Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையில் மின்னல் தாக்கி 27 பசுக்கள் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_20200901_205443.jpg

மட்டக்களப்பு – வாகரை, மாவடி ஓடை பகுதியில் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன.

மாவடி ஓடை பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

இதன்போது, மின்னர் தாக்கத்தினால் தமது 27 பசு மாடுகள் இறந்துள்ளதாக பண்ணையாளரான தம்பி ஐயா ரஞ்சன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்தக் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறந்த பசு மாடுகளின் உடலங்களை பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் புதைத்தனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கடும் மழையும் மின்னலும் இடியும் மின் கம்பங்கள் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள்  சேதம் வவுனியாவில் ஆலங்கட்டி மழையும் பெய்ததாக செய்திகள் சொல்கின்றன

 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நேற்று கடும் மழையும் மின்னலும் இடியும் மின் கம்பங்கள் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள்  சேதம் வவுனியாவில் ஆலங்கட்டி மழையும் பெய்ததாக செய்திகள் சொல்கின்றன

 

அதுசரி இதயேன் வெட்டி தாக்கினம்...

அங்காளிப்பக்கம் கொடுத்தால், தின்று இருப்பார்களே.

  • கருத்துக்கள உறவுகள்

முதலும் இப்படி செய்திகள் வந்தது  மாட்டுக்கொட்டகைகளுக்கு மேல் இடிதாங்கி அமைப்பது நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

முதலும் இப்படி செய்திகள் வந்தது  மாட்டுக்கொட்டகைகளுக்கு மேல் இடிதாங்கி அமைப்பது நல்லது .

கவலையான விடயம். எம் மக்களுக்கு இதைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தனும்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

அதுசரி இதயேன் வெட்டி தாக்கினம்...

அங்காளிப்பக்கம் கொடுத்தால், தின்று இருப்பார்களே.

அவர்கள் மாடுகள் உயிருடன் இருந்தால் அதை வெட்டி தின்பார்கள்  ( தக்கீப்) இறந்ததை தின்ன மாட்டார்கள் நாதம்ஸ்

21 hours ago, பெருமாள் said:

முதலும் இப்படி செய்திகள் வந்தது  மாட்டுக்கொட்டகைகளுக்கு மேல் இடிதாங்கி அமைப்பது நல்லது .

மாடு வளர்ப்பவர்களுக்கு அந்தளவுக்கு வசதிகள் இல்லை இந்த இழப்பால் ஒரு குடும்பம் மீண்டும் ஏழ்மைக்குள் ஏற்கனவே மாட்டுக்கள்ளனுகள் வேற மாட்டை இரவில் திருடிக்கொண்டு போகிறார்கள் இறைச்சிக்காக 

17 hours ago, உடையார் said:

கவலையான விடயம். எம் மக்களுக்கு இதைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தனும்

அதிகமான மாடுகள் என்றால் கொட்டகை இல்லை வெட்ட வெளிதான் உடையார்  அது தங்குமிடம்  அந்த நேரத்தில் சம்பவங்கள் நடக்கிறது மழை  நேரங்களில் வெளியில் உள்ளதை கலைத்தால் அடுத்த நாள் பால் கறக்கமுடியாது கலைந்து சென்றுவிடும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

மாடு வளர்ப்பவர்களுக்கு அந்தளவுக்கு வசதிகள் இல்லை இந்த இழப்பால் ஒரு குடும்பம் மீண்டும் ஏழ்மைக்குள் ஏற்கனவே மாட்டுக்கள்ளனுகள் வேற மாட்டை இரவில் திருடிக்கொண்டு போகிறார்கள் இறைச்சிக்காக 

விழிப்பு குழு போன்ற ஒன்றை அமைப்பதுதான் வழி கள்வர்களுக்கு  இடி தாங்கி  பெரிய சிலவாய்  இருக்காது என்பது என்கணிப்பு .ஏனென்றால் வரும் காலம்களில் கட்டுப்பாடற்ற எண்ணெய் பாவனை உள்ள கப்பல்கள் வாகனம்கள்  நடமாட்டத்தால் காற்றில் அதிகளவான கந்தகம் கலந்துவிட்ட்து கலந்து கொண்டு இருக்கிறது அதன் மூலம் தென்  ஆசிய பகுதிகளில் உள்ள நாடுகளின் கரையோர நகரங்கள் அதிகளவான lightning storms (இடி மின்னல் )தாக்கப்படுத்தல் கூடவாக இருக்கும் முக்கியமாய் அமிலமழை  பொலிவு அடுத்து புற்று நொய் அதிகரிப்புகள் தவிர்க்கமுடியாமல் கூடும் .sox emissionsஎனப்படும் பாரிய சூழல் மாசுபாட்டை தவிர்க்க மேலைய நாடுகள் கடுமையான திட்டங்களை  கொண்டுவந்து விட்டார்கள் ஆனால் அங்கு ஆட்சிக்கு வந்தவன் எப்படி இனத்துவேசம் பேசி சிங்களவர்களை பேய்க்காட்டி  சொத்து சேர்ப்பதில் மும்முரமாய் இருப்பார்கள் புத்தனால்  உலகில்  சபிக்கப்பட்ட தேசமாகி போய்  விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தி எனும் மாயாமானை கலைக்கும் நாங்கள், இருக்கிற முதலை காப்பாற்ற முடியாமல் இழக்கிறோம். அமைதியாய் உழைத்து, உண்டு, உறங்கி இருந்த எமக்கு நிம்மதியாய் தூங்க முடியவில்லை. எல்லாமே இழப்பும், பறிப்புமென வாழ்க்கை கரைகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.