Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இராணுவம் மீது போர்க்குற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.! - அரசு திட்டவட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவம் மீது போர்க்குற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.! - அரசு திட்டவட்டம்

Screenshot-2021-01-02-18-16-45-471-com-a 

இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. எனவே, நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்."

- இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன தெரிவித்தார்.

'இராணுவத்தினருக்கு எதிராக அடுத்துவரும் காலப்பகுதியில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம். இதற்கு சில அரசியல் கடசிகளும் தயாராகி வருகின்றனர்' என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரை மையப்படுத்தியே மேற்படி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,

"2009ஆம் ஆண்டு முதல் எமது இராணுவத்துக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாம் படுகொலைகளில் ஈடுபட்ட இராணுவம் கிடையாது. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை.

நாம் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவமாகும். எனவே எமக்கு எந்தவொரு அச்சமும் இல்லை.

அதேவேளை, பிரிவினைவாதத்துக்கும் அடிப்படைவாதத்துக்கும் ஒரு போதும் இடமளிக்கப்படமாட்டாது. இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக்கூடும் என அண்மையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அவ்வாறானதொரு நிலைமை உருவாகுவதற்கு மீண்டும் இங்கு இடமளிக்கமாட்டோம்.

ஒரு காலத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவர் இருந்தார். அவரும் ஆயுதம் ஏந்தி இந்த நாட்டு மக்களை இல்லாதொழிக்க முற்பட்டார். ஆனால் அவரது திட்டம் எடுபடவில்லை.

ஆகவே, தீவிரவாதம், பயங்கரவாதம், கடும்போக்குவாதம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களின் திட்டம் நிறைவேறுவதற்கு இடமளிக்கப்படாது. அதனைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2021/01/02/21085/

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிட்டம்..அய்யாவிடம் சொன்னால் ..உசாத்துணை சான்றிதழ் தருவாரே..

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. எனவே, நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்."

சொல்லிக்கொண்டு இருக்கப்படாது, சர்வதேச குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி நிரூபியுங்கள். சான்றிதழையும் பெறுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக்கூடும் என அண்மையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அவ்வாறானதொரு நிலைமை உருவாகுவதற்கு மீண்டும் இங்கு இடமளிக்கமாட்டோம்.

இடமளிப்பது ஒருபுறம் இருக்கட்டும், இனி அவ்வாறானதொரு நிலைமை உருவாகினால் முன்புபோல் உதவிக்கு வந்த நாடுகள் மீண்டும் உதவ வராது என்பதை சிங்கள அரசியல்  வாதிகள்  நன்றாகவே  புரிந்துகொண்டு விட்டனர் என்பதையே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பேச்சுத்  தெரிவிப்பதுபோல் உள்ளது.   Bildergebnis für %e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம் நடக்கவில்லை ஜெனிவாவில் நிரூபிக்க தயார் – அமைச்சர் சரத் வீரசேகர அறிவிப்பு

 
sarath-weerasekara-700-696x348.png
 37 Views

“இலங்கை இராணுவம் எந்தவகையிலும் யுத்தக் குற்றங்களைப் புரியவில்லை. மாறாக பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து தமது மக்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்கும் நடவடிக்கையையே இராணுவம் புரிந்துள்ளது எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் உரிய பதிலளிக்க அரசாங்கம் தயாராகவுள்ளது”

இவ்வாறு தெரிவித்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.

அதேவேளை, ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கத்தமது விருப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இவ்வருடம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இலங்கை இராணுவம் எந்தவகையிலும் யுத்தக்குற்றங்களைப் புரியவில்லை. மாறாக பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து மக்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்கும் நடவடிக்கையையே இராணுவம் புரிந்துள்ளது. அந்த வகையில் இலங்கை இராணுவம் உலகில் எங்குமில்லாத வகையில் மனிதநேய செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் எம்மிடமுள்ளன.

ஆகவே ஆதாரத்துடன் இதனை நிரூபிக்க இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியவற்றை இதற்கு முன்னர் ஐ.நா. மனித பேரவையில் ஒப்படைக்கத் தயாரானபோது தருஸ்மன் ஆணைக் குழு மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அல்-ஹ_சைன் இடமளிக்கவில்லை.

எனவே, இம்முறை இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின்போது இலங்கை அரசாங்கம் அந்த இரு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளது. அத்துடன் இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெறவில்லை என ஆதாரத்துடன் நிரூபிக்க அரசாங்கம் தாயாராகவுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க இதுவரை சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் தயாராகியுள்ளன.

மேலும் கடந்த அரசாங்கம் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவுக்கு சாதகமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தது. எனினும் தற்போதைய அரசாங்கம் அத்தகைய தீர்மானங்களிலிருந்து விலகி நாட்டின் சுயாதீனத்துவத்தையும் அபிமானத்தையும் பாதுகாத்துக்கொண்டு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு முகங்கொடுக்கவுள்ளது என்றார்.

 

https://www.ilakku.org/?p=38373

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, satan said:

சொல்லிக்கொண்டு இருக்கப்படாது, சர்வதேச குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி நிரூபியுங்கள். சான்றிதழையும் பெறுங்கள். 

நாங்கள் இன்னும் கால அவகாசம் குடுக்கவேணும் கண்டியளோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீது புதிய பிரேரணை வந்தால் தோற்கடித்தே தீருவோம்! - அமைச்சர் தினேஷ் திட்டவட்டம்.!

Screenshot-2021-01-04-08-54-14-759-com-a

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு கடந்த வருடம் விலகிவிட்டது. இந்தநிலையில், எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் போர்க்குற்றங்கள் தொடர்பிலோ அல்லது சர்வதேச விசாரணை தொடர்பிலோ இலங்கை அரசு அலட்டிக்கொள்ளாது. புதிய பிரேரணை எம் மீது திணிக்கப்பட்டால் அதையும் எதிர்கொண்டு வலுவிழக்கச் செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்."

- இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

'உங்கள் படைகள் போர்க்குற்றம் ஏதும் இழக்கவில்லை என்று நீங்கள் கூறுவது உண்மை என்றால், சர்வதேச விசாரணைகளைக் கண்டு அஞ்சுவது ஏன்?' என்று இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்துரைக்கும்போதே தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"எமது படையினர் உண்மையில் நல்லொழுக்கம் மிக்கவர்வர்கள். மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள். அவர்கள் தமது உயிர்களை அர்ப்பணித்து விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்த பல்லாயிரக்கணக்கானத் தமிழ் மக்களை மீட்டவர்கள். அப்படியானவர்கள் மீது போர்க்குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயமானது?

நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட எமது படையினர் ஒருபோதும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் நாம் பல தடவைகள் கூறி விட்டோம். இதைத் தமிழ் அரசியல்வாதிகள் உணர வேண்டும். சுயலாப அரசியல் நடத்தும் அவர்கள் தங்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

செய்யாத குற்றங்களுக்காக எமது படையினரின் தியாகங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று இந்தத் தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

உண்மையில் எமது படையினர் போர்க்குற்றங்கள் செய்திருந்தால் அதற்கான விசாரணையை நாம் உள்நாட்டில் நடத்தலாம் அல்லது சர்வதேசத்தில் கோரலாம். அப்படி எதுவும் இடம்பெறாத நிலையில் எதற்கு விசாரணையை நாம் நடத்த வேண்டும்? எதற்கு சர்வதேச விசாரணையை நாம் எதிர்கொள்ள வேண்டும்?" - என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

http://aruvi.com/article/tam/2021/01/04/21138/

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

செய்யாத குற்றங்களுக்காக எமது படையினரின் தியாகங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம்

தைரியமிருந்தால் சர்வதேச விசாரணையை கண்டு அஞ்சி ஓடாமல், எதிர்கொண்டு உங்கள் படையினர் குற்றமற்றவர்கள் என்று நிறுவுங்கள் அதன்பின் கதையுங்கள். கால, நேர, பண விரயம் செய்து பயணம் செய்து பூசி மெழுகதேவையில்லையே?

33 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எமது படையினர் போர்க்குற்றங்கள் செய்திருந்தால் அதற்கான விசாரணையை நாம் உள்நாட்டில் நடத்தலாம்

அதன் சிறப்புதான் தெரியுதே. கொலைகாரரெல்லாம் விடுதலை, பதவியுயர்வு. இதுக்கு மேல் என்ன சான்று தேவை? என்ன தகுதியிருக்கு விசாரணையை உள்நாட்டில் செய்வதற்கு?

 

37 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எதுவும் இடம்பெறாத நிலையில் எதற்கு விசாரணையை நாம் நடத்த வேண்டும்? எதற்கு சர்வதேச விசாரணையை நாம் எதிர்கொள்ள வேண்டும்?" - என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

உதுதான் அழாப்புதலோடு பயம்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.