Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நகர் வடிகால் துப்புரவின் போது மலை போல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

1. கிணற்றுக்கும் மலசல கூடத்துக்கும் இடையிலான இடைவெளி குறுகிக் கொண்டு வருகின்றமையால் யாழ்ப்பாணத்து நீரில் மலக்கழிவுகள் (giardia e colii) அதிகமாக கலக்கின்றன என்று பலதரப்பாலும் சுட்டிக் காட்டப்பட்டு வருகின்றமை

யாழ்ப்பாணத்தில் புது வீடுகட்டுபவர்கள் மலகூடத்துக்கும் கிணற்றுக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்களா

3 hours ago, Paanch said:

வருடத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் கால்வாய்களைச் சுத்தம் செய்வதில் சிரமம் உண்டா... இங்கு யேர்மனியில் அப்படித்தான் செய்கிறார்கள்.

ஆனால் நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள மக்கள் தண்ணீர் குடித்துவிட்டு பிளாஸ்ரிக் போத்தலை கால்வாய்களை அடைக்கும் படியாக எறியமாட்டார்கள் தானே.   வெளிநாடுகளில் குடித்து முடிந்த தண்ணி பிளாஸ்ரிக் போத்தல்களை நசித்து அழகாக கட்டி பிளாஸ்ரிக் குப்பைக்காக மக்கள் வைப்பதை பார்த்திருக்கிறேன்

 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள மக்கள் தண்ணீர் குடித்துவிட்டு பிளாஸ்ரிக் போத்தலை கால்வாய்களை அடைக்கும் படியாக எறியமாட்டார்கள் தானே.   வெளிநாடுகளில் குடித்து முடிந்த தண்ணி பிளாஸ்ரிக் போத்தல்களை நசித்து அழகாக கட்டி பிளாஸ்ரிக் குப்பைக்காக மக்கள் வைப்பதை பார்த்திருக்கிறேன்

அதுமட்டுமல்ல தண்ணீரைக் கொள்வனவு செய்யும்போது நெகிழிப் போத்தலுக்கும் ஒரு தொகையை அறவிடுகிறார்கள். பின்பு வெற்று நெகிழிப் போத்தலை திரும்பக் கொடுத்து அதற்காகக் கொடுத்த தொகையை மீளப் பெற்றுக் கொள்ளலாம். யார்தான் பணத்தை இழக்க விரும்புவார்கள்.? போத்தலுக்குச் செலவான பணமும் கிடைக்கிறது,! நகரும் சுத்தமாகிறது.!!🤣

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Paanch said:

அதுமட்டுமல்ல தண்ணீரைக் கொள்வனவு செய்யும்போது நெகிழிப் போத்தலுக்கும் ஒரு தொகையை அறவிடுகிறார்கள். பின்பு வெற்று நெகிழிப் போத்தலை திரும்பக் கொடுத்து அதற்காகக் கொடுத்த தொகையை மீளப் பெற்றுக் கொள்ளலாம். யார்தான் பணத்தை இழக்க விரும்புவார்கள்.? போத்தலுக்குச் செலவான பணமும் கிடைக்கிறது,! நகரும் சுத்தமாகிறது.!!🤣

உங்கள் ஊரில் எப்பவும் இப்படியான நல்ல திட்டங்களை செயல்படுத்துவார்கள்.

எமது நாட்டில் குப்பையை மூன்றாக (உணவு, பிளாஸ்டிக், மீள் சுழற்ற முடியாதது) என்று பிரித்து வைக்க வேண்டும்.

இல்லை என்றால் அபராதம்.

ஆங்கிலத்தில் carrot and stick என்பார்கள். 

உங்கள் நாட்டில் கரட் ( போத்திலுக்கு காசு) எங்கள் நாட்டில் தடி (தண்டம்) இலங்கையில் இரெண்டும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

அண்ணை உது எந்த காலம்? இப்ப மேட்டுகுடிகள் ஓலைபையுக்கு மாறி விட்டினம். லண்டன் டியூப்பில் பல மோட்டு குடி பெண்கள் ஒய்யாரமாக ஓலை, துணிபையளை காவுவதை காணலாம்.

கொழும்பிலும் மேட்டுகுடி அலங்கார கடையான ஓடேல் அன்லிமிடெட்டில் இவைதான் நல்லா விக்குது.

எங்களை போன்ற அப்பாவிகள் (மோட்டுக்குடி?) தான் இன்னும் உந்த பத்து பென்ஸ் பிளாஸ்டிக் பாக் பாவிக்கிறது.

 

இதை நீங்கள் சும்மா எழுத்திற்காக எழுதலாம். ஆனால் நடைமுறையில்  அவர்கள் கடைப்பிடிப்பவர்கள் இல்லை.

அடுத்தமுறை இப்படி எழுதாதீர்கள். பாவம் அந்த தொழிலாளர்கள்.
தம்மால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினை பொருட்களை முறையாக சந்தைப்படுத்த முடியாமல் தவிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Paanch said:

வருடத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் கால்வாய்களைச் சுத்தம் செய்வதில் சிரமம் உண்டா... இங்கு யேர்மனியில் அப்படித்தான் செய்கிறார்கள். 

ஐயா பாஞ்ச் அவர்களே! அண்மையில் இங்கே ஒரு கருத்தாடலில் மேற்கத்திய நாடுகள் போல் அரசியல் சட்டங்கள் இலங்கையிலும் இருந்தால் நல்லது என கூறிய போது ஓரிரு கருத்து உறவுகள் சொன்னார்கள். அது ஆசிய நாடுகளாம். இங்கிருக்கும் சட்டங்கள் நடைமுறைகள் சிறிலங்கா போன்ற ஆசிய நாடுகளுக்கு சரிவராதாம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

இதை நீங்கள் சும்மா எழுத்திற்காக எழுதலாம். ஆனால் நடைமுறையில்  அவர்கள் கடைப்பிடிப்பவர்கள் இல்லை.

அடுத்தமுறை இப்படி எழுதாதீர்கள். பாவம் அந்த தொழிலாளர்கள்.
தம்மால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினை பொருட்களை முறையாக சந்தைப்படுத்த முடியாமல் தவிக்கின்றார்கள்.

சத்தியமா அண்ணை இந்த posh girls எல்லாம் இப்ப we are very environmentally aware என்று சணல் பைகளோடதான் திரியுதுகள். இறைச்சி உற்பத்தி புவி வெப்பமாவதை கூட்டுவதாக கூறி பல மேட்டுகுடிகள் இப்போ vegan உணவுக்கு மாறி விட்டார்கள். 

மருதரை கேட்டுபாருங்கோ, அமெரிக்காவில் beyond meat எண்டு ஒரு கொம்பனி ஸ்டாக்மார்கெட்டில் சக்கை போடு போடுது.

ஊரிலும் கொழும்பு மேட்டுகுடிகளுக்கு இப்ப இதுதான் fashion. 
பிளாஸ்டிக் பையை விட சணல் பை விலையும் கூட.

கைவினை தொழிலாளர் வறுமையில் வாடக் காரணம் சந்தை படுத்த வழி தெரியாமல், தரகர்கள் கொள்ளை லாபம் பார்ப்பது.

ஆனால் நாங்கள் அப்பவே ஈழநாடு பேப்பரில தேயிலை சுத்தி வாங்கிற அளவுக்கு இந்த விசயத்தில் தெளிவா இருந்தனாங்கள் 🤣

நான் முன்பே சொன்னதை போல பிளாஸ்டிக் பாவிப்பவர்கள் என் போன்ற மோட்டு குடிகள்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

சத்தியமா அண்ணை இந்த posh girls எல்லாம் இப்ப we are very environmentally aware என்று சணல் பைகளோடதான் திரியுதுகள். இறைச்சி உற்பத்தி புவி வெப்பமாவதை கூட்டுவதாக கூறி பல மேட்டுகுடிகள் இப்போ vegan உணவுக்கு மாறி விட்டார்கள். 

மருதரை கேட்டுபாருங்கோ, அமெரிக்காவில் beyond meat எண்டு ஒரு கொம்பனி ஸ்டாக்மார்கெட்டில் சக்கை போடு போடுது.

ஊரிலும் கொழும்பு மேட்டுகுடிகளுக்கு இப்ப இதுதான் fashion. 
பிளாஸ்டிக் பையை விட சணல் பை விலையும் கூட.

கைவினை தொழிலாளர் வறுமையில் வாடக் காரணம் சந்தை படுத்த வழி தெரியாமல், தரகர்கள் கொள்ளை லாபம் பார்ப்பது.

ஆனால் நாங்கள் அப்பவே ஈழநாடு பேப்பரில தேயிலை சுத்தி வாங்கிற அளவுக்கு இந்த விசயத்தில் தெளிவா இருந்தனாங்கள் 🤣

நான் முன்பே சொன்னதை போல பிளாஸ்டிக் பாவிப்பவர்கள் என் போன்ற மோட்டு குடிகள்தான்.

நாங்கள்  தற்போது கதைத்துக்கொண்டிருப்பது பொலித்தீன் சம்பந்தப்பட்ட விடயம். வேகன் வெங்காயங்கள் இப்போதைக்கு இந்த உலகிற்கு தேவையில்லாத அம்சங்கள். 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்ப்பாணத்தில் புது வீடுகட்டுபவர்கள் மலகூடத்துக்கும் கிணற்றுக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்களா

விளங்க நினைப்பவரே! 3பரப்பு காணிக்கை கிணறு, வீடு , வெளி கக்கூசு எல்லாம் சரி வராது கண்டியளோ----!
ஒன்லி வாளி கக்கூஸ்சு...😎

எங்கடை கொத்தனார்மார் கிணறும் கக்கூசும் எந்த கோணத்திலை இருக்கோணும் எண்டும்  நீர் ஓட்டங்களை கணக்கிலை வைச்சுத்தான் எல்லாத்தையும் கட்டி முடிச்சவையள்.🤘🏽

அதிலையும் வீட்டு கிணத்து தண்ணி குடிச்சவைக்கு கொலரா வரேல்லை தெரியுமோ?? 👏🏽

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஐயா பாஞ்ச் அவர்களே! அண்மையில் இங்கே ஒரு கருத்தாடலில் மேற்கத்திய நாடுகள் போல் அரசியல் சட்டங்கள் இலங்கையிலும் இருந்தால் நல்லது என கூறிய போது ஓரிரு கருத்து உறவுகள் சொன்னார்கள். அது ஆசிய நாடுகளாம். இங்கிருக்கும் சட்டங்கள் நடைமுறைகள் சிறிலங்கா போன்ற ஆசிய நாடுகளுக்கு சரிவராதாம். 😁

அந்த ஓரிருவர் சொல்வதும் உண்மைதான் சாமியார். மேற்கத்திய நாடுகளில் அனேகமாக நாட்டுக்கான சட்டங்களை உருவாக்கிவிட்டு அதனைப் பாதுகாப்பதற்குரிய அரசுகளை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். சிறீலங்கா போன்ற நாடுகளில் அரசுகள் தோன்றிய பின்புதான் (அவை எப்படித் தோற்றம் பெறுகின்றன என்பது வேறுவிடயம்) மக்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குரிய சட்டங்களை இயற்றிக் கொள்வார்கள். 😲

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

விளங்க நினைப்பவரே! 3பரப்பு காணிக்கை கிணறு, வீடு , வெளி கக்கூசு எல்லாம் சரி வராது கண்டியளோ----!
ஒன்லி வாளி கக்கூஸ்சு...😎

எங்கடை கொத்தனார்மார் கிணறும் கக்கூசும் எந்த கோணத்திலை இருக்கோணும் எண்டும்  நீர் ஓட்டங்களை கணக்கிலை வைச்சுத்தான் எல்லாத்தையும் கட்டி முடிச்சவையள்.🤘🏽

அதிலையும் வீட்டு கிணத்து தண்ணி குடிச்சவைக்கு கொலரா வரேல்லை தெரியுமோ?? 👏🏽

வடலி பக்கம் அரக்கி அரக்கி குந்தின என்று சொன்னியள்  அந்த கதையெல்லாம் என்ன பொய்யா இல்ல அது அந்த காலம் என்று சொல்லுவியள் 

இருந்தாலும் இப்ப வீட்டுக்குள்ள கழிப்பறை வந்துட்டுது கிழக்கில் குறிப்பாக அம்பாறை , மட்டக்களப்பில் கிணற்று நீர் பாவனை குறைந்து கொண்டு வருகிறது எல்லாம் சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர் தான் இருந்தாலும் அதையும் பில்டர் பண்ணியே குடிக்கிறோம் சில நேரங்களில் குளோரின் அளவின் செறிவு இருக்கும் மணமாகவும் இருக்கும் .

ஆனால் வடக்கில் வெளியிடங்களில் நீர் பயன்படுத்துபவர்கள் பிளாஸ்திக் போத்தலை பயன்படுத்துகிறார்கள்  ஆனால் அவர்கள் வட மாகாணத்தில் வேலைக்கு சென்றவர்கள் , ஊர் சுற்றவந்தவர்கள் , இராணும் , பொலிசார், மற்றும் வெளிநாட்டு சகவாசிகளும் அடக்கம் , இரு மாதங்களுக்கு முன்னர் சென்ற போது கூட நான் அவதானித்தது வடிகான்கள் கடும் குப்பையும் பிளாஸ்திக்குமாக நிறைந்து இருந்தது .

இங்கு ஒரு வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைகழத்தில் பொலித்தின் குறைப்பு  என்ற திரியில்  பாஞ் ஐயா எழுதின நியாபகம் வருகிறது நான் பொலித்தீன் பிளாஸ்டிக்கை குறைக்க முடியும் என்றார் நான் குறைக்க முடியாது என்றேன் 

ஆனால் நகர சபை கட்டுப்படுத்தாலாம் ஓரளவேனும் 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Paanch said:

அதுமட்டுமல்ல தண்ணீரைக் கொள்வனவு செய்யும்போது நெகிழிப் போத்தலுக்கும் ஒரு தொகையை அறவிடுகிறார்கள். பின்பு வெற்று நெகிழிப் போத்தலை திரும்பக் கொடுத்து அதற்காகக் கொடுத்த தொகையை மீளப் பெற்றுக் கொள்ளலாம்.

இது ஒரு நல்ல திட்டமே

40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப வீட்டுக்குள்ள கழிப்பறை வந்துட்டுது கிழக்கில் குறிப்பாக அம்பாறை , மட்டக்களப்பில் கிணற்று நீர் பாவனை குறைந்து கொண்டு வருகிறது எல்லாம் சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர் தான்

மகிழ்ச்சி

40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கு ஒரு வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைகழத்தில் பொலித்தின் குறைப்பு  என்ற திரியில்  பாஞ் ஐயா எழுதின நியாபகம் வருகிறது

பாஞ் ஐயா ஒரு சுற்றுபுற சூழல் சுகாதார நிபுணர் தான்👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் நகர சபை கட்டுப்படுத்தாலாம் ஓரளவேனும் 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

ஐந்து சந்திக்கருகிலுள்ள மானிப்பாய் வீதி முதலாம் ஒழுங்கை வெள்ளவாய்க்கால்.
மாநகரசபை/பிரதேசசபை என்ன செய்கிறது? என்று கேட்டு முகநூலில் கொள்ளுபாடு நடக்குது 😄
வெள்ளவாய்க்காலை  கூட வேலியை  நகர்த்தி காணி பிடிக்கினம் நகரசபையாவது மண்ணாவது 
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

வெள்ளவாய்க்காலை  கூட வேலியை  நகர்த்தி காணி பிடிக்கினம்

காணி பிடிப்பதற்காக வெள்ளவாய்காலுக்கு வேலி போட்டால் வெள்ளம் எப்படி போகும் வெள்ளத்தில் மிதக்க வேண்டியது தான்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

ஐந்து சந்திக்கருகிலுள்ள மானிப்பாய் வீதி முதலாம் ஒழுங்கை வெள்ளவாய்க்கால்.
மாநகரசபை/பிரதேசசபை என்ன செய்கிறது? என்று கேட்டு முகநூலில் கொள்ளுபாடு நடக்குது 😄
வெள்ளவாய்க்காலை  கூட வேலியை  நகர்த்தி காணி பிடிக்கினம் நகரசபையாவது மண்ணாவது 

 

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

காணி பிடிப்பதற்காக வெள்ளவாய்காலுக்கு வேலி போட்டால் வெள்ளம் எப்படி போகும் வெள்ளத்தில் மிதக்க வேண்டியது தான்.

தற்போது முட் கம்பிகளுக்கு பதிலாக தார் பீப்பாய்களின் தகரங்களை வைத்து வேலி அடைப்பதால் நீர் ஓடுவது முற்றாக தடுக்கப்பட்டுள்ளது இதனால் விரவாக வெள்லம் பிடிக்கிறது காணிகளில் 

அதுபோக இப்ப கள்ளமாக காணி பிடிப்பதே அதிகம் நடக்கிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.