Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுக்கு தீர்வு!: நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல - இரா.சாணக்கியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீடு காரணமாக கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை (இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம்)  இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

spacer.png

இது தொடர்பான விடயத்தினை கையாளும் விவகாரம் இரா.சாணக்கியனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனினால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து,இரா.சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆகியோர் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவினை சந்தித்து இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதயவியல் பிரிவிற்கு கொண்டுவரப்பட வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் முன்னமே தீர்மானித்தபடி எமது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதுகுறித்து அவதானம் செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியாரச்சியினை வரவழைத்து இருதயவியல் பிரிவிற்கான உபகரணங்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கையளிப்பதற்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார். 

இதுகுறித்து கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு வைத்தியசாலையிலும் இவ்வுபகரணம் இல்லாமையினால் பல வருடங்களாக மக்கள் உரிய நேரத்திற்கு சிகிச்சையின்றி பல சிரமங்களுக்கும் மத்தியில் வெளி மாகாணங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய பல உயிர்களை இழந்துள்ளோம். இப்பிரச்சினை இனி முடிவுக்கு கொண்டுவரப்படும். எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுக்கு தீர்வு!: நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல - இரா.சாணக்கியன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இவரை மாதிரி ஒரு வெட்கம் கெட்ட அரசியல்வாதியை நான் காணவில்லை ...யாரோ பெற்றுக் கொடுத்ததற்கு தான் உரிமை கொண்டாடுகிறார் ...முதல் நாள் முஸ்லீம் நாடுகள் எல்லாம் அரசை தண்டிக்க வேண்டும் என்று போராட்டமாம் ...அடுத்த நாள் போய் கேட்டவுடன் மகிந்தா கொடுத்திட்டார் 
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, ரதி said:

இவரை மாதிரி ஒரு வெட்கம் கெட்ட அரசியல்வாதியை நான் காணவில்லை ...யாரோ பெற்றுக் கொடுத்ததற்கு தான் உரிமை கொண்டாடுகிறார் ...முதல் நாள் முஸ்லீம் நாடுகள் எல்லாம் அரசை தண்டிக்க வேண்டும் என்று போராட்டமாம் ...அடுத்த நாள் போய் கேட்டவுடன் மகிந்தா கொடுத்திட்டார் 
 

கொண்ணர் கொம்மானும்  அப்பிடித்தானே...🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இவரை மாதிரி ஒரு வெட்கம் கெட்ட அரசியல்வாதியை நான் காணவில்லை ...யாரோ பெற்றுக் கொடுத்ததற்கு தான் உரிமை கொண்டாடுகிறார் ...முதல் நாள் முஸ்லீம் நாடுகள் எல்லாம் அரசை தண்டிக்க வேண்டும் என்று போராட்டமாம் ...அடுத்த நாள் போய் கேட்டவுடன் மகிந்தா கொடுத்திட்டார் 
 

புகையிற மணம் எங்கிருந்தோ வருவதுபோல் உள்ளது... 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎-‎01‎-‎2021 at 22:54, Kapithan said:

புகையிற மணம் எங்கிருந்தோ வருவதுபோல் உள்ளது... 🤣🤣

இவரை பார்த்து புகையிறத்திற்கு  நான் கேடு கெட்ட விசராய்த் தான் இருக்கோணும் 
 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

இவரை பார்த்து புகையிறத்திற்கு  நான் கேடு கெட்ட விசராய்த் தான் இருக்கோணும் 
 

இவ்வளவு கடுமையான வார்த்தை பிரயோகம் தேவையற்றது. 😀

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இவருக்கு செவிசாய்த்து ஏதோ செய்கிறது என்றால்; இவரை வைத்து தமிழரை கவிழ்க்க தயாராக்குகிறது இவரை.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/1/2021 at 01:41, ரதி said:

இவரை மாதிரி ஒரு வெட்கம் கெட்ட அரசியல்வாதியை நான் காணவில்லை ...யாரோ பெற்றுக் கொடுத்ததற்கு தான் உரிமை கொண்டாடுகிறார் ...முதல் நாள் முஸ்லீம் நாடுகள் எல்லாம் அரசை தண்டிக்க வேண்டும் என்று போராட்டமாம் ...அடுத்த நாள் போய் கேட்டவுடன் மகிந்தா கொடுத்திட்டார் 
 

அவர் போனது ஜனாசாவை எரிக்க வேண்ட்டாம் புதைக்க சொல்லியாம் அந்த நேரம் பார்த்து அந்த இதயசத்திர சிகிச்சைக்கு கொடுக்க இருக்கும் மெசின் தகவல் தெரிய பிளேட்ட  மாத்தி இருக்கார் இவர் அந்த மேய்ச்சல் தரை பிரச்சினை பற்றி வாய் தொறக்கல்ல என்றால் பாருங்கோவன்  இந்தாளும் பக்கத்தில் இருக்கிற ஆளோடு சேர்ந்து அரசியல் சாணிக்கியர் ஆகிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பக்கத்தில் இருக்கிற ஆளோடு சேர்ந்து அரசியல் சாணிக்கியர் ஆகிட்டார்

அவர்தான் இவரை அரசியலுக்கு கொண்டுவந்தது என்றொரு கதை அடிபடுது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, satan said:

சிங்களம் இவருக்கு செவிசாய்த்து ஏதோ செய்கிறது என்றால்; இவரை வைத்து தமிழரை கவிழ்க்க தயாராக்குகிறது இவரை.

அது தமிழரை கவிழ்க்க இல்லை, இந்தியாவை கவிழ்க்க, ஒரேயடியாக கழட்டி விட்டுவிட்டால் இந்தியன் (சின்னஅண்ணனும்) அலெர்ட்டாகி தன்னால் இனி ஒன்றும் புடுங்கமுடியாது என்று  அமெரிக்காவின்(பெரிய அண்ணன் ) காலில் விழுந்தால் மஹிந்த மாபியாவிற்கு தலையிடியா இல்லையா , அதனால் பார்த்தும் பார்க்காமலும் ஒன்று ரெண்டை தூக்கி போடுவினம். Proxy தேசிக்காய்கள் தாங்களும் எதோ  பிரிச்சி மேய்வதாக சவுண்டு விட , சின்னஅண்ணனும் தன்னுடைய நூல் இன்னும் ஸ்ட்ரோங்க்காக இருப்பதாக நினைச்சு புளங்காகிதம் அடைவார்   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.