Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பி-யின் கொரோனா நாள்கள்... நடந்தது என்ன?!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இறுதி நாள்கள்...

இசைமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் கொரோனா காரணமாக சேர்க்கப்பட்ட பாலசுப்ரமணியம் 51 நாள் சிகிச்சைக்குப்பிறகு மரணமடைந்திருக்கிறார்.

கொரோனா பாதிப்பு!

எஸ்.பி. பாலசுப்ரமணியம்
 
எஸ்.பி. பாலசுப்ரமணியம்

கொரோனா காரணமாக லாக்டெளன் தொடங்கியதில் இருந்தே சென்னை வீட்டில்தான் இருந்தார் எஸ்.பி.பி. ஆனால், கடந்த ஜூலை 30-ம் தேதி இடிவி-யில் ஒளிபரப்பாகிவரும் பிரபல இசை நிகழ்ச்சியான 'Samajavaragamana' படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றார். இரண்டு நாள்கள் அங்கே தங்கியிருந்து ஷூட்டிங்கில் கலந்துகொண்டு சென்னை திரும்பியவருக்கு சளி, காய்ச்சல். இடிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்குமே இதேபோல் அறிகுறிகள் தென்பட பலரும் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள். எஸ்.பி.பி-க்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டது.

அதில் மைல்ட் கொரோனா, வீட்டில் இருந்தே மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், வீட்டில் யாருக்கும் தொந்தரவாக இருக்கவேண்டாம் என மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்கிறேன் என சொல்லியிருக்கிறார் எஸ்.பி.பி. சில நாள்களில் குணமடைந்து வீடு திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட வென்ட்டிலேட்டர் பொருத்தப்பட்டு, பின்னர் எக்மோ கருவி பொருத்தப்பட்டது.

எஸ்.பி.பி
 
எஸ்.பி.பி

செப்டம்பரில் கொஞ்சம் கொஞ்சமாக வென்ட்டிலேட்டர் உதவியில்லாமல் சுவாசிக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் சொல்லிவந்த நிலையில் செப்டம்பர் 23-ம் தேதி எஸ்.பி.பி- உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. நினைவை முழுவதுமாக இழந்திருக்கிறார். இந்நிலையில்தான் நேற்று மாலை குடும்பத்தினர் மூலமாக செய்திகள் வெளியே வர ஆரம்பித்தன. நடிகர் கமல்ஹாசனுக்கு தகவல் சொல்லப்பட அவர் உடனடியாக நேற்று மாலையே மருத்துவமனைக்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றார். அடுத்தக்கட்டம் குறித்து பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எஸ்.பி.பி அவர்களின் பண்ணை இல்லம் ரெட்ஹில்ஸ் அருகே தாமரைப்பாக்கம் எனும் கிராமத்தில் உள்ளது. இங்கே நாளை அவரது இறுதிசடங்குகள் நடைபெற இருக்கின்றன.

 

  • Replies 84
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் உண்மை முகங்கள் சில தருணங்களில் வெளிப்படுகின்றது. உங்கள் இறப்பிலும் சிலரின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்


 துணிவிருந்தால் கருத்துகளை இங்கே பதிந்திருக்க வேண்டும் திரி திறந்த அன்றே. கோழைகள்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎09‎-‎2020 at 14:16, பிழம்பு said:

எஸ்.பி.பி-யின் கொரோனா நாள்கள்... நடந்தது என்ன?!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இறுதி நாள்கள்...

இசைமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் கொரோனா காரணமாக சேர்க்கப்பட்ட பாலசுப்ரமணியம் 51 நாள் சிகிச்சைக்குப்பிறகு மரணமடைந்திருக்கிறார்.

கொரோனா பாதிப்பு!

எஸ்.பி. பாலசுப்ரமணியம்
 
எஸ்.பி. பாலசுப்ரமணியம்

கொரோனா காரணமாக லாக்டெளன் தொடங்கியதில் இருந்தே சென்னை வீட்டில்தான் இருந்தார் எஸ்.பி.பி. ஆனால், கடந்த ஜூலை 30-ம் தேதி இடிவி-யில் ஒளிபரப்பாகிவரும் பிரபல இசை நிகழ்ச்சியான 'Samajavaragamana' படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றார். இரண்டு நாள்கள் அங்கே தங்கியிருந்து ஷூட்டிங்கில் கலந்துகொண்டு சென்னை திரும்பியவருக்கு சளி, காய்ச்சல். இடிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்குமே இதேபோல் அறிகுறிகள் தென்பட பலரும் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள். எஸ்.பி.பி-க்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டது.

அதில் மைல்ட் கொரோனா, வீட்டில் இருந்தே மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், வீட்டில் யாருக்கும் தொந்தரவாக இருக்கவேண்டாம் என மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்கிறேன் என சொல்லியிருக்கிறார் எஸ்.பி.பி. சில நாள்களில் குணமடைந்து வீடு திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட வென்ட்டிலேட்டர் பொருத்தப்பட்டு, பின்னர் எக்மோ கருவி பொருத்தப்பட்டது.

எஸ்.பி.பி
 
எஸ்.பி.பி

செப்டம்பரில் கொஞ்சம் கொஞ்சமாக வென்ட்டிலேட்டர் உதவியில்லாமல் சுவாசிக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் சொல்லிவந்த நிலையில் செப்டம்பர் 23-ம் தேதி எஸ்.பி.பி- உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. நினைவை முழுவதுமாக இழந்திருக்கிறார். இந்நிலையில்தான் நேற்று மாலை குடும்பத்தினர் மூலமாக செய்திகள் வெளியே வர ஆரம்பித்தன. நடிகர் கமல்ஹாசனுக்கு தகவல் சொல்லப்பட அவர் உடனடியாக நேற்று மாலையே மருத்துவமனைக்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றார். அடுத்தக்கட்டம் குறித்து பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எஸ்.பி.பி அவர்களின் பண்ணை இல்லம் ரெட்ஹில்ஸ் அருகே தாமரைப்பாக்கம் எனும் கிராமத்தில் உள்ளது. இங்கே நாளை அவரது இறுதிசடங்குகள் நடைபெற இருக்கின்றன.

 

ஆஸ்பத்திரிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்திருந்தால் சில நேரம் தப்பியிருப்பார் ....ஆனால் விதியை மாற்றுவது கடினம் 

8 hours ago, உடையார் said:

சிலரின் உண்மை முகங்கள் சில தருணங்களில் வெளிப்படுகின்றது. உங்கள் இறப்பிலும் சிலரின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்


 துணிவிருந்தால் கருத்துகளை இங்கே பதிந்திருக்க வேண்டும் திரி திறந்த அன்றே. கோழைகள்

நீங்கள் விசுகு அண்ணாவை சொல்லவில்லை தானே ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஆஸ்பத்திரிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்திருந்தால் சில நேரம் தப்பியிருப்பார் ....ஆனால் விதியை மாற்றுவது கடினம் 

நீங்கள் விசுகு அண்ணாவை சொல்லவில்லை தானே ?

அவரில்லை ரதி, இழவு வீட்டில் அரசியல் செய்து இன்படைந்தாரே பண்பான கருந்தாளர் -அவருக்கு இந்த திரி தொடங்கியவுடன் கருத்து பதிய நேரமிருக்கவில்லை. எல்லோரும் அவருக்காக அஞ்சலி செலுத்த, சத்தடி சாக்கில் அரசியலை புகுத்தி இன்பம் காண்டு விளைந்தார்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

எஸ்.பி. பாலசுப்ரமணியம்: மாரடைப்பு, மூச்சுத்திணறலால் போராடி உயிரிழந்த கடைசி நிமிடங்கள் - மருத்துவர்கள் விளக்கம்

ப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
எஸ்பிபி

பட மூலாதாரம், SPB/FB

 

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமான பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மருத்துவமனை நிலுவை கட்டணத்தை வழங்கத்தேவையில்லை என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செப்டம்பர் 25ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மருத்துவ கட்டணத்தை வசூலிக்க அந்த மருத்துவமனை நிர்வாகம் நெருக்கடி கொடுத்ததாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாகி வந்தது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னையில் அந்த மருத்துவமனை தலைமை அதிகாரி, சிகிச்சை குழுவில் இடம்பெற்ற மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் செய்தியாளர்களை திங்கட்கிழமை சந்தித்தார்.

"ஏதோ ஒரு புரளியை கிளப்பி வருகிறார்கள். இருந்தாலும். எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையை முழுமையாக நம்பி நாங்கள் வந்தோம். எங்களுக்கு ஒன்று என்றால், இந்த மருத்துவமனை துணைநிற்கும். அதற்கு ஒன்று என்றால் எங்களுடைய குடும்பம் துணை நிற்கும," என்று அவர் தெரிவித்தார்.

"மருத்துவமனை கட்டணம் தொடர்பாக எங்களால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலுத்த முடியவில்லை என்றும் பிறகு நான் குடியரசு துணைத் தலைவரின் மகளிடம் விஷயத்தை சொன்னதும் அவர்தான் தலையிட்டு மீதி கட்டணத்தை செலுத்தியதாகவும் வதந்தி பரவி வருகிறது" என்று அவர் கூறினார்.

"எனது தந்தை காலமான பிறகு, மருத்துவமனை நிர்வாகத்திடம் மீதமுள்ள கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என நான் கேட்டபோது, அதன் கணக்குப்பிரிவு அதிகாரிகள், எங்களிடம் மீதமுள்ள கட்டணத்தை வாங்கத்தேவையில்லை என்று தங்களின் தலைவர் தெரிவித்துள்ளதாகவும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக உடலை ஒப்படைத்து மற்ற விஷயங்களை அவர்கள் கவனிக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்று மட்டும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது" என்று எஸ்.பி. சரண் கூறினார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விளக்கம் அளித்த மருத்துவர்கள், "அவர் காலமாகும் 48 மணி நேரத்தில் அவரது நிலைமை மிகவும் மோசமடையத் தொடங்கியது" என்றனர்.

அவரது மூளையில் ரத்தம் கசியத் தொடங்கியதாவும் அவருக்கு 48 மணி நேரத்தில் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் பலனளிக்காத நிலையில், மாரடைப்பும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு எஸ்.பி.பியின் உயிர் பிரிந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஆகஸ்ட் 5ஆம் தேதி சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவருக்குகொரோனா பாதிப்பு தாக்கம் அதிகமாக இருந்தது. அவருக்கு கொரோனா தொற்று குணம் அடைந்தாலும், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது என்று மருத்துவர்கள் கூறினர்.

எக்மோ, சுவாசக்கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், தொண்டையில் டிரக்கியோஸ்டமி சிகிச்சை வழங்கப்பட்டது. இத்தகைய சிகிச்சை முறைகள் அனைத்தும் செயற்கையாக தரப்பட்டன. இவை அனைத்தும் அசாதாரணமான சிகிச்சை முறைகள். இவற்றுக்கு சிகிச்சை தரும்போது அவரது ஒவ்வெரு உறுப்பும் செயலிழக்கத் தொடங்கின.

நீண்டகாலமாக இந்த சிகிச்சை நடைமுறைகள் தொடரும்போது, இயல்பாகவே உடல் உறுப்புகளில் தொற்று அதிகமானது. இதுபோன்ற நிலையில், பத்தில் ஒருவருக்கு தொற்று அதிகமாக வாய்ப்புண்டு என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்ததாக செய்தியாளர் சந்திப்பில் பங்கெடுத்த பிபிசி செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் கூறுகிறார்.

தமிழக அரசு உதவ முன்வரவில்லையா?

எஸ்.பி.பிக்கு சிகிச்சையின்போது, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தங்களை தொடர்பு கொண்டு பேசியபோது, அரசு தரப்பில் ஏதேனும் உதவி செய்ய முடியுமா என கேட்டதாகவும் அதன் பிறகு அங்கிருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும் நானும் ஒரு சாதாரண நபர்தானே என்று எஸ்.பி. சரண் கூறினார்.

இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் மருத்துவமனையை தொடர்புகொண்டு அவரது சிகிச்சை கட்டணம் தொடர்பாக ஏதேனும் தகவல் பகிரப்பட்டதா என செய்தியாளர் சந்திப்பில் இருந்த மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேட்கப்பட்டது.

எஸ்.பி.பி சிகிச்சை தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் நேரடியாக வந்தார். ஆனால், அரசு தரப்பில் இருந்து சிகிச்சை கட்டணத்தை ஏற்பது தொடர்பாக யாரும் எதுவும் கூறவில்லை என்று மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து எஸ்.பி. சரண், ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் எஸ்.பி.பி சேர்க்கப்பட்டது முதல், அவருக்கான மருத்துவமனை கட்டணத்தை வாரந்தோறும் எங்கள் தரப்பில் செலுத்தி வந்தோம். மேலும் மருத்துவ கட்டணத்தில் ஒரு பகுதியை நாங்கள் செலுத்தினோம். மற்றவை காப்பீடு தொகை மூலம் ஈடு செய்யப்பட்டது. எனவே, கட்டணம் தொடர்பாக எந்த பிரச்னையும் எழாத நிலையில், எஞ்சிய சிகிச்சை கட்டணத்தை செலுத்த வேண்டாம் என்ற தகவலும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் சிகிச்சை கட்டணம் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம் என்று தெரிவித்தார்.

சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்காக ஒரு நினைவிடம் கட்டும் முயற்சி மேற்கொள்ளப்படும். அங்கு தினமும் மக்களும் எஸ்.பி.பியின் ரசிகர்களும் மரியாதை செலுத்த வருவதை பார்க்கும்போது நெழ்ந்து போவதாக எஸ்.பி. சரண் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-54324124

  • கருத்துக்கள உறவுகள்

 

Ajith வரலைனா எனக்கென்ன, கடுப்பான SPB Saran 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது வந்து கொரோனா காலத்தில் தொடர்ந்து பணியாற்றியவர்களுக்காக ஒரு ஆதரவு நிகள்வு  

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.