Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருடன் போராடுவதற்காக பாதுகாப்புக்காக 355 பில்லியன் நிதி ஒதுக்கீடு – பாராளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாருடன் போராடுவதற்காக பாதுகாப்புக்காக 355 பில்லியன் நிதி ஒதுக்கீடு – பாராளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் கேள்வி

cv.jpg2021 ஆம் ஆண்டு யாருடன் போராடுவதற்காக 355 பில்லியன் ரூபாவை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளீர்கள். தமிழர்களுடனா, இந்தியர்களுடனா அல்லது மேற்கத்தைய நாட்டவர்களுடனா போராடப்போகின்றீர்கள் என தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் தமிழர்களை நம்பி அவர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அவர்களுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. நாம் நாட்டைப்பிரிக்க கேட்கவில்லை. ஒரே நாட்டுக்குள் எம்மை நாமே ஆள வழி விடுங்கள் என்றே கேட்கின்றோம். அவ்வாறு செய்தால் நாமும் எமது இலட்சக்கணக்கான புலம்பெயர் தமிழ் உறவுகளும் உங்களுடன் சேர்ந்து இந்த நாட்டை முன்னேற்ற தயாராகவுள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

2021 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவுக்கு அபரிமிதமான தொகையை ஒதுக்கியுள்ளீர்கள். 2019 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கு 306 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்த நீங்கள் 2021 ஆம் ஆண்டுக்கு 49 பில்லியன் ரூபாவைக்கூட்டி 355 பில்லியன் ரூபாவை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளீர்கள். நீங்கள் யாருடன் போராடுவதற்காக இந்தளவு தொகையை ஒதுக்கியுள்ளீர்கள்? தமிழர்களுடனா ,இந்தியர்களுடனா அல்லது மேற்கத்தைய நாட்டவர்களுடனா போராடப்போகின்றீர்கள்?

நீங்கள் உங்கள் முகத்துடன் கோபித்துக்கொண்டு உங்கள் மூக்கை வெட்டப் பார்க்கின்றீர்கள். நாட்டின் ஒரு சாராரை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதால்தான் போர்க்கருவிகள், பீரங்கிகள்,தற்பாதுகாப்பு கவசங்களை வாங்கிக்குவிக்கின்றீர்கள். காலாட் படைகளை அதிகரிக்கின்றீர்கள். பெரும்தொகைகடற்படை உபகரணங்களை வாங்குகின்றீர்கள்.

இதுவரை கண் மண் தெரியாமல் வாங்கிக்குவித்ததால்தானே எமது தேசியக்கடன் இந்தளவ க்கு உயர்ந்துள்ளது.2021ஆம் ஆண்டில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் 1.9 ட்ரில்லியன் ரூபா. உத்தேச செலவு என்றுமில்லாதவாறு 3.52 ட்ரில்லியன் ரூபாவாக உயரப்போகின்றது. 1.56 ட்ரில்லியன் ரூபா விழுக்காட்டை எப்படி சமாளிக்கபோகின்றீர்கள்?இது நீங்கள் தமிழர்களை நம்பாததால் வந்தவினை. உங்கள் தேசியக்கடன் எங்களையும் பாதிக்கின்றது என்பதனை மறந்த விடாதீர்கள்.

விரைவில் உங்களை நம்பத்தகுந்த கடன் கேட்பவர்களாக நாடுகள், நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க முடியாது நீங்கள் தவிக்கின்றீர்கள். எவ்வாறு மேலும் கடன் தர முடியுமெனக் கேட்பார்கள்.

தமிழர்களை நம்பி அவர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அவர்களுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. நாம் நாட்டைப்பிரிக்க கேட்கவில்லை. ஒரே நாட்டுக்குள் எம்மை நாமே ஆள வழி விடுங்கள் என்றே கேட்கின்றோம். அவ்வாறு செய்தால் நாமும் எமது இலட்சக்கணக்கான புலம்பெயர் தமிழ் உறவுகளும் உங்களுடன் சேர்ந்து இந்த நாட்டை முன்னேற்ற தயாராகவுள்ளோம். எனவே இது கால வரையும் சிந்தித்த வழியிலேயே சிந்திக்காது புது விதமாக சிந்திக்க பழகுங்கள் என்றார்.

https://thinakkural.lk/article/90879

  • கருத்துக்கள உறவுகள்

2021ல் யாருடன் போர் – இலங்கை அரசிடம் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி ?

1-130-696x398.jpg
 42 Views

2021 ஆம் ஆண்டு, தமிழர்களுடனா, இந்தியர்களுடனா அல்லது மேற்கத்தைய நாட்டவர்களுடனா, யாருடன் போராடுவதற்காக 355 பில்லியன் ரூபாவை பாதுகாப்புத் துறைக்கு  ஒதுக்கியுள்ளீர்கள் என  சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்,

“2021 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவுக்கு அபரிமிதமான தொகையை ஒதுக்கியுள்ளீர்கள். 2019 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கு 306 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்த நீங்கள் 2021 ஆம் ஆண்டுக்கு 49 பில்லியன் ரூபாவைக்கூட்டி 355 பில்லியன் ரூபாவை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளீர்கள். நீங்கள் யாருடன் போராடுவதற்காக இந்தளவு தொகையை ஒதுக்கியுள்ளீர்கள்? தமிழர்களுடனா ,இந்தியர்களுடனா அல்லது மேற்கத்தைய நாட்டவர்களுடனா போராடப்போகின்றீர்கள்?

நீங்கள் உங்கள் முகத்துடன் கோபித்துக்கொண்டு உங்கள் மூக்கை வெட்டப் பார்க்கின்றீர்கள். நாட்டின் ஒரு சாராரை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதால்தான் போர்க்கருவிகள், பீரங்கிகள்,தற்பாதுகாப்பு கவசங்களை வாங்கிக்குவிக்கின்றீர்கள். காலாட் படைகளை அதிகரிக்கின்றீர்கள். பெரும்தொகைகடற்படை உபகரணங்களை வாங்குகின்றீர்கள்.

இதுவரை கண் மண் தெரியாமல் வாங்கிக்குவித்ததால்தானே எமது தேசியக்கடன் இந்தளவ க்கு உயர்ந்துள்ளது.2021ஆம் ஆண்டில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் 1.9 ட்ரில்லியன் ரூபா. உத்தேச செலவு என்றுமில்லாதவாறு 3.52 ட்ரில்லியன் ரூபாவாக உயரப்போகின்றது. 1.56 ட்ரில்லியன் ரூபா விழுக்காட்டை எப்படி சமாளிக்கபோகின்றீர்கள்?இது நீங்கள் தமிழர்களை நம்பாததால் வந்தவினை. உங்கள் தேசியக்கடன் எங்களையும் பாதிக்கின்றது என்பதனை மறந்த விடாதீர்கள்.

விரைவில் உங்களை நம்பத்தகுந்த கடன் கேட்பவர்களாக நாடுகள், நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க முடியாது நீங்கள் தவிக்கின்றீர்கள். எவ்வாறு மேலும் கடன் தர முடியுமெனக் கேட்பார்கள்.

தமிழர்களை நம்பி அவர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அவர்களுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. நாம் நாட்டைப்பிரிக்க கேட்கவில்லை. ஒரே நாட்டுக்குள் எம்மை நாமே ஆள வழி விடுங்கள் என்றே கேட்கின்றோம். அவ்வாறு செய்தால் நாமும் எமது இலட்சக்கணக்கான புலம்பெயர் தமிழ் உறவுகளும் உங்களுடன் சேர்ந்து இந்த நாட்டை முன்னேற்ற தயாராகவுள்ளோம். எனவே இது கால வரையும் சிந்தித்த வழியிலேயே சிந்திக்காது புது விதமாக சிந்திக்க பழகுங்கள்” என்றார்.

 

https://www.ilakku.org/2021ல்-யாருடன்-போர்-இலங்கை-அர/

சிறிய நாட்டுக்கு தேவையற்ற விதத்தில் அதிகளவு எண்ணிக்கை கொண்ட இராணுவத்தினரையும், ஏனைய படையினரையும் கொண்டுள்ள இலங்கைக்கு அதை பேணுவதற்கே பல பில்லியன் ஒவ்வொரு வருடமும் தேவைப்படும். இராணுவத்தின் தேவை குறைய குறைய, குற்றச் செயல்கள் இலங்கை முழுதும் அதிகரிக்கும் வாய்ப்புகள் தான் அதிகம். சிங்கள இனவாதத்தினை சிங்கள மக்களுக்கு மேலும் மேலும் ஊட்டி வளர்த்தால் மட்டுமே இராணுவ செலவீனத்தை மக்கள் கேள்வி கேட்க முடியாத சூழ்னிலையை தக்க வைக்க முடியும்.

சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தை ஈடுபடுத்தினாலும், அரச செலவுகளை குறைக்க முடியாது. அடுத்த 20 வருடங்களிற்குள் இராணுவப் புரட்சி ஒன்று இலங்கையில் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இராணுவத்தை அடக்க எந்த இலங்கை அரசாலும் முடியாது. ஒவ்வொரு அரசும் தம் சுயநலனுக்காக தீனியிட்டு வளர்த்தார்கள். அது ஊதிப்பெருத்து நாட்டை விழுங்கும் அளவுக்கு பயமுறுத்திக்கொண்டிருக்குது. சந்திரிக்கா ஒரு முறை முயற்சித்து முடியாமல்  அடங்கிப்போனவர். கோத்தா நினைத்தாலும் முடியாது. சொல்லப்போனால் இவர் அதன் கடிவாளத்தை தளர்த்தி விட்டார். அது இப்போ கேள்விக்குறியாக நிற்கிறது மட்டுமல்ல நாட்டின் பெரும்பகுதியான வளத்தை விழுங்கிக்கொண்டிருக்கிறது. 

அவர்கள் கொரோனாவுக்கு எதிராக போராட நிர்பந்தம் ஏட்பட்டுள்ளது. எனவே அதட்காக ஒதுக்கினார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

சிறிய நாட்டுக்கு தேவையற்ற விதத்தில் அதிகளவு எண்ணிக்கை கொண்ட இராணுவத்தினரையும், ஏனைய படையினரையும் கொண்டுள்ள இலங்கைக்கு அதை பேணுவதற்கே பல பில்லியன் ஒவ்வொரு வருடமும் தேவைப்படும். இராணுவத்தின் தேவை குறைய குறைய, குற்றச் செயல்கள் இலங்கை முழுதும் அதிகரிக்கும் வாய்ப்புகள் தான் அதிகம். சிங்கள இனவாதத்தினை சிங்கள மக்களுக்கு மேலும் மேலும் ஊட்டி வளர்த்தால் மட்டுமே இராணுவ செலவீனத்தை மக்கள் கேள்வி கேட்க முடியாத சூழ்னிலையை தக்க வைக்க முடியும்.

இலங்கையின் மீதான புவியியல் இருப்பு காரணமான வல்லரசுகளின் போட்டியால் ஈஸ்ரர் குண்டுவெடிப்பு போன்ற நிகழ்வுகளும் ஜே.வி.பி. போன்ற உள்நாட்டு யுத்தமும் மீள இடம்பெறும் சாத்தியம் மிக அதிகம். கோவிட்-19 யை அடுத்து பொருளாதார வீழ்ச்சியும் அதன் தொடர்ச்சியான வறுமையும் இவ்வாறான கிளர்ச்சிகளை வேகமாக தூண்டும் சாத்தியம் உள்ளது. பாதாள உலகுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிரான நடவடிக்கைகளும் அரசுக்கு எதிரன சக்திகளை ஒன்றுதிரட்டி உள்நாட்டு யுத்தத்தை வெகுவிரைவில் ஆரம்பிக்கும் சாத்தியம் காணப்படுகிறது. இப்படியான நிலையில் எத்தியோப்பியா அழிவை சந்தித்தபோது தான்  எரித்திரிய படைகள் தனிநாடாக பிரியும் தாக்குதலை அதிகரிக்க, எத்தியோப்பியாவே உடன்பாட்டுக்கு வந்து உலகநாடுகளையும் எரித்திரியாவை தனிநடாக அங்கிகரிக்குமாறு கேட்டுக்கொண்டது.

 

16 hours ago, நிழலி said:

சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தை ஈடுபடுத்தினாலும், அரச செலவுகளை குறைக்க முடியாது. அடுத்த 20 வருடங்களிற்குள் இராணுவப் புரட்சி ஒன்று இலங்கையில் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.

இலங்கையில் 1962ல் இடம்பெற்ற இராணுவ புரட்சியே 1948க்குப்பின்னரான ஒரே ஒரு இராணுவ புரட்சியாகும். அந்த நாட்களில் கத்தோலிக்க தமிழர் இராணுவத்தில் உயர்பதவிகளில் இருந்தார்கள். இந்த தோற்றுப்போன புரட்சியால் எனது தொலைதூர உறவினர்ஒருவரும் நீண்டகாலம் சிறையில் இருந்தார். இதற்கு பின் தமிழரை இலங்கை ஆயுதப்படைகளில் சேர்த்துக்கொள்வதை குறைத்து விட்டார்கள்.

 

https://www.namathumalayagam.com/2018/11/1962.html

https://en.m.wikipedia.org/wiki/1962_Ceylonese_coup_d'état_attempt

Edited by கற்பகதரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.