Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த கூட்டமைப்பு; தீர்வுக்கான இந்திய பங்களிப்பு இருக்குமாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Share0
PHOTO-2020-08-21-18-58-22-960x720.jpg?18

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று (21) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை கொழும்பிலுள்ள இல்லத்தில் மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை சந்தித்து பேசியுள்ளனர்.

இதன்போது தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில் விசேடமாக நடந்து முடிந்த தேர்தலின் பின்னரான தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துதல்களை தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என வலியுறுத்தினார்.

சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

https://newuthayan.com/இந்திய-உயர்ஸ்தானிகரை-சந்/

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பிழம்பு said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துதல்களை தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என வலியுறுத்தினார்.

இந்தியா... கடந்த 45 வருடங்களாக, இலங்கை தமிழ் மக்களின்... தேசிய பிரச்சினைக்கு,
தீர்வு கண்ட மாதிரியா... அல்லது வேறு "மொடலில்" தீர்வு காணப் போகினமா ⁉️ 😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியா... கடந்த 45 வருடங்களாக, இலங்கை தமிழ் மக்களின்... தேசிய பிரச்சினைக்கு,
தீர்வு கண்ட மாதிரியா... அல்லது வேறு "மொடலில்" தீர்வு காணப் போகினமா ⁉️ 😎

சீனாவின் நகர்வுகளை பொறுத்தே முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

PHOTO-2020-08-21-18-58-22-960x720.jpg?18

தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துதல்களை தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என வலியுறுத்தினார்.

https://newuthayan.com/இந்திய-உயர்ஸ்தானிகரை-சந்/

ஆரப்பா உந்த உயர்ஸ்தானிகர்.!? கிந்தியா தீர்வு காணும் பணியில் .. ?  

போன அவர்களுக்கும் தெரியும் .. அங்கிட்டு உள்ள கிந்தியனுக்கும் தெரியும் .. இப்போ பருப்பு வேகாது என்டு ..👍

இதையெல்லாம் கதைக்கும் ( ?) போதே ரெண்டு தரப்பிற்கும்  அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்திருக்கும் ..  😎 அதான் புகைப்படத்திலேயே தெரியுது.! 

டிஸ்கி 
உங்கட வசதிக்காக தானே கோரோனோவே வந்திருக்கு . 👌மாஸ்க் போட்டு சிரித்தால் யாருக்கும் தெரியாது பாருங்கோ .. நாங்களும் உண்மை என்டு நம்பிடுவம் ..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும்

?????? ஆதரவு எப்போ? எப்படி இருந்தது? இனிமேலும் இருப்பதற்கு. பிச்சை வேண்டாம், நாயைப்பிடி. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிழம்பு said:

Share0

PHOTO-2020-08-21-18-58-22-960x720.jpg?18
 

இது சுமந்திரன் மாவை சேனாதிராசாவின் காலை வாருமுன் எடுத்த படம்போல் தெரிகிறதே...🤔

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.!

FB_IMG_1598458106808.jpg

நாட்டின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக அரச தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தூதரக அதிகாரிகளுக்கு அது தொடர்பாக அழுத்தங்களை கொடுக்க முடியாது எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை முறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பெக்லே கூறியிருந்தமை தொடர்பாக நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை இறையாண்மையுள்ள நாடு. மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாட்டின் அரச தலைவர்களே வழங்கினார்களே வெளியில் உள்ள தரப்பினருக்கு வழங்கவில்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

https://puthusudar.lk/2020/08/26/இலங்கைக்கு-அழுத்தம்-கொடு/

டிஸ்கி :

Screenshot-2020-08-27-23-22-36-642-org-m

தட் மொமன்ற் ..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.!

FB_IMG_1598458106808.jpg

நாட்டின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக அரச தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தூதரக அதிகாரிகளுக்கு அது தொடர்பாக அழுத்தங்களை கொடுக்க முடியாது எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை முறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பெக்லே கூறியிருந்தமை தொடர்பாக நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை இறையாண்மையுள்ள நாடு. மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாட்டின் அரச தலைவர்களே வழங்கினார்களே வெளியில் உள்ள தரப்பினருக்கு வழங்கவில்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

https://puthusudar.lk/2020/08/26/இலங்கைக்கு-அழுத்தம்-கொடு/

டிஸ்கி :

Screenshot-2020-08-27-23-22-36-642-org-m

தட் மொமன்ற் ..☺️..😊

அருமையான உவமானம்🤣.

ஆனால் எனக்கு இந்தியாவிலயோ, தமிழ் அரசியல்வாதிகளிலோ, சீமானிலோ நம்பிக்கை இல்லை.

எமக்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்றால் ஐயா வீரசேகர தெற்காசியாவின் இம்சை அரசன் மீது இன்னும் இன்னும் காறித்துப்ப வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.