Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

S.P.B. பாடல்கள் மட்டும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 98
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

டிங் டாங் டாங் டிங் டாங்
டிங் டாங் டாங் டிங் டாங்

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
காதல் காதல் டிங் டாங்
கண்ணில் மின்னல் டிங் டாங்
ஆடல் பாடல் டிங் டாங்
அள்ளும் துள்ளும் டிங் டாங்
(இரண்டும்..)

காதலில்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை
வானமில்லா பூமிதன்னை யாரும் பார்த்ததில்லை
தேகமெங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை
நானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை
உந்தன் கை வந்து தொட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அன்பு முத்தங்கள் இட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்
(இரண்டும்..)

காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன்
தோளில் நீயும் சாயும்போதும் வானை மண்ணில் பார்த்தேன்
நீயும் நானும் சேறும்போது கோடையும் மார்கழி
வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய் விரி
எங்கு தொட்டாலும் இன்ப நாதம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
சொர்க்கம் தங்கும் டிங் டாங்
உந்தன் சேவை எந்தன் தேவை
(இரண்டும்..)
 

 

  • கருத்துக்கள உறவுகள்

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்


நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்


கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது

 

  • கருத்துக்கள உறவுகள்
இந்தப் பாடலை ரசிக்கும் உங்களுக்கு வேண்டுமானால் இதில் வரும் இசையும் வரிகளும் பாடல்களும் பிடிக்கலாம் ஆனால் இந்தப் பாடலில் நன்றாக கேட்பவர்களுக்கு இதில் ஒரு உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது அவர்களுக்கு மட்டுமே தெரியும் ஆம் இதில் ஒரு உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது நான் உணருகிறேன் இந்தப் பாடலும் ஓடும் பொழுது அதை video இருந்தாலும் சரி audio இருந்தாலும் சரி அந்த பாடலை கேட்கும் போது இதில் உள்ள ஓர் உயிரோட்டம் இருக்கும் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் இதை நன்றாக கேட்டு ரசிக்கும் சில உள்ளங்களுக்கும் தெரியும் இதில் உள்ளே உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்று என்றும் அன்புடன் லிங்கம்.
 

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானேபண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
கதை என்ன கூறு பூவும் நானும் வேறு

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்....

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்......

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
 சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
 அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
 நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
 அவள் வான்மேகம் காணாத பால்நிலா
 இந்த பூலோகம் பாராத தேன்நிலா
 என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
 சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
 அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
 நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ


 தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ
 பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ
 தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை
 முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
 வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
 அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
 புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்

 என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
 சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
 அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
 நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
 அவள் வான்மேகம் காணாத பால்நிலா
 இந்த பூலோகம் பாராத தேன்நிலா

 ஆ..ஆ...ஆ...ஆ
 கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
 முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
 ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
 நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
 அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
 உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
 இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

 என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
 சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
 அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
 நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
 அவள் வான்மேகம் காணாத பால்நிலா
 இந்த பூலோகம் பாராத தேன்நிலா
 என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
 சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
 அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
 நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ

 

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ… அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே ஏ ...
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்பத்தேனும் ஊறும்
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
(இசை)
மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன் மயில் ஆடுது வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்
ஸகரிம கபமத பநிதஸ நிரிநி
ஸ்வரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
(இசை)
மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னி
ஆற்றில் பொன்போல் அலையாட
காலைப் பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
காலைப் பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
இயற்கையின் அதிசயம்
ஸகரிம கபமத பநிதஸ நிரிநி
வானவில் ஓவியம்….
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னைப் பாடுவேன்
மனதில் இன்பத்தேனும் ஊறும்
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட..

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

பாலாடை போலாடும் பாப்பா எப்பொதும் நான் சொன்னா கேப்பா
ராஜாவை பாக்காமல் ரோஜா ஏமாந்து போனாளே லேசா
நான் நாளை வச்சு தேதி வச்சு ஊரு விட்டு ஊரு வந்து
நீயின்றி போவேனோ சம்போ
நான் மூணு மெத்தை வீடு கட்டி மாடி மேல ஒன்ன வெச்சு
பாக்காமல் போவேனோ சம்போ
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

அன்பான உன் பேச்சு ராகம் நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல் இதிலென்ன இனிமேலும் ஊடல்
அந்த தேவதைக்கு நானும் சொந்தம் தேவனுக்கு நீயும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை
நானொன்று நீயொன்றுதாம்மா
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் பாடலும் SP பாலசுப்ரமணியமும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக பாடல் ஒலிப்பேழை
தயாரிப்பு பொறுப்பை என்னிடம் விடுவதாக தமிழீழத் தேசியத் தொலைகாட்சி பொறுப்பாளர் போராளி சேரலாதன் சொன்னபோது, “சேரா, நான் பாடல் எழுதுகின்றவனும் இல்லை, இசையமைக்கின்றவனும் இல்லை, பாடுகின்றவனும் இல்லை. எப்படி அதை நான் செய்யமுடியும்” என்றேன். “அதனால் தான் அண்ணா, உங்களிடம் அப்பொறுப்பைக் கொடுக்கின்றோம்” என்றார்.

முதல் ஒலிப்பேழை – கடற்புலிகளுக்காக செய்தோம். கவிஞர் காசி ஆனந்தன் மூன்று பாடல்கள எழுதினார். புலவர் புலமைப்பித்தன் அவர்களை சந்தித்து, பல ஆண்டுகாலம் இயக்கத்துடன் அறுபட்டிருந்த தொடர்பை புதுப்பித்தேன். அவர் மூன்று பாடல்களை எழுதினார். (1. இது கடற்புலிப்படை, 2. மனித சுனாமி தான்.. 3. நாம் நீரிலும் வெடிக்கும் எரிமலைகள்). கவிஞர் புதுவை இரத்தினதுரை, கு. வீரா., போன்றவர்களின் பாடல்களும் இருந்தன.

பாடல்கள் அனைத்திற்கும் அற்புதமான எழுச்சி மிகுந்த இசையை அமைத்திருந்தார் இசையமைப்பாளர் தேவேந்திரன். பாடல்களை, SP பாலசுப்ரமணியம், S.M. சுரேந்தர், திப்பு, கார்த்திக், T.L. மகாராசன், மனோ, சுஜாதா, கல்பனா, மாணிக்க விநாயகம், சத்தியன், ஹரீஸ் ராகவேந்திரா போன்ற தமிழ்த்திரையுலகின் புகழ்பெற்ற பாடகர்களை பாடவைத்தேன்.

“இத்தொகுப்பில் S.P பாலசுப்ரமணியம் அவர்களை எப்படியாவது பாடவைத்து விடுங்கள் அண்ணா” என்பது சேரலாதனின் வேண்டுகோள்.

அதேபோல் அதற்கான முயற்சி எடுத்து கு. வீராவின் பாடலான ‘உலக மனிதம் தலைகள் நிமிரும் விடுதலைப் போரின் வீரத்திலே’ என்ற பாடலை பாடவைத்தேன். அத்தொகுப்பு கடற்புலிகளின் வீரத்தையும், தியாகத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. "எங்களின் கடல்" என்றத் தலைப்பில் வெளிவந்த அத் தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றதாக சேரலாதன் கூறினார்.

(விரைவில் வரவிருக்கும் நூலில் சேரலாதன் குறித்த கட்டுரையில்...)

Image may contain: 2 people, people standing
 
ஓவியர் புகழேந்தி அவர்களின் முகநூல் பதிவில் இருந்து..
 
SPB யின் இந்த ஒலிப்பேழைக்கான பாடலை கீழே இணைப்பில் கேட்கலாம்..
 
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பனிவிழும் மலர்வனம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

வெள்ளிச் சலங்கைகள கொண்ட  கலைமகள் 
வந்து ஆடும் காலம் இது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பொத்தி வச்ச மல்லிகை மெட்டு  அண்ணாவும் தங்கையும் பாடியது

  • கருத்துக்கள உறவுகள்

என் காதலே....

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னவென்று சொல்வதம்மா....

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

மூச்சு விடாமல் பாடியதாக சொல்லப்படும்  "மண்ணில் இந்தக் காதல் இன்றி "

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.