரம் செய்கின்றனர். ஆனால் இவர்களின் தேசத்துரோக செயற்பாடுகள் என்னவென்பதை நான் அங்கு அறிவேன்.

பசில் ராஜபக் ஷவும் நானும் ஒரு வகுப்பு நண்பர்கள், கடந்த யுத்த கால சூழலில் நாமும் அவரும் பல விடயங்களை பேசுவோம். நான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பசில் ராஜபக் ஷவுடன் பேசுவதுண்டு. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை நிறுத்த பிரபாகரனிடம் பேசிவிட்டோம், அவர் இணக்கம் தெரிவித்துள்ளார் என என்னிடம் பசில் கூறினார். 

பசில் பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி, தேர்தலில் தமிழர்கள் வாக்கை நிறுத்துவதற்கு பிரபாகரம் இணங்கியதற்கு பிரபாகருக்கும் கடல் புலிகளுக்கும் அதி நவீன படகுகளை பெற்றுக்கொடுக்க தாம் இணக்கம் தெரிவித்ததாக பசில் என்னிடம் கூறினார். அதுமட்டுமல்ல இந்த பேச்சுவார்த்தைகளில் அமரர் தொண்டமானும் இருந்ததாக என்னிடம் கூறினார். நாம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை முன்னெடுத்து எமது தமிழர்களை மீட்க வேண்டும் என்பதற்காக  போராடிகொண்டிருந்த வேளையில் ராஜபம் ஷக்கள் புலிகளுடன் ஒப்பந்தங்களை செய்தி கொண்டிருந்தனர்.

பிரபாகரனை துரோகி எனக் கூற அச்சத்துடன் இருந்தனர், பிரபாகரனை மதிப்புக்குரிய பிரபாகரன் என்றே இவர்கள் கூறினார்கள். அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2005 ஆம் ஆண்டு ஆற்றிய உரையை எடுத்துப்பாருங்கள். அதில் அவர் அவ்வாறே கூறினார். இன்று யுத்தம் முடிந்துவிட்டதுடன், பிரபாகரன் இறந்த பின்னர் வீரர்கள் போன்று பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இந்த அழிவிற்கும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் ஒரு விதத்தில் ஆட்சியாளகள் காரணம் என்பதே உண்மையாகும். பல பொதுமக்கள் இறந்தமைக்கும், அழிவுகளை சந்திக்கவும் ஆட்சியாளர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.  இந்த தேர்தலில் மீண்டும் ராஜபக் ஷக்கள் வெற்றின்பெற்றால் மீண்டும் வெள்ளைவேன் கடத்தல்,கப்பம் பெறல், கொலைகள், கொள்ளைகள் உருவாகும். எவரும் எதுவும் கேட்க முடியாது என்ற நிலைமை உருவாகும். ஆகவே இன்னொரு நாசகார ஆட்சிக்கு மக்கள் இடமளித்துவிட வேண்டாம் என அவர் கூறினார். 
 

https://www.virakesari.lk/article/85803

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

நாம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை முன்னெடுத்து எமது தமிழர்களை மீட்க வேண்டும் என்பதற்காக  போராடிகொண்டிருந்த வேளையில் ராஜபம் ஷக்கள் புலிகளுடன் ஒப்பந்தங்களை செய்தி கொண்டிருந்தனர்.

கொலைக்கள மார்ஷல் பொன்சேகா தானும் ஒரு போர்க்குற்றவாளி என்பதை உணர்த்தியுள்ளார்!

Link to comment
Share on other sites

23 hours ago, கிருபன் said:

கடல் புலிகளுக்கு அதிநவீன படகுகளை வழங்க இணங்கினோம் என பசில் என்னிடம் தெரிவித்தார் -  சரத் பொன்சேகா அதிரடி கருத்து

இப்பிடி பலதையும் அதிரடியா அவிழ்த்து விடுங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எல்லோரும் தேர்தல் கலக்கத்தில் உளறுகினமோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.