Jump to content

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு

மதுரை,

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 788 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த கவனத்தோடு செய்யப்பட்டுள்ளன.

நாட்டு மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியும். கலப்பின மாடுகள் அனுமதிக்கப்படவில்லை. போட்டியில் பங்கேற்கும் மாடுகள் அனைத்திற்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே காளைகள் வாடிவாசலில் களமிறங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றன. அவ்வாறு பங்கேற்கும் மாடுகளின் வயது, அவற்றின் திமில், உடல்நிலை உள்ளிட்ட அனைத்தும் பரிசோதனை செய்யப்படுகின்றன.

இன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அனுப்பி விடப்பட்டன. அதன் பின்னர் பிற காளைகள் வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு 50 வீரர்கள் என்ற அடிப்படையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அன்பழகன், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் நிகழ்ச்சியைக் காண வந்துள்ளனர். மேலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வர இருக்கின்றனர். இன்றைய போட்டிகளுக்கான பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/14083310/The-world-famous-Avaniyapuram-Jallikattu-started.vpf

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளின் திமிலை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளைகளை அடக்க முற்பட்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. சில காளைகள், வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடின. 

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறும் காளைகளின் திமிலை வீரர்கள் இறுகப் பற்றிக் கொண்டு காளை மூன்று சுற்றுகள் சுற்றும்வரை பிடித்திருக்க வேண்டும் அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் அந்த வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. 


 
வீரர்கள் யாரையும் தன் அருகே வரவிடாமல், திமிலை பிடிக்க அனுமதிக்காமல் செல்லும் காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காளையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இன்றைய ஜல்லிக்கட்டு போட்டிக்கு 788 காளைகள் பதிவு செய்யப்பட்டன. 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 8 சுற்றுகளாக இன்று மாலை வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 520 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

திருநாவுக்கரவு, விஜய் ஆகிய இரு இளைஞர்கள் தலா 26 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்றனர்.

G.R. கார்த்திக் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/01/14164649/2256214/avaniyapuram-jallikattu-two-youths-gets-first-price.vpf

Link to comment
Share on other sites

மிருகவதை என்பது காலாவதியான கலாசாரம் ஆகும், அது உங்களுடைய கலாசாரம் எனில் அதை புதுப்பிப்பது யாவருக்கும் நன்மை பயிக்கும்.பழையன கழிதலும், புதியது புகுதலும்  தமிழனுக்கு புதிதல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

மிருகவதை என்பது காலாவதியான கலாசாரம் ஆகும்,

அவர்களுடைய ஜல்லிக்கட்டு கலாச்சாரத்துக்குள் சாதியும் இருக்கிறதாம் ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

மிருகவதை என்பது காலாவதியான கலாசாரம் ஆகும், அது உங்களுடைய கலாசாரம் எனில் அதை புதுப்பிப்பது யாவருக்கும் நன்மை பயிக்கும்.பழையன கழிதலும், புதியது புகுதலும்  தமிழனுக்கு புதிதல்ல .

24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர்களுடைய ஜல்லிக்கட்டு கலாச்சாரத்துக்குள் சாதியும் இருக்கிறதாம் ☹️

இந்த கொடுமையை விட ஜல்லிக்கட்டு பாதிப்பில்லாதது. ஜல்லிக்கட்டு காளைகளை பிள்ளைபோல்தான் வளர்க்கின்றார்கள். இறைச்சிக்கு விற்க மாட்டார்கள்.

Tierschutz: Attraktionen für Touristen oft mit Quälerei verbunden |  Nachrichten.at

Rodeo: Cowboy gegen Cowboy - Sport - Tagesspiegel

Link to comment
Share on other sites

26 minutes ago, குமாரசாமி said:

 

Tierschutz: Attraktionen für Touristen oft mit Quälerei verbunden |  Nachrichten.at

Rodeo: Cowboy gegen Cowboy - Sport - Tagesspiegel

இவை அனைத்தும் மிருக வதையே, ஜில்லிக்கட்டும் இவைகளுக்கு சளைத்தவையாகும். 
உலகல்லாம் உள்ள அநேக  கலாசாரங்களில் மிருகவதைகள்  இருந்தன , அநேகமானவை வழக்கொழிந்து போய்விட்டன,சிலதுகள் மட்டும் தொக்கிநிக்கின்றன. அவைகள் தான் ஜில்லிக்கட்டு, கோழி சண்டை , Bull Fight,Rodeo Riding.
 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

இந்த கொடுமையை விட ஜல்லிக்கட்டு பாதிப்பில்லாதது. ஜல்லிக்கட்டு காளைகளை பிள்ளைபோல்தான் வளர்க்கின்றார்கள். இறைச்சிக்கு விற்க மாட்டார்கள்.

காளை மாடும் மிருகம். ஆடும் மிருகம். காளை மாட்டை இறைச்சிக்கு வெட்டமாட்டாத கருணை உள்ளம் கொண்ட கலாச்சாரத்தை கொண்டவர்கள் ஆட்டை கோவிலின் முன் கடவுள் பெயரால்  இரத்த பலியிட்டு அதை கடவுள் பெயரால் கறி சமைத்து உணபார்கள். என்ன கருணை அப்பாடா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

இவை அனைத்தும் மிருக வதையே, ஜில்லிக்கட்டும் இவைகளுக்கு சளைத்தவையாகும். 
உலகல்லாம் உள்ள அநேக  கலாசாரங்களில் மிருகவதைகள்  இருந்தன , அநேகமானவை வழக்கொழிந்து போய்விட்டன,சிலதுகள் மட்டும் தொக்கிநிக்கின்றன. அவைகள் தான் ஜில்லிக்கட்டு, கோழி சண்டை , Bull Fight,Rodeo Riding.
 

இந்த சித்திரவதைகள் உங்கள் பட்டியலுக்குள் வருமா வராதா?

Sind Tierversuche sinnvoll?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

காளை மாடும் மிருகம். ஆடும் மிருகம். காளை மாட்டை இறைச்சிக்கு வெட்டமாட்டாத கருணை உள்ளம் கொண்ட கலாச்சாரத்தை கொண்டவர்கள் ஆட்டை கோவிலின் முன் கடவுள் பெயரால்  இரத்த பலியிட்டு அதை கடவுள் பெயரால் கறி சமைத்து உணபார்கள். என்ன கருணை அப்பாடா? 

கோவில்களில் பலி எடுப்பதில் எனக்கு ஈடுபாடில்லை.
 

Link to comment
Share on other sites

49 minutes ago, குமாரசாமி said:

இந்த சித்திரவதைகள் உங்கள் பட்டியலுக்குள் வருமா வராதா?

Sind Tierversuche sinnvoll?

 

ஆமாம்.

உடலை வருத்தும் நேர்த்திக் கடன்கள் - முன்னோர்களின் யுக்தியா ?

http://3.bp.blogspot.com/-vF6y5AuiY3U/UQOC7ovIliI/AAAAAAAAOiw/K3rcggldjGk/s200/small boys kavadi.JPG

இதுகும் தான்.

Link to comment
Share on other sites

51 minutes ago, குமாரசாமி said:

கோவில்களில் பலி எடுப்பதில் எனக்கு ஈடுபாடில்லை.
 

எனக்கும் உங்களைப்போலவே நான்  யாழ்பாணத்தில் இருக்கும்போதே கோவில்களில் பலி எடுப்பதில் அறவே உடன்பாடு இல்லை. அதற்கு தடை வந்த போது மகிழ்ச்சியாக இருந்த‍து.  ஆனால் அது தான் தமிழ் கலாச்சாரம் என்று கூறுவோரும் உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:
3 hours ago, குமாரசாமி said:

கோவில்களில் பலி எடுப்பதில் எனக்கு ஈடுபாடில்லை.

நல்லது

எனக்கும் உங்களைப்போலவே நான்  யாழ்பாணத்தில் இருக்கும்போதே கோவில்களில் பலி எடுப்பதில் அறவே உடன்பாடு இல்லை. அதற்கு தடை வந்த போது மகிழ்ச்சியாக இருந்த‍து.  ஆனால் அது தான் தமிழ் கலாச்சாரம் என்று கூறுவோரும் உள்ளார்கள். 

அது தான் தமிழ் கலாச்சாரம் என்று கூறுவோரும் உள்ளார்கள். *

கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறவர்களே இப்படி சொல்லும் போது தான் எனக்கு தலை சுற்றுகிறது இவர்களது மேலான அன்பான சாமி இருக்கும் இடத்தை எப்படி இறைச்சி கடையாக மாற்ற இவர்களால் முடிகிறது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறவர்களே இப்படி சொல்லும் போது தான் எனக்கு தலை சுற்றுகிறது

சுத்துற சுத்திலை தலை கழண்டு விழுப்போகுது கவனம்..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று ஆரம்பம் - Polimer  News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம்!

உலக பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

வாடிவாசலில் சீறிப் பாய காத்திருக்கும் 783 காளைகளை அடக்குவதற்கு 649 மாடுபிடி வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்வையாளர்களுக்கு இருபுறமும் வேலிகள் அமைத்து காளைகள் உள்ளே நுழையாமல் இருக்க பாதுகாப்பு வசதிகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படவுள்ளது. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பாலமேடு-ஜல்லிக்கட்டு-போட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அசர வைத்த காளைகள்... ஆரவாரத்துடன் அடக்கிய வீரர்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அசர வைத்த காளைகள்... ஆரவாரத்துடன் அடக்கிய வீரர்கள்

அலங்காநல்லூர்:

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது.

 


மதுரை மாவட்டத்தில் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெற்றது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது.

போட்டியை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காலை 8.25 மணிக்கு வாடிவாசல் முன்புள்ள திடலுக்கு வந்தனர்.

அவர்களுக்கு விழாக்குழு சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை அழைத்து வரப்பட்டது.

அந்த காளைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விழா மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ. மாணிக்கம் பூங்கொத்து கொடுத்தார். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பச்சை கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

அதன் பிறகு முனியாண்டி கோவில் காளை உள்பட 3 கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கக்கூடாது என்பதால் காளையர்கள் ஓரங்கட்டி நின்றனர்.

3 காளைகளும் ஜல்லிக்கட்டு திடலை கடந்த பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு இடையூறு வந்தபோது, அந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு அம்மாவின் அரசு தூணாக விளங்கி, மிக எழுச்சியோடும் சிறப்போடும் நடைபெறுவதற்கு காரணகர்த்தாகவாக இருந்து, ஜல்லிக்கட்டு நாயகன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய, இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த, மரியாதைக்குரிய அண்ணன் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இந்த மண் அனைவராலும் பாராட்டப்படக்கூடிய மண்ணாகும். இந்த மண்ணிலே பிறந்த அத்தனை இளஞ்சிங்கங்களும், சீறி வருகின்ற காளைகளை பிடித்து அடக்குவதற்கான பக்குவத்தோடு இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு சீறி வருகின்ற காளைகளை அடக்குகின்ற இளைஞர்கள் பட்டாளம் நிறைந்த இந்த ஜல்லிக்கட்டு விழா உலகப் புகழ்பெற்ற விழா என்று சொன்னால் அது மிகையாகாது. உலக மக்கள் அனைவரும் காணக்கூடிய இந்த வீர விளையாட்டை, நம்முடைய கலாச்சார பண்பாட்டை, பாரம்பரியம் மிக்க பண்பாட்டைக் காக்கக் கூடிய ஜல்லிக்கட்டு விளையாட்டை, அம்மாவின் அரசுதான் நிலைநிறுத்துகிறது என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த வீர விளையாட்டில் கலந்து கொண்டிருக்கிற அனைத்து இளைஞர் பெருமக்களுக்கும், அதோடு, வீரமிக்க காளைகளை வளர்த்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், வருகை தந்திருக்கின்ற அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதே கருத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வலியுறுத்தி பேசினார்.

பன்நெடும் காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பெருமையும், பாரம்பரியமும் கொண்டது. இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனுமதி அம்மாவின் அரசு சார்பில்தான் கிடைக்கப்பெற்றது என்பதை மறந்து விடக்கூடாது என்று அவர் கூறினார்.
 

அதன் பிறகு வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதனை அடக்க ஜல்லிக்கட்டு திடலில் திரண்டிருந்த காளையர்கள் மல்லுக்கட்டினர். சில காளைகள் களத்தில் நின்று விளையாடி வீரர்களை பந்தாடியது. இதேபோல் காளையர்களும் களத்தில் சுழன்று காளைகளின் திமிலை பிடித்து மடக்கினர்.
 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளை


இந்த போட்டியை பார்ப்பதற்கு வசதியாக சுமார் 8 அடி உயரத்தில் 200 மீட்டர் நீளத்திற்கு இரும்பு தடுப்புகளுடன் காலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்தபடி பார்வையாளர்கள் காளையர்களை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விழா மேடையில் அமர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.

சிறப்பாக காளைகளை பிடித்த வீரர்களை அவர்கள் உற்சாகப்படுத்தினர். மேலும் களத்தில் நின்று வீரர்களை அச்சுறுத்திய காளைகளுக்கும் சபாஷ் கொடுத்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கார், தங்க காசுகள், மோட்டார் சைக்கிள், சைக்கிள், பிரிட்ஜ், பீரோ, டி.வி., பித்தளை பாத்திரங்கள், நாற்காலிகள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடக்க விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், பாஸ்கரன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, ரவீந்திரநாத் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், சரவணன், பெரியபுள்ளான், நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், அலங்கா நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்றதை முன்னிட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தென் மண்டல ஐ.ஜி. முருகன் மேற்பார்வையில் மதுரை சரக டி.ஐ.ஜி. ராஜேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக போட்டியில் பங்கேற்ற காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே களத்தில் இறக்கப்பட்டன.

வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முக கவசம் அணிந்த பிறகே களத்தில் இறக்கப்பட்டனர். போட்டியில் பங்கேற்க 750 காளைகள், 550 காளையர்கள் தேர்வாகி இருந்தனர். மாடுபிடி வீரர்கள் சுற்று வாரியாக களத்தில் இறக்கப்பட்டனர். அவர்கள் ஆர்வத்துடன் களம் இறங்கி காளைகளை அடக்கினர்.

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் காளைகள் லாரி, வேன்களில் கொண்டு வரப்பட்டிருந்தன. அவைகளும் களத்தில் நின்று விளையாடி பரிசுகளை தட்டிச்சென்றன.

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/01/16125901/2266538/Tamil-News-Alanganallur-Jallikattu-750-bulls-participated.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வென்ற சிறந்த வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் முதல்வர், துணை முதல்வர் பரிசுகளை வழங்கினர்

avaniyapuram-jallikattu-cm-dy-cm-gives-away-prizes  
 

மதுரை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த வீரர்களுக்கும் சிறந்த காளைகளுக்குமான பரிசுகளை முதல்வர், துணை முதல்வர் வழங்கினர்.

தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதல்வர் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், சிறந்த காளைகளுக்கு துணை முதல்வர் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா அறிவித்தார்

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்களாக முத்துப்பட்டி திருநாவுக்கரசு, அவனியாபுரம் விஜயனும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த காளையாக வில்லாபுரம் கார்த்திக்கின் காளை தேர்வு செய்யப்பட்டது

இதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வி.வி ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்கள் திருநாவுக்கரசு, விஜயன் ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயை முதல்வர் ப்ழனிசாமி வழங்கினார். சிறந்த காளைக்கான பரிசினை வில்லாபுரம் கார்த்திக்கு ஒரு லட்சம் ரூபாயை துணை முதல்வர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பல்வேறு உதவிகளைச் செய்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்தனர்

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வக்கீல் ரமேஷ்,
திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன் உட்பட பலர் இருந்தனர்

தங்களுக்குப் பரிசுத் தொகையை வழங்கி இதன் மூலம் ஜல்லிக்கட்டு வீரர்களை கவுரப்வபடுத்திய முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/622704-avaniyapuram-jallikattu-cm-dy-cm-gives-away-prizes-1.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.