Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை முஸ்லிம்களுக்கு சொந்தமான நாடு உலமாக்களின் முஸ்லிம் கட்சி உரிமை கோருகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முஸ்லிம்களுக்கு சொந்தமான நாடு உலமாக்களின் முஸ்லிம் கட்சி உரிமை கோருகிறது

[05 - June - 2007]

இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான மண் என்று சிங்களப் பேரினவாதிகள் கூறி வருவது அப்பட்டமான பொய். அது மிகவும் கண்டிக்கத்தக்க கூற்றாகும். முதல் மனிதன் தோன்றிய வரலாற்றை நோக்குகின்றபோது இந்த மண் முஸ்லிம்களுக்கே சொந்தமானதாகுமென உலமாக்களின் முஸ்லிம் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய `முஸ்லிம் பூர்வீகம்' நூலின் நான்காவது அறிமுக விழா அண்மையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்துரை வழங்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

`எழுவான்' வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் அதன் தவிசாளர் ஆசுகவி அன்புடீன் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அங்கு முபாறக் அப்துல் மஜீத் மேலும் பேசுகையில் கூறியதாவது;

"விண்ணுலகில் இறைவனால் படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்கள் முதலில் இலங்கைக்கே அனுப்பப்பட்டார்கள். அந்த முதல் மனிதன் இலங்கையில்தான் தோன்றினார் என்பதை வரலாறும் ஏற்றுக் கொள்கிறது.

ஆனால், அந்த முதல் மனிதன் முஸ்லிம் என்பதால் எமது பூர்வீகம் இலங்கையில்தான் ஆரம்பிக்கிறது. இந்த தேசத்தில் தோன்றிய முதல் மனிதன் ஆதம் - முஸ்லிம் என்பதால் இந்த மண் முஸ்லிம் சமூகத்திற்கே சொந்தமானதாகும். இதனை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் நாம் அப்படி உரிமை கொண்டாடவில்லை. சகல இனத்தவரையும் சகோதரர்களாகவே பார்க்கிறோம். எவரையும் குரோத மனப்பாங்குடன் நோக்கவில்லை. ஆனால் சிங்களப் பேரினவாதிகளின் விஷமப் பிரசாரத்தை முறியடிப்பது அவசியமாகும்.

அதற்கு எமது வரலாறு பற்றிய தெளிவு எம்மிடம் இருக்க வேண்டும். நாம் இந்த நாட்டின் வந்தேறு குடிகளா அல்லது எமது பாரம்பரிய பூர்வீகத் தாயகமா? இங்கு எமக்கிருக்கும் உரிமைகள் என்ன என்பது தொடர்பில் தர்க்கரீதியாக வாதிடும் ஆற்றல் எம்மிடையே உருவாக வேண்டும்.

முஸ்லிம் சமூகம் வாசிப்புத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால்தான் இவை பற்றிய போதிய அறிவு எமது மக்கள் மத்தியில் இல்லாமல் இருக்கிறது. இதனால் எம்மை மாற்று சமூகத்தினர் அடிமைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

அறிவுபூர்வமான எழுத்துகளை வாசிப்பதற்கு சமூகம் தயாரில்லை வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தமது வாசிப்பை மட்டுப்படுத்திக் கொள்கின்றனர். இது மிகவும் கவலை தரும் விடயமாகும், இவ்வாறான சமூகத்தினர் மத்தியில் தனி ஊடகம் ஒன்றை செயற்படுத்துவதற்கான ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே.

முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பில் ஒரு தெளிவான பார்வையை சகோதரர் நூநுல்ஹக் செலுத்தியிருக்கிறார். நுனிப்புல் மேய்வது போல அல்லாமல் ஆய்வு ரீதியாக எழுதும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது. அவருடைய எழுத்துகள் ஆழமான கருத்துகளைக் கொண்டவை என்பது மாத்திரமல்ல ஆதாரபூர்வமானவையாகவும் அமைந்துள்ளன.

முஸ்லிம் சமூகத்தின் வரலாறு பற்றிச் சொல்லக் கூடிய நூல்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில் நூறுல்ஹக் `முஸ்லிம் பூர்வீகம்' நூலை வெளியிட்டிருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டியதொரு விடயமாகும். முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை அவர் மிகத் தெளிவாக தைரியத்துடன் விவரித்துள்ளார்" என்றார்.

இவ்வைபவத்தில் தெ.கி.பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி கே.எம்.எச்.காவிதீன், மாவட்டநீதிபதி கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர், காதி நீதிவான் சம்சுதீன் மௌலானா, முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் பீர்முஹம்மட் தம்பி, பிரதேச செயலாளர் யூ.எவ்.நியாஸ், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, அமைச்சர் அதாவுல்லாவின் பொதுஜனத் தொடர்பு அதிகாரி ஏ.பி.தாவூத், விரிவுரையாளர் எஸ்.எம்.அய்யூப், கலையன்பன் எஸ்.எம்.ஏ.அஸீஸ், தேசிய முஸ்லிம் கவுன்ஸில் உபதலைவர் எம்.ஐ.எம்.இஸ்திகார் உட்பட மற்றும் பல பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

ஆதம் முஸ்லீமென்றால் அவருக்கு சுன்னத் செய்தது யாரு? கடவுளா?

கரு உங்கள் கோபம் புரிகின்றது

இது மிகப்பெரும் நகச்சுவை இவகளுடன் பேசி பயனில்லை அடிச்சுத்தான் எமக்கு சொந்தமானதை எடுக்க வேண்டும்

இப்போது அமைதியாக இருக்கும் முஸ்லிம்கள், தமிழீழம் உருவாகும்போது சட்டம் கல்வி உரிமை போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

ஒம்...ஓம் கிறிஸ்தவர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? விரைவிலேயே ஆயர்களின் கிரிஸ்தவக் கட்சியும் உரிமை கோரவுள்ளது!

அப்புறம் என்ன நாடு இரண்டுபட்டா ..... மன்னிக்கவும் ... நாலுபட்டா .... இந்தியாவுக்கு கொண்டாட்டம் தான்!

இப்போது அமைதியாக இருக்கும் முஸ்லிம்கள், தமிழீழம் உருவாகும்போது சட்டம் கல்வி உரிமை போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

தமிழீழத்தில் இனரீதியான ஒடுக்கு முறைகள் இருக்காது. சிறுபான்மையினரின் நலன்கள் நிச்சயம் பாதுகாக்கப்படும். அதுவே தலைவரின் கொள்கையும் கூட.

இல்லையென்றால் சிங்களவருக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு நெல்சன் மண்டேலா போல் தலைவரை உலகம் போற்றும் வண்ணம் தமிழீழத்தின் ஆட்சி இருக்கும்!

இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான மண் என்று சிங்களப் பேரினவாதிகள் கூறி வருவது அப்பட்டமான பொய். அது மிகவும் கண்டிக்கத்தக்க கூற்றாகும். முதல் மனிதன் தோன்றிய வரலாற்றை நோக்குகின்றபோது இந்த மண் முஸ்லிம்களுக்கே சொந்தமானதாகுமென உலமாக்களின் முஸ்லிம் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

ஆகா... சிங்கள உறுமயவுக்கு போட்டியாக இன்னொரு வேதாளம் வந்துவிட்டது..

தினக்குரலிற்கு செய்திகள் போதவில்லை போல இருக்கிறது.. அல்லது இதை காசு கொடுத்து தினக்குரலில் விளம்பரம் செய்தார்களோ தெரியாது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே போன்றுதான் யேசுவும் ஒரு கறுப்பு மனிதர்.. அதாவது அவரது தோற்றம் இந்தியர்கள் போன்று இருப்பார்.. கறுப்பு தலைமயிர் உள்ளவர்.. அவரை வெளிநாடுகளில் தங்களுக்கு ஏற்றவகையில் உருவாக்கி வழிபடுகிறார்கள்.. வெள்ளை தலைமயிர் இருப்பது போன்று எல்லாம்..

ஆளுக்கு ஆள் தங்கள் எண்ணத்திற்கு கதைக்கவேண்டியது..!

  • கருத்துக்கள உறவுகள்

வாசனை திரவியங்களை வாங்க, விற்க வந்தவர்கள் எப்படி இலங்கையின் ஆதி குடிகள் ஆக முடியும்? நல்ல காலம் கெல உறுமையா காரர் கேழ்விப்படவில்லை. கேழ்விப்பட்டிருந்தால்,எங்கட

  • கருத்துக்கள உறவுகள்

யார் உரிமை கோருவதாலும் அது அவர்களுக்கு என்றாகாது. மதரீதியான இசுலாமியரைச் சாடுகின்ற விவாதம் வேண்டாமே. இங்கே சிங்களப் பெளத்த அடிப்படைவாதத்துக்கு எதிராகவே மேற்குறித்த மெளலவி பேசியிருக்கின்றார்.

தவிரவும், தமிழீழம் என்ற ஒருமைப்பாட்டுள்ள தேசத்திற்காகப் போரட்டத்தில் இறங்கிய பின்னர், சிறிலங்காவைப் பற்றி குறிதத மெளலவி கதைப்பதற்கு நமக்கு ஏன் கோபம் வரவேண்டும். இலங்கையைப் பற்றி அவர்கள் கதைப்பதால் நமக்கு என்ன குறைந்து போய்விட்டது?

இதே போன்றுதான் யேசுவும் ஒரு கறுப்பு மனிதர்.. அதாவது அவரது தோற்றம் இந்தியர்கள் போன்று இருப்பார்.. கறுப்பு தலைமயிர் உள்ளவர்.. அவரை வெளிநாடுகளில் தங்களுக்கு ஏற்றவகையில் உருவாக்கி வழிபடுகிறார்கள்.. வெள்ளை தலைமயிர் இருப்பது போன்று எல்லாம்..

ஆளுக்கு ஆள் தங்கள் எண்ணத்திற்கு கதைக்கவேண்டியது..!

இசுலாமியரின் கொள்கைப்படி, இயேசு நாதரை ஈஸா(நபி) என்றுதான் அழைப்பார்கள். அவர்களின் சிந்தனைப்படி இயேசுவும் ஒரு நபிகளாவார். அவர்களின் நபிகள் வரலாறு என்ன கூறுகின்றது என்றால் நபிகள் தந்தையின்றித்தான் பிறப்பார்கள். கடைசி நபிகளான முகம்மது நபிகளுக்குப் பிறகு எந்த நபிகளும் பிறக்கமாட்டார்கள் என்று எழுதி வைத்ததால் பிற்காலத்தில் இது பற்றிய சிக்கல்கள் எழவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கை பாத்தால் எங்கடை நாட்டுப்பிரச்சனை கிட்டத்தட்ட சாம்பார் மாதிரி வரப்போகுது போலை கிடக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தில் இனரீதியான ஒடுக்கு முறைகள் இருக்காது. சிறுபான்மையினரின் நலன்கள் நிச்சயம் பாதுகாக்கப்படும். அதுவே தலைவரின் கொள்கையும் கூட.

இல்லையென்றால் சிங்களவருக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு நெல்சன் மண்டேலா போல் தலைவரை உலகம் போற்றும் வண்ணம் தமிழீழத்தின் ஆட்சி இருக்கும்!

நிச்சயமாக ஒரு நெல்சன் மண்டேலா போல் தலைவரை உலகம் போற்றும் வண்ணம் தமிழீழத்தின் ஆட்சி இருக்கும்

இதுவே என்கருத்தும்

அவாவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.