Jump to content

மாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா?


Recommended Posts

30 minutes ago, உடையார் said:

இலங்கையில் இடம்பெற்ற போர்க்காலத்தில் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் சாதிய ரீதியான பாகுபாடுகள் ஒழிந்து காணப்பட்டபோதும் தற்போது அது மீண்டும் முளைவிடத் தொடங்குவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உயிர்பயம் காரணமாக ஜாதியம் உறைநிலையில் (Hibernation) வைக்கப்பட்டதே அன்றி ஒருபோதும் ஒழிக்கப்படவில்லை....

ஆனால் இன்று, ஆறு கடந்தாச்சு...

பி.கு: தமிழில் சாதி என்று ஒரு சொல் இல்லை. ஜாதி எனும் சமஷ்கிருத சொல்லைப் பயன்படுத்துவதே சரியாக அமையும். அதுவே சொல்லுடன் எங்கிருந்து வந்தது, யாருடைய நன்மைக்காக திணிக்கப்பட்டது போன்றவற்றை "காவி"வரும் பொருத்தமான காரணச்சொல்லாக அமையும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பராபரன் said:

உயிர்பயம் காரணமாக ஜாதியம் உறைநிலையில் (Hibernation) வைக்கப்பட்டதே அன்றி ஒருபோதும் ஒழிக்கப்படவில்லை....

ஆனால் இன்று, ஆறு கடந்தாச்சு...

பி.கு: தமிழில் சாதி என்று ஒரு சொல் இல்லை. ஜாதி எனும் சமஷ்கிருத சொல்லைப் பயன்படுத்துவதே சரியாக அமையும். அதுவே சொல்லுடன் எங்கிருந்து வந்தது, யாருடைய நன்மைக்காக திணிக்கப்பட்டது போன்றவற்றை "காவி"வரும் பொருத்தமான காரணச்சொல்லாக அமையும்...

சரியாக சென்னீர்கள். நன்றி அறிய தந்ததிற்கு இனி ஜாதி என்றே பாவிப்போம். ஆரியர்களால் திணக்கப்பட்ட ஒன்று, இதைவிட்டு வெளிவரனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, உடையார் said:

சரியாக சென்னீர்கள். நன்றி அறிய தந்ததிற்கு இனி ஜாதி என்றே பாவிப்போம். ஆரியர்களால் திணக்கப்பட்ட ஒன்று, இதைவிட்டு வெளிவரனும்

உடையார்,

இந்த திரியில் உங்கள் தீர்க்கமான நிலைப்பாட்டுக்கும் கருத்துக்களுக்கும் வாழ்துக்கள், நன்றியும். 

ஒரு சிறுவனுக்கு தான் சாதியத்தால் பாதிக்கப்படுகிறோமா இல்லையா என்பது அப்பட்டமாக புரியாதுதானே? தவிரவும் சாதியம் பொதுவாகவே பூடகமாக சொல்லப்/செய்யபடும் விடயம்.

அந்த சிறுவனிடம் போய் சாதிதான் உன்னை பாட விடாமைக்கு காரணம் என நேரடியாக சொல்லும் அளவுக்கு முட்டாள்கள் இல்லை இந்த மே(மோ)ட்டு குடிகள்.

கரைச்சி பிரதேச செயலாளரின் நடவடிக்கை நீங்கள் சொல்லியதை சரி என்று நிரூபிதுள்ளது.

இந்தியாவில் இருப்பது போல் சாதிய வன்கொடுமை சட்டங்கள் இலங்கையிலும் கடுமையாக்கபடல் வேண்டும். இந்த மாதிரி நாலு தர்மகர்தாவை பிடித்து 4 வருடம் களி தின்ன வைத்தால் எல்லாம் தானாக சரி வரும்.

 

35 minutes ago, பராபரன் said:

உயிர்பயம் காரணமாக ஜாதியம் உறைநிலையில் (Hibernation) வைக்கப்பட்டதே அன்றி ஒருபோதும் ஒழிக்கப்படவில்லை....

ஆனால் இன்று, ஆறு கடந்தாச்சு...

பி.கு: தமிழில் சாதி என்று ஒரு சொல் இல்லை. ஜாதி எனும் சமஷ்கிருத சொல்லைப் பயன்படுத்துவதே சரியாக அமையும். அதுவே சொல்லுடன் எங்கிருந்து வந்தது, யாருடைய நன்மைக்காக திணிக்கப்பட்டது போன்றவற்றை "காவி"வரும் பொருத்தமான காரணச்சொல்லாக அமையும்...

பராபரன்,

மிகச் சரியான பார்வை. அந்த அணுகுமுறையை நான் இன்றளவும் வெறுத்தாலும், அவர்கள் இருந்தால் இதெல்லாம் நடக்காது என்பதையும் நான் ஏற்கிறேன்.

நீங்கள் யாழில் அதிகம் எழுத வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

முதலில் அந்தக் காணொளியில் அந்தச் சிறுவனின் வாக்கு மூலத்தை காணுங்கள். அவனே சொல்கிறான்.. இதை சிலர் சொல்லினம்... என்று தானே தவிர.. அவன் சொல்லவில்லை

இளைஞன் (உயர்தரம் படிப்பதால் இளைஞன்தானே) அதே ஊரில் வசிக்கவேண்டும் என்பதால் பொறுப்பாக, பண்பாக கதைக்கின்றார். ஆனால் சமாதான நீதவான் அல்லது அவரை ஆதரிப்பவர்கள் நேரடியாக சாதியைக் காட்டி பாடுவதை நிறுத்தினால் பிரச்சினை பெரிதாகும் என்று சுழித்து விளையாடுகின்றார்கள். இது வீடியோவிலும், செய்திகளிலும் நன்றாகவே தெரிகின்றது. 

நெடுக்ஸ் பிற்போக்குத்தனங்களை வெளிக்கொண்டு வருபவர்களை சந்தேகிப்பதைவிட சமாதான நீதவானின் இழிவான செயலை கண்டிக்க முன்வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் நிர்வாகம் சாதி என்று சொல்லி காரணம் காட்டினால் அல்லது மாணவன் அப்படி சாதி என்ற காரணம் சொன்னால் தான்  , சாதியின் காரணாமாக மாணவன்  பாரபட்சமாக நடத்தப்பட்டு இருக்கிறார் என்பதை ஏற்க முடியும் எனும் கருத்து எதற்கு கொள்ள முடியாதது.

கோயில் நிர்வாகம் தான் ஏதோ அதிமேதாவி என்ற கணக்கில் சாதி என்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்த்து, சாதியை வைத்து பாகு பாடு காட்டுகிறது.

மாணவனும் சாணக்கியமாக என்ன கரணம் என்று அறுதியிட்டு சொல்லாமல், பூடகமாக சாதி என்பதை சொல்லி இருக்கிறார்.   

இருட்டில் பச்சை மட்டை அடி என்பது தீர்வாகுமா?   

Link to comment
Share on other sites

என்னாலும் எம்மாலும் இயலவில்லைஎனும்போதும்,

தம்மை விட மற்றவர்கள்

தாம் உயர்வார் எனும் போதும்,

தம்முடைய இயலாமையை

தாம் இட்டு நிரப்புதற்கு,

தன்னுள் உறைந்துள்ள

தன்உளக்கோளாறு

தான்வெளிப்படும் வழியே

சாதி.

சாதி ஒரு சாபத் தீ

இதை சாகடிக்க நீ எடு உறுதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோசல் மீடியாவுக்கு பிரச்சனைகளை கொண்டு வருவது தீர்வுக்கு பதிலாக மேலதிக பிரச்சனைகளை சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தலாம். இப்போது எல்லார் கையிலும் ஸ்மார்ட் போன். வட்ஸாப் தொடக்கம் பேஸ்புக், யூரியூப் வரை குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இளையவர்கள் குறுக்கு வழிமுறைகளை தேடினாலும் பெரியவர்கள் தீக்குச்சி போல் அல்லாமல் கொஞ்சம் நிதானம் கடைப்பிடிக்கலாம்.  

 

அண்மையில் பிரான்சில் ஆசிரியர் ஒருவரின் படுகொலையும் சோசல் மீடியாவின் தவறான பாவனையை காண்பிக்கின்றது.

 

மீடியா என்பது தீயை கொளுத்தி போடும் இடம் அல்ல.

Link to comment
Share on other sites

வறுமை இல்லாதொழிய ஒரு செல்வந்தன் தான்புரட்சி செய்ய வேண்டும். ஏழைகள் அல்ல.

சாதி இல்லாதொழிய உயர்சாதியிரனர்தான் முன்வரவேண்டும். தாழ்ந்த சாதிகள் அல்ல.

எங்கே கையை தூக்கங்கள் பார்க்கலாம்? யாழ் நிர்வாகம் உட்பட.

சீ.சீ பொன்னம்பலம், பொன். இராமநாதன், சுந்தரலிஙகம் இவர்கள் வறுமையும் சாதியும் அழிந்து போகப்பாடுபட்டவர்கள்.? இன்னமும் எரிந்து கொண்டேயிருக்கிறது.

சிங்களவர் தமிழர்களை அழிக்க அடியெடுத்தக்கொடுத்தவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Ellam Theringjavar said:

சாதி இல்லாதொழிய உயர்சாதியிரனர்தான் முன்வரவேண்டும்.

இது சிங்களவர் தான் போராட வேண்டும், தமிழருக்கு தீர்வு வர என்பது போல இருக்கிறது.

நீங்கள் பொதுவாக இந்த உவமானதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

ஆனால், ஓர் சிறப்பு மற்றும் முன் உரிமை அளிக்கப்பட்ட குழுமம், ஒரு போதுமே தானாக வீட்டுக் கொடுக்காது.   

இனப்பாகுபாடு  அதி கூடிய விளம்பரம். 

 

 

Link to comment
Share on other sites

On 20/10/2020 at 03:48, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கையில் கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த சீன தம்பதியினர் கைது..!

Chi-Kasippu_1080.jpg 

கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் தங்கியிருந்து கசிப்பு வியாபாரம் செய்துவந்த சீன தம்பதி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

தொடர்மாடி குடியிருப்பில் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த குறித்த தம்பதி அங்கிருந்து கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலையடுத்து, 

பொலிஸார் விசாரணைகளை நடத்தியதுடன் சம்பவ இடத்தை சோதனையிட்ட போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் மீட்டுள்ளனர். 

https://jaffnazone.com/news/21086

டிஸ்கி 

சொந்த நாடாவே நெனச்சுட்டினம் .. 👌

memees.php?w=240&img=c2VudGhpbC9zZW50aGl 

இன்னும் இன்னும் நிறைய எதிர்பார்க்குறம் .. 👍

 

 

8 hours ago, Kadancha said:

இது சிங்களவர் தான் போராட வேண்டும், தமிழருக்கு தீர்வு வர என்பது போல இருக்கிறது.

நீங்கள் பொதுவாக இந்த உவமானதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

ஆனால், ஓர் சிறப்பு மற்றும் முன் உரிமை அளிக்கப்பட்ட குழுமம், ஒரு போதுமே தானாக வீட்டுக் கொடுக்காது.   

இனப்பாகுபாடு  அதி கூடிய விளம்பரம். 

 

 

இது ௐரு விளம்பரமாக இருந்தும் நால்வருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் உண்டு அவரவர் பார்வையில்.

தமிழர் தம்மைத்தானேஆண்டுவந்த ௐரு தேசிய இனம். அதை ஆங்கிலேயன் பறித்து, படித்து பட்ட பெற்ற சில சுயநலவாத தமிழர்களின் ௐப்புதலுடன் சிங்களவனிடம் கொடுத்துவிட்டான்.

தமிழர்கள் இதுவரையும் பலவிதமாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

உயர்சாதியல்லாதோர் ௐரு சமுதாயம். ௐர் இனம் அல்ல. அவர்களிடம் யாரும் எதையும் அபகரிக்கவில்லை.

அப்படியான  ௐன்றைத்தான் இப்போ கேட்டு நிற்கிறார்கள்.

தமிழர்களுக்கு எப்படி சர்வதேசத்தின் ஆதரவு முக்கியமோ அதுபோல உயர்சாதியல்லாதோர்க்கு உயர்சாதியினரின் ஆதரவு முக்கியம்.

நடந்து முடிந்த யுத்தம் ஏன் நடந்தது என்பதும், யுத்தத்தில் என்ன நடந்தது எனபதும் யாவருக்கும் தெரிந்திருந்தும் இதவரையும் தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது.

இங்கே போராட்டத்தை குறை சொல்லதல்ல. யாருக்காக யார் போராடுவது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியபரந்தன் பிள்ளையாரும் சமூக நீதியும்

by vithaiOctober 26, 20200302

சாதிய ஒடுக்குமுறை இப்போதெல்லாம் வழக்கொழிந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கும் நமது சமூகம் சாதிய ஒடுக்குமுறையை நவீன வடிவங்களூடாகவும் வெளித்தெரியாதபடி காத்து வருகிறது. தலைமுறைகளாகத் தொடரும் சாதிய அடுக்குகளின் விளைவுகளையும் அதன் மூலம் உண்டாகித் தொடரும் மனோநிலைகளையும் எதிர்ப்பதிலிருந்து நாம் விலகி ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த ஒடுக்குமுறையை நாம் ஒரு ஒடுக்குமுறையாகப் பொது வெளியில் உரையாடுவதில்லை. அதை உள் வீட்டு அழுக்காகக் கணிக்கிறோம். அந்த மனோபாவமே, சாதியத்தின் வேர்களும் கிளைகளும் நீடித்து வளர்வதற்கான மண்ணாக அமைந்துவிடுகின்றது.

கிளிநொச்சி, பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் சகலகலாவல்லி மாலை பாடச் சென்ற உயர்தர வகுப்பில் கல்விகற்கும் மாணவர் ஒருவரை அவ்வாறு பாடமுடியாது என்று சொல்லி ஆலய நிர்வாக சபையின் தலைவர் வெளியேற்றிய சம்பவம் ஒன்றினைக் குறித்த காணொலி ஒன்றினை ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது தொடர்பில் விதை குழுமம் “கோயிலில் சாதியும் எதிர்ப்பின் குரல்களும்” என்ற ஒரு அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இதையடுத்து குறித்த பிரச்சினை தொடர்பாக அக்குடும்பத்தாரைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தோம்.

‘தோத்திரங்களைப்’ பாடக் கூடாது என்று அந்த மாணவருக்குச் சொல்லப்பட்ட குறித்த நாளுக்கு நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே அக் குடும்பம் சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த நிகழ்வு அந்தக் குடும்பத்தினர் மீது பிரயோகிக்கப்படும் சாதிய ஒடுக்குறையை வெளிக்கொண்டு வந்த ஒரு சம்பவம் மட்டும் தான். அந்தக் குடும்பத்தில் இப்போதிருக்கும் அம்மம்மா காலத்திலும் அவருக்கு நினைவு தெரிந்த காலத்திலுமிருந்தே அவர்கள் சாதிய ஒடுக்குமுறைகளை அனுபவித்து வருகிறார்கள். நாம் காணொலியில் பார்த்த அந்த மாணவருடன் பேசிய பின்னர் அவரது குடும்பத்தினருடன் பேசினோம். அவருடைய அம்மாவும் அம்மம்மாவும் தங்களுக்கும் தங்களுடைய தலைமுறைகளுக்கும் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற சாதிய ஒடுக்குமுறையைப் பற்றிக் குறிப்பிட்ட விடயங்கள் முக்கியமானவை. தமது நினைவுகளில் இருந்தும், தொகுத்தும் அவர்கள் குறிப்பிடுகின்ற, தலைமுறைகளாகத் தொடர்கின்ற இந்த ஒடுக்குமுறைகள் குறித்துப் பொதுவெளியில் பேசுவதும், எதிர்க்குரலை எழுப்புவதும் மிக முக்கியமான சமகாலப்பிரச்சனைகளில் ஒன்றென்று கருதுகின்றோம். அவர்கள் சொல்கின்ற ஒவ்வொரு விடயங்களும் இன்றும் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளை ஓங்கி உரைப்பவை. ‘இப்ப ஆர் சாதி பாக்கினம்’ என்பதான புரட்டுக்களை ஓங்கி அறைபவை.

• கோயிலின் ‘நர்த்தன’ மண்டபத்தினுள் ‘பிள்ளையாருக்கான நேர்த்தியுடனும் மாலையுடனும் இவர்கள் நுழைகிறார்கள் என்பதற்காக ஒரு மேசையைப் போட்டு அதற்கு அப்பால் இவர்கள் வருவதைத் தடை செய்திருக்கிறார்கள்.

• ஒரு தடவை அந்த மாணவரின் தாயார் கோயிலில் இருந்த, எல்லோரும் பாவிக்கும் மணியொன்றை அடித்தமைக்காக அதைப் பாவிக்கக் கூடாதென்று மடப்பள்ளியில் கிடாரத்தால் மூடி வைத்திருந்திருக்கிறார்கள்.

• நேர்த்திக்காக மாலை கொண்டு சென்றால் “வேண்டுமென்றால் வாசலில் வைத்து விட்டுப் போ அல்லது வீட்ட கொண்டு போ” என்று ஏசியிருக்கிறார்கள். மாலையைக் கொண்டு சென்ற தன் மகன் அழுவாரைப் போல் நின்றதை அந்தத் தாய் நினைவுகூர்ந்தார்.

• கோயிலில் பூசைகள் நடந்து கொண்டிருக்கும் போதும், வேறு சந்தர்ப்பங்களின் போதும் பல்வேறு தடவைகள் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களை உச்சத் தொனியில் மரியாதைக்குறைவான வார்த்தைகளால் நிர்வாகத்தினர் ஏசியிருக்கின்றனர். அதை ஊரார் வாய் மூடிப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

• ஒரு தடவை அந்த அம்மம்மாவை அடிக்குமாற் போல் ஏசிக் கொண்டு வந்ததையும் சொன்னார்கள்.

இப்படியாக இந்தக் குடும்பம் தொடர்பில் நிர்வாகத்தினர் நடந்து கொண்ட முறைகள் அப்பட்டமான சாதிய வன்மத்தினதும் தீண்டாமையினதும் வெளிப்பாடாகவே இருக்கின்றன. வெளிப்படையாகவே இந்த அநீதி இழைக்கப்பட்டபோதும் கூட அந்தக் குடும்பத்தினருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் குறித்தும் அவர்கள் சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்பது குறித்தும் எவருமே குரல் எழுப்பவில்லை என்பதே சாதியம் எப்படி சமூகத்துள் ஊடுருவியிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

யுத்தத்தின் பின் ஆறு வருடங்களாக தன் மகன்களைப் படிக்க வைக்க மின்சாரமின்றி பட்டபாட்டைச் சொன்னார். தங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தின் பிள்ளைகள் ‘படிக்கிறார்கள்’ என்பதை ஊரின் ‘செல்வாக்கு மிக்க’ குடும்பங்கள் சிலவற்றால் சகிக்க முடியாத மனநிலையை வெளிப்படுத்தும் அப்பட்டமான சம்பவங்களை அப்பிள்ளைகள் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்கிறார்கள். மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள அக்குடும்பம் எதிர்கொண்ட இடர்களும் அப்படியாக ஏற்படுத்தப்பட்ட தடைகள் என்றே தெரிகின்றது. (ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க விடாமல், காலம் தள்ளும் போக்கு இன்றும் பல இடங்களிலும் தொடர்கிறது)

இன்னும் நீண்ட பட்டியல்களுக்குட் செல்லாமல் இப்போதைய பிரச்சினையையும் அது எதிர்கொள்ளப்பட்டிருக்கும் முறையையும் பற்றி விளங்கிக் கொண்டால் இந்த ஒடுக்குமுறையைச் செய்யும் நிர்வாகத்தினரின் ஆதிக்க வெறியையும் சாதிய வன்மத்தையும் விளங்கிக் கொள்ளலாம். இப் பிரச்சினை வெளிக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் அரச பொறிமுறையும் மத அமைப்பொன்றும் இந்தப் பிரச்சினையை அணுகிய முறையைப் பார்ப்போம். அரச பொறிமுறையில் நிர்வாகம், கோயில் ஐயர், பாதிக்கப்பட்ட குடும்பம் ஆகியோரிடம் அறிக்கைகள் கேட்டிருக்கிறார்கள், அவற்றைக் கொண்டு இனிமேல் இப்படி நடக்கக்கூடாது என்பதாகச் சமரசம் பேசும் முயற்சியில் இறங்க வாய்ப்பிருக்கிறது. அவற்றின் விளைவுகள் இந்தக் குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத்தருமா என்பதை இனிமேற்தான் பார்க்க வேண்டும்.

‘சின்மயா மிஷன்’ என்ற மத அமைப்பு இப்பிரச்சினையை இணக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டோம் என்று முகநூலில் தெரிவித்திருந்தார்கள். அவர்கள் நேரடியாகவே இந்த ஆலயத்துக்குச் சென்று இப்படிச் செய்வது தவறு என்று அப்படி ஒரு பிரட்டு, இப்படி ஒரு பிரட்டு என்று பாதிக்கப்பட்ட தரப்பின் குரலை அமர்த்தி ஆதிக்க சாதித் தரப்பின் பக்கத்தை வலுப்படுத்தி விட்டு வந்திருக்கிறார்கள். வெறும் வாய்ப்பேச்சால் பூசிமெழுகிவிட்டு, அவ்வளவுதான் பிரச்சனை முடிந்து விட்டது கை குலுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்கும் பிரச்சினையல்ல நிகழ்ந்து கொண்டிருப்பது என்பதைத் தெரியாதவர்கள் போல அந்தக் குடும்பத்திற்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய நீதியை வாங்கிக்கொடுக்காமல், அநீதியின் பக்கம் நின்று மூடி மறைத்து விட்டு வந்திருக்கிறார்கள். சாதிய வன்கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் ஏவிவிட்டவர்களைக் கண்டிக்காமல், பாதிக்கப்பட்டவர்களிற்கு சமூகநீதி வேண்டும் என்று குரல்கொடுக்காமல் அன்பே சிவம் என்று சொன்னால் நடந்த, நடந்து கொண்டிருக்கிற ஒடுக்குமுறைகள் இல்லாமல் போய் விடுமா?

இக் குடும்பம் சாதிய மனநிலையால் மிக வெளிப்படையாகவும் நேரடியாகவும் புறக்கணிக்கப்பட்டும் தீண்டாமைக்குள்ளாக்கப்பட்டும் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டும் உள்ளது. அவர் பொது வெளியில் பேசியதையும் பேசியவற்றையும் திசைமாற்றவும், சமாளிக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. அவர்களது சொந்தங்களே ஒடுங்கிப்போகச் சொல்கின்றன. ‘ உங்களுக்கு ஏன் தேவையில்லாத பிரச்சினை?’ ‘வேறை கோயிலுக்குப் போங்கோவன்?’ உங்களுக்கெண்டு கோயிலொண்டு இருக்குத்தானே?’ போன்ற வாக்கியங்களில் இருக்க கூடிய அநீதிகளையும் அசமத்துவத்தையும் உருவாக்கி வைத்திருப்பதும் இதே சாதிய மனநிலைதானே.

இப்பொழுது இதைக் கையாண்ட, கையாண்டு கொண்டிருக்கிற அமைப்புகள் இரண்டும் ஆதிக்கசாதி வெறி கொண்ட நிர்வாகத்தினரின் பக்கத்தில் நின்று கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தின் குரல்வளையை நசித்துப் பிடிப்பதுபோல் கை குலுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். அக் குடும்பத்திற்குத் தேவை நிரந்தரத் தீர்வு, ஒவ்வொரு முறையும் அரசுக்கும் மத அமைப்புகளுக்குமாக அலைந்து கொண்டிருக்கத் தேவையில்லை. நாம் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய சமூக நீதியென்பது அவர்களிற்கான சுயமரியாதையையும் தீண்டாமைகளற்ற சமத்துவத்தையும் தான். அதைத் தவிர மிச்சமெல்லாம் சாதிய வேருக்கு நாம் அமைத்துக் கொண்டிருக்கும் பாதுகாப்பு வேலிகளாகவே அமைய முடியும்.

ஆனால் சற்றுக் காலத்திற்கு முன் அந்தத் தாய் கோயில் நிர்வாக சபை உறுப்பினர் என்ற பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார், பெண்கள் நிர்வாகத்தில் இருக்கத் தேவையில்லை என்று நிர்வாகத்திலிருந்த ஒருவர் சத்தம் போட்டிருக்கிறார். (இரு பெண்கள் தற்போது நிர்வாகத்தில் இருப்பதாக அறிய முடிகிறது, ஆனால் இந்தத் தாய் நிர்வாகசபையில் இருந்து நீக்கப்பட்டபோது இந்த வார்த்தைகளை ஒருவர் சொல்லியிருக்கிறார்) குறித்த பிரச்சினை நடந்த தினத்தன்று அந்த மாணவர் வேட்டி அணியவில்லை என்பதற்காகத் தான் பாட விடவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் பாடுவதற்கென்று நிர்வாகம் ஒருவரை நியமித்திருப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். ஆனால் முரண் என்னவென்றால் தன் வாழ்நாளில் ஒருமுறை கூட அம்மாணவர் ஆலயத்தில் பாட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான். அன்று ஏன் பாடவிடவில்லை என்பதற்குச் சொல்லியிருப்பது அன்றைக்குரிய காரணம் மட்டுமே. இந்தப் பிரச்சினைக்குப் பின் அந்த மாணவரை ஆலயத்தில் பாட வைக்க ஒரு சிலர் முயற்சித்திருந்தார்கள், அந்த மாணவரை பாடவைக்கலாம் என்று முயற்சியெடுக்கப்பட்ட அன்று அம்மாணவர் கோயிலுக்குச் செல்லவில்லை. ஆனால், அன்று வழமையாகப் பாடுபவர் என்று சொல்லப்படுபவரும் பாடவில்லை. கோயில் அய்யரே பாடியிருக்கிறார். பின்னர் நடந்த பூசைகளில் அந்தந்தப் பூசைக்காரர்கள் பாடியிருக்கிறார்கள். நான் பாடவில்லையென்றாலும் பரவாயில்லை, நீ பாடக் கூடாதென்பது வெளிப்படையான சாதி வெறியன்றி வேறு என்ன? சாதிய ஒடுக்குமுறையாளர்கள் சாதியத்தை நேரடிக்காரணமாகச் சொல்லி ஒடுக்குமுறைகளை நிகழ்த்துவதில்லை. முறைகள் என்றும் ஒழுங்கு என்றும் சொல்லிக்கொண்டு நிறுவனரீதியில் மிகவும் தந்திரமாக ஒடுக்குமுறைகளை நிகழ்த்துவதன் தொடர்ச்சியாகவே இதனைப் பார்க்கமுடிகின்றது.

சாதிய ஒடுக்குமுறைகளைச் செய்யும் அந்த நிர்வாகத் தரப்பினரை எதிர்த்துக் கேள்வி கேட்க, அவர்கள் செய்வது அநீதியென்பதைச் சொல்லி, நியாயமான உரிமைகளை வாங்கிக் கொடுக்க ஏன் இந்த அமைப்புகளால் முடியவில்லை? இவர்கள் இயங்குவதே ஒடுக்குமுறையாளர்களின், ஆதிக்க சாதியினரின் நலன்களுக்காகத் தானா? மேலும், தமக்கான உரிமைகளுக்காகக் குரல் எழுப்புபவர்களைப் பார்த்து இதெல்லாம் பிரச்சினையாக்காத, சும்மா இரு, வேற கோயிலுக்குப் போ, இது பொய், வேண்டுமென்று சொல்கிறார்கள், இதற்குப் பின்னால் யாரோ இருக்கின்றார்கள் என்று ஆயிரக்கணக்கான காரணங்களைச் சொல்லி மூடி மறைக்க முன்னின்று உழைப்பது அந்த நிர்வாகத்தினர் மட்டுமல்ல; நமது சமூகத்தின் பெரும்பான்மைத் தரப்பினரும் அப்படித்தான் இருக்கின்றார்கள். அவர்களும்தான் சாதியத்தின் பாதுகாவலர்கள்; ஒடுக்குமுறையாளர்களின் முன்னணிப் படையினர். முதலில் பாதிக்கப்பட்ட தரப்பின் குரலைக் கேட்க வேண்டும். அவர்களுக்கான நியாயத்திலிருந்தே ஒடுக்குமுறையாளர்களை அணுகவேண்டும். கும்பல் மனநிலையில் உள்ள நம்மில் பெரும்பான்மையினர் “இதெல்லாம் ஒரு பிரச்சினையா?” என்று கேட்டுவிட்டு ஓய்வுநிலைக்குப் போய்விடுகின்றார்கள். இங்கு நிகழ்வது ஒரு நாளின், ஒரு பிரச்சினையல்ல தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பிரச்சினை. எனது மகன்களுக்கு அந்த நிலைமை வரக் கூடாது என்ற அந்தத் தாயின் குரலில் உள்ள ஓர்மம் அவரது குடும்பத்துகான உரிமைக்குரல் மாத்திரம் அல்ல. அது உரிமைகளுக்காக எழவேண்டிய ஒடுக்கப்படும் மக்களின் குரல்களின் தொடக்கங்களில் ஒன்று. சாதிய, பொருளாதார, பாலின அடிப்படையில் அந்தக் குடும்பத்தினருக்கு ஊரில் உள்ள ஆதிக்க சாதி நபர்களால் இழைக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்துத், துணிச்சலுடன் எழுந்திருக்கின்ற முக்கியமான ஒரு உரிமைக்குரல் இது. அவர்களுக்கு நீதி கிடைக்க நாம் அனைவரும் போராடவேண்டும். அதுவே சமூக நீதி. இது வரை எந்தக் கட்சிகளோ, பத்திரிகைகளோ இதனை வெளிப்படையாகக் கண்டித்து நாம் அறியவில்லை. உண்மையில் நாம் யாருக்குத் துணைபோகிறோம் என்பதை நாம் உணர வேண்டும். ஆதிக்கத் தரப்பினருக்கு பெரும்பான்மையினரின் இந்த மௌனமும் கண்டுகொள்ளாமையும் தான் தைரியத்தை அளிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தப் பிரச்சனையில் முதற்கட்டமாக ஆதிக்க சாதித் தரப்பை, அவர்களின் சாதிய மனோபாவத்தை எதிர்க்க வேண்டும். சமரசம் என்ற பெயரில் மூடிமறைப்பது தீர்வல்ல. நிர்வாகம் செய்திருக்கும் குற்றங்களுக்கும் இழைத்திருக்கும் அநீதிகளுக்காகவும் அந்தக் குடும்பத்திடம் அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர்களுக்கு அக்கோயிலிலும் ஊரிலும் வாழ்விலும் கிடைக்க வேண்டிய சுயமரியாதைக்காகவும் சமூக நீதிக்காகவும் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம். நம்மால் ஆனவற்றைச் செய்வோம். அம்மாணவர் அக்கோயிலில் பாட விரும்பினால் அவருக்குப் பாடும் உரிமை இருக்கிறது, சமத்துவமும் சுயமரியாதையும் அனைவருக்குமான உரிமை, எனவே அந்தக் குடும்பத்தினருக்கு ஆலய வழிபாட்டில் ஏனையவர்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. மேசை போட்டெல்லாம் அவர்களுக்கு மாத்திரம் எல்லை போடமுடியாது, அந்த மேசைக்கு அப்பாலும் அவர்களுக்கான வெளியிருக்கிறது.

ஆகவே இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?

தோழமையுடன்
விதை குழுமம்
 

http://vithaikulumam.com/2020/10/26/20201026/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.