Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைக்க மறுக்கும் ஒரு நாட்டில் வைரசுக்குக் கழிப்புக் கழித்த அமைச்சர் – நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைக்க மறுக்கும் ஒரு நாட்டில் வைரசுக்குக் கழிப்புக் கழித்த அமைச்சர் – நிலாந்தன்

டந்த பௌர்ணமி தினத்தன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஓர் ஆசிரியர் தனது மகளோடு பயணம் செய்து கொண்டிருந்தார். தென்மராட்சியில் ராணுவ தளங்களுக்கு முன்னே பௌத்த மதக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. அதைப் பார்த்துவிட்டு மகள் தகப்பனிடம் கேட்டாள் “இந்த ராணுவத்தில் வேறு மதத்தவர்கள் இல்லையா?” என்று. “இருக்கிறார்கள் இப்போது உள்ள தளபதி ஒரு கத்தோலிக்கர் தான்” என்று அவர் கூறினார். “அப்படி என்றால் ஏனைய மதத்தவர்களின் புனித நாட்களின் போது அவர்களுடைய கொடிகளையும் சின்னங்களையும் முகாம்களின் முன் கட்டுவார்களா?” என்று மகள் கேட்டாள் “ இல்லை அப்படி நான் பார்த்ததில்லை” என்று தகப்பன் சொன்னார். “அப்படி என்றால் ராணுவத்தில் வேலை செய்யும் பௌத்தர்கள் அல்லாதவர்கள் இதைப்பற்றி கேள்வி கேட்க மாட்டார்களா?” என்று மகள் கேட்டாள். இது ஒரு பத்தாம் ஆண்டு மாணவியின் கேள்வி.

இலங்கை தீவில் பௌத்த மதச் சின்னங்களும் கொடிகளும் குறியீடுகளும் மதப் பல்வகைமையின் செழிப்பான அடையாளங்களாக முன்னிறுத்தப்படுவதில்லை. மாறாக மத மேலாண்மையின் சின்னங்களாகவும் கொடிகளாகவும் அவை மாறிவிட்டன. அவை பல்லினத் தன்மைக்கும் பல்சமய பண்புக்கும் எதிரான கொடிகளும் சின்னங்களும்தான். ரவூப் ஹக்கீம் முன்பொருமுறை சொன்னார்…”புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக நடுகிறார்கள்” என்று.கன்னியா வென் நீரூற்றில் நீராவிப்பிட்டியில் இதுதான் நடக்கிறது.

0000-1.png
 

ஆனால், இவ்வாறு முகாம் வாசல்களிலும் விகாரைகளும் தொங்க விடப்படும் கொடிகளில் பெரும்பாலானவை உள்நாட்டில் தயாரிக்கப்படுவதில்லை. அவை வெளிநாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. “நாட்டின் தேசியக் கொடி மற்றும் பௌத்த கொடி ஆகியவற்றின் தேவையினை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது பூர்த்தி செய்வதற்கு தனது அமைச்சு தயாராக உள்ளதாக பத்திக், கைத்தறி மற்றும் உள்நாட்டு சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேககர என்னிடம் உறுதியளித்தார். தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை வெளி நாடுகளில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் பெருந்தொகை அந்நியச் செலாவணி செலவிடப்படுகின்றுது. அடுத்த வருடம் முதல், தேவையான கொடிகளை உயர் தரத்துடன் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு பத்திக் மற்றும் கைத்தறித் துறையில் உள்ள உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர் என்பதனை அமைச்சர் எனக்கு அறியத் தந்தார்”. இவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பௌத்த கொடிகள் மட்டுமல்ல இலங்கைத் தீவின் தேசியக் கொடியும் அவ்வாறு வெளிநாடுகளில்தான் தயாரிக்கப்படுகிறது. அதை நிறுத்தி உள்நாட்டிலேயே தேசியக் கொடியையும் பௌத்தமத கொடிகளையும் தயாரிக்க வேண்டும் என்று அவர் தனது அமைச்சருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அவருடைய மற்றொரு அமைச்சரான பவித்ரா வன்னியாராச்சி அண்மையில் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு காரியத்தைச் செய்தார். கோவிட்-19ஐ அகற்றுவதற்காக பிரித் ஓதி சேகரிக்கப்பட்ட நீரை அவர் ஆறுகளில் கரைத்தார். அவரோடு வேறு சில அமைச்சர்களும் இவ்வாறு வைரசுக்கு கழிப்புக் கழித்தார்கள். இது சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கோவிட்-19 முதலாவது தொற்று அலையின் போதும் இவ்வாறு பிரித் ஓதப்பட்ட மந்திர நீர் போத்தல்களில் சேகரிக்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் நாடு முழுவதும் தெளிக்கபட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. கடந்த மார்ச் மாதம் சாமர சம்பத் என்ற ஓர் அரசியல்வாதி தம்பணவில் உள்ள வேடர்களின் கிராமத்தில் “கிரி கொரஹா” என்று அழைக்கப்படும் ஒரு சடங்கை ஒழுங்கு படுத்தியிருந்தார். அது கொரோனா வைரசிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு என்று கூறபட்டது. அதில் தனி ஆள் இடைவெளி பேணப்படவில்லை என்று டுவிட்டரில் விமர்சிக்கப்பட்டது.

அண்மையில் இரண்டாவது தொற்று அலை பரவத் தொடங்கிய போது எல்லா மதப் பிரிவுகளையும் சேர்ந்த தலைவர்கள் கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து நாட்டைக் காக்கும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்கள்.கடந்த புதன் கிழமை கிளிநோச்ச்சியில் ஒரு கோவிலில் வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக விசேட யாகம் ஒன்று ஒழுங்கு செய்யபட்டது. இவ்வாறு ஆலயங்களில் யாகங்களையும் விசேட பிரார்த்தனைகளையும் ஏற்பாடு செய்யுமாறு நாட்டின் பிரதமர் மகிந்த கோரிக்கை விடுத்திருக்கிறார். அயல் நாடாகிய இந்தியாவில் பிரதமர் மோடி வைரசை வெற்றி கொள்ள வீடுகளில் ஒளி ஏற்றும்படியும் மக்களை ஒலி எழுப்பும்படியும் கேட்டுக் கொண்டார். அதாவது கோவிட்- 19க்குப் பின்னரும் உலகில் கடவுள் நம்பிக்கையும் மதங்களுக்கான தேவையும் குறையவில்லை.முதலாவது தொற்று அலையின் போது மதங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. யாழ்பாணத்தில் ஒரு சுவிஸ் போதகர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.ஆனால் இரண்டாவது தொற்று அலையின் போது வைரசிடமிருந்து பாதுகாப்பைத் தேடி மதங்களை நோக்கிப் போகிறதா சமூகம்?

இவ்வாறு வைரசுக்கு எதிராக- அதாவது வெல்லக் கடினமான ஒரு எதிரிக்கு எதிராக – கடவுளைச் சரண் அடைவது அல்லது மந்திர தந்திரங்களைச் சரணடைவது என்பது இலங்கைத் தீவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்றுதான். யுத்த காலங்களில் மரண பயம் காரணமாக அரசாங்கத்தின் பிரதானிகளும் சாதாரண சிப்பாய்களும் இவ்வாறு பிரித் ஓதி நூல்களைக் கட்டுவதும் மந்திரத் தாயத்துகளை இடுப்பிலும் கைகளிலும் அணிந்து கொள்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தவர்கள் வெளிப்படையாகவே தங்கள் கைகளில் மந்திரித்த கயிறுகளை அணிந்திருக்கக் காணலாம். குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பொது வைபவங்களில் தமது கை ஒன்றில் ஏதோ ஒன்றை விரல்களால் இறுக்கிப் பிடித்திருக்க காணலாம். 2009 இற்குப் பின் யாழ் தேவி தொடரூந்தை முதன் முதலாக யாழ்பாணத்திற்கு ஓட விட்ட வைபவத்தில் அவர் அவ்வாறு எதோ ஒரு பொருளைக் கையில் வைத்திருந்ததைப் படங்களில் காண முடிந்தது. சோதிடத்தில் அமானுஷ்ய சக்திகளில் மந்திர தந்திரங்களில் அந்தக் குடும்பத்துக்கு அதிகம் நம்பிக்கை உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்சக்களின் முதலாவது ஆட்சிக் காலத்தில் கிரீஸ் மனிதன் தமிழ்ப் பகுதிகளை அச்சுறுத்திய ஒரு கால கட்டத்தில் கொழும்பு டெலிகிராப் என்ற இணையத்தளத்தில் ஒரு கட்டுரை வெளி வந்தது. அதில் கிரீஸ் மனிதனை அரசினால் ஸ்பொன்சர் செய்யப்பட்ட மாந்திரீகம் என்று ஒரு விமர்சகர் வர்ணித்திருந்தார்.

இவ்வாறானதொரு அரசியல் பாரம்பரியத்தின் பின்னணியில்தான் பவித்ரா வன்னியாராச்சி மந்திரித்த நீரை ஆற்றில் கொட்டியிருக்கிறார். பவித்திரா தேவியும் வேறு சில அமைச்சர்களும் அவ்வாறு செய்தது அவர்களுடைய நம்பிக்கையின் பாற்பட்டது. ஆனால் அதை வீடியோ எடுத்து பகிரங்கபடுத்த வேண்டிய தேவை என்ன? ஒரு சுகாதார அமைச்சரே அதைச் செய்வது நாட்டு மக்களுக்கு எப்படிப்பட்ட செய்திகளைக் கொடுக்கும்? வைரசுக்கு எதிரான நடவடிக்ககளை அதிகம் படை மயப்படுத்திய பின்னும் நாடு திணறுகிறது என்பதையா?

இதன் மூலம் “மூடநம்பிக்கைகளின் பக்கம் மக்களைத் திருப்பாதீர்கள்” என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் விமர்சித்திருக்கிறார்.

“மாய மந்திரங்கள் தெய்வ சக்திகள் உட்பட வேறு வழிபாடுகள் மூலம் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என்ற நம்பிக்கையை பௌத்த தர்மம் ஏற்றுக் கொள்ளாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். “பௌத்த தர்மம் அப்படியானவற்றை செய்யுமாறு மக்களைத் தூண்டாது. இவை மூடநம்பிக்கைகள். வணங்குதல் ; பூஜைகளைச் செய்தல் ; ஊர்வலங்களை நடத்துதல் என்பவை பௌத்த தர்மத்தில் உள்ளவை அல்ல” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மைதான் இலங்கைதீவில் ஒற்றையாட்சி கட்டமைப்பை பாதுகாக்கும் பௌத்த மதக் சிந்தனை எனப்படுவது பல்லினத்தன்மைக்கும் பல்சமய பண்புக்கும் எதிரானது மட்டுமல்ல அது புத்தருடைய அடிப்படைத் தத்துவங்ககளோடு முரண்படுவது. பௌத்தத்தை ஒரு மதமாக ; வெற்றுச் சடங்காகச் சுருக்குவது.

இப்படித்தான் இறைச்சிக்காக மாட்டை வெட்டும் விடயத்திலும் புத்தரை முன் நிறுத்தினார்கள். அதன் மூலம் மாட்டிறச்சியை அதிகம் நுகரும் மதப் பிரிவினரின் பண்பாட்டு உரிமைகளை புண்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் புத்த பகவான் எங்கேயும் புலால் உண்ணாமையை வலியுறுத்தவில்லை.

அதுபோலவே கொரோனாத் தொற்றினால் இறந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை புதைக்கக் கூடாது எரிக்கத்தான் வேண்டும் என்று அரசாங்கம் கண்டிப்பாகக் கூறுகிறது. இது விடயத்தில் சுகாதாரக் காரனங்களுக்காக முஸ்லிம்களின் மத உணர்வுகளை பண்பாட்டு உணர்வுகளை மதிக்காத ஒரு அரசாங்கத்தின் ஒரு அமைச்சரே இப்படித் தனது மத நம்பிக்கைகளின்படி கழிப்புக் கழிப்பதை எப்படிப் பார்ப்பது?

அண்மையில் பாணந்துறை கடற்கரையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.அவற்றை உள்ளூர் மக்கள் காப்பாற்றி கடலில் விட்டனர். அதைப் பாராடிய ஜனாதிபதி இலங்கை மக்களிடத்தில் வேரூன்றியுள்ள அஹிம்சையின் நற் பண்புகளை உலகிற்கு நிரூபிக்கும் மற்றொரு சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் அரசியல் கைதிகளின் விடயத்திலும் காணாமல் ஆக்கபட்டவர்களின் விடயத்திலும் கடைசிக் கட்டப் போரின் போதும் அந்த அஹிம்சையின் நற் பண்புகள் ஏன் நிரூபிக்கப்படவில்லை?

பௌத்த மதத்தையும் அதன் சின்னங்களையும் கொடிகளையும் குறியீடுகளையும் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குக் கவசமாகப் பயன்படுத்தும் சிங்கள அரசியல்வாதிகள் ; பொத்த தேவாலயங்களில் பதவிகளைப் பொறுப்பேற்கும் சிங்கள அரசியல்வாதிகள் புத்தர் போதித்த அகிம்சைக் கோட்பாட்டையோ அல்லது அறநெறிகளையோ பின்பற்றுவதில்லை. மாறாக புத்தருடைய போதனைகளை கழிப்புக் கழிக்கும் ஒரு சுகாதார செய்முறையாகக் குறுக்கி விடுகிறார்கள்.

முஸ்லிம்களின் ஜனாஸாவைப் புதைக்க மறுக்கும் ஒரு நாடு மந்திரித்த நீரை ஆற்றில் விடுகிறது. இது தொடர்பான சர்ச்சைகளின் போது அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி கூறினார் கொரோனா தோற்று ஒழியுமென்றால் தானும் கடலில் குதிப்பதற்குத் தயார் என்று. அவர் கடலில் எல்லாம் குதிக்கத் தேவையில்லை. புத்த பகவான் கூறியற்றை அப்படியே பின்பற்றினாலே போதும்.
 

https://thinakkural.lk/article/86878

  • கருத்துக்கள உறவுகள்

கோரோனோவை சிறப்பாக அடக்கிய நாடு என இலங்கை பெயர் பெற்றுள்ளது .

புலிகளை அடக்கிய எங்களுக்கு கொரோனோவை அடக்குவது பெரிய விடயம் இல்லை .

இப்ப மந்திரம் செய்த தண்ணி  குண்டானை தூக்கிக்கொண்டு திரியினம் .

10 minutes ago, பெருமாள் said:

தண்ணி  குண்டானை தூக்கிக்கொண்டு திரியினம்

ஒருத்தர் வண்டியையே தூக்கமுடியாமல் நிக்கிறார் படத்தில!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அமைச்சர் கழிப்புக் கழிச்சது முட்டாள் தனமான செயல் என்றாலும்.. அதனால் வைரஸ் பரவாது. அதனால்.. மக்களுக்கு அதனால் பாதிப்பில்லை.

ஆனால்.. அதிக தொற்றுத் தன்மை கொண்ட ஒரு வைரஸ் நோயாளியின் உடலை புதைப்பதை விட எரிப்பது என்பது தொற்றைக் கட்டுப்படுத்த உதவக் கூடிய இலகு செயன்முறையாகும். அதனை முஸ்லிம்.. இந்து.. கிறிஸ்தவம்.. புத்தத்தின் பெயரால்.. தவறாக அர்த்தப்படுத்தும்.. மதவெறி தான் ஆபத்தானது. 

அண்மையில் கூட சீனாவில் இருந்து கிளம்பிய மணற் புயலை அடுத்து.. மொங்கோலியாவும்.. வடகொரியாவும் மக்களை வீடுகளுக்குள் இருக்க உத்தரவிட்டது. தென்கொரியாவும் மக்களின் நடமாட்டத்தை குறைக்க உத்தரவிட்டது. காரணம்.. அந்தத் தூசி வழி வைரஸ் பரவக் கூடும் என்பதால்.

இப்படியான சாத்தியப்பாடுகள் உள்ள நிலையில்... மதத்திற்கு முன்னுருமை அளிக்க முடியாது. தொற்று நீக்கல் பொறிமுறைக்குத்தான் முன்னுரிமை அளிக்கனும். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முஸ்லீம்களின் உடல்கள் தகனம் – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

 
1-40.jpg
 36 Views

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை வலுக்கட்டாயமாக எரியூட்டுவது கண்டனத்திற்குரியது என இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்பிடிஐ) வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், இது வரையில் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்தோடு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து பத்தாயிரத்தை நெருக்குவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், “முஸ்லீம்களின் முறைப்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படும். உடலுக்கு எரியூட்டுவது  அவர்களின் வழக்கத்தில் இல்லை. ஆனால் இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. இந்த கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி அதிகாரிகள் முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்து தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றனர்” என முன்னதாக இலங்கை முஸ்லிம்கள்  குற்றம்சுமத்தியிருந்தன.

“ஒருவர் கொரோனா தொற்றால் இறந்தாலோ, இல்லை கொரோனாவால் இறந்ததாகச் சந்தேகப்படப்பட்டாலோ, அவரின் சடலத்தைத் தகனம் செய்யப்படும்.” என்று இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கடந்த ஏப்ரல் 12-ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களை, “அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம்.” என்று உலகச் சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இதுதொடர்பாக,  எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலைக் கையாள்வது தொடர்பான உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களில் கூட இத்தகைய எரியூட்டும் வழிகாட்டுதல்கள் இல்லை என்றும், இலங்கை அரசின் இத்தகைய சிறுபான்மை மக்களுக்கு எதிரான விரோத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் இறந்த உடல்களை தங்கள் மத வழக்கப்படி அடக்கம்தான் செய்து வருகின்றனர். இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கை காரணமாக அவர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

”இத்தகைய நெருக்கடியை நீக்க வலியுறுத்தி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும், இலங்கை அரசு அரசியல் காரணங்களுக்காகக் கோரிக்கையைச் செவிமடுக்க முன்வரவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.” என்று மாநில தலைவர் நெல்லை முபாரக், அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளார்.

ஆகவே, தவறான உயிரியல் காரணங்களை முன்வைத்து, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளவர்,” உடல் அடக்கம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் அனைத்து மத உரிமைகளும் பாதுகாக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

https://www.ilakku.org/இலங்கையில்-முஸ்லீம்களின/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கோரனோவால்  23 பேர்தான் இறந்தது என்கிறார்கள் முஸ்லீமும்  உள்ளார்களா அந்த 23 பேரில் ?

இல்லை இனிமேல் இறக்கும் முஸ்லீய்மை  நெருப்பில் எரிகிறதுகூடாது என்பதுக்கு அழுக்கிறாங்களா ?

மேலே நிலாந்தன் வேறை குழப்பி விட்டிருக்கார் இந்தமுறை காதுக்குள் போனை வைத்து கொண்டு கட்டுரை எழுதியிருக்கார் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரை 30 பேர் கொரொனாவினால்
இறந்து இருக்கின்ரார்கள், அதில் அரைவாசிக்கு மேற்ப்பட்டோர் முஸ்லிம் இனத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, zuma said:

இன்றுவரை 30 பேர் கொரொனாவினால்
இறந்து இருக்கின்ரார்கள், அதில் அரைவாசிக்கு மேற்ப்பட்டோர் முஸ்லிம் இனத்தவர்.

எங்கே உள்ளது இந்த செய்தி ?

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

 

இலங்கையில் கோரனோவால்  23 பேர்தான் இறந்தது என்கிறார்கள் முஸ்லீமும்  உள்ளார்களா அந்த 23 பேரில் ?

இல்லை இனிமேல் இறக்கும் முஸ்லீய்மை  நெருப்பில் எரிகிறதுகூடாது என்பதுக்கு அழுக்கிறாங்களா ?

 

 

ஏப்ரலில் யாழில் செய்தி இணைக்கப்பட்டிருந்தது. பெருமாளும் எழுதியிருந்தீர்கள்!😜

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஏப்ரலில் யாழில் செய்தி இணைக்கப்பட்டிருந்தது. பெருமாளும் எழுதியிருந்தீர்கள்!

ஆரம்பத்திலே இருந்தே இந்த நோயை பற்றிய தெளிவின்மையை சிங்கள அரசியல்வாதிகள் கொண்டு இருந்தார்கள் .

கொரனோ  கட்டுப்பாடுகளை ராணுவத்திடம் கொடுத்து முக்குடைபட்டு கொண்டு இருக்கிறார்கள் 

தனிமைப்படுத்தும் நிலையங்களில் தேவையற்ற பண அறவீடு நோயாளிகளை தப்பி ஓட  தூண்டு  கோலாக இருந்தது .

தனிமைப்படுத்தும் நிலையங்களில்  நோய்  இல்லாதவரும் தேவையற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டனர் .

தனிமைப்படுத்தும் நிலையத்தில் களவாக  கள்ளு  சப்பிளை பண்ணியவர்களையும் பிடித்து  14 நாள் தடுப்புக்குள் போட்டு நோயை பரவபுண்ணியது.

ஊடகங்களில் உண்மையை சொல்லாமல் எங்கிருந்து பரவியது என்ற கதைகளை அவுட்டு விட்டு தேர்தல் நேர திசை திருப்பல் எல்லாம் சேர்ந்து நேர வெடிகுண்டுக்கு ஒப்பாய் இருந்தது அந்த நேரம்களில் இவற்றை சொல்ல வெளிக்கிட்டு இதே யாழில் மூக்குடைபட்டு இருந்தோம்  இனி அந்த பெரியவர் என்ன காரணம் சொல்கிறார் என்று பாப்போம் .வழக்கம்போல் உங்களுக்கு சந்தோசம் என்பார் இல்லை இந்த திரி பக்கமே தலை வைக்கமாட்டார் .

23 minutes ago, zuma said:

கொரனோ இருக்கா என்று பார்பதுக்கு முஸ்லிம்களின் பொடி  இருப்பதாகத்தான் போட்டு உள்ளது . 

முஸ்லீம் சமூகத்துக்குள் தொற்று ஏற்பட்ட வர்கள் மறைந்து வாழ தொடங்கியது இன்னும் நிலைமையை மோசமாக்கி உள்ளது நிகழ்தகவின் ஆரம்ப புள்ளிகளுக்கே  சுமோ அழுகிறார் அனுதாபம் மட்டுமே சொல்ல முடியும் .

 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

ஆரம்பத்திலே இருந்தே இந்த நோயை பற்றிய தெளிவின்மையை சிங்கள அரசியல்வாதிகள் கொண்டு இருந்தார்கள் .

இப்ப மட்டும் என்ன வாழுதாம் மகாவம்சத்தில் தொற்று நோய்கள் பரவிய காலத்தில் புத்தர் மந்திரித்த  தண்ணி யை புத்தர் இலங்கைதீவில் பறந்து பறந்து தெளித்து தொற்று நோயை அடக்கினாராம் என்று கிடக்கு இப்ப இவங்கள் கெலியில்  பறந்து  மந்திரதண்ணியை தெளிக்கினம் சிலவேளை வேணுமெண்டு முஸ்லிலிம்கள் இருக்கும் இடத்துக்கு மேல் தெளிக்கவில்லையாக்கும் 😁 சுமோ உங்கடை அரசியவாதிகளை விட்டு  நியாயம் கேளுங்க .

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சம் தேவையற்றது- டக்ளஸ்

இந்த அறிவாளி பற்றி என்ன நினைக்கிறீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சம் தேவையற்றது- டக்ளஸ்

இந்த அறிவாளி பற்றி என்ன நினைக்கிறீர்கள்..

அங்குள்ள அரசியல்வாதிகள் களவாக கொரனோ  ஊசியை  சைனாவிடம் வாங்கி போட்டு விட்டு மாஸ்க் கூட கழட்டி வீசி விட்டு திரிகினம் என்று எதிர்க்கட்சி சொல்லி அழுவுது டக்கி  சொல்வதை பார்த்தால் உண்மைபோல்த்தான் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அங்குள்ள அரசியல்வாதிகள் களவாக கொரனோ  ஊசியை  சைனாவிடம் வாங்கி போட்டு விட்டு மாஸ்க் கூட கழட்டி வீசி விட்டு திரிகினம் என்று எதிர்க்கட்சி சொல்லி அழுவுது டக்கி  சொல்வதை பார்த்தால் உண்மைபோல்த்தான் இருக்கு .

சீனாக்காரனுக்கே தன்னுடைய ஊசி சரியா வேலைசெய்யுமோன்னூ  தெரியாது இதுக்குள்ளை கள்ள விலைக்கு வித்திருப்பான்...இவை எலி ..குரங்குகள்தானே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.