Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பமாகியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பமாகியது

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியா- குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.இதேவேளை தேசியப்பட்டியல் நியமனத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் தலைவருக்கு அறிவிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தமை தொடர்பாக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம், சுமந்திரன், சிறிதரன் உட்பட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு கூட்ட அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம், நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்காலத்தில் கட்சியை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிவகைகள், நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்கான சுயாதீனக் குழுவைவொன்றை நியமிப்பது தொடர்பான தீர்மானம், தேர்தல் காலத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)IMG20200829101729IMG20200829101821IMG20200829101956IMG20200829103602-720x450
 

http://www.samakalam.com/செய்திகள்/இலங்கை-தமிழரசுக்கட்சிய-2/

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி கூட்டம் என்டா ஆகாதவர்கள் மீது கதிரைகள் பறக்கணும் . வேட்டி சட்டை கிழியனும் . அதான் உட்கட்சி சனநாயகம் .😊..☺️

என்னப்பா கூட்டம் நடத்துறியள்.?(!)

Tamil_News_large_2106793.jpg

👍..👌

  • கருத்துக்கள உறவுகள்

ITAK-meeting-696x392.jpg

 

அடுத்த கருணாநிதி 😁

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கு நாக்கு தள்ளீட்டா? அல்லது நாக்கை மடித்து மிரட்டுகிறாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, goshan_che said:

சம்பந்தருக்கு நாக்கு தள்ளீட்டா? அல்லது நாக்கை மடித்து மிரட்டுகிறாரா?

வேட்டி கட்டும் ஒழுங்கில்லை நாக்கு வேறை....
பேசாமல் வீட்டை இருக்கலாம் தானே

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கட்சி கூட்டம் என்டா ஆகாதவர்கள் மீது கதிரைகள் பறக்கணும் . வேட்டி சட்டை கிழியனும் . அதான் உட்கட்சி சனநாயகம் .😊..☺️

என்னப்பா கூட்டம் நடத்துறியள்.?(!)

கூட்டம் முடிவில் எப்படி இருக்கென்று கொஞ்சம் தூங்காமல் இருந்து பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கட்சி கூட்டம் என்டா ஆகாதவர்கள் மீது கதிரைகள் பறக்கணும் . வேட்டி சட்டை கிழியனும் . அதான் உட்கட்சி சனநாயகம் .😊..☺️

என்னப்பா கூட்டம் நடத்துறியள்.?(!)

கூட்டம் முடிவில் எப்படி இருக்கென்று கொஞ்சம் தூங்காமல் இருந்து பாருங்க.

இதுக்கு தானே ஆசைப்பட்டாய் கோபாலா.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுக்கு தானே ஆசைப்பட்டாய் கோபாலா.

புது மாப்பிள்ளை கணக்கா வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி கசங்காமல் போய் வந்தா போரடிக்குமல்லொ தோழர் ..👍 ..மகிழ்ச்சி .. மகிழ்ச்சி .. இதெல்லாம் சனநாயகத்தின் கூறுகள் ..👌

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிக்கு எதிராக பேசியவர்களிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை: மாவை!

in செய்திகள் 4 hours ago 0

20200829233852_IMG_0351-scaled.jpg 

தேர்தல் காலங்களிலும் அதற்கு பின்னரும் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் கட்சிக்கும் அதன் தலைமையின் மீது பிரச்சாரங்களை மேற்கொண்ட உறுப்பினர்களிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராயா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய கலந்துரையாடலில் பாராளுமன்றத்தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றி ஆராய்ந்திருந்தோம். ஒவ்வொருவரும் தமது பகுதிகளில் கட்சியின் வீழ்ச்சிக்கு ஏற்பட்ட காரணம் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்தார்கள். எனவே அந்த விடயத்தில் ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக ஆராய்ந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு குழு விரைவில் அமைக்கப்படும்.

அத்துடன் கட்சியின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த தேசியல் பட்டியல் ஆசனம் தலைவரது அனுமதி பெறாமல் செயலாளரால் தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டமை தவறானது என்றும் இருப்பினும் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நியமனம் சரி என்றும், அது தொடரவேண்டும் என்றும் மத்தியகுழுவால் தீர்மானிக்கப்பட்டது. அந்த தீர்மானம் விதிமுறைகளிற்கு மாறானது என்பதை தீர்மானித்துள்ளோம். அது தொடர்பாக மேலும் தீர்மானங்கள் எடுக்கவேண்டுமாக இருந்தால் அடுத்த செயற்குழு அது தொடர்பாக தீர்மானிக்கும்.

அத்துடன் தேர்தல் காலங்களிலும் அதற்குபின்னரும் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் தொடர்பாக, ஊடகங்களில் பகிரங்கமான கருத்துக்களை வெளியிட்ட உறுப்பினர்களிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அதுவரை அவரது நியமனம் தொடரும்.

அத்துடன் 2020 தேர்தல் விஞ்ஞாபனம் அதில் கூறப்பட்ட அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள், ஏனைய நடவடிக்கைகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல்
தொடர்பாகவும் தேசியமாநாட்டை நடாத்துவது தொடர்பிலும் அடுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

அத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகபேச்சாளர் மற்றும் கொரடா விவகாரம் தொடர்பாக இங்கு நாம் எதனையும் பேசவில்லை. கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு கூட்டத்தில் அந்த விடயம் தொடர்பாக தீன்மானிப்பார்கள். தேவைப்பட்டால் நாங்களும், கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசுவோம்.

எமது கட்சியின் மகளீரணியை சேர்ந்த பெண்மணி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கட்சியின் தலைவரது வழிகாட்டலின்படி செயலாளர் அவரை பதவியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார். அவர் மீது சுமத்தப்படும் குற்றங்கள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும் என தீர்மானித்துள்ளது. என்றார்.

https://thamilkural.net/newskural/news/65514/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எமது கட்சியின் மகளீரணியை சேர்ந்த பெண்மணி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கட்சியின் தலைவரது வழிகாட்டலின்படி செயலாளர் அவரை பதவியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.

பெண்களுக்கு, தங்கள் அடாவடிகளுக்கு எடுபடாதவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்துவிடுவார்கள். ஏனையோருக்கு எதிராக எடுக்கப்பயம். தங்கள் வண்டவாளம் வெளிய வந்துவிடும், தாங்களும் வெளியேற வேண்டிவரும். நாங்கள் நடுநிலையானவர்கள் நிரூபிச்சாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

சம்பந்தருக்கு நாக்கு தள்ளீட்டா? அல்லது நாக்கை மடித்து மிரட்டுகிறாரா?

நான் நினைக்கிறன், அவருக்கு நாக்கு விழுந்து போச்செண்டு. அவரை கதிரைக்கு கொண்டு வரவே நாலுபேர் தேவைப்படுகிறது. இதெல்லாம்  வீண் விரயம். இருந்தாலும் கதிரை ஆசை யாரை விட்டது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.