Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் கோட் சூட் போராட்டம் எதற்காக?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு... நல்ல ஆய்வும் மக்கள் எப்படி தங்கள் விருப்பவங்களை முன்னேடுக்கலாம் என்பதை விரிவாக கூறியுள்ளீர்கள்

உங்களின் முகத்தில் கவலையும் கோபமும் அயர்ச்சியும் விளங்குகின்றது குணா, கையாறு நிலையில் இருக்கின்றோம் நாம் இப்ப.

தமிழ் அரசியல் வாதிகள் தங்களில் யார் பெரியவனென காட்டதான் இப்ப களமாடிக்கொண்டிருக்கின்றார், எல்லாம் நடிப்பு. சிங்களத்தின் முயற்ச்சியை தடுத்தாட எந்த முயற்ச்சியும் இல்லை இவர்களிடம்

30 வருட போராட்டத்தால் மக்கள் இப்ப சோர்வு நிலைக்கு சென்றுவிட்டார், பலர் தங்களும் தங்கள் குடும்ப முன்னேற்றதில் தான் கவனமாக இருக்கின்றார்கள். இளைஞர்களை ஒவ்வொரு அரசியல் வாதிகளும் ஒரு மாய நிலையில் அவர்கள் சொல்வதை கேட்கும் நிலையில் வைத்திருக்கின்றார்கள், பல்கலை இளைஞர்கள் தங்களுக்குள் யார் பெரியவனென அடிபடுகின்றார்கள், சிங்களவன் செய்த அதே அடக்குமுறை.. விழிந்தெழுவார்களா

 

"visva Ananth5 hours ago (edited)

அடங்கா தமிழன் சுந்தரலிங்கம் ஐயா அவர்கள் ! ஐயா பொ.வன்னியசிங்கம் அவர்கள்,. மறத் தமிழன் ஐயா நாகநாதன் அவர்கள் .. இந்த தலைலர்கள் எல்லாம் ஈழ தமிழனத்திற்காக எழுப்பாத குரலையா ஸ்ரீலங்கா சிங்கள பாராளுமன்றத்தில் எழுப்ப போகிறார்கள்.. முப்பெரும் தலைவர்கள் ஐயா மதிப்பிட்குரிய திரு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள். தலைவர் திரு.ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள்.. தலைவர் ஐயா .மு.திருச்செல்வம். அவர்கள் .. தலைவர் திரு. அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ..ஸ்ரீலங்கா சிங்கள பாராளுமன்றத்திலே கேட்காத கேள்விகளையா .ஸ்ரீலங்கா சிங்கள நீதி மன்றம் சென்று வாதாடத வழக்குகளையா வாதாட போகிறார்கள்.. இன்று இருக்கும் ஐயா திரு. இரா சம்பந்தன் அவர்களாக இருக்கட்டும். திரு..சி.வி. விக்னேஸ்வரன் ஐயா அவர்களாக இருக்கட்டும்.. திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களாக இருக்கட்டும் அவர்கள் முன்னால் இருக்கின்ற பொறுப்புகள் வேறு,. இன்று எமது ஈழ தமிழனம் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள் வேறு.. எமது ஈழ தமிழினம் இன்று முகம் கொடுத்திருக்கும் பிரச்சனை முன்னர் எப்பொதும் எமது ஈழ தமிழினத்திற்கு எழுந்ததில்லை,. இன்று எமது தமிழினம் ஈழ மண்ணிலே பொட்டிழந்து பூவிழந்து முடியிழந்து தனை மறந்து தாழ்வடைந்து இருக்கின்றது.. எமது தமிழினம் எமது மண்ணிலே நாயிலும் கேடாய் நலிந்து கிடக்கின்றார்கள்.. இன்று ஈழ தமிழினத்திற்கு சூழ்ந்து இருக்கும் பிரச்சனையை ஸ்ரீலங்கா சிங்கள நாடாளுமன்றத்திலே உணர்ச்சிகளை கொட்டி பேசி தீர்த்து விடமுடியாது. அறிக்கைகள் வழக்குகள் மூலம் தீர்தது விடமுடியாது. இன்று ஸ்ரீலங்காவில் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் எங்கள் ஈழ தமிழர்களை வகை தொகையின்றி தயவு தாட்சண்யம் பாராது அழித்த சிங்கள தீட்சர்கள்' ராஐபக்ஸ்ஷர்கள்..ஆண்டாண்டு காலமாய் எமது தமிழர்கள் வாழ்ந்த தாயக மண்ணை சிதைத்தவர்கள், ஈழ தமிழினத்தை தீயிலே பொசுக்கியவர்கள் , அரக்க போர் குணம் கொண்ட சிங்கள போர் குற்றவாளிகள்.. இவர்களை கையாள்வதற்கு எமக்கு இன்றிருக்கும் தலைவர்களுக்கு அசாத்திய பலம் துணிவு வேண்டும்.."
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வுக்கு பாராட்டுக்கள் குணா.

  • கருத்துக்கள உறவுகள்

 பாராளுமன்ற உரைகளை சாதனைகளாகப் பட்டியலிடுவது சில்லறைத் தனம். ஆனால், அதே பாராளுமன்ற உரைகளில் சில  அரசியல்வாதிகள் குறிப்பிட்ட கருத்துகளை தனியே எடுத்து அவர்களுக்கு பல்வேறு பட்டங்களும் கொடுக்கப் பயன்படுத்தியதும் சில்லறைத் தனம் தான். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றுவது இயல்பான விடயமே. ஆனால் அந்த உரைகளை பெரிதுபடுத்தி அவர்களை கதாநாயகர்களாக காட்டும் ஊடகங்களில் தான் தவறு உள்ளது. அத்துடன் தற்போதைய அரசியல்வாதிகள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து ஏதோ இவர்கள் தான் எல்லா பிரச்சனைகளுக்கும்  காரணம் என்பது போன்ற தோற்றப்பாட்டை  ஏற்படுத்துவதும் சரியான அணுகுமுறையாக படவில்லை. தமிழ் அரசியல் பரப்பில் இனப்பிரச்சனையில் தவறான அணுகுமுறை ஆயுதப் போராட்டத்திற்கு முன்பே தோற்றம் பெற்றுவிட்டது. அந்த தவறான அணுகுமுறையையே ஆயுதம் தாங்கிய போராளிகளும் தமது பாணியில் தொடர்ந்து இன்றைய அவல நிலைக்கு காரணமாகினர். இந்நிலையில் தற்போதய அரசியல்வாதிகளை மட்டும் தவறு காணாமல் ஒட்டு மொத்தமான கடந்தகால தவறுகளை ஆராய்ந்து அதன் விளைவுகள் எப்படி எமது போராட்டத்தை எதிர்மறையில் தொடர்ச்சியாக கொண்டு சென்றது என்பதை பட்டறிவின் அடிப்படையில்   சுட்டிக்காட்டுவதன்மூலம் தற்போதைய அரசியல் வாதிகள் சிறந்த தீர்மானங்களை அவர்களாகவே எடுக்கும் விழிப்புணர்வை உருவாக்கமுடியும். 

நடைமுறை அரசியல்வாதிகளின் தவறுகள் முன்னைய அரசியலின்  தொடர்சசியாக உள்ளது என்பதே உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமும் சில்லறையாக இருக்கு 
ஆயுத போராட்டதுக்கு முந்தியே எல்லாம் தப்புதான் 
பின்பு ஆயுத போராடடம் அப்பாடா அது முழுவதுமே 
தவறு தப்பு பிழை என்றுதான் பார்க்கிறோம் 

எனது கேள்வி என்ன என்றால் 
இங்கிருக்கும் வித்துவான்கள் மூன்று நாலு பேர் 
கூடி தமிழ் இனத்துக்கு அந்த சரியான பாதையை ஏன் காட்ட முடியாது?
இவளவு அரசியல் அறிவையும் ஏன் இங்கு யாழ் களத்தில் வீணடிக்கிறார்கள்? 

பதில் ஒரு பானையை  செய்பவனுக்குத்தான் உழைப்பு தியாகம் உறுதி 
அர்ப்பணிப்பு தேவை. இவற்றுக்கு யார் துணிகிறானோ அவனால்தான் 
ஒரு பானையை செய்யமுடிடியும்.

அவன் பானையை செய்த பின்பு அங்கு கோணல் இருக்கிறது 
இங்கு கீனல் இருக்கிறது மண் பிழை  செய்த விதம் பிழை 
என்று பிதற்றுவதுக்கு வெறும் பிதற்றல் குணம் மட்டும் இருந்தால் போதும் 

இறுதியில் ஒரு சமூகத்துக்கு சொத்தியோ கோனாலோ 
சமைத்து சாப்பிட ஒரு பானைதான் வேண்டும். அதை யார் தருகிறான் 
என்பதுதான் சமூகத்தில் கருத்தில் கொள்ளப்படும் 

வீண் பிதற்றல்களால் உலகில் எந்த சமூகமும் எந்த பயனும் கண்டதில்லை 
காரணம் சமூக அக்கறை கொண்டவன் எங்கேனும் ஒரு மூலையில் ஒரு பானையை 
செய்துகொண்டுதான் இருப்பான் அவனால் ஒரு முழு வடிவான பானையை உருவாக்க 
முடியாதுபோனாலும் பானை செய்யும் அடுத்தவனின் உழைப்பு எவ்வளவு சிக்கலானது 
என்ற புரிந்துணர்வுடன் இருப்பான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.