Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் கொள்கை – ஜயநாத் கொலம்பகே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Adm-Dr-Jayanath-Colombage-Sri-Lanka-Navy--720x450.jpg

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் கொள்கை – ஜயநாத் கொலம்பகே

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் வெளிவிவகாரக் கொள்கை என வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் இலங்கை கடற்படையின்  முன்னாள் தளபதியுமான ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், புதிய அரசின் வெளிவிவகார கொள்கை, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும்  என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் நலன்களை பாதுகாப்போம். அதாவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம் என்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் இதே கொள்கையை பின்பற்றுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தங்கள் மண்ணில் பிற நாட்டுக்கு எதிரான, குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான எந்த காரியத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

உலக அளவில் சீனா இரண்டாவது பொருளாதார வல்லரசு நாடு என்றும் இந்தியா 6ஆவது பொருளாதார வல்லரசு நாடு என்றும் எனவே 2 பொருளாதார வல்லரசுகளுக்கிடையே இலங்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை முதலில் இந்தியாவுக்குத்தான் குத்தகைக்கு கொடுக்க முன்வந்ததாகவம் ஆனால், இந்தியா ஏற்காததால்தான் சீனாவுக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த துறைமுகத்தை சீனா வணிக காரியங்களுக்குத்தான் பயன்படுத்தும் என்பதோடு, இராணுவ செயற்பாடுகளுக்கு பயன்படுத்தாது என்றும் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தை இயக்குவது தொடர்பாக இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை மீறி செயற்படுத்துவோம் என்றும் ஜயநாத் கொலம்பகே மேலும் கூறியுள்ளார்.

http://athavannews.com/இந்தியாவுக்கு-முன்னுரிம/

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் கொள்கை – ஜயநாத் கொலம்பகே

சும்மா பப்பாவில ஏத்தாதீங்க.
அவங்ககிட்ட எதுவுமே இல்லை.
ஐந்தை பத்தை தந்து உங்களுக்கு அண்டவா போகுது.
பேசாம சீனா பக்கமா போங்க சார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சும்மா பப்பாவில ஏத்தாதீங்க.
அவங்ககிட்ட எதுவுமே இல்லை.
ஐந்தை பத்தை தந்து உங்களுக்கு அண்டவா போகுது.
பேசாம சீனா பக்கமா போங்க சார்.

சீனாவுடன் கால் கோர்த்து நாட்டை சிங்கபூராக மாற்றும் முயற்சியில் ஈடுபடுங்கோ மாத்தையா...

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் பல்குழல் பீரங்கிகளை வழங்கியிருக்காவிட்டால் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியிருப்பார்கள்.! 

Lieet.jpg

பாகிஸ்தான் வழங்கிய பல்குழல் பீரங்கிகள் இல்லாவிட்டால் தமிழீழ விடுதலை புலிகள் யாழ்ப்பாணத்தை பிடித்திருப்பார்கள், பல்குழல் பீரங்கிகளினாலேயே  நாம் அதனை தடுத்து நிறுத்தினோம். என வெளி விவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே கூறியிருக்கின்றார்.

பாகிஸ்தானும், இந்தியாவும் எமது நண்பர்கள். நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு நாடுகளும் எமக்கு உதவியுள்ளன. போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் ஆரம்பித்த நடவடிக்கையில் கிட்டத்தட்ட வடக்கை நாம் இழந்து விட்டோம். பாகிஸ்தானே எமக்கு முதலில்  பல்குழல் பீரங்கிகளை வழங்கி உதவியது.

வான் மார்க்கமாக பாகிஸ்தான் அவற்றை அனுப்பி வைத்தது. அவற்றை பயன்படுத்தியே புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றாமல் தடுக்க முடிந்தது. இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் எமக்கு முக்கியமான நாடுகள். இலங்கையை ஒரு தரப்பிற்கு எதிராக பயன்படுத்தும் இடமாக மாற்ற இரண்டு தரப்பிற்கும் இடமளிக்க கூடாது.

இந்தியா எமது அயல்நாடு.இலங்கை மிதமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறது. ஆனால் மூலோபாய மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. மூலோபாய மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவிற்கு முதலிடம் தருகிறோம்.

மூலோபாய பாதுகாப்பின் அடிப்படையில் நாம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டியதில்லை. நாம் இந்தியாவுக்கு நன்மை செய்ய வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில், நாங்கள் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்று ஜனாதிபதி தெளிவாகக் கூறியுள்ளார்.

மேற்குலகு சுமத்தும் மனித உரிமை குற்ற்சாட்டுக்கள் அடிப்படை நியாயமற்றவை. அது நல்லிணக்கத்திற்கு உதவாது. அவை எம் மத்தியில் பிளவையே ஏற்படுத்தும். எமக்கு எதிராக யாரும் வாளை வைத்திருக்க நாம் விரும்பவில்லை. பலவந்தமாக நல்லிணக்கத்தை வென்றெடுக்க முடியாது. இது சமூகத்திலிருந்து ஏற்பட வேண்டும்.

இந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்வது எமது இலக்கல்ல. பொருளாதார அபிவிருத்தியே எமது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

https://jaffnazone.com/news/20094

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது பிள்ளைக்கு வெளு வெளு என்று வெளுத்துப்போட்டு பிறகு அழாத மிட்டாய் வாங்கித்தாறன் 
என்று பேய்க்காட்டுவதை போல ஹிந்தியாவை அசால்ட்டாக கையாள்கிறது இலங்கை, 
இம்முறை கூத்தமைப்பு  ஹிந்திய proxy அரசியல்வியாதிகள் தேர்தலில்  வாங்கிய அடியும் இந்தியாவுக்கு இனி நம்ம பருப்பு இங்க வேகாது கடையை மூடிட்டு நடையை கட்டுவோம் என்ற ஓட்டம் தான் நிக்கோபார்த்தீவில் 
புது துறைமுகம், இனி சீனா நீர்மூழ்கி என்ன விமானம் தாங்கி கப்பலை விட்டே ஹிந்தியாவின் பின்பக்கம் கிச்சு கிச்சு மூட்டுவான். ஹிந்தியா அதுவொரு அழகிய நிலாக்காலம் என்று மேல பார்த்து புகை விட வேண்டியது தான்.    

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதாவது பிள்ளைக்கு வெளு வெளு என்று வெளுத்துப்போட்டு பிறகு அழாத மிட்டாய் வாங்கித்தாறன் 
என்று பேய்க்காட்டுவதை போல ஹிந்தியாவை அசால்ட்டாக கையாள்கிறது இலங்கை, 
இம்முறை கூத்தமைப்பு  ஹிந்திய proxy அரசியல்வியாதிகள் தேர்தலில்  வாங்கிய அடியும் இந்தியாவுக்கு இனி நம்ம பருப்பு இங்க வேகாது கடையை மூடிட்டு நடையை கட்டுவோம் என்ற ஓட்டம் தான் நிக்கோபார்த்தீவில் 
புது துறைமுகம், இனி சீனா நீர்மூழ்கி என்ன விமானம் தாங்கி கப்பலை விட்டே ஹிந்தியாவின் பின்பக்கம் கிச்சு கிச்சு மூட்டுவான். ஹிந்தியா அதுவொரு அழகிய நிலாக்காலம் என்று மேல பார்த்து புகை விட வேண்டியது தான்.    

உண்மையிலேயே இந்தியா தனது கையைவிட்டு இலங்கை போயேபோய்டு என்பதை உணர்ந்து நிக்கோபர் பக்கம் போகிறதாகவா நினைகிறீகள்?

அவ்வளவு இலகுவில் விட்டுபோவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

உண்மையிலேயே இந்தியா தனது கையைவிட்டு இலங்கை போயேபோய்டு என்பதை உணர்ந்து நிக்கோபர் பக்கம் போகிறதாகவா நினைகிறீகள்?

அவ்வளவு இலகுவில் விட்டுபோவார்களா?

இந்தியாவிடம்  இனி இலங்கையின்  Grip ஏ இல்லை என்பதுதான் நிதர்சனம் 
இந்திய Proxy அரசியல் கூத்தாடிகளை  நம்பி அம்மணமாவதை  விட சிங்களஅரசியல்வாதிகளுடன்  சேர்ந்து கோவணத்தையாவது தக்க வைப்போம் என்ற நிலைக்கு மக்கள் வந்திருப்பது இந்தியாவுக்கு சோகமான முடிவு 

அவர்களும் சிவா சேனா,துணை தூதரகம்,பிரீ கர்நாட்டிக் ஹிந்தி கிளாஸ் என்று எவ்வளவு முக்கியும் மக்கள் இவர்கள் பின்னால்  எடுபடுவது போல இல்லை, இலங்கை ஒரு ஒன்னாம்நம்பர் மேட்டரு  காசு கொடுக்கும் எவருடனும் படுக்கும் , இப்போ சப்பை மூக்கன்களின் வருகையால் டிமாண்ட் ஏறிப்போச்சு, வெரி  காஸ்ட்லி, சப்பை மூக்கன்களுக்கு போட்டியாக BMW ல வந்து லவிட்டிக்கொண்டு போக நம்மாளால் முடியாது அதுதான் அவருக்கேத்த மருதானை Overpass இற்கு கீழ் நிக்கும் சரக்கு போல ஒன்றை தெரிவுசெய்திருக்கிறார்,

இருந்தாலும் பழைய கிளையண்ட் தானே என்று இலங்கை பரிதாபப்பட்டு ஒரு அஞ்சு நிமிஷம் அட்ஜஸ்ட் பண்ணிக்கும் ஆனால் சப்பை மூக்கனுகளுக்கு தான் கிராக்கி  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

இந்தியாவிடம்  இனி இலங்கையின்  Grip ஏ இல்லை என்பதுதான் நிதர்சனம் 
இந்திய Proxy அரசியல் கூத்தாடிகளை  நம்பி அம்மணமாவதை  விட சிங்களஅரசியல்வாதிகளுடன்  சேர்ந்து கோவணத்தையாவது தக்க வைப்போம் என்ற நிலைக்கு மக்கள் வந்திருப்பது இந்தியாவுக்கு சோகமான முடிவு 

அவர்களும் சிவா சேனா,துணை தூதரகம்,பிரீ கர்நாட்டிக் ஹிந்தி கிளாஸ் என்று எவ்வளவு முக்கியும் மக்கள் இவர்கள் பின்னால்  எடுபடுவது போல இல்லை, இலங்கை ஒரு ஒன்னாம்நம்பர் மேட்டரு  காசு கொடுக்கும் எவருடனும் படுக்கும் , இப்போ சப்பை மூக்கன்களின் வருகையால் டிமாண்ட் ஏறிப்போச்சு, வெரி  காஸ்ட்லி, சப்பை மூக்கன்களுக்கு போட்டியாக BMW ல வந்து லவிட்டிக்கொண்டு போக நம்மாளால் முடியாது அதுதான் அவருக்கேத்த மருதானை Overpass இற்கு கீழ் நிக்கும் சரக்கு போல ஒன்றை தெரிவுசெய்திருக்கிறார்,

இருந்தாலும் பழைய கிளையண்ட் தானே என்று இலங்கை பரிதாபப்பட்டு ஒரு அஞ்சு நிமிஷம் அட்ஜஸ்ட் பண்ணிக்கும் ஆனால் சப்பை மூக்கனுகளுக்கு தான் கிராக்கி  

சிரிக்கவும் சிந்திக்கவுக்ம் தோன்றிய பதிவு.

அந்த மருதானை உதாரணம் அடுத்த லெவல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

சிரிக்கவும் சிந்திக்கவுக்ம் தோன்றிய பதிவு.

அந்த மருதானை உதாரணம் அடுத்த லெவல்

எங்கையடா ஆளை காணேல்லையெண்டு பாத்தன்.
இப்பதான் நெஞ்சுக்கை தண்ணிவந்துது.....😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எங்கையடா ஆளை காணேல்லையெண்டு பாத்தன்.
இப்பதான் நெஞ்சுக்கை தண்ணிவந்துது.....😁

என்ர மனுசி கூட உப்பிடி தேடுறேல்ல🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.