Jump to content

இரு துண்டுகளான கையைப் பொருத்தி யாழ்.வைத்தியர்கள் சாதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23.09 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினர், முழுமையான பங்களிப்பினை வழங்கியதற்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டி சத்திரசிகிச்சை ஒருவருக்கு மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றையதினம் யாழ் போதனா

வைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்

.

 

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், 

மேலும் பொதுமக்கள் கை,கால்கள் துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடையவேண்டும்.மேலும் அளவுக்கு மேலாக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கமுடியாது போகக்கூடும்.

என இது பல சிக்கலான சிகிச்சைமுறை என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/91082

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வைத்திய குழாமுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் குழாமுக்கு பாராட்டுக்கள்......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்தி யாழ் வைத்தியசாலை சாதனை

 

ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்தி மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை  வெற்றியளித்துள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான மருத்துவ குழுவினர், முழுமையான பங்களிப்பின் மூலம் இந்த சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எஸ் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 23ஆம் திகதி கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர்,  ஒரு கை துண்டப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார். அவருக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 12 மணித்தியாலங்கள் தொடர் சத்திரசிகிச்சையினை வழங்கினார்கள். இந்த சத்திரசிகிச்சை வெறிறியளித்ததன் பயனாக அவருடைய துண்டாடப்பட்ட கை தற்போது நல்ல நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.” என்றார்.

http://www.ilakku.org/துண்டிக்கப்பட்ட-கையை-மீண/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.