Jump to content

இன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாம்பழத்துக்கு உலகளவில் பேர் போன ஊர் சேலம். சின்ன வயதில் மாங்காய் அடித்து பழகினாரோ என்னமோ, நடராஜன் போடும் யார்க்கர் எல்லாம் ஸ்டெம்புகளின் கில்லியை எகிறச் செய்கிறது.பிரெட்லீயில் தொடங்கி பிரதமர் மோடி வரை டுவிட்டரில் வாழ்த்து மழையால் நனைக்கிறார்கள் நடராஜனை. பேரில்தான் ‘நட’ இருக்கிறதே தவிர, நடராஜனின் வாழ்க்கையே பரபர ஃபாஸ்ட் பவுலிங் ஓட்டம்தான்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/28.jpg
பாகிஸ்தானைச் சேர்ந்த ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ சோயப் அக்தர் அறிமுகமானபோது அவருக்கு என்ன வரவேற்பு கிடைத்ததோ, அதே சிவப்புக் கம்பள வரவேற்பு நம் ‘சேலம் எக்ஸ்பிரஸ்’ நடராஜனுக்கும் கிரிக்கெட் உலகில் கிடைத்திருக்கிறது!யெஸ். இன்று இந்தியா முழுவதும் பிரியமாக உச்சரிக்கும் ஒரே பெயர் நடராஜன்தான். செல்லமாக ‘நட்டு’; பெருமையாக ‘யார்க்கர் கிங்’. எந்தவித பின்புலமும் இல்லாமல் திறமையின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்திருக்கும் தமிழக வீரர் இவர்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/28a.jpg
கடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசஸ் சார்பாக பந்து வீசி விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். துல்லியமாக யார்க்கர்களை வீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதால் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என இவரை அனைவரும் புகழ்கின்றனர். லைன் & லெங்ந்த்தை சீர் செய்து பந்து வீசினால் மிகச்சிறந்த பிளேயராக உருவாகலாம் என்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/28b.jpg
சேலம் சின்னப்பம்பட்டியிலிருந்து புறப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் ருத்ரதாண்டவம் ஆடியது கண்கொள்ளாக் காட்சி.“பள்ளி விட்டுட்டு வந்தா பேட்ட எடுத்துட்டு போயிடுவான். கிரிக்கெட் அவன் ரத்தத்துல ஊறிப் போச்சு. சோறே இல்லைனாலும் பொழுதன்னைக்கும் அவனுக்கு விளையாட்டுதான்.

நாங்க ஏழ்மையான குடும்பம். என் வீட்டுக்காரரு தறி ஓட்டிட்டு இருந்தாங்க. நான் சில்லி கடை வச்சிருந்தேன். எங்க ஊர் தம்பி ஜெயப்பிரகாஷ்தான் வெளியூர்ல இவன விளையாட கூட்டிட்டு போவாங்க. சரி; அவன் ஆசைப்படுறான், விளையாடட்டும்னு ஜெயப்பிரகாஷ்கிட்டயே
விட்டுட்டோம். அவர் இல்லைனா இவ்வளவு தூரம் நட்டு வந்திருக்க மாட்டான்.

வூட்டுக்கு வந்தாக் கூட சும்மா இருக்கமாட்டான். பந்த எடுத்துட்டு கைய, கால ஆட்டிக்கிட்டுதான் இருப்பான். ஃபிரண்டுங்க கூட ஜாலியா பேசுவான். சினிமால நடிக்கக் கூட கேட்டாங்க. அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லனு மறுத்துட்டான். விளையாட்டுதான் மூச்சு. ஐபிஎல்ல விளையாடும்போது எப்ப இந்தியாவுக்கு விளையாடுவான்னு ஏங்கினோம். எங்க ஆச நிறைவேறி இன்னிக்கு பேர் வாங்கிக் கொடுத்துட்டான்...” பூரிக்கிறார் நடராஜனின் அம்மா சாந்தா.

‘‘எங்க வீட்டுல ஐந்து பேர். அண்ணாதான் மூத்தவர். இன்னிக்கு அவர் இந்தியாவுக்காக விளையாடும் போது எங்களோடு சேர்ந்து ஊரே கொண்டாடுது. அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இதுவரைக்கும் பேசாத சொந்தக் காரங்க எல்லாம் எங்ககிட்ட இப்ப வந்து பேசுறாங்க.
அண்ணா கவுர்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சாங்க.

அந்த கிரவுண்டுலதான் எப்பவும் இருப்பாங்க. இங்க இருக்குற பசங்க எல்லோரையும் உள்ளூர் டோர்னமெண்டுக்கு ஜெயப் பிரகாஷ் அண்ணாதான் கூட்டிட்டு போவாங்க. அவங்கதான் ‘எங்கண்ணன் பவுலிங் நல்லா போடுறதா’ சொல்லி சென்னையில் போய் சேர்த்து விட்டாங்க...” என்கிறார் நடராஜனின் சகோதரி தமிழ் அரசி.

இவை எல்லாம் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எல்லா விளையாட்டு வீரர்களும் சந்திக்கும் பிரச்னைகள்தான். ஆனால், சென்னையில் நடராஜன் எதிர்கொண்டது வேறு யாரும் எதிர்கொள்ளாத சிக்கல்கள்.ஆம். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து, பல கனவுகளோடு சென்னை வந்த நடராஜனுக்கு அப்போது தெரியவில்லை விளையாட்டில் ஜெயிப்பதைவிட அணியில் இடம் பெறுவதற்குத்தான் முதலில் ஜெயிக்க வேண்டும் என்பது.

அணியில் இடம் பெறுவதற்காக நடராஜன் சந்தித்த புறக்கணிப்புகள், அவமானங்கள், எடுத்த முயற்சிகள்… என்று கூடவே இருந்து பார்த்த பெயர் சொல்ல விரும்பாத அந்த கிரிக்கெட் கோச் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை அனைத்தும் கல் நெஞ்சையும் கரைய வைப்பவை.
“ஜெயப்பிரகாஷ் கண்ணில் பட்டு சென்னை வந்த நடராஜ், லோயர் டிவிஷன்ல முதலில் ஆடினார். இங்க ஐந்து டிவிஷன் இருக்கு. அதில் ஃபர்ஸ்ட் டிவிஷன்ல இருந்து ரஞ்சி டிராஃபிக்கு தேர்வு பண்ணுவாங்க.

நடராஜன் லோயர் டிவிஷனுக்கு அப்புறம் செகண்ட் டிவிஷன் ஆடப் போனார். அங்க நல்லா பண்ணியும் நெட் பவுலராவே வச்சிருந்தாங்க. ஆனா, இவர் போடுற ஸ்பீடை வச்சு ஃபர்ஸ்ட் டிவிஷனுக்கு எடுத்தாங்க.சென்னை முழுக்க நடராஜனுக்கு ‘ஸ்பீடு’னு பேர் வந்தது. ‘நரம்பு மாதிரி இருந்துட்டு பயங்கரமா போடுறான்’னு பேசுவாங்க. கெம்ப்ளாஸ்ட்டுக்கும், இந்தியா சிமெண்டுக்கும் லீக் மேட்ச் நடக்கும்போது அண்டர் 19
இந்தியால ஆடிய ஹேமந்த் குமார் விக்கெட்டை ஷார்ப் பவுன்சர் போட்டு எடுத்தார்.

டாப் பிளேயர் விக்கெட்டையே எடுத்துட்டார்னு கெம்ப்ளாஸ்ட் ஒரு பெரிய தொகையை சம்பளமா நிர்ணயித்து கூப்பிட்டாங்க. இதுக்கு அப்புறமாதான் தங்கச்சிங்க படிக்க உதவி செய்ய ஆரம்பித்தார்.இந்தியாவுலயே தமிழ்நாட்டுலதான் இந்த மாதிரி லீக் சிஸ்டம் வச்சு, பிளேயர்ஸுக்கு நல்லா பே பண்றாங்க. அதில் கெம்ப்ளாஸ்ட், இந்தியா சிமெண்ட் கிளப் முதன்மையானது. கெம்ப்ளாஸ்ட்ல இருந்துதான் எல்.பாலாஜி, பத்ரிநாத், அஸ்வின், சடகோபன் ரமேஷ், ப்யூஸ் சாவ்லானு நிறைய பிளேயர்ஸ் இந்திய அணிக்கு போனாங்க.

நம்ம ஊர்ல ஃபாஸ்ட் பவுலருக்கு அதிகமா இன்ஜுரி வரும். வெயில்… பிட்ச்... எல்லாம் கட்டாந்தரை மாதிரி இருக்கும். தண்ணீர் இல்லாததால கிரவுண்ட் முழுசும் கல்லு மாதிரி ஆகிடும். ஃபாஸ்ட் பவுலருக்கு இவ்வளவுதான் போடணும்னு ஒரு லோடு இருக்கு. நடராஜன் ஓவர் லோடு, தவிர ஒவ்வொரு கோச்சும் ஒவ்வொரு விதமா ஆக்‌ஷன் மாத்துனதால ஷோல்டர், எல்போ இன்ஜுரி அவருக்கு வந்துட்டு இருந்தது.

இதையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டுக்கு அவர் தேர்வானப்ப த்ரோ பால்னு கால் பண்ணிட்டாங்க. அந்த ஆக்‌ஷனை சரிபண்ணாதான் லீக் ஆட
முடியும். தன்னுடைய தன்னம்பிக்கைனால இதை சரி செய்தார். எல்லாமே புதுசா மாறினதால ஸ்விங் மாறிடுச்சு. ஸ்பீடும் கம்மியாகிருச்சு. எல்போ பெயின் வர ஆரம்பிச்சது. அந்த நேரத்துல கெம்ப்ளாஸ்ட்டை சேர்ந்த பிசியோ தெரபிஸ்ட்டான ஷ்யாமும், பாலாவும் அவரை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க.

இருந்த கிளப்ல சம்பளம் உயர்த்தாததால ஏற்கனவே இருந்த கிளப்கிட்ட பேசினார். அங்க இருந்த சிலர், ‘அவன் வேஸ்ட் ஆகிட்டான்’னு தட்டிக்
கழிச்சாங்க. இந்த நேரத்துலதான் சரியா டிஎன்பிஎல் வந்தது. சூப்பர் ஓவர் மேட்ச்சுல ஆறு யார்க்கர் போட்டு எல்லாரையும் மிரள வைச்சார். இதைப் பார்த்துட்டு தான் கிங்ஸ் 11 பஞ்சாப்புக்கு சேவாக் பிக் பண்ணார். அங்க ஒரு மேட்ச் கூட ஆடல.

தனக்கு கிடைச்ச பேரை வச்சு ஊர்ல கிரிக்கெட் அகடமி ஆரம்பிச்சார். கிரிக்கெட்ல இருந்து ஒதுங்கி அதுல ஃபோக்கஸ் பண்ணலாம்னுதான் இருந்தார். காரணம், இங்க அவருக்கு ஏற்பட்ட புறக்கணிப்பு. ஐபிஎல், இந்தியா எல்லாம் ஆடுவோம்னு நடராஜன் நினைச்சே பார்க்கலை. எல்லாரும் அவர் குறையைத் தான் பார்த்தாங்க. நிறையை கண்டுக்கவே இல்ல.
 

ஆனா, இந்த வருஷம் ஐபிஎல்ல ஹைதராபாத் சன் ரைசஸ் டீம்ல ஆடினார். டீம்ல இருந்த பெரிய பவுலர்ஸை எல்லாம் உட்கார வச்சு நடராஜை எல்லா மேட்ச்சும் ஆடவச்சாங்க. முரளி தரனுக்கு இவர்மேல ஒரு ஹோப் இருந்தது. முதல் மேட்ச்சுல இருந்தே நல்ல ரிதம்ல இருந்தார்.
 

கடைசி ஆறு மாசம் ஃபிட்னஸ்ல நல்லா ஃபோக்கஸ் பண்ணார். இவ்ளோ பெரிய சீசன் தொடர்ந்து ஆடுவது அவ்வளவு ஈசி கிடையாது. ஐபிஎல் முழுதும் ஆடி, ஒன் டே, டி 20னு ஃபிட்டாவே இருப்பது நல்ல விஷயம்.

சின்ன வயசுல இருந்தே டிரைனிங் பேக்ரவுண்ட் எல்லாம் கிடையாது. சாப்பாடும் பெருசா இருக்காது. இதையெல்லாம் மீறிதான் நடராஜன் ஜெயிச்சிருக்கார். வீட்டு மொட்டை மாடி உட்பட கிடைச்ச இடங்கள்ல எல்லாம் அவர் பயிற்சி எடுத்தது முக்கியமான விஷயம்...’’ என்று வியக்கிறார் அந்த பெயர் சொல்ல விரும்பாத கோச்.  நடராஜனின் தாண்டவம் தொடரட்டும்!

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17545&id1=4&issue=20201213

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

131300099_10218614097891670_800808470049

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமி முத‌லாவ‌து ரெஸ் தொட‌ரில் காய‌ம் , சில‌ வேலை ந‌ட‌ராஜ‌ன் சாமிக்கு ப‌திலா ரெஸ்ரில் விளையாட‌ கூடும் , பொறுத்து இருந்து பாப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

கிரிக்கெட் வீரர் நடராஜன் மேல் ஏன் இவ்ளோ காழ்ப்புணர்ச்சி?

 

 

இத‌ பார்க்க‌ என‌க்கு என்ன‌ தோனுது என்றால் , க‌ரும்புலிக‌ளுக்கு நீச்ச‌ல் ப‌ழ‌க‌ க‌ட்டின‌ சிமிங்பூலில் தேசிய‌ த‌லைவ‌ர் அவ‌ர் ம‌க‌னோட‌ குளிச்ச‌த‌ வைச்சு பார் பிர‌பாக‌ர‌ன் எப்ப‌டி எல்லாம் உல்லாச‌மாய் வாழுகிறார் , 

ந‌ட‌ராஜ‌னை ப‌ற்றி போதையின் புக‌ழ் என்று எழுதின‌து ம‌லையால‌ ஊட‌க‌ம் என்று நினைக்கிறேன் , ஒரு ச‌ண் கிலாஸ் மிஞ்சி போனால் 10டொல‌ர் , இதை எல்லாம் வ‌யித் எரிச்ச‌லில் கொட்டி தீக்கிறாங்க‌ள் ஒரு த‌னின் வ‌ள‌ர்சியை பிடிக்காத‌ர்வ‌ர்க‌ள் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு
 
மும்பை,
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலில் காயமடைந்தார்.
இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை. அவரது காய தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
 
 
இந்த நிலையில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரில்  தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை தொடங்கும் மட்ச்சில் நட்டு விளையாடும் 11 பேரில் இடம் பெற வில்லை.😦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2021 at 14:09, சுவைப்பிரியன் said:

நாளை தொடங்கும் மட்ச்சில் நட்டு விளையாடும் 11 பேரில் இடம் பெற வில்லை.😦

சுவை அண்ண‌ , ஜ‌ந்து நாள் விளையாட்டில் நீண்ட‌ ஓவ‌ர் ப‌ந்து வீச‌னும் , ம‌க்க‌ள் ம‌த்தியில் ஜ‌ந்து நாள் விளையாட்டுக்கு இப்போது வ‌ர‌வேற்பு இல்லை ,

ந‌ட்டு 20ஓவ‌ர் ம‌ற்றும் 50 ஓவ‌ர் விளையாட்டில் விளையாடி சாதிச்சு இந்திய‌ அணியில் நிர‌ந்த‌ இட‌ம் பிடிச்சா ம‌கிழ்ச்சி , ந‌ட்டு 20 ஓவ‌ர் விளையாட்டில் துல்லிய‌மாய் ப‌ந்து போட்டு ஓட்ட‌த்தை க‌ட்டு ப‌டுத்துவ‌தில் சிறந்த‌ வீர‌ர்  😍🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்
 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் நடராஜன்  களம் இறங்குகி உள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக இடம்பிடித்துள்ளார். 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/15065156/4th-Test-against-Australia-Natarajan-and-Washington.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210115-111932.jpg 

தமிழ் வீரர்கள் இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20210115-111932.jpg 

தமிழ் வீரர்கள் இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள் தோழர்..👍

உண்மைதான்..

தற்போதைய நிலை 2/15 நடராஜன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர்

பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர்

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் துவங்கியது.

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் நடராஜன்  களம் இறங்கியுள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இன்றைய டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்(1 ரன்), மார்கஸ் ஹாரிஸ்(5 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லபுசாக்னே நிலைத்து நின்று ஆடினார். மற்றொரு புறம் ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

இதையடுத்து சிறப்பாக ஆடி வந்த லபுசாக்னே-மேத்யூ வேட் கூட்டணியை நடராஜன் உடைத்தார். நடராஜன் வீசிய பந்தில் மேத்யூ வேட் (45 ரன்கள், 87 பந்துகள்) ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து நடராஜனின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர் லபுசாக்னே(108 ரன்கள், 204 பந்துகள்) கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமிழக வீரர்கள் இருவரும் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருப்பது, பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழக ரசிகர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/15123104/Natarajan-Washington-Sundar-added-pride-to-Tamil-Nadu.vpf

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இது தான் ஜ‌ந்து நாள் ரெஸ்ட் அறிமுக‌ விளையாட்டு ,

இருவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள் 🙏

இன்று இந்திய‌ அணியில் ப‌ல‌ மாற்ற‌ம் செய்து இருக்கின‌ம் , 

வும்ரா 
அஸ்வின்
ஜ‌டேயா
விகாரி இவ‌ர்க‌ள் இன்று விளையாட‌ வில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ர‌ வ‌ர‌ ஜ‌ந்து நாள் விளையாட்டுக்கு வ‌ர‌வேற்பு குறையுது , 

அவுஸ்ரேலியா இங்லாந்த் விளையாடும் ஜ‌ந்து நாள் ஜ‌ந்து போட்டிக்கு இங்கிலாந்தில் அதிக‌ ம‌க்க‌ள் விரும்பி பாப்பின‌ம் , ம‌ற்ற‌ நாடுக‌ள் விளையாடினா , ப‌ற‌வைக‌ள் தான் மைதான‌த்தில் அதிக‌ம் ஹா ஹா 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 

என்ன‌ தாத்தா நீங்க‌ளுன் கிரிக்கெட்டை பின் தொட‌ர்வ‌து போல் தெரியுது ஹா ஹா 😁😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

என்ன‌ தாத்தா நீங்க‌ளுன் கிரிக்கெட்டை பின் தொட‌ர்வ‌து போல் தெரியுது ஹா ஹா 😁😀
 

அப்பப்ப பாக்கிறது....அதுக்காக  கிரிக்கெட்டுலை பாய் விரிச்சு படுக்கிறேல்லை.  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

அப்பப்ப பாக்கிறது....அதுக்காக  கிரிக்கெட்டுலை பாய் விரிச்சு படுக்கிறேல்லை.  😁

அது ச‌ரி உங்க‌ளுக்கு க‌ள்ளுக்கொட்டில்ல‌ ப‌டுக்க‌வே நேர‌ம் ச‌ரியா இருக்கும் , கிரிக்கெட்டில் எப்ப‌டி பாய் விரித்து ப‌டுக்க‌ நேர‌ம் இருக்க‌ போகுது   ஹா ஹா 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பையன்26 said:

அது ச‌ரி உங்க‌ளுக்கு க‌ள்ளுக்கொட்டில்ல‌ ப‌டுக்க‌வே நேர‌ம் ச‌ரியா இருக்கும் , கிரிக்கெட்டில் எப்ப‌டி பாய் விரித்து ப‌டுக்க‌ நேர‌ம் இருக்க‌ போகுது   ஹா ஹா 😁😀

அப்பன்! நான் இணைச்சது ஜேர்மன் நியூசிலை  வந்தது.ஒரு கிரிக்கெட் மச்சுக்காக 10 மாதமாய் சிலோனிலை தவம் கிடக்கிறாராம்.😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்டு முதல் போலே நோ போலில் தொடங்கினாலும் பின்னர் சுதாரிச்சு கொண்டார். ஆனாலும் அதிகம் அவுட் சைட் ஓப் ஸ்டம் எறிவதால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புக்களை இழக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுப்பது மட்டுமே மேட்டர். பார்ப்போம் இண்டைக்கு என்ன நடக்குது என.

6 hours ago, குமாரசாமி said:

 

இந்த காலி கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மேட்ச் பார்ப்பது ஒரு சுகானுபவம்தான்.

கோட்டையும், அதன் உள்ளே இருக்கும் பள்ளிவாசல், கடற்கரை, வெளிச்சவீடு, டச்சு காரரர் கட்டிய கட்டிடங்கள், கோர்ட் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள். 

ரெயில் நிலையத்துக்கு அருகில் ஒரு பெரிய சிவன் கோயிலும் உண்டு. நல்லாக பராமரிக்கிறார்கள்.

கொழும்புக்காக கடைசி ரெயின் 3.30 என நினைக்கிறேன். ஏறி கடற்கரையோரம் சீட்டில் உட்கார்ந்தால்- அற்புதமான சூரிய அஸ்தமனத்தை பார்த்தபடி கொழும்பு வந்து சேரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

நட்டு முதல் போலே நோ போலில் தொடங்கினாலும் பின்னர் சுதாரிச்சு கொண்டார். ஆனாலும் அதிகம் அவுட் சைட் ஓப் ஸ்டம் எறிவதால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புக்களை இழக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுப்பது மட்டுமே மேட்டர். பார்ப்போம் இண்டைக்கு என்ன நடக்குது என.

இந்த காலி கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மேட்ச் பார்ப்பது ஒரு சுகானுபவம்தான்.

கோட்டையும், அதன் உள்ளே இருக்கும் பள்ளிவாசல், கடற்கரை, வெளிச்சவீடு, டச்சு காரரர் கட்டிய கட்டிடங்கள், கோர்ட் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள். 

ரெயில் நிலையத்துக்கு அருகில் ஒரு பெரிய சிவன் கோயிலும் உண்டு. நல்லாக பராமரிக்கிறார்கள்.

கொழும்புக்காக கடைசி ரெயின் 3.30 என நினைக்கிறேன். ஏறி கடற்கரையோரம் சீட்டில் உட்கார்ந்தால்- அற்புதமான சூரிய அஸ்தமனத்தை பார்த்தபடி கொழும்பு வந்து சேரலாம்.

நீங்கள் உளவு வேலை பார்ப்பவரா? அல்லது ஏஜெண்ட் ?????? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் உளவு வேலை பார்ப்பவரா? அல்லது ஏஜெண்ட் ?????? 😎

என்ன அண்ணை,

எங்கட 7 வருச யாழ்கள பந்தம் தொடங்கின நாளில் இருந்து என்னை ஏஜெண்ட் எண்டுதானே சொல்லுறியள்?

இப்ப என்ன கேள்வி குறி போடும் அளவுக்கு திடீர் சந்தேகம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நட்டு முதல் போலே நோ போலில் தொடங்கினாலும் பின்னர் சுதாரிச்சு கொண்டார். ஆனாலும் அதிகம் அவுட் சைட் ஓப் ஸ்டம் எறிவதால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புக்களை இழக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுப்பது மட்டுமே மேட்டர். பார்ப்போம் இண்டைக்கு என்ன நடக்குது என.

இந்த காலி கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மேட்ச் பார்ப்பது ஒரு சுகானுபவம்தான்.

கோட்டையும், அதன் உள்ளே இருக்கும் பள்ளிவாசல், கடற்கரை, வெளிச்சவீடு, டச்சு காரரர் கட்டிய கட்டிடங்கள், கோர்ட் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள். 

ரெயில் நிலையத்துக்கு அருகில் ஒரு பெரிய சிவன் கோயிலும் உண்டு. நல்லாக பராமரிக்கிறார்கள்.

கொழும்புக்காக கடைசி ரெயின் 3.30 என நினைக்கிறேன். ஏறி கடற்கரையோரம் சீட்டில் உட்கார்ந்தால்- அற்புதமான சூரிய அஸ்தமனத்தை பார்த்தபடி கொழும்பு வந்து சேரலாம்.

உந்த‌ ந‌ர‌க‌த்தை சுற்றி பார்ப‌த‌ விட‌ த‌மிழ் நாட்டில் உள்ள‌ அழ‌கான‌ கிராம‌ புறத்த‌ சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்த‌மான‌ குள‌த்தில் நீச்ச‌ல் அடித்து விட்டு இர‌வு நேர‌ம் சாலை ஓர‌ க‌டையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட‌ மாடியில் ப‌டுத்து தூங்கிர‌ சுக‌ம் இருக்கே த‌னி சுக‌ம் / 2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ ஏரியா ப‌க்க‌ம் போக‌வே பிடிக்காது 😡
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பையன்26 said:

உந்த‌ ந‌ர‌க‌த்தை சுற்றி பார்ப‌த‌ விட‌ த‌மிழ் நாட்டில் உள்ள‌ அழ‌கான‌ கிராம‌ புறத்த‌ சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்த‌மான‌ குள‌த்தில் நீச்ச‌ல் அடித்து விட்டு இர‌வு நேர‌ம் சாலை ஓர‌ க‌டையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட‌ மாடியில் ப‌டுத்து தூங்கிர‌ சுக‌ம் இருக்கே த‌னி சுக‌ம் / 2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ ஏரியா ப‌க்க‌ம் போக‌வே பிடிக்காது 😡
 

காலம் எல்லா வலிகளையும் ஆற்றும்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

உந்த‌ ந‌ர‌க‌த்தை சுற்றி பார்ப‌த‌ விட‌ த‌மிழ் நாட்டில் உள்ள‌ அழ‌கான‌ கிராம‌ புறத்த‌ சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்த‌மான‌ குள‌த்தில் நீச்ச‌ல் அடித்து விட்டு இர‌வு நேர‌ம் சாலை ஓர‌ க‌டையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட‌ மாடியில் ப‌டுத்து தூங்கிர‌ சுக‌ம் இருக்கே த‌னி சுக‌ம் / 2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ ஏரியா ப‌க்க‌ம் போக‌வே பிடிக்காது 😡
 

அப்பிடிப்போடு அரிவாளை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    • எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள்.  கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.